Saturday, June 16, 2012

கலைஞர் - நரேந்திர மோடி ஆச்சர்யமான ஒற்றுமைகள் :


வருங்கால இந்திய பிரதமருக்கான போட்டியில் முன்னணியில் இருப்பவர் மோடி. இந்த நிலையை அடைய  , கலைஞர் அரசியலில் உயர்ந்த நிலையினை அடைய பின்பற்றிய அனைத்து வழிமுறைகளையும்    போலவே மோடியும்  செய்தே இந்த நிலையினை அடைந்தார் என்பதுதான் ஆச்சர்யம்.

கலைஞரைப்   போன்றே மோடியும்   மிகவும் பிற்படுத்தப் பட்ட சமூகத்தில் பிறந்தவர் அதாவது மட்பாண்டம் செய்யும் குடும்பத்தில்  பிறந்தவர். அதுவே அவர் அடித்தட்டு மக்களின்  பிரச்சனைகளை பற்றிய  அதிகமான புரிதலுக்கு முக்கியமான காரணம் ஆகும். அதேப் போன்று  கலைஞருக்கு  எப்படி அண்ணா  பார்ப்பன  ஆதிக்கத்தை ஒழிப்பதற்கும்  திராவிடக் கொள்கைகளையும் பரப்புவதற்கும்   மிகச் சிறந்த வழி காட்டியாக அமைந்தாரோ அதனைப் போன்று மோடிக்கு இந்து தீவிரவாதத்தினையும்  முஸ்லிம்களின் மீதான வெறுப்பினையும்  கற்றுக் கொடுத்த குரு யாரென்றால்   காந்தியை சுட்டுக்  கொன்ற கோட்சேவின்  வழக்கறிஞர் .

ஈழப் போர் உச்சத்தில் இருந்த பொழுது அமைதியாக  வேடிக்கை பார்த்த கலைஞரைப் போன்றே   தன் மாநிலத்தில்  வாழும் அப்பாவி முஸ்லீம் மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கப் பட்டபொழுது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தவர் மோடி.

 இவை அனைத்தையும் விட முக்கியமான ஒற்றுமையே கலைஞர் எப்படி அண்ணாவுக்குப்  பிறகு தன்னை தமிழகத்தின்  முதல்வராவதற்கும் தி.மு.க. தலைவராவதற்கும்  முன்னிறுத்திக் கொண்டாரோ அதனையே மோடி மிக குறுகிய காலத்தில் செய்து இன்று பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் பா.ஜ.க .வில் முன்னணியில் இருக்கின்றார்.

 கட்சியில் அன்பழகன் ,நெடுஞ்செழியன் போன்ற திறமையானவர்கள் இருந்தும் மாவட்ட செயலாளர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாதால்  கலைஞர் முதல்வரானார்.  அத்வானி காலம் முழுக்க கட்சிக்காகப் பாடுபட்டு உழைத்திருந்தாலும் தனக்கான ஒரு வலுவான கூட்டத்தினை உருவாக்கிட முடியாததனால் இன்று பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் அவரை வெகு சுலபமாக  பின்னுக்குத் தள்ளி விட்டத்துதான் மோடியின் மிகப் பெரிய சாதனை.

இவை மட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான ஒற்றுமைகளை குறிப்பிட முடியும். குறிப்பிட்டு சொல்ல  வேண்டிய மற்றொன்று கலைஞர் ஈழப் போருக்கு ஆதரவாக உண்ணா விரதம் நடத்தியதனைப் போன்றே முஸ்லீம்கள்  கொல்லப் பட்டபொழுது எந்த நடவடிக்கையும் எடுக்காத மோடி அதற்குப் பிறகு மத நல்லிணக்கம் என்ற பெயரில் ஆடம்பர உண்ணா விரத நாடகம் நடத்தி அவர் கட்சியினரையே திகைக்க வைத்தார்.

மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவிக்கும் பட்சத்தில் கருணாநிதி அவரை ஆதரிக்க எந்த தயக்கமும் காண்பிக்க மாட்டார், அதற்கு நான் சொன்னதைப் போன்றே பிறபடுத்தப் பட்ட சமூகத்தை சார்ந்தவர் அதானலே தான் ஆதரிப்பதாக நிச்சயம் கூறுவார்.

சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ஆ.ராசா கூறியதைப் போன்றே கலைஞர் இந்திய அரசியலில் மிக முக்கியமானவர். அவரை முன்னுதாரணமாகக் (நல்லது,கெட்டது இரண்டுக்குமே )  கொண்டே பலரும் இன்று அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர்.

மற்றுமொரு பதிவில் மோடி பிரதமர் பதவிக்கு தகுதியானவர் தானா என்பதனை பற்றி பார்ப்போம்.

Saturday, June 9, 2012

உண்மையைச் சொல்லி தோற்றுப்போன அவன் இவன் மற்றும் ஆரண்ய காண்டம்


 :

   பொதுவாக அனைத்துத் திரைப்படங்களுமே மனிதர்களின் வாழ்க்கையினை மிகைப்படுத்தியோ அல்லது கற்பனைக்கு எட்டாத விஷயங்களை தொழில்நுட்ப உதவியுடன் நம்ப வைக்கும் விதத்திலே தான் எடுக்கப்படுகின்றன. எனினும் மிக அரிதாகவே சில திரைப்படங்கள் மட்டுமே மக்களின் உண்மையான வாழ்க்கையினை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்படுகின்றன. அதற்கு மிக சிறந்த உதாணமாக அமைந்த இரண்டு படங்கள் அவன் இவன் மற்றும் ஆரண்ய காண்டம்.

அப்படி என்ன உணமையினை சொல்லிவிட்டார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுவிட்ட இந்த நூற்றாண்டிலும் அவன் இவன் படத்தில்  தமிழக  கிராமங்களின் நிலையினை மாறாத கூரை வீடுகள் , வேலை இல்லாமல் சுற்றித் திரியும் இளைஞர் கூட்டம் ,கிடைக்கும் சொற்ப வருமானத்தில் நிம்மதியாக வாழும் மக்கள் என்று அனைத்தயும்  தெளிவாக படம்பிடித்து காண்பித்து இருக்கின்றார். இவை அனைத்தும் உண்மை என்பதனை கிராமங்களில் வளர்ந்தவர்களுக்கும் அவர்கள்  வாழ்க்கையினைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்தவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.

தாதாயிசம் பற்றி வந்த பெரும்பானமையான படங்கள் அனைத்துமே அவர்கள் மிக ஆடம்பரமான வீட்டில் வாழ்வது போலவும் , புத்தம் புதிதான கார்களில் சுற்றிக் கொண்டிருப்பது போலவும் காண்பித்துக் கொண்டிருந்த நிலையில் அவற்றினை தகர்த்தெறியும் விதமாக ஆரண்ய காண்டம் படத்தில் ஒரு குறுக்கு சந்தில் ,பழைய காருடன் இரண்டு மூன்று அடியாட்களோடு தாதா வாழ்வது போன்று  அமைத்திருப்பார். படங்களில் வருவது போன்றே ரவுடிகள் வாழ்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருன்க்கும் மக்களுக்கு தங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலே கூட ரவுடிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற உண்மையினை என்று உணரப்போகின்றார்களோ  தெரியவில்லை.

இந்த இரண்டுப் படங்களின் தோல்வியினால் கவனிக்கப்படாமல் போனவர்கள் நான்கு பேர். அவன் இவன் படத்தில் வரும் இன்ஸ்பெக்டர் ,ஆர்யாவுடன் வரும் அந்த சிறுவன் .இருவருமே வசன   உச்ச்சரிப்பினையும் ,  முக பாவனைகளையும் மிக இயல்பாக  வெளிபடுத்தி இருக்கின்றனர். அதுவும்  அந்த  சிறுவன் குறித்து பாலாவே  விஜய் தொலைகாட்சியில் படம் பற்றி குறித்து பேசும் பொழுது படத்தில் சிறப்பாக நடித்தவர் யார் என்ற கேள்விக்கு அந்த சிறுவன் பெயரினையே  குறிப்பிட்டார்.

ஆரண்ய காண்டத்தில் வரும் பழைய பண்ணையார் மற்றும் அவரின் மகனின் நடிப்பு அற்புதம் என்றால் மிகையல்ல. இருவருக்கும் இடையிலான பாசப் பிணைப் பிணைப்பினை உணர்த்தும் காட்சிகள் மிக இயல்பானவை.  அந்தப் பண்ணையார் குடித்து விட்டு உற்சாக மன நிலையில் பேசும் காட்சிகளும்,சிறுவன் தன் தந்தையினை மீட்க போராடும் காட்சிகளும் தனி திரைப்படமாகவே எடுக்கும் அளவுக்கு சுவாரசியமான பகுதி.

இந்த இரண்டு திரைப்படங்களை இதுவரை பார்த்திராதவர்கள்  யாரும் இருப்பின் அவசியம் பாருங்கள்!