Thursday, November 26, 2015

நிலவேம்புக் குடிநீரை கண்ணை மூடியோ மூடாமலோ குடிக்கலாம்:

சித்த மருத்துவ கல்லூரியில் பயின்று கொண்டிருக்கையில் காய்ச்சல் ஏற்பட்டால் நாங்கள் நேராக மருத்துவமனையில் உள்ள மருந்தகத்திற்கு சென்று நிலவேம்புக் குடிநீரை ஒரு டம்பளர் அருந்தி விட்டு வகுப்புக்கு செல்வது வழக்கம். நாங்கள் நம்பிக்கையுடன் அருந்திய நிலவேம்புக் குடிநீரினை இன்று தமிழகமே அருந்தி வரும் செய்தியினைப் படிக்கையில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

இந்தப் பதிவானது இன்னமும் சற்று சந்தேகக் கண்ணோட்டத்துடன் நிலவேம்புக் குடிநீரைப் பருகி வருபவர்களுக்கும் ,தங்கள் குழந்தைக்கு வழங்கலாமா என்று தயக்கம் உள்ளவர்களுக்கும் , இந்த மருந்தின் அறிவியல் பின்னனணியை அறிய விரும்புவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நிலவேம்புக் குடிநீரில் கலந்துள்ள மூலப்பொருட்கள்:
நிலவேம்பு ,வெட்டிவேர்,விலாமிச்சுவேர்,சந்தனம் ,பேய்புடல் ,கோரைகிழங்கு ,சுக்கு,மிளகு ,பற்படாகம். இந்த மூலிகைகளைக் கொண்டு அரைத்து செய்யப்படுவதே நிலவேம்புக் குடிநீர் சூரணம். இதில் முதன்மையாக இருக்கும் நிலவேம்பானது அதிக கசப்பு சுவையினை உடையது. ஆங்கிலத்தில் இதனை king of bitters என்றழைக்கின்றனர்.  

இந்த மூலப்பொருட்களில் ஒவ்வொன்ருக்கும் ஒரு தனிப்பட்ட செய்கை இருக்கும் . முதன்மைப் பொருளான நிலவேம்புக்கு சுரத்தினால் ஏற்படும் வெப்பத்தினைத் தணிக்கும் ஆற்றலும் , கிருமிகளால் உண்டான கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றும் தன்மை உடையதாக இருக்கின்றது. 

வெட்டிவேர், விலாமிச்சுவேர் மற்றும் சந்தனம் ஆகியவை உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கக் கூடியவை. பேய்புடலானது நம்முடைய கல்லிரலை பாதுகாக்கும் .கோரைகிழங்கு சுரத்தினால் உண்டாகும் அழற்சியினைப் போக்கும். சுக்கு நாவறட்சியினை நீக்கி நீர் சுரக்க பயன்படும்.பற்படாகம் உடலில் செரிமானம் நன்கு நடைபெற உதவும்.


நிலவேம்புக் குடிநீரை நவீன முறைக்கு ஏற்ப தரப்படுத்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக இதுவரை அதிகார்ப்பூரவமாக இரண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வெளிநாட்டு அறிவியல் நூலில் வெளியிடப்பட்டிருக்கின்றன. எலிகளில் செய்த சோதனையில் நிலவேம்புக் குடிநீரானது வெப்பத்தினை தணிப்பதிலும், உடல் வலியினைப் போக்குவதிலும் மற்ற மருந்துகளைக் காட்டிலும் சிறப்பாக செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ ஆய்வுக் கட்டுரை 

மேற்கண்ட செய்திகளில் இருந்து  நிலவேம்புக் குடிநீர் குறித்த  ஐயம் நீங்கியிருக்கும் என்று நம்புகின்றேன்.6 மாதக் குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இதனை எந்த விதமான சுரத்திற்கும் வழங்கலாம்.

சித்த மருத்துவம் பயில்கையில் நிலவேம்பு மட்டுமன்றி இருமலுக்கு ஆடாதோடை மணப்பாகு , தொண்டை வறட்சிக்கு தாளிசாதி வடகம் , தலைவலிக்கு நீர்க்கோவை பற்று என்று பலவற்றைப் பயன்படுத்துவோம். இந்த மருந்துகளும் மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது 

நன்றி 
செங்கதிரோன் 

Wednesday, November 25, 2015

காதலுக்கு மரியாதை படம் உண்டாக்கிய மோசமான முன்னுதாரணம்.

திருமணம் என்பதற்கான முழுமையான அர்த்தம் இரு இதயங்கள் இணைவது என்பது தாண்டி இரண்டு குடும்பங்களும் இணைவது என்பதுதான் இந்தியத் திருமணங்களுக்கும மேற்கத்திய திருமணங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு.ஆனால் பெற்றோர் சம்மதமில்லாமல் காதல் மணம் புரிந்த தம்பதியர்களால் இரு குடும்பங்களும் பரம எதிரிகளாக மாறிவிடுகின்றனர்.இது போன்ற ஒரு சூழலில் தான் மலையாளத்தில் வெற்றி பெற்ற அனியாதிபிரவு (Aniathipravu) என்ற படத்தினை பாசில் அவர்கள் தமிழில் காதலுக்கு மரியாதை என்று மறு ஆக்கம் செய்தார். 

படத்தின் கதை 

இந்தக் கதையில் வரும் கதாநாயகி கிறித்தவ குடும்பத்தை சார்ந்தவர். குடும்பத்தின் மீது  அதிக பற்றுள்ளவர். காதலனுடன் சென்று விட்ட பிறகு குடும்பத்தின் மீது உள்ள அக்கறையால் திரும்ப வந்து விடுகின்றார்.பின்னர் இரு வீட்டாரும் பிரிந்த காதலரின் வலியினைப்  புரிந்து கொண்டு இருவரையும் சேர்த்து வைக்கின்றனர்.இந்தப் படத்தின் மூலம் முன்னெடுக்கப் பட்ட பிரச்சாரம் தான் love cum arranged marriage என்னும் நாகரிகம். இது கேட்பதற்கே மிக இனிமையாக இருந்தாலும் இதன் பின்னால் பல கசப்பான செயல்கள் இருக்கின்றன.

இந்தப்படம் எப்படிப்பட்ட மோசமான முன்னுதாரணத்தினை உண்டாக்கியது என்பதை ஆராய்வோம்:
காதலிக்கும் முன்னரே ஆண் பெண் இருவரும் முடிவெடுக்கத் தொடங்கி விடுங்கின்றனர், காதல் கல்யாணம் அப்பா அம்மா ஆசிர்வாதத்துடன் தான் என, எனவே இருவருமே தனக்கான சரியானத் துணை தேர்ந்தெடுக்கும் போதே அந்தத் துணை தன் குடும்பத்தாருக்கு எந்தளவுக்கு சரியாக இருக்கும் என்பதனையும் மனதில் வைத்தே தேடுகின்றனர்.அதாவது முதலில் தன் சாதியாக இருக்கவேண்டும் , பொருளாதார ரீதியில் சம அளவு அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற இரண்டையும் முக்கிய காரணமாக வைக்கும் போது இது காதல் திருமணம் என்பதைத் தாண்டி அப்பா அம்மாவுக்குப் பதிலாக இவர்களே ஒரு துணையினை பெற்றோர் எப்படி வரன் தேடும் போது நடந்து கொள்வார்களோ அதே போல இவர்களும் நடந்து கொள்கின்றனர். இதில் காதல் என்பது அறவே இல்லை.  

இப்படி இவர்களாகவே தன் துணையை தேர்ந்தெடுத்து நடக்கும் திருமணத்திலும்  நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் நடப்பது போலவே வரதட்சணை வாங்குவது , மருமகளை அதிகாரம் செய்வது , பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின்னர் நடக்கும் அனைத்து செய்முறைகளையும் செய்ய வேண்டும் என கட்டாயபப்டுத்துவது என்று அனைத்து கொடுமைகளும் நடப்பது தான் விந்தை. பெற்றோர் சம்மதத்துடன் நடப்பதால் காதலித்த இருவரும் கப்சிப் ஆகிவிடுகின்றனர். ஒருவர் மீது நடக்கும் தாக்குதலை மற்றொருவர் தட்டிக் கேட்க பயப்படுகின்றனர். எனவே இதில் எந்த சமரசமும் நடப்பத்தில்லை , மாறாக இருவருக்குமான நெருக்கம் தான் வெகுவாகக் குறைகின்றது.

நடிகை தேவயாணி வாழ்க்கையில் நடந்த நிகழ்வினைப் பாருங்கள் , அவர் கணவனாக தேர்ந்தெடுத்தவர் தேவயானிக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லை என்று தன குடும்பம் சொல்லியும் அவர் மீது கொண்ட அன்பினால் அவர்களை மீறி ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார்.எத்தனையோ விமர்சனங்கள் வந்தன ஆனால் இன்று வரை இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அதே காலகட்டத்தில் உலகறிய திருமணம் செய்து கொண்ட நடிகர் நடிகை குடுமபம் பல விவாகரத்தில் முடிந்தது.இதன் சாரம்சம் காதலுக்கு அடிப்படியே அன்பு மட்டும்தான்  பணம் ,அந்தஸ்து ஆகியவற்றுக்கும்  இந்தக் காதலுக்கும்  எந்த வித தொடர்பும் இல்லை.


இவை அனைத்தயும் தாண்டி காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் என்பது கிறித்தவர்களின் வாழ்க்கையில் நடப்பதாகக் காண்பிக்கப்படுகின்றது. அங்கே இந்துக் குடும்பங்களில் இருப்பது போன்றதான சிக்கல்கள் மிக மிகக் குறைவு. எனவே அதனை பெரும்பான்மையாக இருக்கும் இந்துக் குடும்பங்களில் இருப்பவர்கள் காதலுக்கு மரியாதை போன்ற பாணியினை பின்பற்றுகையில் பிரச்சனைகள் ஏற்படவே அதிக வழிவகுக்கின்றது. என்னைப் பொறுத்தவரை  love cum arranaged marriage என்பதே ஒரு அய்யோக்கியத்தனம் என்பேன். நிச்சயிக்கப்பட்ட திருமண முறைகளில் நடக்கும் அபத்தங்களை தொடரவே இந்தத் திருமண முறைப் பயன்தருகின்றது.

இன்றைய நவீன காலகட்டத்தில் நம் திருமண முறைகளை நாம் சற்று மறு ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.  
1.ஊரைக் கூட்டி திருமணம் செய்வது என்பது தேவையற்ற ஒன்று 
2. மேற்சொன்னக் காரணத்தினால் திருமணத்திற்காக இரு வீட்டாருக்கும் ஏற்படும் செலவு வெகுவாகக் குறையும்.
3.ஊரறிய திருமணம் நடந்ததால் பின்னாளில் மணமக்களுக்கு பெரிய அளவில் பிரச்ச்சனை ஏற்பட்டாலும் சேர்ந்து வாழவேண்டியக் கட்டாயத்திற்கு தள்ளபடுகின்றனர்.
4.அதையும் மீறி ஏதேனும் பிரிவு நடந்தால் பெற்றோர்கள் அதை  சொந்தம் சுற்றார் மத்தியில் அவமானகரமான ஒன்றாகக் கருதும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
5.இந்த 21ம் நூற்றாண்டிலும் சாதியை பணத்தை மையப்படுத்தி திருமணங்கள் நிச்சயிக்கப்டுவதும், காதலிக்கும் போது இவைகளை எல்லாம் அளவுகோலாக வைத்து துணையினை தேர்ந்தெடுப்பதற்கும் நாம் வெட்கப்பட வேண்டும் .
6.வெளிநாடுகளில் லஞ்சம் இல்லை இட ஒதுக்கீடு இல்லை என்று ஒப்பீடு செய்யும் நாம் இது போன்ற  பிற்போக்கான திருமண முறைகளும் அங்கு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

காதலுக்கு மரியாதை படம் எனபது பெற்றோருக்கு மரியாதை மட்டுமே அதில் எந்த ஒரு புதுமையும் இல்லை , அதனால் பயன் என்பது மணமக்களுக்கு மிக மிக குறைவு.  பெற்றோருக்கு மரியாதை செலுத்தப் பல வழிகள் உள்ளன. பெற்றோருக்கு தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைப்பது என்பது யாருக்கும் நிம்மதி அளிக்காது.


திருமணம் என்பதனை ஆண் பெண் என்ற இருவர் மட்டுமே முடிவு செய்யும்படியான ஒரு நிலை நம் நாட்டில் வெகு சீக்கிரம் வர வேண்டும் .அதில் பெற்றோர் , பணம் ,சாதி சொந்தம் பந்தம் என்ற எந்த ஒரு இடையூறுகளும் இருக்கவே கூடாது. எனவே இனி திருமணங்களை காதலுக்கு மாரியாதை பாணியில் யாரும் யோசிக்காதீர்கள் ,அது மிக அபத்தமான ஒன்று.

கொசுறு செய்தி
இதே படத்தினை இந்தியில் பிரியதர்ஷன் இயக்க அக்ஷய்கன்னா மற்றும் ஜோதிகா நடிக்க ரகுமான் இசையில் வெளிவந்து தோல்வி அடைந்து குறிப்பிடத்தக்கது.

சேத்தன்  பகத்தின் 2 states நாவலும் இந்த காதலுக்கு மரியாதை படத்தின்  கதையின் நவீன வடிவம்  தான்.
நன்றி 
செங்கதிரோன் 

Saturday, November 21, 2015

வேதாளத்தைத் தூங்கியும் தூங்காவனத்தை தூங்காமலும் பார்த்தேன்

ஆரூர் முனா மற்றும் ஜாக்கியின் வேதாளம் விமர்சனம் படித்தவர்களுக்கு மிகுந்த குழப்பமே ஏற்பட்டிருக்கும். ஒருவர் சூர  மொக்கை என்றும் மற்றொருவர் படம் சூப்பர் என்று சொல்லும்போது எது உண்மை என்று குழப்பமே மேலோங்கி இருக்கின்றது. அதுவும் பல்வேறு உலகப்படங்கள் குறித்து மிகவும் சிலாகித்து எழுதிய ஜாக்கியே  வேதாளம் குறித்து ஆஹோ ஓஹோ என்று சொல்லும் போது ஜாக்கியின் பரிந்துரையில் பல  உலகப் படம் பார்த்து வேறு ரசனைக்கு சென்ற ரசிகனை  மீண்டும் கீழ்மட்ட ரசனை உள்ள படங்களை ரசிக்குமாறு கூறுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.


அண்ணன் ஆரூர் முனா அவர்கள் சூர மொக்கை என்று சொன்னதற்கான வலுவான காரணம் நான் மேற்சொன்னவாறு ஜாக்கி போன்றோரின் பாதிப்பால் நல்ல சினிமா பார்த்தவர் வேதாளம் குறித்து அபப்டி ஒரு கருத்தை தான் சொல்வார்.
ஆரூர் முனா அவர்களின் விமர்சனம் 

வேதாளம் மற்றும் தூங்கவனம் இரண்டுமே copycat படங்கள்தான் , ஆனால் இந்த இரண்டு படம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அதனை நேர்மையாக ஒப்புக் கொள்வதில் தயக்கமோ அல்லது ரசிகன் நாம் எப்படி எடுத்தாலும் அதை ரசிப்பான் என்ற ஒரு தன்னம்பிக்கையும் கூட காரணமாக இருக்கலாம்.

ஏன் ஒரு வேதாளம் படத்தைத் தூங்கியும் தூங்கவனத்தைத் தூங்காமலும் பார்க்க வேண்டும் எனபதற்கு வலுவான காரணம் இருக்கின்றது.  வேதாளம்  படத்தில் மூன்று  வில்லன்களை கொல்லுவதற்கும் ஒரே காரணம் தான் அவர்களும் ஒரே அளவான வலிமை உடையவர்கள்தான் அதுவும் ஒரே மாதிரியான உத்திகள் தான் . அடுத்து அவர்களை அஜித் கண்டிப்பாக பழி வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.அவர்களும் இவரைத் தேடிக் கொண்டும் இல்லை. எனவே நீங்கள் இடையில் தூங்கி விட்டாலும் கதை மிக நன்றாகவேப் புரியும்.இடையில் தூங்கி எழுந்து பார்த்தால் கண்டிப்பாக அஜித் யாரோ ஒருவரை கொன்று கொண்டிருப்பார். அது எதற்கு என்று அவருக்கும் தெரியாதபோது நமக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை இது பாட்ஷா படத்தின் காப்பி என்பவர்களுக்கு  இரண்டுக்கும் உள்ள முக்கய வித்தியசத்தினைக் கண்டு பிடிக்காதது ஆச்சரியம் தான் , சிறுத்தை சிவா அவர்கள் செய்த அந்த வித்தியாசம் என்னவெனில் பாட்ஷாவில் பிளாஷ்பேக்கில் ரஜினி வயசான தோற்றத்திலும் ஆட்டோக்கராரக இருக்கையில் இளமையாகவும் இருப்பார் . அதை அப்படியே உல்டா அடித்து பிளாஷ்பேக்கில் அஜீத்தை இளமையாகக் காண்பித்து டாக்சி டிரைவராக இருக்கையில் வயசானவராகமாற்றம் செய்து  காண்பித்து இருக்கிறார்கள் .எனவே இனிமேலாவது இது பாட்ஷா படத்தின் காப்பி என்று சொல்வதை நிறுத்துங்கள்.


தூங்கவனம் படத்தின் கதையினை விளக்கும் போது கமல் அனைத்து நடிகர்களிடம் ஒன்று சொல்லி இருப்பார் என்று நினைக்கின்றேன். யாரும் இந்தப் படத்தின் ஒரு காட்சியில் கூட சிரிக்கவே கூடாது என்று, அந்தளவுக்கு அனைவரும் முகத்தை அந்தளவுக்கு இறுக்கமாக வைத்திருக்கின்றனர். படம் பார்க்கும் போது தூங்கி விட்டால் கண்டிப்பாக இந்தப் படம் புரியவே புரியாது. ஏன் இப்படி எல்லாரும் இந்த பப்பில் சுத்தி சுத்தி வருகின்றார்கள் என்றே நினைக்கத் தோன்றும். அதுவும் கமல் , திரிஷா , கிஷோர்  போன்றோர் காவல் துறை அதிகாரிகள் என்று காண்பிக்கப் படும் காட்சிகள் வரும்போது தூங்கி விட்டால் ரொம்ப சுத்தம். ஏன் என்றால் அவர்கள் அனைவருமே மப்டியில் தான் இருக்கின்றனர். அதுவும் தமிழ் மீது காதல் கொண்டிருக்கும் கமல் narcotics என்பதனை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு என்று கூட தன வாயால் சொல்ல வில்லை.தன்னை சுற்றி இருக்கும் மக்கள் போல தான் தமிழ்நாடு முழுக்க இருக்கின்றார்கள் என்று நினைத்து விட்டரரா அல்லது இது சென்னை மக்களுக்கு மட்டும் இந்தப் படத்தினை எடுத்தாரா என்றும் தெரியவில்லை.


என்னுடையப் பார்வையில் இரண்டுமே சுமாரானப் படங்கள்தான். மிக மோசம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ரசிகர்களுக்கு சினிமா ரசனையை மேம்படுத்தியக் கமல் உலக சினிமா கதையினை ஏன் எடுத்தார் என்று புரியவில்லை.இணையம் மிக பரவலடைந்த பிறகு ரசிகன் பார்த்து விட்ட அதே படத்தினை மீண்டும் எடுப்பது யாருக்காக என்று தெரியவில்லை.தன்னுடைய ஆத்ம திருப்திக்கு படம் எடுக்க வேண்டுமென்றால் ஒரு நாடகமாகக் கூட இதே கதையினைக் கொண்டு  அமைத்திருக்கலாம். இங்கே இந்த தமிழ் சமூகத்தில் சொல்லபடாத கதைகள் குவிந்து கிடக்கும் போது இப்படித் தழுவல் படங்களை தொடர்ந்து எடுத்தால் எஞ்சி இருக்கும் அவரின் ரசிகர்களையும் அவர் வெகு சீக்கிரம் இழக்க வேண்டி வரும் 

அஜித்துக்கெல்லாம் நாம் எந்த ஆலோசனையும் வழங்க முடியாது .சினிமாவில் நடிப்பதற்காக காசு வாங்கும் நிலை மாறி நடப்பதற்காக காசு வாங்கிக் கொண்டிருப்பவர் தான் நம்ம தல அஜீத். அவருக்கு சினிமா என்பது தொழில் மட்டுமே  அதன் மீது ஈடுபாடு எனப்தெல்லாம் இல்லை என்பதனை அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களே மிக சிறந்த உதாரணங்கள். 

நாம் உழைத்து சம்பாரித்த பணத்தினை உருப்படி இல்லாமல் செலவு செய்ய தகுந்தவை இது போன்ற படங்கள் தான். தொடர்ந்து இந்த சேவையை செய்வோம் என் உறுதி எடுப்போம்.

நன்றி 
செங்கதிரோன் 


Friday, November 20, 2015

கத்துக்குட்டி படத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் சிறப்பில்லாத அம்சங்கள்



கத்துக்குட்டி படத்தின் ஒரே நோக்கம் மீத்தேன் திட்டம் ஆபத்து குறித்த விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்துவதுதான்.நீங்களும் இந்த மீத்தேன் திட்ட ஆபத்து குறித்து பல்வேறு செய்தித்தாள்களில் படித்து இருந்தாலும் அதனை மிக சரியாக காட்சிப்படுத்தி சொல்லும் போது நம் மனதில் சரியாகப் பதியும்.இப்படி நல்ல நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட இப்படத்தில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் சிறப்பில்லாத அம்சங்கள் குறித்த சின்ன பதிவு.



சிறப்பம்சங்கள்:

1.படத்தில்  அனைவருமே மிக மிக சிறப்பாக நடித்திருக்கின்றனர்.ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவர்களுடைய கொடுக்கப்பட்ட பணியினை மிக சிறப்பாக செய்த்ருக்கின்றனர்.
2. அதிக விரசமில்லாத காட்சிகள் 
3. ஏகப்பட்ட கருத்துகள் , எறும்புகளை மருந்து வைத்துக் கொல்லாமல் சர்க்கரை வைத்து காப்பது, கைபேசி கோபுரங்களின் தீமை குறித்து அழகான கதாநாயகியின் விளக்கம்.
4. கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் பிரபல நடிகை துளசியின் சிறப்பான பங்களிப்பு.பாரதிராஜாவின் தம்பி நரேனின் அப்பா வேடத்திற்கு மிக சரியாக பொருந்தி இருக்கின்றார். 
5.மாவட்டமாக வரும் அரசியல்வாதியின் நடவடிக்கைகள் நிஜ அரசியல்வாதிகளின்  உண்மையான முகத்தை பிரதிபலிப்பதாக இருக்கின்றது.
6. கடைசியாக சொன்னாலும் இது தான் முதன்மையானது : மீத்தேன் திட்ட பாதிப்பு குறித்த அனிமேஷன் காட்சிகள் உங்கள் மனதை விட்டு நீங்கவே நீங்காது. மிக சுருக்கமாகவும் அதே நேரத்தில் மீத்தேன்  பாதிப்பு குறித்த பின் விளைவுகள் குறித்த செய்திகள் மிக சிறப்பாக காட்சிப்படுத்த்பட்டிருக்கின்றன 

சிறப்பில்லாத அம்சங்கள் 

1. குடி குடி என்று படம் முழுவதும் குடித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
2.கதாநாயகனுக்கு  ஏன் அப்படி ஒரு பரட்டை தலை , மற்றும் மோசமான தாடியுடனான தோற்றம் என்று தெரியவில்லை.
3. சூரி அவர்கள் முதல் பாதியில் வ.வா.சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது போலவே  நடிக்கின்றார் ,இரண்டாம் பாதியில் கேடி பில்லாகில்லாடி ரங்கா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது போல ஒரு நடிப்பு. வெகு சில இடங்களில் நம்மை புன்முறுவல் பூக்க  வைக்கின்றார்.
4.படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே பல படத்தில் பார்த்து போல ஒரு அமைப்பு இருக்கின்றது 
5. மிக முக்கியமான குறையாக நான் எண்ணுவது படத்தொகுப்பு : ஒரு சில காட்சிகள் கோர்வையாக அமைக்கபடாமல் இருப்பது போல தோன்றுகின்றது 


படத்தின் இயக்குனர் சரவணன்

இணையத்தில் தற்பொழுது கிடைப்பதால் கண்டிப்பாக நீங்கள் வார விடுமுறையில் பார்க்க ஏற்ற படம் இது. இந்தப் படம் தொடர்புடைய அனைவரையும் வாழ்த்துவோம்.

நன்றி 
செங்கதிரோன் 

கடுகுக் குளியல் : இளமை முதுமை உறவுக் காதல் படம்

பொருந்தாக் காதல் குறித்த படம் எடுப்பதில் வல்லவரான பாலசந்தர்  அபூர்வ ராகங்கள் தொடங்கி விடுகதை வரை பல படங்கள் எடுத்து சமூகத்தின் நிலையினை அச்சு அசலாக  அதிக விரசமின்றி படம் பிடித்துக் காட்டினார். எஸ்.ஜே.சூர்யா போன்றவர்கள் இதனை மிகைப்படுத்திக் காண்பித்து இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணத்தினை ஏற்படுத்தினர்.அதியமானுக்கும் ஓளவையாருக்கும் இருந்தது கூட காமம் சாராத ஒரு காதல் தான், அதனாலேயே காயகற்பமான நெல்லிக்க்கனியினை தான் உண்ணாமல் ஓளவைக்கு வழங்கி மகிழ்ந்தான்.
தருமபுரியில் அமைந்த்ருக்கும் ஓளவை -அதியமான் சிலை


எழுத்தாளர் சாரு சொன்னது போல பாலியல் வறட்சி காரணமாக இளைஞர்களின் ரசனையை ஆண்டி மேனியாக்கு கொண்டு சென்றுவிட்டது. இதே போல ஏகப்பட்ட மலையாளப் படங்களும் வந்து மேலும் ரசனையை பாழ்பண்ணிவிட்டன.

கடுகுக் குளியல் (mustard bath ) 1993ல் வெளிவந்த இந்தக் கனடிய நாட்டு திரைப்படம். கயானா நாட்டுக்கு  கனடாவில் இருந்து வந்த மருத்துவ மாணவனுக்கும் , ஹங்கிரியில் இருந்து வந்த  ஒரு முதிர்ந்த வயதுப் பெண்ணுக்கும் இடையிலான உறவு குறித்த படம் தான் கடுகுக் குளியல்.


கனடாவிலிருந்து கயனாவுககு மாத்திவ் வந்ததற்கான காரணம் என்னவெனில் பிரிட்டனின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் போது தன குடும்பத்துடன் வாழ்ந்த அந்த வீட்டினையும் ஊரினையும் பார்த்து விட்டு வருவதற்காகத்தான், ஆனால் சுதந்திரம் அடைந்த கயானா வெள்ளையின மக்கள் மீது இருக்கும் வெறுப்பினை நேரடியாக உணரும்போது பரிதவிக்கின்றான் . அப்பொழுதுதான் அவன் தங்கிருக்கும் விடுதியில் இருக்கும் முதிர் பெண்மணியை சந்திக்க இருவருக்கும் பரஸ்பர அன்புதான் படத்தின் அடிநாதம்.

இது தவிர அங்கேயே அவனுக்கு கிடைக்கும் ஒரு காதலி , இவன் தத்தெடுத்து வளர்க்கும் பையன் , இவன் வேலை செய்யும் மருத்துவமனை அங்கிருக்கும் நோயர்கள் என்று கதை பயணிக்கின்றது. இது உலக சினிமா விழாவில் தங்க விருது பெற்ற படம்.

நேரம் இருக்கும் பொது நல்ல சினிமா பார்க்க ஆசை இருப்பின் இந்தப் படத்தினை கண்டுகளியுங்கள் 

நன்றி 
செங்கதிரோன் 

Wednesday, November 18, 2015

இசை உலகின் இளம் தேவதைகள் :கெல்லி கிளார்க்சன்

சூப்பர் சிங்கர் போட்டி போன்ற ஒன்றான அமரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானப் பாடகியனவர் தான் கெல்லி கிளார்க்சன்.அமெரிக்காவின் டெக்சாஸ் நகரத்தில் பிறந்த கெல்லியின் தாய் ஆங்கில ஆசிரியை,தந்தை  பொறியாளர், கிறிஸ்து மீது மிக அதிக ஈடுபாடு கொண்ட கெல்லி, தான் தேவாலயத்திலேயே தான் அதிக நேரம் இருந்தததாக் குறிப்பிட்டு இருக்கின்றார். தேவாலயத்தில் பாடல் பாடும்  குழுவில் இருந்து மிகப்பெரிய  பாடகியானவர்களில் இவரும் ஒருவர்.


2002ல் அமெரிக்கன் ஐடல் (American Idol ) போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இசைத்துறையில் தடம் பதித்தார். அப்பொழுது தொடங்கிய இசைப்பயணம் மிக வெற்றிகரமாக சென்று கொண்டிருந்தாலும் , 2011ல் இவரின் the stronger என்னும் இசைத் தொகுப்பு தான் உலகம் முழுக்க உள்ள பாப் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க காரணமாக அமைந்தது.இந்தப் பாடலுக்கு இசைத் துறையின் உயரிய   விருதான கிராமி விருது பெற்றதன் மூலம்கெல்லி மிக முக்கியப் பாடகியாக அங்கீகாரம் பெற்றார்.அந்தப் அந்தப்பாடலின் உங்கள் குழாய் இணைப்பு:


மிக சமீபத்தில் வந்த hearbeat பாடலும் மிக அருமையாக இருக்கும். எனக்குப் பிடித்த மற்ற பாடல்களின் வரிசை கீழே. 

1.Thankful 
2.Becasue of you 
3.since u been gone 
4.Mr .Know it all 

மேற்சொன்னப் பாடல்களை கேட்க ஆரம்பித்தால் மற்றப் பாடல்களையும் நீங்களாகவே கேட்க ஆரம்பித்து விடுவீர்கள் , கெல்லி உங்கள் மனம் கவர்ந்த பாடகியாக மாறுவது உறுதி. 

இசை உலகில் வலம் வரும் மற்ற தேவதைகள் பற்றிய முந்தையப் பதிவுகள் : இசை உலகில் மூழ்கித் திளையுங்கள் நண்பர்களே.

1.இசை உலகின் இளம் தேவதைகள் :எல்லீ
2,இசை உலகின் இளம் தேவதைகள்:அலிசியா கீஸ்
3.நிக்கி மினாஜ் :இசை உலகின் இளம் தேவதைகள்
4.அடேல் :இசை உலகின் இளம் தேவதைகள்
5.இசை உலகின் இளம் தேவதைகள்: கேட்டி பெர்ரி (Katy Perry )
6.இசை உலகின் இளம் தேவதைகள்:டெய்லர் ஸ்விப்ட்
7.இசை உலகின் இளம் தேவதைகள் :ரியான்னா

நன்றி
செங்கதிரோன்

Tuesday, November 17, 2015

சரோஜா தேவி புத்தகத்தின் தோற்றமும் மறைவும்

சீனர்கள் கண்டுபிடித்த காகிதங்களை நல்ல செய்திகளை உலகறியச் செய்ய பயன்பட்டிருந்தாலும்  மறுபக்கம் சரோஜாதேவி என்றழைக்கப்படும் மஞ்சள் பத்திரிக்கைகளை அச்சிடவும் பயன்பட்டது எதிர்பாராத நிகழ்வுதான்.சுதந்திரத்திற்கு முன்பே மஞ்சள் பத்திரிகை காலாசாரத்தினை ஆரமித்து வைத்த பெருமை லட்சுமிகாந்தன் என்பவருக்கு சொந்தமானது. பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து உண்மை மற்றும் பொய் கலந்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் , ஒரு கட்டத்தில் இந்த செயல் மூலம் அவர்களிடம் பணம் பறிக்க ஆரம்பித்தார். இதே பாணியை தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோரிடம் செய்த பொழுது அவரைக் கொலை செய்து விட்டனர்.இதனால் தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.க்ருஷ்ணனும் சிலவருடங்கள் சிறை தண்டனை அனுபவித்தனர் .சுதந்திரத்திற்கு முன் லட்சுமிகாந்தன் செய்த வேலையினைதான்  "சைதை தமிழரசி" "சமூக ஆர்வலர்" என்றழைக்கப்படும்கிஷோர் சாமியும் அரசியல் வாதிகளின் வாழ்க்கை குறித்து அசிங்கமாகி எழுதி பிரபலமானார் . 

வடிவேலு அவர்களின்  நகைச்சுவைக் காட்சி ஒன்றில் சரோஜாதேவி புத்தகத்தினைப் பார்க்கும் பொது ஏற்படும் பரவசத்தினை மிக அருமையாக வெளிப்படுத்தி இருப்பார்.இந்தப் புத்தகங்களை பருவ வயதினர் முதல் வயதானவர் வரை வயது வித்தியாசமின்றி வாங்கிப் படித்தனர் எனபதற்கு இந்த நகைச்சுவை காட்சி சிறந்த உதாரணம் .இதனைக் கீழே உள்ள உங்கள் குழாய்  இணைப்பில் கண்டு மகிழுங்கள்.


 ஒரு சின்ன உண்மை சம்பவத்தின் மூலம் இதன் மீது பருவ வயதினர் கொண்டிருந்த ஈர்ப்பினை உணரவைக்கின்றேன். குற்றம் ம்கடிதல் படத்தில் பாலியல் கல்வியின் அவசியம் குறித்து பேசும் ஆசிரியைப் போன்ற ஒருவர் எங்களுக்கு ஒன்பதாம் வகுப்பில் இருந்தார். ஆண்கள் பள்ளிகூடம் என்பதால் எங்களுக்கு பெண்கள் குறித்த ஒரு புரிதலினை ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். அந்த காலகட்டத்தில் காமிக்ஸ் புத்தகம் மிகப் பிரபலமாக இருந்து வந்தது. எங்கள் வகுப்பில் பழையபுத்தகம் கடை முதலாளியின் மகன் ஒருவன் இருந்தான். ஒரு சிலர் அவனிடமிருந்து இந்தப் புத்தகங்களை வாங்கிப் படித்துக் கொண்டிருந்தனர். காமிக்ஸ் புத்தகங்களுடன் சரோஜாதேவி புத்தங்களையும் எடுத்துக் கொண்டு வந்து மாணவர்களிடம் விற்பனை செய்ய ஆரம்பித்தான். ஒரு நாள் மதியம் எங்கள் ஆசிரியர் வகுப்புத் தலைவனான என்னை அழைத்து இன்று மதியம் நம் வகுப்பில் அனைத்து மாணவரின் பைகளையும் சோதனை செய்யப போகிறோம் தயாரக இரு என்றார். எங்கள் திட்டப்படி அன்று அனைத்து மாணவர்களையும் வெளியில் நிற்க வைத்து விட்டு ஒவ்வொரு பையாக சோதனை செய்தோம். வகுப்பில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களின் பைகளிலிருந்து சரோஜாதேவி புத்தகங்களை பறிமுதல் செய்தோம். எங்கள் ஆசிரியர் யாரையும் கண்டிக்கவில்லை, அந்த மாணவனையும் தண்டிக்கவில்லை.இந்தப் புத்தகத்தைப் படிப்பதானால் ஏற்படும் மோசமான பின் விளைவுகள் குறித்து மிக சுருக்கமாகக் கூறினார்.

இப்படிப்பட்ட பரவசம் கொடுக்கும் இந்தப் புத்தகங்கள் இணையதளம் வருகைக்குப் பின்னர் சுவாரசியமற்ற ஒன்றாக மாறிவிட்டது. மூலைக்கு மூலை இணையதளம் கடைகள் தொடங்கிய பின்னர் அங்கே சென்று சரோஜோ தேவி புத்தகங்களில் வரும் நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கும் அனுபவம் கிடைத்து. வெளிநாட்டில் இருந்து வெளியான இந்தக் காட்சிகளை கண்டு கொண்டிருந்தவர்களுக்கு "சுதேசி" தயாரிப்பாளராக மாறிய டாக்டர் பிரகாஷ் அவர்கள் உள்ளூரிலேயே இவற்றை எடுத்து பின்னர் பலகாலம் சிறை தண்டனை அனுபவித்தார்.


இந்தப் புத்தங்கள் ஒரு வழியாக அச்ச்டிப்பதே நின்று விட்டாலும் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஏகப்பட்ட பாலியல் வீடியோக்கள் இளைய சமூகத்தை சீரழிக்கின்றன.என்னுடைய தொடர் பதிவான பாலியல் உணர்வு ஷங்கர் படமா ராம் படமா என்றப் பதிவினில் இது போன்ற வீடியோக்களை ஏன் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கின்றேன்.

1.சேலம் சிவராஜ் வைத்தியரும் பாலியல் நிபுணர் நாராயண ரெட்டியும் : இரு துருவங்கள்
2.பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+
3.பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+ -பாகம் :2
4.பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+ -பாகம் :3

நன்றி 
செங்கதிரோன் 

Sunday, November 15, 2015

லிவின்டுகதரை(Live-in together) தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் விக்ரமன்

மணிரத்தினத்தின் படமான ஓ காதல் கண்மணி தான் லிவிங் டுகதர் குறித்த முதல் தமிழ் படம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் 1990ம் ஆண்டு வெளிவந்த புது வசந்தம் படம் தான் முதன் முதலில் லிவிங் டுகதர் குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்துக்கு விக்ரமன் அவர்கள் அறிமுகப்படுத்தி விட்டார்.

புதுவசந்தம் படத்தில் சொன்ன லிவிங் டுகதர் என்பது மூன்று  ஆண்களுடன் ஒரு பெண் ஒரே வீட்டில் தங்கி இருப்பது, இதே போன்ற ஒரு சூழ்நிலையினை 90களில் கற்பனை கூட செய்ய இயலாது. விக்ரமன் மிக தைரியமாக அந்தகே கதையினை தன் முதல் படத்திலேயே எடுத்து மிகப்பெரிய வெற்றி கண்டவர்.இப்பொழுது மிக தீவிரமாக செயல்படும் கலாச்சார காவலர்கள் அப்பொழுது செயல்பட்டிருந்தால் இது போன்ற ஒரு நவீனப் பார்வை கண்ட கதைகள் தொடர்ந்து வருவது தடுக்கப்பட்டிருக்கும்இருக்கும்.இது மட்டுமல்லாது விக்ரமன் அவர்கள் இதே போன்ற மிக வித்தியாசமான கதைகள் கொண்ட பல படங்களை எடுத்தவர். அவருக்கு மணிரத்தனம் பாலசந்தர் ,பாரதி ராஜா போன்றோரின் வரிசையில் அவருக்கான இடத்தினை நாம் வழங்கி இருக்க வேண்டும். ஏனோ சினிமா விமர்சகர்களும் அவரின் பங்களிப்பினை சரியாக பாராட்டவில்லை.


விக்ரமனின் லிவிங் டுகதர் கதையும் மணிரத்னத்தின்  லிவிங் டுகதர் கதையும் வெவ்வேறு திசையிலானது. முதலாவது எந்த ஒரு மன உடல் ஈர்ப்ப்பும் இல்லாமல் இந்த மூன்று ஆண்களும் அந்தப் பெண்ணுடன் வாழ்வர்,இரண்டாவதில் முழுக்க முழுக்க உடல் ஈர்ப்பிலான லிவிங் டுகதர். இந்த லிவிங் டுகதர் வெளிநாட்டில் இருந்து நாம் கற்றுக் கொண்ட வாழ்க்கை முறையாக இருப்பினும் , உணமையிலேயே அங்கே லிவிங் டுகதர் என்பது மிக மிக வித்தியாசமானது.


வயது என்பது லிவிங் டுகதருக்கு அங்கே தடையே இல்லை , 20பது வயது முதல் 80 வயது வரை எப்பொழுது வேண்டுமானாலும் லிவிங் டுகதர் வாழ்க்கை தொடங்கும். இதிலிருந்து தெரிய வேண்டியது உடல் மட்டுமே இங்கே முதன்மையானது அல்ல , இரண்டு உள்ளங்களுக்குமான சரியான புரிதல் தான் மிக முக்கியமானது . அதைத்தான் my soul met  என்று குறிப்பிடுகின்றனர்.

மிக மிக தெளிவான எல்லையினை தங்களுக்குள் வகுத்தே லிவிங் டுகதர் வாழ்க்கையினை தொடங்குகின்றனர்.அதாவது இந்த வாழ்க்கையில் இருவரும் இணைத்து வாழும் இடம் , உணவு ஆகியவற்றுக்கு தனித்தனியே தான் செலவு செய்வர். உணவகங்களுக்கு சென்றாலும் அவ அவருக்கான தொகையினையும் தனியாகவே செலுத்துவர். இந்த காலகட்டத்தில் அவர்கள் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பபட்டு விட்டாலும் நம்பிக்கை அதிகரித்து விட்டாலும் திருமணத்திற்கான முடிவினை எடுப்பார்கள் . ஆனாலும் இந்த முடிவினை சில மாதங்களிலோ அல்லது ஓராண்டிலோ எடுப்பதில்லை. குறைந்தது இரண்டு வருடம் முதல் ஐந்தாண்டு வரை கூட லிவிங் டுகதர் வாழ்க்கைக்குப் பின்னரே திருமணம் குறித்து சிந்திப்பார்கள். 

தமிழ்நாட்டில் அந்தக் காலம் முதலே லிவிங் டுகதர் மிகப் பிரபலம் , அரசியலில் முதல்வர்களில் முக்கால்வாசி பேர் லிவிங் டுகதரில் வாழ்ந்தாக கிசுகிசு உலாவந்தன. சினிமாவிலும் அதே தான் அனைத்து முன்னனி நடிகர் நடிகைகள் லிவிங் டுகதர் வாழக்கையின வாழ்ந்து காட்டியவ்ர்கள் தான்.சீரியல் நடிகை லாதா ராவும் அவர் கணவர் ராஜ்கமலும் கூட தாங்கள் லிவிங் டுகதரில் வாழ்வதாக பத்திரிக்கைகளுக்கு பேட்டி  அளித்து பரபரப்பினை ஏற்படுத்தினர். சென்னையில் பொறியியல்  கல்லூரிகள் அதிகரித்த பின்னர் அங்கு படித்த பணக்கார மாணவ மாணவிகளும் இந்த வாழ்க்கையினை வாழ ஆரம்பித்தனர்.இன்னும் சற்று மிகவும் பின்னோக்கிப் போனால்  லிவிங் டுகதருக்கான ஆதாரம் தொல்காப்பியத்திலேயே இருப்பத்தாக இலக்கியவாதிகள் குறிப்பிடுகின்றனர், நாம் இந்துவாக மதம் மாறிய பின்னர் அதையெல்லாம் மறந்து விட்டோம்  என்று நினைக்கின்றேன்.


நம்  ஊரில் இந்த லிவிங் டுகதர்  வாழ்வானது மிக மோசமான ஒன்றாக கலாச்சார காவலர்களால்  கருதப்படுவதால் வெளியில் சொல்ல தயங்குகின்றனர்.இதற்கு  கமல் தான் மிக மிக சிறந்த எடுத்துகாட்டு சரிகாவுடன் வாழ்ந்த வாழ்க்கையில் தனது இரண்டு பெண் பிள்ளைகளையும் தாலி கட்டாமலே  பெற்றுக் கொண்டவர் , தற்பொழுது கௌதமியுடனான  வாழும் வாழ்க்கையினை மட்டும் மிக மிக ரகசியமாக வைத்திருந்து மிக சமீபத்தில்தான் அது பற்றி வெளிப்படையாக ஒப்புக் கொள்ள ஆரம்பித்து இருக்கின்றார். 

முடிவாக சொல்ல விழைவது லிவிங் மேல்நாட்டுக் கலாசாரத்தினை நாம் பின்பற்றுவதில் தவறில்லை இருப்பினும்  அவற்றை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு பின்பற்றினால் தான் சிறப்பாக இருக்கும். எனவே சினிமாவில் மணிரத்னம் போன்றவர்கள் காண்பிக்கும் லிவிங் டுகதர் என்பது போலியான ஒன்றுதான்.

நன்றி 
செங்கதிரோன் 

அடுத்த பதிவு : சரோஜா தேவி புத்தகத்தின் தோற்றமும் மறைவும் 

Friday, November 13, 2015

பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+ -பாகம் :3

முந்தையப் பாகத்தில் கைபழக்கம் குறித்த ஒரு தெளிவான விளக்கங்களை அளித்திருந்தேன். சீக்கிரம் வெளிவருதல் என்பது உலகம் வெப்பமாதல் போல இதுவும் ஒரு உலகளாவியப் பிரச்சனை தான், ஏனெனில் மேற்குலகமும் இந்தப் பிரச்சனையில் அதிகம் கவனம் செலுத்திவருகின்றது.

இருப்பினும் இது ஒன்றும்  அபாயகரமான ஒரு நோய் அல்ல , மிக மிக எளிதாக சரி செய்யக் கூடிய ஒன்றுதான். சரி செய்ய வேண்டுமென்றால் முதலில் இந்த சீக்கிரம் வெளியேறுதல் ஏன் எதற்காக நிகழ்கின்றது என்பதனையும் தெரிந்து கொள்வது சரியாக இருக்கும்.

காரணங்கள் :

1. பதட்டம், பயம் - இவை இரண்டும் கலவிக்கு முன் அனைவருக்குமே இருக்கக் கூடிய ஒன்று. இது தவிர்க்க முடியவே முடியாததாகத் தோன்றினாலும் , காலப் போக்கில் சரி செய்யக் கூடியது .

2.இரண்டாவது மிக முக்கியமானது,மிக அதிகமான பாலியல் காணொளிகள் பார்ப்பதானால் உண்மையாகவே கலவி என்பது என்ன என்பதற்கான அர்த்தத்தினை தவறாகப் புரிந்து கொள்வதால் ஏற்படும் விபரீதம் .

3. பொறுமையின்மை , கலவி என்பது பகிர்ந்துண்ணும் உணவு போல என்று காமசூத்ரா குறிப்பிடுகின்றது , எனவே அந்த எண்ணம் இல்லாமல் மனைவியை  ஒரு பொருளாகப் பாவித்து நடப்பதானால் அது ஒரு சம்பிரதாயமான நிகழவாகவே நடந்து முடிந்து விடுகின்றது.

4. சொல்லித் தெரிவதில்லைக் காமக் கலை என்று சொல்லியே ஒரு தலை முறை பாழடிக்கப் பட்டு விட்டது. இங்கே இளைஞர்களுக்கு  டிஜிட்டல் இந்தியாவை விட மிக முக்கியமானது பாலியல் குறித்த தெளிவானப் பார்வை . சொல்லித் தெரிய வேண்டியது காமக் கலை(இந்தத் தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருக்கின்றேன்) என்ற உண்மையினை ஊடகங்களாவது உரக்க சொல்ல வேண்டும்.

தீர்வுகள் :


1.பயத்தினைப் போக்குவது எளிது. நிறைய ஆலோசனைகள் இருப்பினும் மிக எளிதானவை மனதினை மிக மிக அமைதியாக வைத்திருப்பது மிக முக்கியமான ஒன்று . அலுவலகப் பிரச்சனை, கடன் பிரச்சனை, சொந்தப் பிரச்சனை இவை போல பல பிரச்சனைகள் இல்லாமல் மறந்திருக்க வேண்டும்.

2. தேகப்பயிற்சி மற்றும் யோகப் பயிற்சி இவை இரண்டும் உள்ளம் உடல் மற்றும் உள்ளத்தினை உறுதியாக்கக் கூடியவை .மிக மிக எளிதானப் பயிற்சிகளே போதுமானவை. பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியினை என்னுடயை நோயாளிகளுக்கு செய்ய சொன்னதில் அதன் பின்னர் சிக்கரம் வெளிவருதல் வெகுவாக சரியனாதாக உறுதிபடுத்தி இருக்கின்றனர் .



3. ஒரு வேலையை திட்டமிடுவதற்கு முன்னர் எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கின்றீர்களோ அதே போல இதிலும் ஒரு திட்டமிடல் அவசியம் ,அதாவது எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என்ற சிந்தனை இதற்குத்தான் சொல்லித் தெரிய வேண்டியது காமக் கலை என்று குறிப்பிட்டேன்.


இங்கே குறிபிட்டுள்ள காரணங்களும் அவற்றின் தீர்வுகளும் உங்கள் அனைவருக்கும் சீக்கிரம் வெளிவருதல் குறித்த ஒரு தெளிவினை உண்டாக்கி இருக்கும் என்று எண்ணுகின்றேன்.இது முழுக்க முழுக்க மருத்துவ அடிப்படையில் எழுதப்பட்ட பதிவு.மேலும் உங்களுக்கு தெளிவு பெற வேண்டி இருப்பின் முதலில் உங்கள் மனைவியிடம் பேசுங்கள் , தயக்கம் தேவையில்லை , அடுத்து கட்டமாக நல்ல  மன நல ஆலோசகரை அணுகினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.தொலைக்காட்சிகளில் வரும் பாலியல் குறித்த போலி  சித்த மருத்துவர்களின் அருளுரைகளைப்  பார்ப்பதினை அறவே தவிருங்கள்.

நன்றி 

Sunday, November 1, 2015

ஹால்லோவீன் கொண்டாட்டப் பிண்ணனி :


காதலர் தினம் , நண்பர்கள் தினம் , அம்மா தினம் ,அப்பா தினம் என அனைத்தும் பட்டி தொட்டி வரை பிரபலமாகி விட்ட நிலையில் ஹால்லோவீன் இன்னும் பெரு நகரங்கள் தாண்டி சென்றடையவில்லை .

மேற்கத்திய நாடுகளில் இந்த திருவிழா  மூலை முடுக்கெல்லாம் மிக மிக சிறப்பாகக் கொண்டாடப்படும்.

அதற்கு மிக முக்கிய காரணம் இது ஒரு கிறிஸ்தவ சமயம் சார்ந்த ஒரு பண்டிகை என்பதோடு மட்டுமன்றி , நம் நாட்டில்  இறந்தவர்களுக்குத் திதி கொடுப்பது போல , இந்த நாளில் இறந்தவர்களை நினைவுக் கூர்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பண்டிகை இப்போது முழுக்க முழுக்க குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கான கொண்டாட்ட நாளாக மாறிவிட்டது.

குழந்தைகள் கொண்டாடும் விதம் :

நம் ஊரில்  புரட்டாசி மாதத்தின் இறுதி வாரத்தில் பெருமாளுக்காக,   கோவிந்தா கோவிந்தா  பாடிக்  கொண்டு குழந்தைகள் வீடு வீடாக சென்று அங்கு அந்த வீட்டில் பட்சணங்களை வழங்குவர். அதே முறை தான் இங்கும் , குழநதைகள் ஹால்லோவீன் உடைகள் அதாவது பேய் மாதிரி வேடம் போட்டுக் கொண்டு பக்கத்து வீடுகளுக்கு செல்வர் , அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகள் வெளியே வந்து இனிப்பு மற்றும் சாக்லேட்டுகளை வழங்குவர். இதிலும் ஒரு குறியீடு உண்டு . அதாவது எந்த வீட்டின் வெளியில் ஹால்லோவீன்  அலங்காரம் செய்யப் பட்டிருக்கின்றதோ அந்த வீட்டுக்கு மட்டும் செல்வர். இது மட்டுமன்றி பொது இடங்களில் குழந்தைகளுக்குப் பல போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் நடைபெறும்.

இளம் வயதினர் கொண்டாடும் விதம் :

பல்வேறு ஹாலிவுட் படங்களில் வரும் பேய்கள் போன்ற தோற்றங்களை போட்டுக் கொண்டு கொண்டாடுவதுதான் பொதுவான முறை. இது மட்டுமல்லாமல் இதே போன்ற ஹால்லோவீன் உடைகளுடன் மற்ற நண்பர்களின் வீட்டுக்கு கூட்டமாக சென்று பயமுறுத்துவார்கள்.வழக்கம் போல இதே உடையில் நன்கு குடித்து விட்டு மட்டையாவதும் ஒரு சில இடங்களில் நடைபெறும் இது தவிர உணவகங்களில் ஆரபித்து அனைத்து கடைகளிலும் அங்கு பணியாற்றுபவர்கள் இந்த  ஹால்லோவீன் உடைகள் அணிந்து கொண்டு வேலை செய்வதனைப் பார்ப்பதற்கே வேடிக்கையாக இருக்கும் .

இந்த தலைமுறை குழந்தைகள் காஞ்சனா மற்றும் டார்லிங் படங்களை கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கின்றனர் , எனவே இந்த ஹால்லோவீன் கொண்டாட்டம் இந்தியாவிலும் சீக்கிரம் பிரபலமாக வாய்ப்பு அதிகம் இருக்கின்றது 

நன்றி 
செங்கதிரோன்