Friday, May 8, 2020

அல்லாவின் ஆட்டோ லைட்:


கனடாவில் தற்போது வைத்துள்ள காரை மாற்றிவிட்டு புது கார் வாங்கலாம் என்று கார் ஷோரூம் சென்றேன் . அங்குள்ள விற்பனைப் பிரதிநிதி புதிதாக வந்துள்ள 2020 மாடல் கார் ஒன்றின் சிறப்பம்சங்களை விளக்கிக்கூறுகையில் ஆட்டோ லைட் என்றொரு வசதி பற்றிக் கூறினார் . அது என்னவென்று கேட்டேன்.கனடாவில் வெளிச்சம் வரும் வரை முகப்பு விளக்குகள் ஆன் செய்து இருக்க வேண்டும் , இது கட்டாய விதிமுறை. இந்த ஆட்டோ லைட் வசதி இருப்பதால் லைட் எப்போது ஆன் செய்யவேண்டும் , எப்போது ஆப் செய்ய வேண்டும் எனப்து குறித்து கவலைப்படவில்லை என்றும் கூறி இந்த லைட்டினால் கனடாவில் நடந்த முக்கிய நிகழ்வினை சொன்னார் . 

அந்த நிகழ்வு என்னவென்று அறிய மேலும் வாசியுங்கள் :

அதிகாலையில் காரில் சென்று கொண்டிருந்து ஒருவரை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தடுத்து நிறுத்தினார் . காரில் சென்று கொண்டிருந்த நபர் எதற்காக தடுத்து நிறுத்தினீர்கள் என்று காவலரிடம் கேட்ட போது , காரின் முகப்பு விளக்குகளை ஆன் செய்யவில்லை , அதனால் அபராதம் கட்ட வேண்டும் என்று அதற்கான ரசீதினை கொடுத்தார். இன்னும் இருட்டாக தான் இருக்கிறது , ஆனால் நீங்கள் முகப்பு விளக்கினை ஆன் செய்யவில்லை அதனால் அபராதம் கட்டுங்கள் என்று நிர்ப்பந்தித்தார்.


காரில் இருந்தவர் இஸ்லாமிய சமூகத்தினை சேர்ந்தவர். தான் ஏன் முகப்பு விளக்கினை ஆன் செய்யவில்லை எனபதற்கு தன் மதம் சார்ந்த ஒரு பதிலினை  அளித்தார் . அஃதாவது , இஸ்லாமிய முறைப்படி சூரியன் உதித்த பிறகு தொழுகை செய்ய வேண்டும் , அவ்வாறே  இன்றும் சூரியன் உதித்த பிறகு தொழுகை செய்த பின்னர் வீட்டிலிருந்து கிளம்பினேன். எனவே தான் விதி முறையினை மீறவில்லை என்றும் அபராதம் செலுத்த முடியாது என்றார்.  இந்த பதிலினைக் கேட்ட காவலர் "உன்னுடைய தொழுகையை எந்த நேரத்தில் செய்வாய் என்பது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை (ஆங்கில பதில் : I dont care about your prayers ). 

இந்த பதிலால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் காவலர் அலுவலகத்தில் தன்னுடைய மதத்தினை இழிவுபடுத்தியதாக  முறையிட்டார். விசாரணையில் அந்த காவலருக்கு 15 நாள் இடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த தண்டனைக்கான  முக்கியக் காரணம் அந்தக் காவலர் பலமுறை இது போன்ற ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவது தான் முக்கியக் காரணம்.

https://montreal.ctvnews.ca/i-don-t-care-about-your-prayers-montreal-cop-suspended-15-days-for-insulting-muslim-man-1.4713446?cache=yes

இதே போன்றதொரு நிகழ்வு இந்தியாவிலிலும் சுதந்திரத்திற்கு முன்னர் நிகழ்ந்தது.  வெள்ளைக்காரர்கள் பொதுவாகவே காலையிலே அலுவலக வேலையினை ஆரம்பித்து விடுவார்கள். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது அவர்களின் அலுவலகங்களில் பெரும்பாண்மையாக வேலை செய்தவர்கள் பிராமண  சமூகத்தவர்கள். அக்காலத்தில் பிராமணர்கள் பூஜை புனஸ்காரங்களையெல்லாம் முடித்து விட்டு ஒன்பது மணிக்கு மேல் தான் வேலைக்கு வருவார்கள். பிரிட்டிஷாருக்கு அலுவலக வேலை பிராமண சமுகத்தவரின் பங்கு முக்கியம் என்பதாலும் , அவர்களின் மத உணர்வுக்கு மதிப்பளித்து வேலை நேரத்தினை ஒன்பது மணிக்கு மாற்றி அமைத்தனர். இதனால் தான் இந்தியாவில் அலுவலகங்களின் வேலை நேரம் இன்றும் ஒன்பது மணி என்று இருக்கின்றது.

நன்றி 
செங்கதிரோன்

கருத்தம்மாவின் மறுபிறவி தான் திரௌபதி:


தமிழகத்தின் எந்த சாதியில் பிறந்தாலும் பெண் என்பவள் பெண்தான் , அந்தப்பெண்ணிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அனைவரின் கடைமை.  

பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். கருத்தம்மா என்ற பெயரே அந்த குறிப்பிட்ட சாதி (தேவர் ) மக்கள் மட்டுமே தங்கள் பெண் பிள்ளைகளுக்கு வைக்கும் பெயர்.அது சொல்ல வந்த உயர்ந்த கருத்தின் காரணமாக கொண்டாடப்பட்டது.அம்மக்களிடையே இருக்கும் பிற்போக்கான எண்ணமான பச்சிளம்பெண் குழந்தைகளை கொல்லும் வழக்கம் குறித்த பேசியது .


கருத்தம்மா போலவே திரௌபதியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தான் பேசுகிறது. அந்த பாதிப்பு குறித்து எதுவுமே தெரிந்து வைத்திராத மற்றும் வன்னியர் என்ற பெயரைக் கேட்டாலே வெறுப்பை உமிழும் ஆட்களுக்கு வன்னியர் பெண்கள் பாதிக்கப்பட்டால் எந்த ஒரு கவலையும் இல்லை. இந்தப்படம் பேசும் கருத்தினை படம் பார்க்கும் அனைத்து சமூகப் பெண்களும் புரிந்து கொள்வார்கள். இது முழுக்க முழுக்க பெண்களுக்காக எடுக்கப்பட்ட படம்.

திருமாவளவன் கட்சி ஆரம்பித்த புதிதில் வடமாவட்டத்தில் எங்கு கூட்டம் நடந்தாலும்., அவர் சார்ந்த சமூக இளைஞர்களை தன பக்கம் ஈர்க்க அவரின் கொள்கையை விட ,வன்னியர் பெண்களை தூக்கிட்டு வாங்க நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற விபரீத பேச்சுக்கள் தான் அதிகம் உதவியது.

இந்த விபரீத பேச்சுக்களால் பாதிக்கப்பட்ட ஒரு வன்னியர் பெண்ணின் வலி தான் திரௌபதி. இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெகு அரிது என்றோ அல்லது மிகைப்படுத்தி பேசப்படுகிறது என்று எதிர்தரப்பு கூறினாலும் ஒரு பெண்ணுக்கு அநீதி நடந்தாலும் அது குறித்து பேச வேண்டியது அவசியமாகிறது.

மேலும், தமிழ்சினிமாவில் வடமாவட்டங்கள் குறித்து வந்த படங்களின் எண்ணிக்கையினை விரல் விட்டு எண்ணிவிடலாம். வடமாவட்டத்தில் வாழ்பவர்களுக்கு பலகாலமாகவே திரையில் தோன்றுபவர்களை தங்களுடன் பொருத்திப்பார்த்துக் (Relate) கொள்ளவே முடியாது . தமிழ் படங்களில் தமிழ்பேசும் நாயகிகள் வேண்டும் என்ற கோரிக்கைக்கு நிகரானது தமிழ்படங்களில் வடமாவட்ட வாழ்வியல் சார்ந்த படங்கள் அதிகம் எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை. 

இந்தப்படம் சாதிக்குறித்து தீவிரமாகப் பேசினாலும் , கதாநாயகனுக்கு பெயர் (மாவீரன்) பிரபாகரன் என பெயர் வைத்திருப்பது , ஷங்கர் படத்தில் புனிதர்களாக முன்னிறுத்தப்படும் உயர்சாதியினர் இந்த படத்தில் ஊழல்வாதியாக காண்பித்திருப்பது, பெண்கள் மிக தைரியமாக சமூக சேவையில் ஈடுபடுவதை போன்ற காட்சி அமைப்புகள் பாராட்டத்தக்கவை.

மிக முக்கியமாக வடமாவட்டம் சார்ந்த படங்களை எடுப்பதற்கு திரௌபதியின் வெற்றி மிகப்பெரும் அளவில் வருங்காலத்தில் உதவிபுரியும் என்பது மிக மிக மகிழ்வான செய்தி.

இந்தப்படம் உருவாக்கத்தில் பங்களித்தவர்களுக்கும் , இயக்குனர் மோகனுக்கும் வாழ்த்துக்கள்.
செங்கதிரோன்

புதிய தலையணை மந்திரம் :

பெண்களின் மிகபெரும் ஆயுதங்களில் ஒன்றாக இருந்தது தலையணை மந்திரம் . கூட்டுகுடும்பத்தில் வாழ்ந்த போது இரவு படுக்கும் போது மட்டுமே கணவனிடம் தனிமையில் பேசும் வாய்ப்பு மனைவிக்கு கிடைக்கும் . அப்போது மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை , புதிய சேலை , நகை போன்ற பலவற்றை குறித்து கணவனிடம் "கனிவான" முறையில் எடுத்துக் கூறி சாதித்துக் கொள்வதன் முறைக்குப் பெயர்தான் தலையணை மந்திரம்.

கூட்டுக்குடும்ப முறைகள் குறைந்ததோடு மட்டுமல்லாமல் , பெண்களும் தாங்களாகவே உழைத்து தனக்குத்தேவையான பொருட்களை வாங்கும் அளவுக்கு உயர்ந்து விட்ட பிறகு இந்த தலையணை மந்திரத்தின் தேவை மிக சுருங்கி விட்டது.

முன்பு பெண்களுக்கு படிப்பு மறுக்கப்பட்டதனாலும், வீட்டைத்தவிர வெளியிடங்களுக்கு செல்லாமல் முடங்கி இருந்ததாலும் அவர்களின் உலகம் மிக சிறிதாக இருந்தது .ஆனால் ஆண்களுக்கு தொன்று தொட்டு அனைத்துவகையான சுதந்திரமும் இருந்ததால் அவர்களால் உலகின் எந்த மூலைக்கும் பயணித்து பல்வேறு அனுபவங்களைப் பெறமுடிந்தது இதனால் அக்காலத்தில் ஆண் பெண் இருவரின் உலகமும் வெவ்வேறானதாக இருந்தது. இருவருக்குமான உரையாடலூக்கான பொதுவான விஷயங்கள் மிக மிக குறைவாகவே இருந்தன.


இன்றோ நிலைமை மிக மிக மாறிவிட்டது , ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெணகள் முன்னேறி வருகின்றனர் . வீட்டிலேயே இருக்கும் பெண்ணாக இருந்தாலும் தொலைக்காட்சி , செல்போன் போன்றவை மூலம் உலக நடப்புகளை தெரிந்து வைத்திருக்கின்றனர் .இதனால் தற்பொழுது இருவர் வாழும் உலகமும் ஒரே உலகமாக மாறிவிட்டது.

மாறிவிட்ட இந்த சமூக சூழலினால் ஆணுக்குப் படுக்கையறையில் மனைவியுடன் அன்றாட அரசியல் நிகழ்வுகள் , சினிமா என பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்துப் பேச முடியும். இது போன்ற உரையாடலினால் ஒருவரை ஒருவர் மேலும் புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கான நெருக்கத்தினை அதிகரிக்கின்றது . (இதுவரை மனைவிடம் பொது விஷயங்கள் குறித்து பேசத்தவர்க, இனியாவது பேசத்தொடங்குங்கள் )




இருப்பினும் அரசியல் , சாதி,மதம் போன்றவை இன்றும்பெண்களுக்கு புடிபடாத ஒன்றாகவே இருக்கின்றது. 
எனவே இவை குறித்து கணவன் எவ்வளவு சீரியஸாக சொன்னாலும் ,நகைச்ச்சுவையாக சொன்னாலும் ஒன்றுமே புரியாத காரணத்தினால் அமைதியாக கேட்டுக்கொள்வார்கள் .ஆண்களால் இது போன்ற கருத்துக்களை பொதுவெளியில் நண்பர்களுடனோ , உடன் பணியாருப்பவர்களுடனோ பேச முடியாது , மீறிப்பேசினால் மனஸ்தாபம் ஏற்படும் அல்லது நட்பில் விரிசல் ஏற்படும்ஒரு சில சமயங்களில் கைகலப்பு கூட உண்டாகும்.ஆண்களுக்கும் எந்த விதமான எதிர்வினையும் வராத ஒரு புதிய தளம் கிடைத்திருப்பதால் தன்னுடைய வீர உரைகளை மனைவிடம் வெளிப்படுத்தி புளங்காகிதம் அடைந்தது கொள்கின்றான்.


கணவனிடம் புதிய தலையணை மந்திரத்தில் பயிற்சி பெற்றதனால் பல இல்லத்தரசிகள் இப்போது வாட்சப்பில், முகபுத்தகத்தில் அரசியல் குறித்து தீவிரமாக களமாட ஆரம்பித்திருக்கின்றனர் . 

விதி விலக்காக பெண்களும் கணவர் கருத்தில் மாறுபட்டு பேசுவதுண்டு. (எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய ஆண்பால் பெண்பால் என்ற புத்தகம் எம்ஜிஆர் ரசிகையான மனைவிக்கும் , கருணாநிதியின் உடன்பிறப்பான கணவருக்கும் நடக்கும் மோதல் குறித்து விரிவாக பேசியது ).இந்த புதிய தலையணை மந்திரத்தால் பெண்களுக்கு சமூகம் குறித்து ஓரளவு விழிப்புணர்வு கிடைக்கின்றது.
செங்கதிரோன்

காபி வித் பாரதமாதா: சிறுகதை


டேய் கந்தா வாடா வெளியில வெள்ளாடலாம் , 
கேட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த என் நண்பர்கள் என்னை அழைத்தனர் .

கேட் பூட்டப்பட்டு இருந்தது , வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். வெளியில் போக வேண்டுமென்றால் அம்மா அனுமதி கொடுத்தால் மட்டுமே போக முடியும்.
உள்ள போயிட்டு , அம்மாகிட்ட கேக்கலாம்னு போனேன் . , அம்மா தூங்கிட்டிருந்தாங்க , தலைகாணி அடியில தான் கேட் சாவி இருந்துச்சு , எடுக்க முடியும் , ஆனா எடுத்தது தெரிஞ்சா , தோலை உரிச்சுருவாங்க .

மெதுவா அம்மா கிட்ட கேட்டேன் அம்மா பசங்க வெள்ளாட கூப்பிடறாங்க, நா போவட்டுமா
ம்ம் ..பேசாம தூங்கு இல்லனா , புக் எடுத்துப் படி , சாயந்தரமா வெள்ளாட அனுப்புறேன்னு கண்ணை கூட திறக்காம சொல்லிட்டு தூங்கிட்டாங்க.
அம்மாவுக்கு சனி ஞாயிறு சாப்பிட்டு தூங்கணும் , வேலைக்குப் போறதுனால இந்த ரெண்டு நாள் முழுக்க ரெஸ்ட் எடுக்கணும்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பேங்க , வேலைக்குப் போகாம வீட்ல இருக்குற பொம்பளங்களாம் தினமும் தூங்கிறாங்க, வேலைக்குப் போற நம்மளால இந்த ரெண்டு நாள் தான் தூங்க முடியும், அதனால அதை எந்தக் காரணம் கொண்டும் விட்டுடடக் கூடாதுன்னு அம்மாவுக்கு எண்ணம்.
ஆனா எனக்கு மட்டும் மதியானத்துல எப்பவுமே தூக்கமே வராது .அம்மா வெளியில போகக்கூடாதுன்னு சொன்னதால மாடிக்குப் போய் அங்கிருந்து பசங்க வெள்ளாட்றத வேடிக்கைப் பார்த்திட்டிருந்தேன்.
அப்படியே காலம் உருண்டோடியது,கந்தனுக்கு கல்யாணமும் ஆச்சு ,மனைவியுடன் வெளிநாட்டில் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பொது அந்த வாழ்க்கையில் ஒரு நாள் ,,,,
சனிக்கிழமை மதியானம் , மனைவி சமையலை தயார் செய்த பின்னர் , சாப்பாட்டுக்கு தொட்டுக்க கந்தன் ஆறு முட்டைகளை உடைத்துப் போட்டு பொடிமாஸ் செய்தான். ரெண்டு பேரும் சாப்பிட்டு முடித்தனர் . 

கொஞ்ச நேரம் சோபாவில் அமர்ந்திருந்தனர் . பின்னர் அவன் மனைவி பச்சையம்மா , நான் இப்ப என்ன பண்ண போறேன் சொல்லுங்க என்று கேட்டாள்.
கந்தன் அப்பாவியாக கேட்டான் , படம் ஏதாவது பாக்க போறியா , இல்ல இல்ல நான் தூங்க போறேன், நீங்க வேணா படம் பாருங்க , அப்படியே இங்கேயே உங்க மடியில படுத்து தூங்கிடறேன், தலையை மட்டுமே தடவி கொடுங்க கொஞ்ச நேரத்துல தூங்கிடுவேன்.
அடியேய் அதெல்லாம் முடியவே முடியாது , வா வெளியில கடைக்குப் போயிட்டு வரலாம், மதியானத்துல என்னால வீட்டுக்குள்ள உக்காந்த்திருக்க முடியாது. பச்சையம்மா கந்தனை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்து விட்டு எந்த கடைக்கு போகணும் என்று கேட்டாள் . உனக்கு டிரஸ் வாங்கலாம், அப்படியே இந்தியன் கிராசரி ஸ்டாருக்குப் போய் ஆட்டா , புரு காபிலாம் வாங்கிட்டு வந்துருவோம் என்றான் கந்தன். மதியானத்துல நீங்கலாம் எப்படி தான் தூங்கறிங்களோ , எனக்கு மதியானத்துல தூங்கினா எனக்கு நைட் தூக்கம் வராதுடி என்றான் கந்தன்.
ஆமா நைட்ல மொபைலல்ல பேஸ்புக் பார்த்துட்டு தூங்கவே மாட்டிங்க , டெய்லி உங்ககிட்ட போனை வச்சிட்டு தூங்குங்கன்னு சொல்லிட்டே இருக்கணும்.
உங்க வீட்ல யாருமே மதியானத்துல தூங்க மாட்டீங்களா , எங்க வீட்ல எல்லாருமே மத்தியானம் சாப்பிட்டு நல்லா தூங்கிடுவோம். எங்கம்மா டீ போட்டு வச்சுட்டு எங்களை எழுப்புவாங்க என்றாள் பச்சையம்மா .
சனி ,ஞாயிறுல மதியானத்துல தூங்க கூட விட மாட்றீங்களே என்று சொல்லிக் கொண்டே கடைப் போக தயாரானாள் பச்சையம்மா.
எங்க வீட்ல அம்மாவும் அக்காவும் தான் மதியானம் தூங்குவாங்க , எங்கப்பா சன்னாயிரு வீட்லே இருக்க மாட்டாரு ,யூனியன் ஆபிசுக்கு போயிடுவாரு ,நான் மட்டும் தூங்காம மாடியில நின்னுக்கிட்டு பசங்க வெள்ளாட்றத பார்த்துட்டு இருப்பேன் என்றான் கந்தன்.
போகும்போதேபச்சையம்மா ஒரு கன்டிஷன் போட்டாள் கடைக்குபோயிட்டு ஒரு மண்ணேரத்துல திரும்பி வர்றோம் , நான் கொஞ்ச நேரமாவது தூங்கணும் என்றாள். ஒப்புக்கு ஓகே ஓகே என்று சொன்னான் .
கடையில் தேவையானவற்றை வாங்கிவிட்டு காரை எடுக்கும்போது ஏங்க நான் eybrows பண்ணனும் ஏதாவது beautciacn கடை இங்க இருக்கான்னு பாருங்க என்றாள் . தூங்க இருந்தவளை வலுக்கட்டாயமாக இழுத்துவந்ததால் சுத்திமுத்தி பார்த்து ஒரு கடையைக் கண்டுபிடித்தான் .
பாஞ்சு நிமிஷம் தான் ஆகும் , எதுத்தாப்ல இருக்கற மெக்டில உக்காந்திருங்க நான் வந்துற்றேன் என்று சொல்லவிட்டு கிளம்பி விட்டாள் .
மெக்டிக்குள் நுழைந்தால் அதிக கூட்டமுன்னும் சொல்ல முடியாது , கூட்டம் இல்லன்னும் சொல்ல முடியாது.ஆங்காங்கே ஆட்கள் உட்கார்ந்திருந்தனர். மெக்டில பர்கர் கிடைப்பதோடல்லாமல் ஐஸ்க்ரீம் , காபி ஆகியவையும் இருக்கும்.
வெளிநாட்டு காபி கடைகளில் பலவகையான காபிகள் , வெவ்வாறான அளவுகளில் கிடைக்கும். டீ ஷர்ட் சைஸ் போல small ,medium ,large ,extra large என்ற அளவுகளில் கிடைக்கும் . இங்கே சமத்துவம் எப்படி நிலவுகிறது என்பதற்கு காபி கடைகளை கூட உதாரணமாக சொல்லலாம் . ஒரு கம்பெனியின் முதலாளி முதல் கடைநிலை ஊழியன் வரை இங்கிருக்கும் அனைத்துக் காபி கடைகளுக்கு சென்று காபி குடிக்கும் அளவுக்கு அதன் விலை இருக்கும். நம்மூரில் சரவணபவனில்காபி சாப்பிட கூட நடுத்தர வர்க்கமே நாலு முறை யோசிக்கும் அளவுக்கு அதன் விலை இருக்கும்.
வழக்கமாக நான் வாங்கும் Large காபியினை வாங்கி விட்டு, காபி வாங்க லைனில் நிற்கும் போது எங்கே உட்காரலாம் என்று திட்டம் போட்டனோ அந்த இடத்தில் போய் உட்கார்ந்துவிட்டேன். இன்னும் பதினைந்து நிமிடத்தில் மனைவி வந்து விடுவாள் என்பதால் சும்மா பேஸ்புக் பார்க்கலாம் என்று மொபைலை எடுத்தேன் . போனை எடுத்தவுடன் மனைவிடமிருந்து அழைப்பு , அதுக்குள்ளவே முடிஞ்சிருச்சா என்று நினைத்துக் கொண்டே , என்னமா என்றேன் ?
ஏங்க இந்தக்கடையில nails கூட பண்ணுவாங்கலாம் , விலை ரொம்ப கம்மியாருக்கு அப்புறம் ஏகப்பட்ட options இருக்கு நான் பண்ணிக்கட்டுமா என்றாள் . இதுல என்ன இருக்கு பண்ணிக்கோ ஆனா எவ்வளவு நேரம் ஆகும்னு கேட்டியா என்றான் கந்தன்.
ம்ம்ம் .அரமண்ணேரத்துலருந்து முக்காமண்ணேரம் வரைக்கும் ஆகும் என்றாள் பச்சையம்மா. 

நான் என்ன பண்றது அவ்ளோ நேரம்? என்றான் கந்தன் 
,மெக்டிலே இருங்க , இல்லனா சும்மா வேற ஏதாவது கடைக்குப்போய்ட்டு வாங்க என்றாள். 

சரிடி எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்வளவு சீக்கிரம் முடிச்சுட்டு கால் பண்ணு என்றான் கந்தன்.
போனை கையிலே வச்சிருங்க நான் வாட்ஸாப்பில நேயில்ஸ் போட்டா அனுப்புறேன் நீங்க எது நல்லா இருக்குன்னு செலக்ட் பண்ணி சொல்லுங்க என்றாள் .
ஓகே கண்டிப்பா சொல்றேன் , ஆனா சீக்கிரம் முடிச்சுட்டு வா என்றான் கந்தன்.
இன்னும் குறைந்தது அரை மணிநேரம் இருப்பதால் youtube பார்க்கலாமா அல்லது பேஸ்புக்கே பார்த்துட்டு இருக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான் .

அப்போது ஒரு வெள்ளைக்காரப் பெண் அருகே வந்து இங்கே உட்காரலாமா என்று கேட்டாள் . okay no problem. என்றான் கந்தன் .
பரஸ்பர அறிமுகம் நடந்த பிறகும் , கந்தனுக்கு எதற்காக இந்தப்பெண் இங்கே உட்கார்ந்தாள் என்ற கேட்கப்போகின்றாள் என்று யோசித்துக்கொண்டிருந்தான். 

அவள் பெயர் மிச்சல் என்றும் பெல்ஜிய நாட்டிலிருந்து தன தாத்தா இடம் பெயர்ந்தார் என்றும் . கல்லூரியில் வணிகவியல் படித்து வருவதாகவும் குறிப்பிட்டாள் .நானும் உங்களைப் போலவே இந்த நாட்டுக்கு வந்தேறி தான் , நாங்கள் இரண்டு தலைமுறையாக வாசிக்கின்றோம் , நீங்க புதுசாக வந்த வந்தேறி என்றாள் . அது மட்டுமல்லாமல் தன் ஆன் நண்பர் ஒரு கனடிய பூர்வீக குடி இனத்தை சேர்ந்தவன் என்று பெருமையுடன் கூறினாள் .
21 வயதே நிரம்ய அவள் உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்த்திருப்பதாக குறிப்பிட்டாள். அந்தப் பயணங்கள் குறித்தும் , அனுபவங்கள் குறித்தும் சொன்னாள் . மேலும் இந்தியா தனக்கு மிகவும் பிடித்தமான நாடு , ஆனால் அங்கு மட்டும் இன்னும் செல்லவில்லை என்று கவலையுடன் குறிப்பிட்டாள் .
தாஜ்மகால் குறித்து நிறைய பேசினாள் . நான் இரண்டுமுறை தாஜ்மகால் சென்றிருந்தும் அறிந்திராத பல விஷயங்களை குறித்து சொன்னாள் . அவள் பேசியதைக்கேட்டு மறுபடியும் தாஜ்மகாலினை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
இருப்பினும் நான் நம்மூர் பெருமைகளைப் பேச வேண்டும் என்பதற்காக தஞ்சை பெரிய கோவில், மகாபலிபுரம் போன்றவற்றின் சிறப்புகளை எடுத்துக் கூறி தாஜ்மாகாலைப்பார்த்து விட்டு அபப்டியே இந்தியாவின் தெற்குப்பகுதிக்கு செல்லுங்கள் , அதி அற்புதமான கட்டிடங்கள் இருக்கின்றன என்றேன் .
மிச்செல் :well ………...என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு sorry to say this இந்தியா செல்லவே எனக்கு பயமாக இருக்கின்றது . உலகில் மற்ற எந்த நாட்டுக்கு செல்ல வேண்டுமென்றாலும் கனடாவில் இருக்கும் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்லும் அதே மனநிலையுடன் தான் பயணிப்பேன் .
இந்தியாவிற்கு பயணம் செய்வது குறித்து குடும்பத்தருடன் பேசினாலோ நணப்ர்களுடன் பேசினாலோ வேண்டவே வேண்டாம் என்கின்றனர். எனக்கு இந்தியா செல்ல வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலேயே ஏற்பட்டது . அமம்விடம் கேட்டபோது நீ வளர்ந்து பெரியவளான பிறகு செல்லலாம் என்று சொன்னாள் . 
இபொழுது கேட்டாள் என்னை மாதிரி வயதான பெண்களுக்கே இந்தியாவில் பாதுகாப்பு இல்லை, இதில் உன்னை எப்படி அழைத்து செல்வது என்று என் அம்மா கூறினாள்.
மிச்செல் இவ்வாறு கூறியதற்கு என்ன விதமான பதில் கூறுவது என்று தெரியவில்லை .இந்தியாவின் ஒட்டு மொத்த ஆண்களைக் குறித்து வெளிநாட்டு பெண்களுக்கு இருக்கும் மதிப்பீடு அதிர்ச்சியாக தான் இருந்தது . 
அது ஒரு முழுமையான உண்மை இல்லை என்றாலும் அந்தக் கருத்தினை மாற்றிக்கொள்ள சொல்வதற்கு போதுமான உதாரணங்களும் நம்மிடம் இல்லை என்பது தான் நிதர்சனம் .
டொரோண்டோ விமானநிலையத்தில் இருந்து கிளம்பி நேராக தாஜ்மஹால் இருக்கும் இடத்திற்கு சென்று அங்கே ஒரு நாள் முழுக்க அந்த அழகினை ரசித்து விட்டு எந்த ஒரு ஆபத்திலும் சிக்காமல் மீண்டும் டொரொன்டோ வந்து சேருவதற்கு உங்களால் எதாவது ஒரு திட்டம் வகுத்து கொடுக்க முடியமா என்று மிச்செல் கேட்டாள்.

பதில் சொல்ல ஆரம்பிப்பதற்குள் என் செல்போனுக்கு அழைப்பு வந்தது , excuse me என்று சொல்லிவிட்டு , போனை எடுத்துப் பேசினேன் ,
உங்ககிட்ட என்ன சொன்னேன் , கையிலேயே போனை வச்சிருங்க நெய்யில்ஸ் போட்டோ வாட்ஸாப்பிலே அனுப்புறேன் , பார்த்துட்டு சொல்லுங்கன்னு தான சொன்னனேன், நான் பக்கத்துல இருக்குபோது போனையே பார்த்துட்டு இருக்க வேண்டியது , இல்லாதது போது என்ன பண்றீங்கன்னு தெரியலே , சீக்கிரமா எதுன்னு செலக்ட் பண்ணி அனுப்புங்க என்று என்னைப் பேசவே விடாமல் அவளே பேசிவிட்டு போனை வைத்து விட்டாள் .
just give me a second என்று மிச்சலிடம் சொல்லிவிட்டு வாட்ஸாப்பில் மனைவி அனுப்பிய போட்டாக்களை பார்த்தான் , அப்படியே தலை சுற்றியது , ஏகப்பட்ட கலர் மற்றும் விதவிதமான அமைப்புகளை உடைய நெயில்ஸ்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் 
இதிலிருந்து ஒரு கலர் அதற்கு ஏற்ற ஒரு அழகான வடிவம் என எப்படி தேர்ந்தெடுப்பது என்று யோசிக்கையில் , மிச்ச்ளின் கை விரலில் வித்தியாசமான கலருடனான நெயில் இருந்தது. எனவே அவளிடமே இந்த பட்டியலிலிருந்து ஒன்றினை தேர்ந்தெடுக்க சொல்லி கேட்கலாம் என்று தோன்றியது.
if you dont mind can I ask you one thing என்றேன் of course என்றாள் , என் மனைவி அனுப்பிய போட்டோக்களை கணப்பித்து இதில் ஏதாவது ஒன்றினை தேர்ந்தெடுக்க உதவி செய்யமுடியுமா என்று கேட்டேன். ஒகே என்று சொல்லி சிறிது நேரத்தில் செலக்ட் செய்து கொடுத்தாள் . மனைவிக்கு மிச்செல் செலக்ட் அனுப்பி விட்டேன் .
உங்கள் மனைவியிடம் நீங்கள் பேசும் முறை, அவளுக்காக நீங்கள் எடுத்துக் கொள்ளு அக்கறை என அனைத்தும் ஆச்சரியமாக இருக்கின்றது என்றாள் மிச்செல். நான் இந்தியப்பெண்களை ஆண்கள் மிகெபெரிய அளவில் அடிமைப்படுத்தி வைத்திருப்பார்கள் என்றே எண்ணி இருந்தேன் .இந்தியா முழுமயாக மாறிவிட்டதா எல்லா ஆண்களுமே இப்படித்தானா என்று கேட்டாள் , நிலைமை முழுதும் மாறிவிட்டதாக சொல்ல முடியாவிட்டாலும் ஆண் பெண் சமத்துவம் குறித்த விழிப்புரவு அதிமாகிறது என்றேன்.
டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவத்தினைக் குறிப்பிட்டு அதனால் தான் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறினாள். நான் இந்தியா சென்றால் அதே போன்று கற்பழித்து கொன்று விடுவார்களா என்னு சொல்லி தன கழுத்தில் இரண்டு கைகளையும் வைத்து நெறிப்பது போல செய்து கண்ணபித்து இது போல நடக்குமா என்று மறுபடியும் கேட்டாள்.
ஒரு நிமிடம் அப்படியே உறைந்து பொய் விட்டேன் . என்ன விதமாக பதில் சொல்வது , இந்த பயத்தினை யாரால் போக்க முடியும் என்று யோசித்தேன். பாரத மாதாவினை குறிப்பிட்டு நாங்கள் பெண்களை தெய்வமாக மதிப்பவர்கள் என்று சொல்லி பயத்தினைப் போக்கலாமா என்று நினைத்தேன். நான் சொல்லும் பதிலைக் கேட்டு அவள் சிரித்து விட்டால் என்ன செய்வது என்றெண்ணி அதை சொல்லவில்லை.

நன்றி 
செங்கதிரோன்

Friday, April 17, 2020

எனக்கு ஒரு பர்ஸ் வேண்டும்- சிறுகதை


டேய் அண்ணா அமேசானில் ஒரு லிங்க் அனுப்பி இருக்கேன் என் பர்ஸ் ரொம்ப கிழிஞ்சு போச்சு அதனால நா அனுப்பிச்சியிருக்கற லிங்க்ல ஒரு பர்ஸ் இருக்குடா அது எனக்கு வாங்கி அனுப்பு.

ஓகேடா லிங்க் பாத்துட்டு கூப்பிடுறேன்.

என்ன இவ்வளவு விலை போட்டிருக்கு இவனுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய பர்ஸ். டேய் தம்பி!! இவ்ளோ காஸ்ட்லி பர்ஸ் உனக்கு எதுக்குடா, முடிஞ்சா காசு சம்பாதிச்சு நீயே அந்த பரிசை வாங்கிக்க 

இப்படி ஏமாத்திட்டானே, என்ன பண்ணலாம் வெறுப்பா இருக்கு, ஏதாவது ஏதாவது காமெடி பாப்போம்

எவ்வளவு நாளைக்குத்தான் இந்த வடிவேலு கவுண்டமணி வீடியோ பார்க்கிறது வித்தியாசமா ஏதாவது பார்ப்போம்.

சதுரங்க வேட்டை காமெடியா சரி பார்ப்போம்
“”ஒருத்தனை ஏமாத்தினும்னா அவன்கிட்ட கருணையே எதிர்பார்க்கக்கூடாது அவன் ஆசையை தூண்டனும்””

வாவ் கண்டுபிடிச்சுட்டன் அண்ணன்கிட்ட எப்படிப் ஏமாத்தி பர்ஸ் வாங்குவதுனு, டேய் அண்ணன் காரா உனக்கு வைக்கிறன்டா ஆப்பு 


ஹலோ அண்ணா என்ன சாப்டியா? 
டேய் நீ என்ன நடிச்சாலும் நான் உனக்கு பர்ஸ் வாங்கி கொடுக்க மாட்டேன்டா?

அது இல்லடா அண்ணா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு, நீ ரொம்ப ராசிக்காரன் டா போன முறை நீ ஒரு பர்ஸ் வாங்கி கொடுத்த அதனாலதான் கொஞ்சம் காசு தங்குச்சு , அதான் இப்பவும் உன்னையே மறுபடியும் பர்ஸ் வாங்கி தரச் சொல்றேன். என்கிட்ட காசு இல்லாம இல்ல நீ வாங்கி கொடுத்தா நான் நல்லா பணம் வச்சி இருப்பேன் , நான் பெரிய ஆளா ஆனா உனக்குதான்டா பெருமை ( 1000ரூ பர்ஸுக்கு எவ்வளவு பிட் போட வேண்டி இருக்கு) 

டேய் தம்பி அட இவ்வளவு பொறுப்பாய்டியே டா எனக்கு ஆச்சரியமா இருக்கு டா டேய்

உடனே ஆர்டர் பண்றேன் டா உனக்கு டெலிவரி confirmation வரும் மொபைலை செக் பண்ணு

Thanks da 

எப்பா சதுரங்வேட்டை டைரக்டர் செம ஐடியா கொடுத்தப்பா 
எங்க அண்ணன் காரன் எவ்ளோ பெரிய ஆளு அவனே உன் படத்தோட ஒத்த வசனத்துல அவனை ஏமாரவைச்சுட்டியே 

நன்றி 
செங்கதிரோன்