Friday, May 29, 2015

சாட்டையை தொலைத்த சவுக்கு

கடந்த ஒரு வாரமாக அதாவது ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் சவுக்கின் சாட்டை தொலைந்து விட்டது. சவுக்குக்கு எந்த அறிமுகமும் தேவையே இல்லை. இணையத்தில் அரசியல் நிகழ்வுகளை தீவிரமாகப் படித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் சவுக்கின் வீர சாகசங்கள் தெரிந்திருக்கும்.

கடந்த தி.மு.க. ஆட்சியின் இறுதிக் காலத்தில் சவுக்கு கருணாநிதி ஆட்சியின் முக்கிய அமைச்சர்கள் ,அதிகாரிகள் ஆகியோரின் ஊழலை அம்பலப்படுத்தியதன் மூலமாக  சவுக்கு இணையதளம் மிகப் பிரபலமானது. தமிழ்நாட்டில் புலனாய்வுப் புலி இதழ்கள் எல்லாம் வெளிப்படுத்தத்  தயங்கிய செய்திகளை துணிச்சலாக வெளிப்படுத்தி அனைவர் மத்தியிலும் பாராட்டினைப் பெற்றது.

தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் ஒரு வசனம் போல இந்த அநியாத்தைத்  தட்டிக் கேட்க ஒருத்தன் வருவான் சொல்வார்களே அந்த வசனத்துக்கு மிகப் பொருத்தமான நபராகத் திகழ்ந்தார்.அதுவும் காவல் துறையில் மலிந்திருந்த ஊழலை தகுந்த ஆதரங்களுடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.ஜாபர் செட்டின் தற்போதைய நிலைக்கு சவுக்கு மிக முக்கியக் காரணம், வார இதழ்களெல்லாம் இது போன்ற நபர்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கையில் எதற்கும் அஞ்சாமல் ஒவ்வொரு நாளும் புது புது ஊழல்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.



இந்த தொடர் நடவடிக்கையினால் தி.மு.க. ஆட்சியில் ஒரு முறை சிறைக்கும் சென்றார்.அபபொழுது சவுக்கின் நலன் விரும்பிகள் துடிதுடித்துப்  போனார்கள். இருப்பினும் ஒரு சில ஊடகங்கள் இந்த செய்தியினை வெளியிட்டதால், அழுத்தம் காரணமாக  விரைவில் ஜாமீனில் வெளிவந்தார்.

அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் முன்பு இருந்த அதே தீவிரத்துடன் செயல்பட முடியாவிட்டாலும், வேறு துறைகளில் மலிந்திருந்த ஊழல்களை வெளிக்   கொண்டு வருவதில் முக்கிய கவனம் செலுத்தினார். நீதிபதிகளின் மறுபக்கத்தினை சவுக்கு வெட்ட வெளிச்சமாக்கியபோழுது ஒருவராலும் நம்ப முடியாத அநியாயங்கள் வெளிவந்தன. நீதி அரசர் என்று நாம் நம்பிக் கொண்டிருந்த பலர் எப்படி நீதி வியாபாரிகளாக  இயங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதனை உணமையான ஆதாரங்களுடன் நிரூபித்தார் .

கடந்த ஒரு வருடமாக அதிமுக அரசின் ஊழல்களைக் குறிப்பாக மின்துறையில் நடக்கும் ஊழல்களை ஆதாரங்களுடன் அடுக்கினார்.குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு செய்தி, மாறன் சகோதரர்களின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் சவுக்குக்கு மிக முக்கியப் பங்குண்டு.

இப்படி இரண்டு ஆட்சிக்கும் எதிரானவராக இருப்பதால், அந்தக் கட்சிகளின் அபினமானிகளுக்கு இவர் பெயரைக் கேட்டாலே அலறும் நிலை உண்டாகி விட்டது.திமுககாரர்கள் எங்கள் ஆட்சியின் பொது சவுக்குக்கு இருந்த தைரியம் அதிமுக ஆட்சியின் போது இல்லை என்று குறைபட்டுக் கொள்வார்கள்.

மிழகத்தின் ஜூனியர் ஆசாஞ்சே என்று பாராட்டபடும் சவுக்கு citizen journalism என்ற ஒன்றுக்கு மிகப் பொருத்தமானவராகத்  திகழ்ந்து கொண்டிருக்கின்றார். எதற்கும் அஞ்சாமல் தன் சாட்டையடிப் பதிவுகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

காணமல் போன சாட்டை என்பது அவரின் சாட்டையடிப்  பதிவுகளைத் தான்.

நன்றி 

Tuesday, May 26, 2015

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது: சொல்லப்பட்டதும் சொல்லப்படாததும்

பாரதிராஜா நாயகனுக்கு பிறகு தமிழில் சிறந்த படம் இது தான் என்று சொன்ன அளவிற்கு இல்லை என்றாலும் , இளைஞர்களின் மேன்ஷன் வாழ்க்கையை ஓரளவிற்கு உண்மைக்கு அருகாமையில் பதிவு செய்திருக்கின்றது இந்தப் படம். படிப்பு சார்ந்தோ வேலை நிமித்தமாகவோ வெளி ஊர்களில் தங்கி இருந்தவர்களுக்கு அவர்களின் பழைய ஞாபகங்களை படம் பார்க்கும் போது  அசை   போட வைக்கும்.

இது உள்நாட்டிற்கு மட்டும் பொருந்தாது நீங்கள் வெளி நாட்டில் தங்கி இருந்தாலும் இது போன்ற சூழ் நிலைகளை சந்திப்பீர்கள் .நான் இந்தியர்களுடனும், வெளி நாட்டினர்களுடனும் இது போன்ற ஒரே வீட்டில் தங்கிய அனுபவம் உண்டு. 

முதலில் இந்தப்  படத்தில் சொல்லபடாத முக்கியமான ஒன்று,உடன் தங்கி இருப்பவர்களின் உடையை அணிந்து கொண்டு செல்வது. எனக்கு இது நிறைய நடந்திருக்கின்றது ,நாம் iron பண்ணி வைத்திருக்கும் உடையை தூங்கிக் கொண்டிருக்கும் போது மற்றவன் உடுத்திக் கொண்டு சென்று விடுவான்.அதுவம் உடன் படிக்கும் பெண்கள் இதனை வெகு சுலபமாகக் கண்டு பிடித்த்துவிடுவர், இது அவன் சட்டை தான, அவன் பெண்ட் தான என்று கேட்டு மானத்தை வாங்குவார்கள்.


அடுத்து படத்தில் இவர்கள் அடிக்கடி வீடு மாறுவதற்கு காரணமாக சொலப்படுவது இவர்கள் குடித்து விட்டு கலாட்டா பண்ணுவது, இதையும் விட முக்கியமாக இவர்கள் செய்வது அந்த ஏரியாவில் இருக்கும் பெண்களிடம் இவர்கள் செய்யும் வம்பினால் தான் வீட்டு ஓனர் நம்மை காலி செய்ய சொல்வர், அதுவும் ஓனர் கூட பரவாயில்லை, அந்த வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவரோ, எதிர் வீட்டுக்காரரோ தான் அதிக தொல்லை கொடுப்பார்கள்.மேலும் சென்னை மாதிரி இடங்களில் main gete னை பூட்டி விடுவார்கள், எனவே உங்களிடம் அதற்கான சாவி இல்லையென்றால் உங்கள் நிலைமை ரொம்ப சிரமம் தான், அதுவும் ,செல்போன் இல்லாத அந்த கால கட்டத்தில் நண்பனையும் கால் பண்ணி கூப்பிட இயலாது, எனவே உங்களுக்கு சிவராத்திரி தான்.

மேன்ஷன்கள் போலவே தான் தமிழ் நாடு முழுக்க இருக்கும் அரசு கல்லூரி விடுதிகள், வெகு குறைவானவை தான் மிகுந்த கண்டிப்புடன் செயல்படுகின்றன, மற்ற எல்லாவற்றிலும் படிக்கும் மாணவர்கள் தவிர்த்து கல்லூரி முடித்து நான்கைந்து ஆண்டுகளாகியும் அங்கே தான் தங்கி இருப்பவர்களின் எண்ணிக்கையும், மாணவர்களின் உறவுக்கரர்களாலும் தான் இந்த விடுதிகள் நிரம்பி இருக்கும்.

மேலும் இப்படத்தில் இடைச்செருகல் போல வரும் மத்திய தர வயது குடிகாரர் பாத்திரம் படத்தின் கதையுடன் ஒட்டவில்லை. அந்தப் பாத்திரம் ஏன் எனபது பிறகு தான் புரிந்தது, அந்தக் குடிகாரர் தான் படத்தின் இயக்குனர்.எனினும் இந்தக் காட்சிகள் இடை வேளைக்குப் பின்பு  வருவதால் படத்தின் போக்கில் தொய்வினை ஏற்படுத்த வில்லை.நிஜத்தில் திடிரென நம்மை தேடி ஊரில் இருந்து வருபவர்கள் பெரும் பாலும் அங்கே ஏதாவது தப்பு தண்டா செய்து விட்டு நம்முடன் வந்து தங்குவர். தினமும் அவர்களை படத்திற்கு அழைத்து செல்வது, சென்னையை சுற்றிக் காண்பிப்பது என்று நம் பணம் கரைந்து கொண்டே இருக்கும்.
இவர் தான் படத்தின்  இயக்குனர் மருது பாண்டி 


மொத்தத்தில் படம் மேன்ஷன் வாழக்கையை சற்று அழுத்தமாகவே பதிவு செய்திருக்கின்றது , இருப்பினும் உதவி இயக்குனர்களின் வாழ்க்கையை சற்று விரிவாகக் காட்டி இருக்கலாம், மற்றும் இதே போன்று வாடகை வீட்டில் தங்கி இருக்கும் பெண்கள்  குறித்தும் காட்சிகளை இணைத்து இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

படத்தில் அனைவருமே தங்கள் பங்களிப்பினை சிறப்பாக செய்திருந்தனர்.பாபி சிம்ஹாவின் அப்பாவி முகம் சில சமயம் சிரிப்பை தான் வரவைக்கின்றது. நயன்தாரவுக்கு கோவில் கட்டியதற்காக சூது கவ்வும் படத்தில் ஒரு பெருமிதமான ஒரு ரியாக்ஷன் கொடுப்பரே அது தான் அடிக்கடி ஞாபகம் வருகின்றது.

அனுராதா ஸ்ரீராம்  பாடிய   "மழைத் துளிகள்" பாடல் படம் முடிந்தும் உங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும். மிக சிறப்பாக பாடி இருப்பார்.

மழைத்துளிகள் பாடலின் காணொளி 


Monday, May 25, 2015

இசை உலகின் செயின் (Chain ) பொறுக்கி

தமிழ் படங்களில் வரும் வில்லன்கள் கழுத்து நிறைய கனமான செயின்களை அணிந்து கொண்டு வருவர். பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் ஆர்வம் இருக்கும் என்ற நிலை மாறி ,இது போன்ற பெரிய தாதாக்களுக்கும் தங்க ஆபரணங்கள் அணிவது விருப்பமாகி விட்டது. இது போன்று  அரசியல் தலைவர்களும் தங்கள் தலைமையின் பெயர் பதித்த மோதிரம், செயின் பிரேஸ்லெட் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மறைந்த தாமரைக்கனி அவர்கள் தான் அணைந்திருந்த கனமான இந்த மோதிரத்தால் தான் சட்டசபையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கை உடைத்தார்.

இந்த ஆபரணங்கள் அணிவது தங்களின் ஆடம்பரத்தை வெளிஉலகிற்கு காண்பிக்க ஒரு குறியீடாகப் பயன்படுத்துகின்றனர்.ராப்பர் இசை உலகின் அனைத்து பாடகர்களுமே இது போன்று நிறைய செயின்களை கழுத்தில் மாட்டிக் கொண்டிருப்பார். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட ஒருவரை மட்டும் செயின் பொறுக்கி என்று சொல்வதற்கான காரணம் இவருடைய பெயரே அது தான், 2 Chainz .இவருடைய சொந்த பெயர்  Tauheed Epps , ஆனால் இவராக சூட்டிக் கொண்டது 2 Chainz , கூடைபந்தாட்ட வீரரான இவர், இசை உலகில் பிரபலமானது 2012ல் , இதற்கு முன்னர் பல இசைக் குழுக்களில் இயங்கி வந்தாலும் , தனியாக இவரே பாடி  வெளியான பாடல்களின் மூலம் தான் இசை உலகில் பிரபலமானார்.



No Lie , Birthday song இரண்டும் மிகப் பிரபலமானவை, இந்தப் பாடல்களை நீங்கள் மீண்டும் மீண்டும் பார்ப்பீர்கள், அந்தளவுக்கு காட்சி அமைப்புகள் இருக்கும். ஏனெனில் இது போன்ற பாடல்களில் மிக மிக அழகான பெண்களை மிக ரசனையாக தேர்ந்தெடுத்து அந்த நடன அசைவுக்கு தக்கவாறு இசையும் அமைத்து கலக்கி இருப்பார்.அதுவும் Birthday song இசை உலகின் முரட்டு பொறுக்கியான Kayne West உடன் இணைந்து அதகளம் பண்ணி இருப்பார்.கண்டிப்பாக இந்தப் பாடலை பார்க்கும் ஒவ்வொருவரும் உங்கள் நண்பரின் பிறந்த நாளுக்கு இந்தப் பாடலை dedicate செய்வீர்கள் , நான்  சொல்வது எவ்வளவு உண்மை என்பதனை கீழே உள்ள உங்கள் குழாய் இணைப்பில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



இது போன்ற இசைப்  பணியும் தாண்டி இவரின் மற்றொரு செய்கையின் மூலம் அனைவருக்கும் அறிமுகம். நம்மூர் பாடகர் சினேகன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் மற்றும் பொது மேடைகளில் கட்டிபிடி வைத்தியம் செய்து தமிழகத்தில் மிக பரபரப்பாக செய்திகளில் இடம் பிடித்தார். ஆனால் 2 Chainz  உலகில் மிக விலையுர்ந்த பொருட்களை வாங்குவது ,உண்பது போன்ற சாதனைகளை செய்து கொண்டு வருகின்றார். 

தொப்பி -15 இலட்சம்,ஒரு பாட்டில் தண்ணிர் -5 இலட்சம் , பல் விளக்கும் டூத் பிரஷ் -25,000 ரூபாய்  இப்படி இவர் உலகின் அதிக விலை கொண்ட அனைத்தையும் வாங்குவதையும் பயன்படுத்துவதையும் பொழுது போக்காகக் கொண்டுள்ளார்.

மேக்டோன்னல்டில்(Mc Donald ) 2$ க்கு ஜூனியர் கிடைக்கும், யானைப் பசிக்கு சோளப்  பொறி போல இருந்தாலும் நம்ம பட்ஜெட்டுக்கு அதை சாப்பிடுவதை தவிர வழி இல்லை. ஆனால் , 2 Chainz சாப்பிட்ட பார்கரின் விலை 295$(15,000 ரூபாய் ).ஒரே ஒரு பர்கரின் விலை, வெவேறு நாடுகளில் இருந்து வரவைக்கப்பட்ட சிறந்த மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பார்கரின் கூடுதல் அம்சம் 24 காரட் தங்கப் பொடி தூவப்பட்டிருப்பதும், வைர பற்குச்சியும்(Tooth pick) இணைந்திருப்பது தான். கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட அந்த பர்கரை 2 chainz சாப்பிடுவதின் காணொளியைப்  பாருங்கள்.

         
செயின் பொறுக்கி குறித்த இந்தப் பதிவு உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கும் என்று நினைக்கின்றேன். அடுத்து இசை உலகின் முரட்டு பொறுக்கி குறித்து பார்ப்போம்.நன்றி 








Saturday, May 23, 2015

இசை உலகின் பண(காரப்)பொறுக்கி :லில் வேன்

பலபேருக்கு தகுதியும் திறமையும் அதிகம் குவிந்து இருந்தாலும் பணம் மட்டும் அவர்களிடம் குவியாது, மற்றொரு புறம்  ஒரு சிலரிடம் எந்த வித் திறமையும் தகுதியும் இல்லாமல் பணம் ஏகப்பட்ட அளவில் குவிந்து கிடக்கும். இதற்கான காரணம் தத்துவார்த்த ரீதியாகவும் அனுபவ ரீதியாகவும் பார்த்தால் ஏதேனும் ஒரு அதிர்ஷ்டமோ அல்லது அவர்களுக்குள் ஒளிந்து இருக்கும் (Hidden talent) ஒரு குறிப்பிட்ட திறமை கண்டுபிடிக்கப்பட்டு அதனால் மிகப் பெரிய புகழை அடைவார்கள்.

முன்னதற்கான உதாரணம், டெல்லிக்கு அருக்கமையில் உள்ள குர்கானில் தொழிற்சாலை அமைப்பதற்காக இடம் கையகப்படுத்தும்போது மூன்று சகோதரர்கள் ஒரு குடிசையில் ரோட்டோரம் வாழ்ந்து கொண்டிருந்தனர்.அவர்கள் இடம் தொழிற்சாலை எடுத்தவுடன் கிடைத்த தொகை 15 கோடி. அந்த சகோதரர்களில் ஒருவர் அரசு நிறுவனத்தில் ஒரு கடை நிலை ஊழியர். கோடீஸ்வரரான பின்னும் இன்றும் அதே வேலையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றார், அந்த நிறுவனத்தின் உயரதிகாரியின் காரை விட இந்த கடை நிலை ஊழியனின் கார் அதிக விலை கொண்டந்து. அந்த வளாகமே அவரைப் பார்த்து வியக்கினறது. ஏனெனில் பணக்காரவதற்கு  முன் அவரின் தோற்றமும் நடைவடிக்கையும் நன்கு அறிந்த அந்த மக்களால் அப்படி ஒரு அதிர்ஷ்டம் நம் வாழ்க்கையிலும் நடக்காதா என்று எண்ணி பெருமூச்சு விடுகின்றனர்.

இரண்டாவதற்கான உதாரணம் நிறைய பேர் இருந்தாலும் சமீபத்தில் வெற்றி பெற்ற சிவகார்த்திகேயனைக் குறிப்பிட்டு சொல்லலாம். பொறியியல் படித்து விட்டு தன்னுடைய மிமிக்ரி திறமையில் அபார நம்பிக்கைக் கொண்டு அதன் மூலம் படிப்படியாக முன்னேறி இன்று முன்னணி நடிகர்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த இரண்டாம் வகையை சேர்ந்தவர் தான் லில் வைன் (Lil Wayne ).

தனது 8 வயதிலே ராப் பாடல் எழுதத் தொடங்கி இன்று ராப் இசை உலகின் முன்னணிப் பாடகராக மட்டுமன்றி, ராப் உலகின் பணக்காரர்களில் முதலிடத்தினைப் பிடித்திருக்கின்றார்.(ஆதாரம்:போர்ப்ஸ் பத்திரிக்கை).அவரின் தோற்றத்திற்கும் அவர் அடைந்திருக்கும் இந்த உயரத்திற்கும் எந்த வித தொடர்பும் இருக்காது. உலகம் முழுக்க ராப்  இசை ரசிகர்களுக்கு மிகப் பிடித்தமானவர்களில் இவருக்கு முக்கிய இடம் இருக்கின்றனது. அதுவும் அமரிக்க அதிபர் ஒபாமா தன்னுடைய ஐபாடில் லில் வேன் பாடல்கள் இருக்கின்றது எனவும் தனக்கு அவர் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்று வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றார்.

இவர் காதில் மாடிக் கொண்டிருக்கும் head phone ,வைரம் பதிக்கப் பட்டது, இதன் விலை அதிகம் இல்லை ஜென்டிலமேன் ஒரு மில்லியன் டாலர் தான்.(இந்திய ரூபாயில் 5கோடி )

ஐந்தடிக்கும் குறைவான உஅரம், பற்களில் வித்தியாசமான கறை , சுருண்ட முடி என மாறுப்பட தோற்றம் கொண்டிருந்தாலும் பாடல்கள் மிகப் பிரபலம்.கானாப் பாடல்கள் ஒரு சிலருக்கு சுத்தமாகப் பிடிக்கவே பிடிக்காது . அப்படிப்பட்டவர்களால்,லில் வேன் ஏற்றுக் கொள்வதில் மிக சிரமமாக இருக்கும். எனக்கு எல்லா வகையான இசையும் பிடிக்கும், இதே போன்ற ரசனை கொண்டவர்கள் நிச்சயம் லில் வேனை மிகவும் ரசிப்பார்கள்.

God bless Amerika , Mirror , How to love ஆகிய மூன்று பாடல்களும் நான் அடிக்கடி கேட்கும் பாடல்கள், இவற்றில் how to love ராப் இசையில் தாயின் வலியை கலந்து மிக அற்புதமாக எடுக்கப்பட்ட பாடல்.God bless Amerika பாடலின் உங்கள் குழாய் காணொளியைப் பாருங்கள்.
இசை உலகின் பொறுக்கிகளில் இதுவரை ஆப்பிரிக்க அமிர்க்கர்களை (Afro -Americans ) மட்டும் குறிப்பிட்டிருக்கின்றேன், வெள்ளை அமெரிக்கர்களும் ராப் உலகில் இருக்கின்றனர், இவர்களில் மிக பிரபலமான எமினம் குறித்து தான் அடுத்த இசை உலகின் பொறுக்கிகள் வரிசயில் பார்க்க இருக்கின்றோம், மேலும் எமினம் பாடல் குறித்து அவருடைய அம்மாவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எது ஏன் என்று விரிவாக பார்ப்போம்.


Friday, May 22, 2015

இசை உலகின் இளம் தேவதைகள் :எல்லீ



முப்பது வயதை நெருங்கும் பாடகி எல்லீ ,அனைவருக்கும் பிடித்த பாடகியாக மாறியது எப்படி என்று பார்ப்போம். இதற்கு முன்பு இசை உலகின் தேவதைகள் வரிசையில் நான் குறிப்பிட்ட அடேல் போலவே இவரும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்.நான் முப்பது வயது என்று குறிப்பிட்டிருந்தாலும் , எல்லீ அவர்கள் பார்ப்பதற்கு இருபது வயது போல தான் இருப்பார். தேவதை என்ற சொல்லுக்கு மிக பொருத்தமாக மிக அழகாக இருப்பார்.நான் சொலவது எவ்வளவுஉண்மை என்பதனை கீழே உள்ள படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


சில பேர் பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பர்கள், பேச ஆரம்பித்ததாமல்  நாம் காத தூரம் ஓடும் அளவுக்கு அவர்கள் குரல் இருக்கும்.ஆனால் எல்லீ குரல் நம்மை அதிதீமான ஒரு எழுச்சி நிலைக்கு கொண்டு செல்லும். எழுச்சி நிலைக்குக் கொண்டு செல்லக் காரணம் எப்பொழுதுமே காதல் குறித்த பாடல்களை உச்சஸ்தாயில் பாடுவார், இருப்பினும் இவர் மென்மையான குரலில் பாடுவதால் அது நமக்கு மன்மத ராசா பாடல் பாடிய மாலதியின் குரல் போலல்லாது ஒரு வித மயக்க நிலைக்குக் கொண்டு செல்லும்.

இவரின் சிறந்த பாடல்கள் என்ற ஒரு பட்டியல் போடுவது மிக சிரமமான ஒரு காரியம், ஏனெனில் 90% மேலான இவரின் பாடல்கள் அனைத்துமே மிக சிறப்பான பாடல்கள். எனவே இங்கு சமீபத்தில் வெளியாகி உள்ள பாடலின் உங்கள் குழாய் (Youtube ) இணைப்பை தருகின்றேன். அதனைத் தொடர்ந்து மற்ற பாடல்களை நிங்களே தேடிபிடித்து கேட்க ஆரபித்து விடுவீர்கள்.

1.Beating Heart 
2.Burn 
3.I know you care 
இந்த மூன்று பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்தம்மனவை. மேலும் Calvin Harris உடன் இணைந்து பாடிய பாடல்களான I need your love மற்றும் outside ஆகிய பாடல்களையும் கண்டு மகிழுங்கள்.

பி.கு : இந்தப் பாடகரை தமிழகத்தில்  வளர்ந்து   வரும் இளம் அரசியல் விமர்சகர் ஒருவருக்கு மிகவும் பிடிக்கும்,  என்னமா இப்படி பன்றீங்களேம்மா  என்று நான் எழுதிய பானு கோம்ஸ் தான் அந்தப் பிரபலம்.

இது தவிர எல்லீ அவர்கள் ஒட்டப்பயிற்சியில் (Running) தீவிரமான ஆர்வம் உடையவர்.தினமும் ஆறு மைல் ஓடுவார். பிரபல பதிவர் அதிஷா அவர்களைப் போன்றே மாரத்தானில் ஓடுவதைத் தன் வழ நாள் லட்சியமாகக் கொண்டவர், தன்னுடைய ரசிகர்களையும் இந்த ஓட்டப் பயிற்சிகளில் கலந்து கொள்ள ஊக்கபடுத்துவார் 

Thursday, May 21, 2015

தெலுங்கர்களுக்கு பிடிக்காத வார்த்தை தமிழன்

செம்மரக்கடத்தல் விவகாரத்தில் தமிழர்கள் உயிரிழந்த விவகாரம் சூடு பிடித்திருக்கும் வேளையில் தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்குமான உறவினை நாம் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.தொப்புள் கொடி உறவு என்ற ஈழத் தமிழர்களைக் குறிப்பிடும் நாம் , பக்கத்துக்கு மாநிலங்களில் வாழும் மலையாளி, கன்னடர் மற்றும் தெலுங்கர்களை அவ்வாறு கருதாதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.

மொழி தான் நம்மைப் பிரித்து வைத்திருக்கின்றதா என்று பலர் கூறினாலும் அதில் ஓரளவுக்கு உண்மை உண்டே என்று தோன்றுகின்றது. ஏனெனில் இது போன்ற ஒரு பிரச்சனைக்கு வித்திட்டவர் மொழியியல் அறிஞர் கால்டுவெல், தமிழின் எச்சங்களே மற்ற திராவிட மொழிகள் என்ற அவரின் கோட்பாடு மற்ற மாநிலத்தவருக்கு தமிழர்களின் மேல் ஒரு வித காழ்புணர்ச்சியும் தாழ்வு மனப்பான்மையும் உண்டாக்கி விட்டது.

இதன் தொடர்ச்ச்சியாக கருணாநிதி திராவிட நாடு என்ற ஒரு புது கொள்கையினை உருவாக்கி பீதியைக் கிளப்ப ,பயந்து போன அண்டை மாநிலத்தவர்கள் , இந்த கொள்கையை ஏற்றுக் கொண்டால் தாங்கள் தமிழர்களின் எச்சம் எனபது உறுதியாகிவிடும் ,வட இந்தியர்களுடன் இணக்கமான ஒரு சூழலிணை உண்டாக்கிக் கொண்டனர்.

இறுதியாக தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பின் போது மற்ற திராவிட மாநிலங்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ள மத்திய அரசின் மொழிக் கொள்கையினை ஏற்றுக் கொண்டனர்.இதன் விளைவாக தமிழன் இந்தியாவில் தனித்து விடப்பட்டான்.இப்பொழுது தலைப்புக்கு வருவோம் , தெலுங்கர்களுக்கு மட்டும் தான் தமிழர்களைப் பிடிக்காதா என்ற எண்ணம் ஏற்படலாம் , மற்றவர்களுக்கு ஏற்படின் அது அவ்வளவு முக்கயத்துவம் வாய்ந்தது அல்ல. தமிழகத்தின்  தலை நகரம் தொடங்கி இண்டு  இடுக்கு வரை வாழும் இவர்களுக்கு நம்மைப் பிடிக்க வில்லை என்றால் அது ஏன் என்று அறிந்து கொள்ள்ளவேண்டிய அவசியம் இருக்கின்றது.

வரலாறு :
முதலில் வரலாற்று  ரீதியாக பார்ப்போம். தமிழர்கள் சொல்வது தெலுங்கர்கள் இங்கிருந்து தனியாகப் பிரிந்து சென்று ஒரு புது இனக்குழுவாக மாறி , தமிழும் சமஸ்கிருதமும் கலந்த ஒரு மொழியினை உருவாக்கிக் கொண்டார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் தெலுங்கர்கள் என்ன சொல்கின்றார்கள் தெரியுமா , லெமூரியக் கண்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள் , கடல் கோள்  (Tsunmai ) ஏற்பட்ட பின்னர் தமிழர்கள் தாங்கள்(தெலுங்கர்கள்)  வாழ்ந்த பகுதினை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்று கூறுகின்றனர்.அதாவது நாம் தற்பொழுது வாழும் தமிழகம் என்ற நிலபரப்பு தெலுங்கர்களுக்கு சொந்தமானது என்றும் அவர்கள் ஒரு புதிய வரலாற்றினை சொல்கின்றனர்.அதனை நிரூபிக்க தமிழகத்தின்  அனைத்து மாவட்டங்களில் வாழ்ந்து வரும் தெலுங்கர்களை உதாரணமாகக்  காட்டுகின்றனர்.

மேற்சொன்ன இரண்டில் எது உண்மை என்பதனை நிருபிக்க வேண்டியது வரலாற்று ஆய்வாளர்களின் கடமை. இருப்பினும் இலக்கிய அடிப்படையில் பார்த்தால் தமிழுக்கு முன்பாகவே எந்த ஒரு இலக்கியமும் அங்கு எழுதப்படவே இல்லை. இதனை தான் தமிழர்கள், தெலுங்கு  தமிழில் இருந்து பிரிந்த ஒன்று  , தமிழர்களே மூத்த  குடி என்பதற்கான மிக முக்கிய ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.

தற்பொழுதைய காலத்திற்கு வருவோம் , வாழ்க்கை முறையில் இருந்து வழிபாட்டு முறை வரை அனைத்திலும் தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டாகி விட்டது. உருவ அமைப்பிலும் உணவு பழக்க வழக்கங்களில் மட்டும் தான் நம்மிடையே ஒற்றுமை எஞ்சி இருக்கின்றனது.


சமூக நிலை :
பெரியாரால் இங்கு சமூக விடுதலையும் சாதி ஒழிப்பும் ,மூட நம்பிக்கை ஒழிப்பும் சாத்தியமாயிற்று. அங்கே இந்த நிலைமை தலை கீழாக இருக்கின்றது. ராமர் வழிபாடு மிகப்பரவலாக உள்ளது. சாதிய ரீதியாக மாணவர்கள் தனி தனியாகப் பிரிந்து கிடப்பது என்பது மிக சர்வ சாதரணமான ஒன்று. ரெட்டி மற்றும் நாயுடு தவிர்த்தவர்கள் எந்த ஒரு துறையிலும் முன்னேறுவதற்கு பல சவால்களை சந்திக்க நேரிடுகின்றது.

திராவிடர் கழகத்தால் நடைபெற்ற தாலி அகற்றும் நிக்ழச்சியைப் பார்த்து தமிழன் just like that என கடந்து விட்ட சூழலில் ஆந்திராவில் அந்த நிகழச்சி மிகப் பெரிய தலைப்பு செய்தியாகி விட்டது. திரும்ப திரும்ப ஒளி  பரப்பிக் கொண்டிருகிருந்தனர் . அந்தளவுக்கு காலத்தால் பின்னோக்கி வாழ்கின்றனர்.திராவிடர் கழகத்தால் நடைபெற்ற தாலி அகற்றும் நிக்ழச்சியைப் பார்த்து தமிழன் just like that என கடந்து விட்ட சூழலில் ஆந்திராவில் அந்த நிகழச்சி மிகப் பெரிய தலைப்பு செய்தியாகி விட்டது. திரும்ப திரும்ப ஒளி  பரப்பிக் கொண்டிருகிருந்தனர்.என்னுடைய தெலுங்கு நண்பன் ஒருவன் இந்த நிகழ்ச்சி குறித்து குறிப்பிட்டு சண்டைக்கே வந்து விட்டான். கீழே உள்ள உங்கள் குழாய் (Youtube ) இணைப்பில் ஆந்திர தொலைக்கட்சியில் விரிவாக ஒளிபரப்பட்ட அந்தக் காணொளியை பாருங்கள்.

கல்வி:
இப்படி மூட நம்பிக்கையினை பின்பற்றி வாழ்ந்தாலும் கல்வியில் தமிழகம் தொட முடியாத உயரத்திற்கு சென்று விட்டனர். IIT யில் அதிக எண்ணிக்கையில் பயில்வர்களில் முதலிடம் ஆந்திர மாணவர்கள்தான். இதனால் இவர்களின் வாழ்க்கைத் தரம் தமிழர்களை ஒப்பிடுகையில் மிக சிறப்பாக இருக்கின்றது. நான் பார்த்தவரையில் படிப்பில் மிக மிக கவனமாகவும் அதிக பொறுப்புணர்ச்சியுடனும் இருப்பார்கள் இதுவே இவர்களின் வெற்றிக்குமுக்கியக் காரணமாக இருக்கின்றது.

இருப்பினும் இதில் கூடவே ஒரு சில சிக்கல்களும் உள்ளது, படைப்பாற்றல் என்ற ஒன்றில் அவர்கள் எந்த வித கவனமும் செலுத்த முடிவதில்லை, எளிதாக வேலை கிடைக்கக் கூடிய படிப்புகளையே அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்.அதனால் தான் இன்று வரை ஒரு சிறந்த விஞ்ஞானி அங்கு உருவாகவே இல்லை. தமிழ் நாட்டில் இருந்து நோபல் பரிசு பெற்றவர்கள் இருப்பது போல் அங்கு இல்லை.

பெருமையாக சொல்லிக்கொள்ள இருக்கும் ஒரே நபர் தற்பொழுதைய microsft தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா மட்டுமே. இதனை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர். நாம் நம் இலக்கிய பெருமைகளைப்  பேசினால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.எனவே இந்து மதத்தினை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். அதனை தங்கள் வரலாறு என்று கூறிக் கொள்வதன் மூலம் தமிழர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நிறுவ முயல்கின்றனர் .


திரையுலகம்:
இங்கே சினிமா மட்டும் தான் தமிழர் தெலுங்கர்களிடையே ஒரு பெரிய இணைப்புப் பாலமாகத் திகழ்கின்றது. NTR , சிரஞ்சீவி ,தற்போது அவரின் மகன் ராம் சரண் வரை சினிமா ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர்.முகப் புத்தகத்தில் பதமிழக இளைஞர்கள் பலரும்  தெலுங்கு கதாநாயகர்கள் புகைப்படத்தினை  profile ஆக வைத்திருக்கின்றனர், இதில் பெண்களும் தெலுங்கு கதாநாயகர்களை மிகவும் ரசிக்கின்றனர்.ஆந்திராவில் தமிழ் சினிமா கதாநாயகர்களை விட இசை அமைப்பாளர் இளையராஜா , இயக்குனர்கள் , நடன இயக்குனர்களுக்கு ஒரு பெரிய வரவேற்பு இருக்கின்றது.


தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்ற குரல் சமீப காலமாக ஓங்கி ஒலிக்கின்றது. அது போல ஆந்திராவிலும் தெலுங்கர்கள் தங்கள் தமிழர்களின் நீட்சி  அல்ல தாங்கள் ஒரு சுயம்பு என்பதனை நிரூபிக்க முயன்று கொண்டிருக்கின்றனர்.இணையத்தில் ஒரு சில இடங்கிளில் தமிழர் தெலுங்கர்  விவாதம் நடந்து கொண்டு தான்இருக்கின்றது. அது வீதிக்கு வராதவரை நல்லது. 

நான் உணர்ந்தவரை தமிழர்களின் நீண்ட நெடியப் பாரம்பரியப் பெருமை தெலுங்கர்களுக்கு தாழ்வு மனப்பானமையை உண்டாக்குகின்றது.இதுவே அவர்களுக்கு நம் மேல் வெறுப்பு உண்டாக வித்திடுகின்றது . வேறு ஏதேனும் காரணம் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இந்த நீண்டபாதிவினை பொறுமையாகப் படித்ததற்கு மிக்க நன்றி .

Wednesday, May 20, 2015

இசை உலகின் குண்டு பொறுக்கி

 இந்த தலைப்பைப்  பார்த்தவுடன் தமிழ் சினிமா இசை உலகில் இயங்கும் இருவரின் முகம் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல.  ஆனால் நான் எழுதப் போகும் இசை பிரபலத்தினைப் போன்றே ஒருவர் மலேசியாவில் இருக்கின்றார், உங்களுக்கு மிகவும்  அறிமுகமானவர் தான் அவர், தனுஷின் பொல்லாதவன் படத்தில் எங்கேயும் எப்போதும் பாடல் ரீமிக்ஸில் பாடியதோடு மட்டுமின்றி ஆடியும் இருப்பார். முதலில் இசை உலகின் பொறுக்கி  என்று எழுதவதற்கான காரணம் என்ன்னவேன்று தெரிய விரும்பினால் ,இசை உலகின் பொறுக்கிகள் என்ற இந்த பதிவினைப் படிக்கவும். இந்தப் பதிவினை படித்தவர்கள் பொறுக்கிகள் என்று ஏன் குறிப்பிடுகின்றேன் என்று நன்கு புரிந்திருக்கும்.


ராப் இசை உலகில் பலரும் குண்டாக  இருந்தாலும் , தற்போதைய நிலையில் மிக பிரபலமாக இருப்பவர் ரிக் ராஸ் இவரப் பற்றிதான் இன்றையப் பதிவு.இவரின்  இசை பயணம் , சிறந்த பாடல்கள் குறித்து பார்ப்போம்.



மிக மிக சமீபத்தில தொடங்கிய ரிக்கின் இசைப் பயணம் , ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. ராப் பாடல்களில் சத்தம் அதிகமாக இருக்கும் என்பது தெரிந்த ஒன்று, ரிக் மிக மிக அதிக சத்தமாக பாடுவார். அதுவும் அதிக எடை கொண்ட இந்த உடம்புடன் அவர் ஆடும் பொது சில சமயம் நகைச்சுவையாகத் தோன்றினாலும், அவரின் குரலில் இருக்கும் வசீகரம் அதனை மறைத்து விடும். ஆனாலும் இளையராஜா ,ஏ .ஆர்.ரகுமான் பாடல்களைக் கேட்டு பழக்கப்பட்டவர்களுக்கு இந்த இசைக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள வெகு சிரமமாக இருக்கும்.

இவரின் பாடல்களில் இரண்டே இரண்டை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன். இந்தப் பாடலகள் பிடித்திருந்தாலோ அல்லது இவரின் மற்ற பாடலகளை பார்த்து மகிழ விரும்பினால் உங்கள் குழாய் (youtube ) செல்லுங்கள்.அங்கே ஏராளமான பாடல்கள் உள்ளன. குறிப்பாக சமீபத்தில் வெளியான hood billionaiere இசை   முழு தொகுப்பும் உள்ளது. diced pinepples என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அதனைக் கேளுங்கள். மேலும் hold me back என்ற மற்றுமொரு பாடல் உள்ளது, இது நமது வாடா சென்னை பகுதியில் எடுத்தது மாதிரி இருக்கும்.



எனக்கு இவருடைய சொந்த இசைத் தொகுப்பிலிருக்கும் பாடல்களை விட மற்ற  ராப் இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடிய பாடல்கள் தான் மிகவும் பிடிக்கும். டைகாவுடன் இணைந்து பாடிய Dope  ,உஷருடன் இணைந்து பாடிய let me  see ஆகிய பாடல்கள் இவரின்  பங்களிப்பு மிக சிறப்பாக இருக்கும்.


அடுத்ததாக இசை உலகின் பணப் பொறுக்கி ஒருவர் குறித்து பார்ப்பபோம்.

Tuesday, May 19, 2015

ஹாலிவுட்டின் கில்மா இயக்குனர் :ரஸ் மேயர்

ஹாலிவுட் படங்களில் வன்முறையும் ஆபாசமும் சற்று தூக்கலாகவே இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்று.ரஸ்  மேயர் முழுக்க முழுக்க கில்மா படங்களை எடுப்பதையே தன்  லட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர்.குறைந்தது 15 வருடங்கள் திரைத்துறையில் இயங்கிய அவர் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். 

தள்ளாத வயதிலும் எப்படிப்பட்ட ரசனைக்காராக இருக்கின்றார் பாருங்கள்.

பிரபல தமிழ் சினிமா பதிவர்கள்  யாரும் இவர் குறித்து  எழுதி இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. இல்லை எனில் இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகின்றேன்.

மிக பிரபலமான தொலைகாட்சி தொடரான Game of thrones  வீடியோவினை primewire இணையதளத்தில் தேடிக் கொண்டிருக்கும் பாத்து தான் Vixen என்ற ஒரு படம் அங்கே கண்ணில் பட்டது .ஆரம்பமே அதகளமாக இருந்தது, போக போக முழுக்க ஒரே கில்மா தான்,பின்னர் தான் இந்தப் படத்தின இயக்குனர் யார் என்று கண்டுபிடித்தால் ரஸ் மேயர் என்று விக்கி பீடியா சொன்னது. அவரின் மற்றொரு படமான் up உம் இதே ரகம் தான்.


பேச்சிலர்கள் சனிக்கிழமை இரவுகளில் பார்க்க தகுந்த படம். திருமணமானவர்கள் மனைவி மாமனார் வீட்டுக்கு சென்றவுடன் இந்தப் படத்தினைக் கண்டு களியுங்கள்.


Thursday, May 14, 2015

இசை உலகின் கஞ்சா பொறுக்கி : (Snoop Dogg)


சித்த மருத்துவத்தில் கோரக்கர் மூலி என்றழைக்கப்படும் கஞ்சாவினை அதிகம் பயன்படுத்தும் ஒரு இசை பிரபலம் குறித்து தான் இப்பதிவு . ராப் இசைக் கலைஞர்கள் பலரும் கஞ்சாவினை பயன்படுத்தினாலும் ,ஸ்நூப் மட்டுமே இதனை மிக வெளிப்படையாக செய்வது மட்டுமன்றி . அதனை பயன்படுத்துவதையும் வெளிப்படையாக செய்வார்.


இவர் பெயருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் dogg என்பது குடுமபப்  பெயர் அல்ல, மாறாக நம்மூரில் வெண்ணிற ஆடை நிர்மலா , நிழல்கள் ரவி போன்றோருக்கு அவர்கள் நடித்த முதல் படத்தில் வந்து போலதான், இவருக்கும் தனது முதல் இசை தொகுபான doggystyle என்ற மிகப்பெரிய வரவேற்பினை பெற்றதில் இருந்து இந்த dogg என்ற பெயர் ஒட்டிக் கொண்டது. அந்த இசைத் தொகுப்பில் வரும் whats my name பாடலில் தனது பெண் தோழியுடன் படுக்கையில் இருக்கையில் அவளின் அப்பா வரநாயாக உருவெடுத்து தப்பிக்கும் பாடலை பாருங்கள்.



னைத்து வெளிநாட்டவருக்கும் இந்தி திரையுலகம் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும், அது ஸ்நூப் அவர்களுக்கும் இருந்தது அதன் விளைவாக அக்ஷய்குமார் நடிப்பில் வெளிவந்த singh is king படத்தில் ஒரு பாடலினை பாடி நடனம் ஆடி இருப்பார். அதன் வீடியோ கீழே  உள்ளது.



சர்ச்சைகளில் சிக்குவதேன்பது இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி ,பள்ளி முடித்தவுடன் கோகின் வைத்திருந்தற்காக சிறைக்கு செல்ல ஆரம்பித்தவர், தொடர்ந்து பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டார். அது போக எந்த  நாடுகளுக்கெல்லாம செல்கின்றாரோ அங்கும் ஏதாவது ஒரு பிரச்சனைகளில் சிக்குவார்.குறிப்பாக ஆஸ்திரிலியா மற்றும் நார்வே ஆகிய நாடுகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய இவருக்கு தடை விதித்தன.இருப்பினும் இந்த சர்ச்சைகள் அவருக்கு தொழில் ரீதியாக எந்த பாதிப்பினையும் உண்டாக்கவில்லை. 

1993 ல் தொடங்கிய இசைப் பயணம் இன்றும் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. அதும் இன்றைய இளம் தலைமுறை பாடகர்களுடன் எந்த ஒரு ஈகோவும் இன்றி அவர்களின் பாடல் தொக்குப்பில் தோன்றி கலக்கிக் கொண்டிருக்கின்றார்.நான் முன்பு இசை உலகின் இளம் தேவதைகள் பற்றி எழுதிய கேட்டி பெர்ரியுடனும் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளார். ராப் இசை எனபது முதலில் புரிவதற்கு சிரமமாக இருந்தாலும் போகபோக பிடித்து விடும்.

Wednesday, May 13, 2015

அல்லோபதி மருத்துவர்களும் அல்லோலூய குரூப்பும்

அல்லோபதி மருத்துவர்களும் அல்லோலூயா குரூப்பும் இணையும் மையப் புள்ளி என்பது இவர்கள் தொழில் சார்ந்தும் ,வழிபாடு சார்ந்தும் பின்பற்றுவது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றிலிருந்து தொடங்குகின்றது.
 பரவி வரும் பன்றிக் காய்ச்சலை தடுக்க சித்த மருந்தான கப சுரக் குடிநீர் நல்ல பலனளிக்கின்றது. தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்த இந்த காலத்திலும் நம் பண்பாட்டு மருத்துவம் நமக்கு நன்மை அளிக்கின்றது. ஆனால் தமிழர்களாக இருந்தாலும் ஆங்கில் மருத்துவமான அலோபதி படித்தவுடன் தான் ஆங்கிலேயனாக மாறி விட்டது போல நினைத்துக் கொண்டு சித்த மருத்துவத்த்தை இழிவாகப் பார்ப்பதும் எள்ளி நகையாடுவதுமானப் போக்கினைக் கொண்டிருக்கின்றனர். மேற்குலகமே கூட்டு மருத்துவம் நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழலில் , ஆங்கில மருத்துவம் மட்டுமே அனைத்திற்கும் தீர்வு எனற தட்டையான போக்கில் தமிழ் நாட்டில் உள்ள அலோபதி மருத்துவர்கள் இருப்பது வெட்ககேடு .

தமிழக பாஜக தலைவரின் கணவர் சுந்தர்ராஜன் அவர்கள் சிறுநீரக கோளாறு (Urologist )நிபுணர் , இவர் ஒரு முறை ஆனந்த விகடன் கட்டுரையில் சித்த மருந்துகள் சிறுநீரக கோளாறை உண்டு பண்ணுகின்றன என்று எந்த ஆதாரமும் இன்றி குற்றம் சாட்டினார். அப்போதே பல சித்த மருத்துவர்கள் அனந்த விகடனுக்கு மறுப்பு கடிதம் எழுதினர் . ஆனால் எதையும் ஆனந்த விகடன் வெளியிட மறுத்து விட்டது. ஒரு பக்கத்திற்கு போலி சித்த மருத்துவர்கள் கொடுக்கும் விளமபரங்களை  வெளியிடுபவர்கள் உண்மை கருத்தை சொல்ல விழையும்போது அதை தடுக்கின்றனர் .

சித்த மருந்துகளின் நம்பகத்தன்மை குறித்தும் , சித்த மருத்துவ கோட்பாடு குறித்தும் மேலும் அறிய நான் ஏற்கனவே எழுதிய இரண்டு கட்டுரைகளை  வாசிக்கவும் .

1.தங்க பற்பம்
2.சித்த மருத்துவ உண்மைகள்

அலோபதி மருத்துவ முறைகளில் கொடுக்கப்பட்ட்டுள்ள பெரும்பாலான நோய்கள் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் பெரும்பாலும் அம்மருத்துவம் தோன்றிய இடத்தினை மையமாகக் கொண்டவை. அதே போல வெளிநாடுகளில் மருத்துவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.அதே நேரத்தில் அந்த நாடுகளும் செல்வ செழிப்பானவை மற்றும் வளர்ந்த நாடுகளில் அமெரிக்கா  தவிர அனைத்திலும் மருத்துவ செலவினை அரசாங்கமே ஏற்றுக் கொள்கின்றது. 

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக இந்தியாவில் இருக்கும் அலோபதி மருத்துவர்கள் தாங்களும் வெளிநாட்டில் உள்ள  மருத்துவர்கள் போல வாழ்வதற்காக இந்த ஏழை நாட்டில் மருத்துவ செலவினை நாளுக்கு நாள் ஏற்றிக் கொண்டே செல்கின்றனர்.மேலும் அரசு மருத்துவமனைகளில் நோயாளி உயிரிழந்தாலோ அல்லது மருத்துவரின் அலட்சியத்தால் பாதிப்பு ஏற்பட்டாலோ மருத்துவர்களை தாக்கும் ஆபத்தான போக்கு நிலவை வருகின்றனது. இதற்கான மூலக்காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் மக்கள் மனதில் அரசு மருத்துவர்கள் அதிக  முக்கியத்துவம் கொடுப்பது  தனது சொந்த மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளுக்குத்தான் என்ற எண்ணம் ஆழப் பதிந்து விட்டது.

தமிழ் நாட்டிலேயே தோன்றிய பழமை வாய்ந்த சித்த  மருத்துவத்தினை  அலோபதி மருத்துவர்கள்  முன்னேற்றுவதற்காக எந்த ஒரு முயற்சியினையும் இந்நாள் வரை எடுக்கவை இல்லை. எனினும் மருத்துவ உலகின் சூப்பர் ஸ்டார் என்று நான் குறிப்பிட்ட மரு .தெய்வநாயகம் போன்ற  அலோபதி மருத்துவர்கள் சித்த மருத்துவத்தினை வளர்க்க பாடுபட்டாலும் அவர்களை கேலி கிண்டல் செய்வதனையே மற்ற அலோபதி மருத்துவர்கள் தொழிலாக வைத்துள்ளனர். இந்திய மருத்துவ கவுன்சிலானது சித்த மருத்துவத்தினை ஒழித்துக் கட்டுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்றது.
அடுத்து அல்லேலூயா குருப்புகளின் அட்டகாசம் .
 கிறித்துவப் பள்ளியில் படித்த நான் தேவாலயங்களுக்கு செல்வதினை ஒரு மற்ற இந்து ஆலயங்களுக்கு செல்வது போலவே கருதி பயபக்தியுடன் இன்றும் சென்று வருபவன். Life  of  pi படத்தின் ஆரம்பக் காட்சிகளில் சொல்லப்பட்டது போல இந்தியாவில் பிறந்தவர்கள் மூன்று மதக் கடவுள்களையுமே ஒன்றாகக் கருதி வழிபடும்  வழக்கம் 90 களின் இறுதி வரை இருந்து வந்தது. பாபர் மசூதி இடிப்பு போன்ற சமபவங்கள் மதங்களுக்கிடையே ஒரு காழ்ப்புனர்ச்சியினை உண்டாக்கி விட்டது.அடுத்து ஒரு தமிழ் இந்து ஏசுவை கும்பிடுவதற்கு எந்த ஒரு தயக்கமும் காட்டுவதில்லை . வட  தமிழகத்தில் வருடா வருடம் வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்க்காவிற்கு செலவதனை இன்றும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இப்படி மத நல்லினக்கத்தினை பார்த்த எனக்கு சென்னை வந்த பிறகு கிறித்துவத்தில் ஒரு பிரிவினர் முருகன் விநாயகர் போன்றோரை பூதம் என்று அழைப்பதைக்   கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.



வெளிநாட்டு மதத்தினை பின்பற்றுவதனாலும் வெளிநாட்டுப் பெயர்களை வைத்துக் கொள்வதாலும் வெளிநாட்டவர் மாதிரி உடை அணிந்து கொள்வதாலும்  இவர்கள் தங்களை வெளிநாட்டவர்கள் என்றே சில சமயங்களில் நினைத்துக் கொள்வர். பதிவர் கலையரசன் அவர்கள் இதனை மிக அழகாக சொல்லி இருப்பார். இஸ்லாமிய நாடுகளில் வாழ்பவர்கள் ஐரோப்பா மற்றும் அமேரிக்கா செல்லும் போது  தாங்களும் அவர்கள் போன்று வெள்ளையாக இருப்பதால் மிக சுலபமாக அந்து சமூகத்துடன் கலந்து விட முடியும் என்ற நப்பாசையில் சென்று பின்னர் ஏமாற்றம் அடைவதே நடக்கின்றது. ஆபிரிக்க முஸ்லீம்களுக்கும் அதே நிலைதான் , பள்ளிவாசல் வரை மட்டும் தான் அந்த உறவு அதை தாண்டி அரபு நட்டார் ஆப்பிரிக்க முஸ்லிம்களை அனுமதிப்பதில்லை.

இந்தக் கட்டுரையின் சாரம்சம் என்பது எவ்வளவு தான்  எண்ணெய் தடவி உருண்டாலும் ஒட்டுவதுதான் ஓட்டும். கிருத்துவர்களும் அலோபதி மருத்துவர்களும் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவமோ மதமோ அதை நீங்கள் கடை பிடிக்க தடை இல்லை. ஆனால் இங்கு தொன்று தொட்டு பயன் பாட்டில் இருந்து வரும் சித்த மருத்துவத்தை இழிவுபடுத்துவதும் , சிவ வழிபாடுகளைக் கிண்டல் செய்வது உங்களயே அவமதிக்கின்ற செயலாகும். 

Monday, May 11, 2015

கமல் நடனத்தை பரிகாசித்த பாண்டியராஜன்


நடனமே ஆடதெரியாத பாண்டியராஜன் எப்படி கமலை விமர்சிக்கலாம் என்ற உங்கள் கோபம் புரிந்தாலும் இதுதான் உண்மை .இது நடந்தது 1989ஆம் ஆண்டு வாக்கில் , தனது நெத்தியடி படத்தில் தான் இதனை செய்தார். 

நெத்தியடி படம் பல சிறப்புகளை உள்ளடக்கிய படம் , ஆனால் இடைவேளை வரை மட்டும்தான் படம் நனறாக நகைச்சுவையாக இருக்கும்.

1. அன்றைய காலகட்டத்தில் தொலைபேசி இல்லாததால் இறப்பு செய்தியினை அந்த ஊரில் உள்ள இளைஞர்களை  அருகில் உள்ள சொந்த பந்தங்களுக்கு செய்தி சொல்ல  அனுப்புவார்கள். அப்படி செய்தி சொல்ல செல்லும் பாண்டியராஜன் காலை மதியம் இரவு என்று  சினிமா பார்த்து அவர் அப்பா ஜனகராஜை ஏமாற்ற முயற்சிக்கும் காட்சி மிக அருமையாக இருக்கும்.
 2. இந்தப் படத்தின் நாயகி வைஷ்ணவி , இவர் குளிக்கும் போது  அவரின் முதுகை அழகை பார்த்து பாண்டியராஜனுக்கு காய்ச்சல் வந்து விடும். அடுத்து குளித்து முடித்தவுடன் கமலின்(stud) திருவானி தொலைந்து விடும் . முன்பெல்லாம் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருந்தது, அப்போது திருவானி தொலைத்து விட்டு அம்மாவிடம் திட்டு வாங்கிய பெண்கள் ஏராளமான பேர் இருப்பர்.

3.செந்தில் பல கட்சி பச்சையப்பன் என்ற அரசியல்வாதி கதாபத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார் .
4. ஜனகராஜ் கல்யாண சமையல்காரராக நடித்து இருப்பார் , இதில் அவர் பேசிய ஒரு வசனம் மிக பிரபலமானது , ''சரக்கு உன்து சைட் டிஷ் என்து'' 
5. மிக முக்கியமான் அம்சம் பாண்டியராஜனின் இன்னொரு ஜோடியாக அமலா நடித்திருப்பார்.
நேரம் கிடைத்தால் இந்தப் படத்தினை இடைவேளை வரை கண்டு மகிழுங்கள்.உங்கள் குழாயில் (Youtube ) இலவசமாகக் கிடைக்கினறது.

இப்பொழுது  தலைப்பிற்கு வருவோம். படம் பார்க்க  குழந்தையுடன் வரும் பெண்ணிடம் டிக்கெட் பரிசோதகர் குழந்தைக்கு டிக்கெட் எங்கு என்று கேட்டு  , எந்தக்  கழுதையாக இருந்தாலும் டிக்கெட் இருந்தாதான் உள்ளே விடுவேன் என்று சொல்ல ,கழுதையின் கழுத்தில் டிக்கெட் கட்டி தியேட்டாருக்குள்  செல்ல அந்த நேரம் கமல் குயிலியுடன் சூரசம்ஹாரம் படத்தின் வேதாளம் வந்திருக்கிறது பாட்டிற்கு குயிலயுடன்  ஆடிக்கொண்டிருப்பார்.



கமல் கிழே படுத்து உருண்டு இடுப்பை ஆட்டி ஆட கழுதை காட்டு கத்தல் கத்தி கமலை இம்சிக்கும். இந்தக் காட்சியைப்  பார்த்தால் தான் சொன்னது உண்மை என்று தெரியவரும். இது கமலுக்கு பாண்டியராஜன் கொடுத்த நெத்தியடி என்றும் வைத்துக் கொள்ளல்லாம் .

பி.கு. நான் உத்தம வில்லன் பார்த்தேன் படம் சூப்பர் .


Friday, May 8, 2015

செனம் சேராத நாய் தெரியுமா உங்களுக்கு

அல்சேஷன் நாய், ஹட்ச் நாய் கேள்விபட்டிருக்கோம் அது என்ன செனம்  சேராத நாய் அது எங்க கிடைக்கும் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. குழந்தையை கவனத்துடன் வளர்க்காவிடில் அந்தக் குழந்தை தான் பிற்காலத்தில் செனம்  சேராத நாயாக மாறி விடும். அது எப்படி மாறுகின்றது என்பதனை சமூக மற்றும் அறிவியல் நோக்கிலும் அதனைத் தடுப்பதற்கான எளிய வழிகளையும் எடுத்து சொல்லவே இந்தப் பதிவு .


செனம்  சேராத நாய் என்பதன் அர்த்தம் மக்களுடன் சரிவரப் பழகாமல் எப்பொழுதும் தனித்தே இருப்பவனை குறிப்பிடும் சொல் தான் செனம் சேராத நாய்.இது எப்படி உருவாகின்றது முதலில் குழந்தை வளர்ப்பில் உள்ள குறைபாடு அதாவது தந்தை தாய் இருவரும் பணி செய்பவர்களாக இருந்தாலோ , பெற்றோர் வீட்டிலேயே இருந்தாலும் குழந்தையின் மேல் அதிக அக்கறை இல்லாமல் இருந்தாலும் இது ஏற்பட வாய்ப்பு உண்டு.

இவ்வாறு அதிக கவனிப்பில்லாமல் வளர்க்கப்பட்ட குழந்தைகள் பெரியவர்களானதும் அவர்கள் பள்ளியிலோ கல்லூரியிலோ மற்றும் பணி  செய்யும் இடங்களிலோ யாரிடமும் அதிகம் பேசாமல் தனித்தே இருப்பர். இந்தத் தனிமை அவர்களுக்கு புற உலகில் என்ன நடக்கின்றது என்பதனைப் பற்றி எந்தப் புரிதல் இல்லாமல் வாழ்வார்கள். சக மனிதர்களுடன் பழகாத காரணத்தினால் இவர்களைப் பற்றிய தவறான கண்ணோட்டமும் சமூகத்தில்  ஏற்பட வாய்ப்பு உண்டு.


ஆனால்  இந்த தனிமை  சில நேரங்களில் நல்ல விளைவுகளையும் உண்டாக்கும் . இதற்கு மிக முக்கிய உதாரணம் , கணித மேதை ராமனுஜம் இவர் தனிமையிலே அதிக நேரம் இருப்பார் ,இந்தத் தனிமையினை கணிதத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உண்டாக்க பயன் படுத்திக் கொண்டார். மேலும் ஞானிகளும் முனிவர்களும் நீண்ட நேரம் தனிமையில் தியானம் செய்வர். இதனால் தன்னைப் பற்றி முற்றும் உணர்ந்த மகான்களாக உருவாகின்றனர். இந்த பிரிவில் கௌதம புத்தரைக் கூட இணைத்துக் கொள்ளலாம். 


மேலே தனிமை நோயின் நன்மை தீமைகளை குறித்து பார்த்தோம். இவற்றில் நன்மை பயக்கும் விடயங்கள் மிக அரிதாகவே நடக்கக் கூடிய ஒன்று ,எனவே அதனை முழுதும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த தனிமையினை மருத்துவர்கள் ஒரு நோயாகவே பார்க்கின்றனர்.Isolation sickness என்ற  நோயானது மூளையில் பல்வேறு மாற்றங்களை உண்டு பண்ணும்.இது போன்ற தனிமை விரும்பிகள் பல்வேறு தீயப் பழக்கங்களுக்கு வெகு எளிதாக அடிமையாவார்கள் என்றும் இதனால் பல நோய்கள் உணடாகும்  என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் எலிகளைக் கொண்டு சில பரிசோதனைகளை செய்தனர். பிறந்த உடனேயே எலிகளை அதன் தாயிடமிருந்து பிரித்து (Maternal separation)  விட்ட பின்னர் அவற்றின்  நடவடிக்கைகளை  (behaviour ) பருவ வயதினை (Adult)எட்டிய  பின்னர் பரிசோதித்து பார்த்ததில் இவை மன அழுத்தத்துடனும் , மிக சோர்வாகவும் காணப்பட்டன.இவைகளின் மூளையினை பரிசோத்து பார்த்ததில் தனிமையில் வளர்க்கப்பட்ட எலிகளில் oligodendrocye என்னும் மூளை செல்களுக்கு உதவி புரியும் இந்த வகையான செல்களின் வளர்ச்சி மிக குறைவாகக் காணப்பட்டன.குறிப்பாக இந்த செல்களானது நாம் சமூகத்துடன்  இயல்பாக இருக்க உதவி பபுரியும் முன் மூளையில் (pre frontal cortex ) பகுதியில் இவற்றின் நீளம் குறைவாகக் காணப்பட்டது.
மேலே உள்ள புகைப்படம் குழந்தை தாயினிடமிருந்து பிரிந்து வளவர்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்குகின்றது 


மேற்கண்ட ஆராய்ச்சி முடிவுகள் நமக்கு உணர்த்துவது குழந்தை வளர்ப்பில் நாம் அக்கறை  இன்றி இருப்பின் எதிர் காலத்தில் அந்தக் குழந்தை எதிர் காலம் இருண்டதாகவே அமையும். தலைப்பில்  சொன்னது போல அனைவரும் அக்குழந்தையினை செனம் சேராத நாய் என்று அழைக்கும் நிலை உண்டாகும்.

நன்றி 
செங்கதிரோன்