Wednesday, April 18, 2018

அடுத்த வாரிசு;




ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தினம் ஒரு வாரிசுகள் உருவாகி வருகின்றனர். சசிகலா , ஜெ.தீபா, மாதவன் மற்றும் தினகரன் என்று வாரிசுகள் தமிழகத்தின் அடுத்த வாரிசாக பரிணமித்து வருகின்றனர், இதை பார்க்கும் மக்கள் மிகுந்த எரிச்சலடைகின்றனர். 

இந்த தருணத்தில் தான் மிக எதேச்சையாக உங்கள் குழாயில் (youtube) புது  வாரிசு என்றொரு படம் இருப்பதை அறிந்தேன் . இது பாண்டியராஜன் நடித்து 1990ல் வெளிவந்த படம் . கதை மிக எளிமையானது , மௌலி கிராமத்தில் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டு கர்ப்பமாக்கி விடுகின்றார் . பின்னர் அவர் சொந்த ஊர் சென்று விடுகின்றார் . அந்த தாயும் அவரின் மகனான பாண்டியராஜனும் பலகாலம் மௌலி வருவார் என்று காத்திருக்கின்றனர். ஆனால் மௌலியோ வேறு ஒரு பணக்கார பெண்ணை மணந்து  செட்டிலாகிவிடுகின்றார் . தாய் இறந்த பின்னர் , தந்தையை தேடி வந்து  அவரின் நிலையை உணர்ந்து அவருக்கு உதவுகின்றார்.

ரோகிணி கதநாயகி , எஸ் எஸ் சந்திரன் நகைச்சுவை என நல்ல கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் படம் மிக மிக மெதுவாகவும், தெளிவில்லாமலும் இருக்கின்றனது .யாருக்காவது மிக மிக அதிகமான நேரம் கிடைப்பின் மட்டுமே இந்தப் படத்தினைப் பாருங்கள். 

இந்தப்படத்தைப் போலவே ஜெ. வாரிசு என்று சொல்லிக்கொள்ளும் அனைவர் மேலும் எந்த ஈர்ப்பும் வரவில்லை. 

நன்றி 
செங்கதிரோன் 

Tuesday, April 17, 2018

வன்கொடுமை தடுப்பு சட்டமும் பிக் பாஸ் காயத்ரியும்:


வட  மாநிலங்களில் மிகப்பெரும் பதற்றமான சூழல், வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்தால் ஏற்பட்ட்டுள்ளது. PCR வழக்கு என்பது பட்டியலின மக்களுக்கு மிகப்பெரும் பாதுகாப்பு கவசமாக பல ஆண்டுகளாக இருக்கின்றது . இந்த சட்டம் இல்லாமல் போயிருந்தால் , இந்நேரம் பட்டியலின மக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்திருக்கும் . ஏனென்றால் பொருளாதார ரீதியாக எந்த பிடிப்பும் இல்லாமல் வாழும் அவர்களை எந்தளவுக்கு துன்பப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு இன்னலுக்குள்ளாக்கி இருக்கின்றார்கள்.

இந்த வன்கொடுமை தடுப்பு சட்டம் என்பது , பட்டியலின மக்களை சாதி ரீதியாக இழிவுபடுத்தினால் உடனடியாக தண்டனை அளிக்கப்படும். குண்டர் சட்டம் போல ஜாமீன் இல்லாத சிறை தண்டனை என்பதனால் இது மிக வலிமையான சட்டமாக பார்க்கப்படுகின்றது. 

திடீரென்று ஏன் இந்த சட்டத்தினை நீர்த்துப் போக செய்யும் அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது?
இதற்கான விடை பலரும் இந்த வழக்கு பொய்யாக பதிவு செய்யப்படுகின்றது , அல்லது மிரட்டுவதற்கு கூட இந்த சட்டத்த்தினை பட்டியலின மக்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்று மற்ற சமூகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மிகவும் குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும்பான்மை சாதிகளான வன்னியர் , தேவர் , கவுண்டர் போன்ற சாதிகளின் தலைவர்கள் தான் இந்த சட்டத்தினையே நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர் . ஆனால் ஆண்டாண்டு காலமாக மேற்சொன்ன சமூகத்தினர் தான் இந்த பட்டியலின மக்களை துற்புறுத்தியதால் தான் இந்த சட்டமே கொண்டு வரப்பப்ட்டது . 


பல கோடி பேர் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிக மிக சாதரணமாக சேரி பிகேவியர் என்றொரு சொல்லை , பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி குறிப்பிட்டார் .ஆனால் அந்த சொல்லுக்காக இன்று வரை அவர் மன்னிப்பு கேட்கவில்லை . ஆனால் இது போன்ற ஒரு கருத்தினை மற்ற சமூகம் குறித்து சொல்லியிருந்தால் அந்த நிகழ்ச்சியே தடை செய்யப்பட்டிருக்கும். இது தான் இந்தியா முழுக்க பட்டியலின மக்களின் நிலைமை. 

   நான் இதற்கு முன்பு எழுதிய வெள்ளை நிற தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பதிவில் வட அமெரிக்காவில் வாழும் native indians என்ற சிவப்பிந்தியர்களுக்கு பல்வேறு சட்ட பாதுகாப்புகள் உள்ளன. அவர்களின் நிலத்தினை ஆக்கிரமித்து உருவானது தான் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள். 

என்னைப்பொறுத்தவரை , வரதட்சணை தடுப்பு சட்டம் , பாலியல் தடுப்பு சட்டம் போல தீண்டாமை சட்டமும் மிக வலிமை வாய்ந்த ஒன்றாகவே இருக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

நன்றி 
செங்கதிரோன்

Sunday, April 15, 2018

நம் குரு நலம்பெற வேண்டும்



பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியத்தலைவர் குரு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வட மாவட்டத்தின் சிறந்த அரசியல் தலைவர்களில் அவருக்கு ஒரு முக்கிய இடமுண்டு . மேடைகளில் ஆவேசமிக்க பேச்சகளால் கட்சியினர் அவரை மாவீரன் எனக் கொண்டாடுகின்றனர். தான் சார்ந்த சமூகம் மட்டுமன்றி அனைவருமே நலமுடன் வாழவேண்டும் என்ற நல்லுள்ளம் படைத்தவர் . 

அவர் மீது பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் இருப்பினும் ,அவர்  தான் கொண்ட கருத்தில் ஆழ்ந்த பற்றுடையவர். முன்னாள் எம்பி மருத்துவர் செந்தில் , குரு அவர்களைப் பற்றி எழுதிய குறிப்பில் நாம் அறியாத பல்வேறு தகவல்களை குறிப்பிட்டுள்ளார் . அதில் இருந்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி, பலரும் நம்பிக்கொண்டிருக்கும் கருத்தான , குரு தலித் மக்களுக்கு எதிரானவர் என்ற பிம்பமே பொய்யானது . ஏனெனில் இரட்டைக் குவளை முறையை ஒழிக்க பாடுபட்டிருக்கின்றார். அது மட்டுமன்றி மிக மிக முற்போக்காக சிந்திப்பவர், அது குறித்த புத்தகங்களை தேடி படிக்கும் ஆர்வம் உடையவர் . மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நிகழும் நம் நாட்டில் அதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டவர். 

நம் குரு நலம் பெற்று மீண்டு வந்து நீடுழி வாழ்வேண்டும் 

நன்றி 

செங்கதிரோன்

Tuesday, April 3, 2018

தமிழக்த்தின் புதிய எம்ஜிஆர் -ஜஸ்டின் துருது (Justin Trudeue )


பேஸ்புக் , வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்களில் கனடிய பிரதமர் ஜஸ்டின் அவர்களை புகழ்ந்து பல்வேறு செய்திகள், புகைப்படங்கள் , மீம்ஸ்கள் வலம்  வந்து கொண்டிருக்கின்றது..இந்தப் புகழ்ச்சிக்கெல்லாம் மிகப் பொருத்தமானவர் தான் ஜஸ்டின் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனென்றால் ஜஸ்டின் பிரதமரான பின்னர் தான் வெளிநாடுகளிருந்து குடியேறுபவர்களுக்கு பல் விதமான சலுகைகள் வழங்கினார் . அஅவற்றில் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகின்றேன் . , 1)பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறிவர்கள் மிக பாதுகாப்பாக உணர முடிந்தது .2) கனடாவின் குடியேற்ற விதிகளை எளிமையாக்கியதோடு மட்டுமன்றி , போரால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து அகதிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதித்தார். 3)கனடாவின் அருகில் உள்ள அமெரிக்காவோ குடியேற்ற விதிகளை கடுமையாக்கியதோடு மட்டுமன்றி , அகதிகளை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றியது . அவ்வாறு வெளியேற்றப்பட்ட அகதிகளை கனடா தங்கள் நாட்டுக்குள் வர அனுமதித்தது . இவ்வாறு பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகள் செய்தார்.



 ஜஸ்டினின் மற்றோரு மிகப் பெரும் சாதனை என்பது ,உலகம்  முழுக்கவே முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வேளையில்  , முசுலிம் நாடுகளில் நடக்கும் போர்களாலும் அந்த மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களுக்காக கண்ணீர் விட்டதோடு மட்டுமன்றி தங்கள் நாட்டில் குடியேற வழிவகை செய்தார்.

தமிழர்களுக்கு ஜஸ்டினை எம்ஜியாராக பார்ப்பதற்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன. ஜனவரி மாதத்தினை  தமிழ் மாதமாக கொண்டாட கனடா அரசு முடிவெடுத்தது , பொங்கல் விழாவில் நம் பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்து தமிழனாகவே காட்சி அளித்து , நம் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சுற்றியது, பொங்கல் வாழ்த்தினை கொஞ்சு தமிழில் கூறி நம் தமிழர் உள்ளகங்களை கொள்ளையடித்தது என்று பட்டியல் போடும் அளவுக்கு பலவற்றை செய்த்திருக்கின்றார். ஜஸ்டின் மட்டுமன்றி அவர் மனைவி குழந்தைகள் அனைவருமே தமிழ் மக்களால் கொண்டாடப்படுகின்றனர். ஜஸ்டினின் கடைக்குட்டியின் குறும்புத்தனங்களை பிரதமர் முதல் அனைத்து மக்களும் ரசித்தனர்.



நம்மால் எம்ஜிஆர் அளவுக்கு புகழப்படும் ஜஸ்டினை அவருடைய நாட்டு மக்கள் எப்படி மதிப்பிடுகின்றனர் என்பது தான் மிக முக்கியம் , ஏனெனில் வரும் 2019 தேர்தலில் அந்த மக்கள் தான் ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்க முடியும் . எனவே அவர்களின் மதிப்பீடு என்பது மிக முக்கியம். ம்மால் எம்ஜிஆர் அளவுக்கு புகழப்படும் ஜஸ்டினை அவருடைய நாட்டு மக்கள் எப்படி மதிப்பிடுகின்றனர் என்பது தான் மிக முக்கியம் , ஏனெனில் வரும் 2019 தேர்தலில் அந்த மக்கள் தான் ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்க முடியும் . எனவே அவர்களின் மதிப்பீடு என்பது மிக முக்கியம். 2015ல் மிகப்பெரும் வெற்றியுடன் ஆட்சி அமைத்தவர் .

 வரவிருக்கின்ற 2019  கனடிய பிரதமர் தேர்தல் ஜஸ்டினுக்கு நம்மூர் மோடிக்கு இருக்கும் சவால் போலவே இருக்கும் என பெரும்பாலான கனடிய ஊடகங்கள் கணிக்கின்றன . இருப்பினும் வலுவற்ற எதிரிக்கட்சிகளால் அவர் வெற்றி பெறவே அதிகம் வாய்ப்புள்ளது . அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டாம் முறை அதிபராக முக்கியக் காரணமாக அமைந்த வெளிநாட்டுக்குடியேறிகள் (Immigrants) போல , ஜஸ்டினுக்கும் இஸலாமிய நாடுகளிலிருந்து குடியேறிய மக்களின் முழுமையான ஆதரவினால் மீண்டும் வெற்றிவாகை சூடுவார் என்று எதிரிபார்ர்க்கப்படுகின்றது .

நன்றி
செங்கதிரோன்

ஜஸ்டின் குறித்த முந்தைய பதிவு- உலக மக்களின் உள்ளம் கவர்ந்த ஜஸ்டின்




Sunday, April 1, 2018

பாமகவுக்குள்இருப்பது தமிழ் தேசியமா , திராவிடமா , இந்துத்வாவா ?



ஆண்டாள் சர்ச்சை , பெரியார் சிலை உடைப்பு இந்த இரண்டு விவகாரங்களினால் பாமகவுக்குள் ஒரு பூகம்பமே நிகழ்ந்திருக்கின்றது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவரகள் கிழித்த கோட்டை தாண்டாத அவர் கட்சி தொண்டர்கள் , பெரியார் சிலை தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கைக்காக அவரிடம் முரண்பட்டு முகப்புத்தகத்தில் ஏராளமான தொண்டர்கள் கருத்துக்களை வெளியிட்டது கண்டு கட்சியின் முன்னணியினர் திகைத்து விட்டனர்.

சமூக நீதியினை முன்னிறுத்தி உருவான ஒரு கட்சியில் இப்படிப்பட்ட இந்துத்துவாவுக்கு ஆதரவான ஒரு தொண்டர் கூட்டம் உருவானது எவ்வாறு என்று அவர்களே குழப்பத்திற்கு உள்ளாகி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் சென்னை மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற பழைய மாணவர்கள் சந்திப்பின் போது  கொடுத்த பேட்டியினை இங்கு நினைவு கூர்வது அவசியம் என்று நினைக்கிறேன். மருத்துவ கல்லூரியில் பயிலும் போது மாலை நேரங்களில் பெரியார் , அண்ணா கூட்டங்களுக்கு சென்றதன் மூலமாகவே சமூக நீதிக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார் .
பாமகவின்உறுப்பினர் அட்டை 


பாஜகவுடன் திமுக, அதிமுக, மதிமுக என ஏகப்பட்ட கட்சிகள் கூட்டணி வைத்தருந்தாலும் அந்தக் காட்சிகளில் பாமகவில் ஏற்பட்டது போன்ற இந்துத்துவாவுக்கு ஆதரவான கூட்டம் உருவாகவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.பாமகவில் மட்டுமே ஏற்பட்டதற்கு காரணங்கள் என்ன? முதலாவதாக பாமகவின் அரசியல் பயிலரங்கத்தில் அன்புமணியை எப்படி முன்னிறுத்துவது என்று தொண்டர்களுக்கு  கொடுக்கப்பட்ட பயிற்சியினை விட தங்கள் கொள்கை எது என்று தெளிவாக பயிற்சி அளித்திருந்திருக்கலாம். மேலும் வன்னிய சமுதாயம் இயல்பாகவே பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமுதாயம் , இதனை நன்கு உணர்ந்து கொண்ட பிஜேபி , பல்வேறு பொய்யான  வாக்குறுதிகளை அளித்து தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்கின்றனர்.
பெரியார் சிலை உடைப்புக்காக ராமதாஸின் பதிவுக்கு எதிராக அந்த கட்சி தொண்டர்களின் எதிர்வினை 


வன்னியர்களுக்கு இட  ஒதுக்கீடு வாங்கி கொடுத்தது மட்டுமே போதும் என்று பாமக நினைக்கின்றது , அதனையும் தாண்டி அந்த இட ஒதுக்கீட்டினைப் பயன்படுத்தும் அளவுக்கு அவர்களுக்கான விழ்ப்புணர்வினையும் , வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கல்வி அறிவு தான் அவர்களை முற்போக்காக சிந்திக்க வைக்க வழிவகை செய்யும் . அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து வன்னியர்களின் பொருளாதரமும் , கல்வி அறிவும் மேம்படா விட்டால் பெரும்பாலானோர் இந்துத்வா தூண்டி விடும் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு பாஜகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்துத்தவா வன்னியர்களை குறிவைப்பதற்கான காரணமே பெரும்பான்மை சமூகமாக இருக்கும் இவர்களை தூண்டி விட்டு கலவரம் உண்டாக்கி தங்கள் பலனடையப்பார்க்கின்றார்கள்.மருத்துவர் ராமதாஸ் இடதுக்கீடுக்காக போராடியதற்கான காரணம் வன்னியர்கள் அருவா ஆயுதம் ஏந்தாமல் அறிவு ஆயுதம் எந்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் , ஆனால் இந்துத்துவ அமைப்புகள் வன்னியர்களை அருவா ஆயுதம் ஏந்தி  காலம் முழுக்க அவர்களின் அடியாட்களாக வைத்திருக்க ஆசைபப்டுகின்றனர்.பாமகவில் அதிருப்தியாக உள்ளவர்களை, பாஜக  சத்ரிய சாம்ராஜ்யம் என்ற அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் வன்னிய வாக்குகளை சிதறடிக்கும் முயற்சியினையும் தற்போது செயல்படுத்தி வருகின்றது. 

இந்துத்வா வேண்டாம் என்றால் திராவிடம் பாமகவுக்கு பொருத்தமானதா ? தமிழ்நாட்டில் மற்ற மொழியினரின் ஆதிக்கம் அதிகம் என்று மறுப்பதற்கில்லை. இருப்பினும் திராவிடம் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் பிரமணல்லாத சமூகத்திடம் வலுவாக கோலோச்சி கொண்டிருக்கின்றது , அதுவும் குறிப்பாக நன்கு படித்த சமூகத்தினர் திராவிடத்தின் sleeper cell ஆகவே இருக்கின்றனர். பாமகவில் இருக்கும் பெரும்பாலானோரின் பெற்றோர்கள் இன்றும் இரண்டு திரவிட கட்சிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர் . அதிமுகவின் அனுதாபியாக இருந்தவர்கள் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரே பாமகவை ஆதரிக்கின்றனர். திமுகவோ துரைமுருகன், வேலு , ஜகத்ராட்சன் போன்றோரை முன்னிறுத்தி வன்னியர் ஆதரவை வலுவாக்குகின்றனர்.திராவிட கட்சிகளின் தோல்வியினை முன்னிறுத்துவது கண்டிப்பாக தேர்தலில் பலன் கொடுக்கும் . அதே நேரத்தில் மண்ணுக்கேற்ற  அரசியல் எனப்து இன்றும் திராவிடக் கொள்கைகள் தான் எனபதனை தங்கள் தொண்டர்களுக்கு மிக அழுத்தமாக முன்னிறுத்த வேண்டும். பாமகவின் முன்னாள் எம்பி மருத்துவர் செந்தில் பலமுறை தொலைக்காட்சிக்களிலும் , கட்டுரைகளிலும் திராவிடத்தின் அவசியத்தினை குறிப்பிட்டு இருக்கின்றார். அவரை பாமகவின் அரசியல் பயிலரங்கத்தில் தொண்டர்களுக்கு வகுப்பு எடுக்க சொல்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தமிழ் தேசியத்தின் முக்கிய அங்கமாக இருப்பது பாமக தான் என்பது அதன் ஒவ்வொரு போராட்டமும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. தமிழர்களுக்கு ஒரு பாதிப்பு  என்றால் அதற்காக முதலில் குரல் கொடுப்பது மருத்துவர் ராம்தாஸ் தான்.  

மேற்சொன்னவற்றிலிருந்து நீங்களே யூகிக்க முடியும் ,பாமக முழுக்க முழுக்க தமிழ் தேசிய கட்சி என்பதும் , அது என்றும் இந்துத்துவா நோக்கி நகரவே நகராது. பாமகவில் இருக்கும் ஒரு சிலரின் எச்ச ராஜ்வின் மீதான கரிசனம் மற்றும்  இந்துத்துவ அரசியல் குறித்த அனுதாபம் போன்றவற்றை , அவர்களுக்கு புரியும் முறையில் எடுத்துக் கூறி நல்வழிப்படுத்த வேண்டும்.

நன்றி 
செங்கதிரோன்