Saturday, August 13, 2011

பெட்ரோல் விலை ஏற்றம் உண்மை நிலை!!!








மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது ”அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே” என்று தான்.

இதில் நாமும் விதிவிலக்கல்ல..

ஏனெனில் கடந்த ஓராண்டில் மட்டும் 10 முறை பெட்ரோல் விலை
உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் பெட்ரோல் விலை 5.12 ரூபாய்
உயர்த்தப்பட்டு தற்போது 68.35 ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்ரோல்
விற்கப்படுகின்றது.

பிரதமர் உட்பட உயர் மட்ட அளவில் கூட்டம் போடும் அளவிற்கு நாட்டில் விலைவாசி அடித்தட்டு இந்த நிலையில், நமது இந்திய அரசு இதை (எண்னை நிறுவனங்கள் ஒப்புதலுடன் தான் விலையை ஏற்றுகின்றது) செய்திருப்பது, ”நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு கோடிகோடியாய் பணம் தரும் பெரும் தொழிலதிபர்கள் நல்லா இருக்கனும் உலகின் பணக்கார பட்டியலில் அவர்கள் பெயர் முன்னேர வேண்டும்” என்ற அரசியல் வாதிகளின் நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

நாம் இதை ஆதாரத்தோடே கூறுகின்றோம்!

விலையை உயர்த்து சொல்லப்படும் காரணங்கள்

1.ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம்

அடிக்கடி விலையை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் முதல் காரணம் ஆயில் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு ”இத்தன கோடி நஷ்டம்” என்பது தான்.

இது கடைந்தெடுத்த பொய்யாகும்! இது பச்சைப் பொய்யாகும்!! இது மகாப் பொய்யாகும்!!

நாம் இதை இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்னை நிறுவனங்களின் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நாம் படித்தது தான்.

நிதி நிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்)

IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி
5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்

HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி
2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்

BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி
2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்

மேற்குறிப்பிட்ட மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு, எண்ணை ‘நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்’ என்று அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது.



நஷ்டம் என்று அரசு கூறுவது ‘வர வேண்டிய லாபத்தை என்று’ சில பொருளாதார வல்லுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.

அதாவது உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான் லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது போன்று.

லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் ”விலையை கூட்டும் அளவிற்கு இத்தன கோடி நஷ்டம் ” என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது.

பொதுமக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் போது கோடிக்கணக்கில் எண்னை நிறுவனம் மூலம் லாபம் சம்பாத்தித்து விட்டு ‘அதுவும் போதவில்லை இன்னும் விலையை ஏற்று’ என்று மத்திய அரசு கூறுவது, அரசு எந்த அளவிற்கு பொதுமக்களின் பணத்தை கொள்கை அடிக்க வழிகளை தேடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

நான்கு மாதத்தில் மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிவிட்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நஷ்டக் கணக்கு காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா?

எனவே அரசுக்கு எண்னை நிறுவனங்கள் மூலம் இதுவரையிலும் எந்த நஷ்டமும் இல்லை கொடிக்கணக்கில் லாபம் தான், மத்திய அரசு அப்பட்டமாக பொய் கூறுகின்றது என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

நஷ்ட கணக்கு நாடகத்தை பொதுமக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.

2. குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது

அடுத்து சொல்லும் காரணம் குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது. இதுவும் பொய்யாகும்.

தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்றது. தற்போது பெட்ரொலின் விலை லிட்டர் 63.54 ரூபாய்.

ஆனால் இதே பீப்பாய் 2008 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 135 டாலருக்கும் மேல்
விற்கப்பட்டது. அப்போது விலை என்ன தெரியுமா ? பெட்ரொல் லிட்டர் ரூபாய் 54 தான்.

2008 ஐ ஒப்பிடும் போது தற்போது பீப்பாய் விலை 34 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையையும் 34 சதவிகிதம் குறைக்க வேண்டும். அது தான் நியாயம்
அதாவது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூ ஆக ஆக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைப்பதற்கு பதிலாக தற்போது 55 சதவிகிதம் விலைய உயர்த்தி 63 ரூபாய்க்கு விற்கின்றது.

இது மிகப்பெரும் அநியாயமாகும்.

2008 ல் பீப்பாய் ஒன்று 135 டாலருக்கும் மேல் சர்வதேச சந்தையில் விற்கும்
போதே பெட்ரோலை லிட்டர் 54 ரூபாய் தான். ஆனால் தற்போது பீப்பாய் ஒன்று 92$ தான் விற்கின்றது எனவே பீப்பாய் விலையை கவனத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு விலைய குறைக்க வேண்டுமே தவிர கூட்டக் கூடாது.

எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு குரூட் ஆயிலின் விலை உயர்வு தான் காரணம் என்று கூறுவது பொய் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

விலை உயர்ந்துள்ளதற்கு உண்மையான காரணம்

உண்மையில் தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கணக்கு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் கூட வராது.

ஆம், நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் உள்ள தொகை மத்திய மாநில அரசு விதித்துள்ள வரிகள் தான்.

இதோ தற்போதைய பெட்ரோலுக்கான வரி நிலவரம் 2011


Customs duty 7.5 = 4.75
Import duty 5% = 3.17
Tamilnadu Gov tax 30% = 19.035
Excise duty Rs 14.45 = 14.45
Actual petro price = 22.07

-------------------------------------

Total = 63.45


வரி என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள் 22 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 41 ரூபாய் கூடுதலாக வரிமேல் வரி விதித்து 63.45 க்கு அநியாயமாக விற்கும் மத்திய மாநில அரசுகள் இன்னும் என்ன காரணம் சொல்லி விலையை உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றது. பொய்கணக்கு கூறி பொதுமக்களிடம் நாடகமாடிக்கோண்டிருக்கின்றது.

ஒரு வருடத்திற்கு நாம் அரசிற்கு செலுத்தும் பெட்ரோல் வரி .. ஒரு சிறிய கணக்கு..

மோட்டார் வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 15 லிட்டர் பயன்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

மாதம் பெட்ரோலுக்காக இவருக்கு ஆகும் செலவு ரூபாய் 951.75.

இதில் 650.7 ரூபாயை இவர் அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார். பெட்ரோலுக்கான விலை அல்ல!

இதில் பெட்ரோலுக்கான விலை வெறும் 330 ரூபாய் மட்டும் தான்!

மாதம் 650.7 எனில் வருடத்திற்கு 7808.4 ரூபாயை இவர் பெட்ரொல் வாங்குவதன் மூலம் அரசிற்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார்.

நானும் நீங்களும் பெட்ரோலுக்காக அரசிற்கு வருடா வருடம் கிட்டதட்ட 8 ஆயிரம் ரூபாய் வரியாக மட்டுமே கொடுக்கின்றோம். (மாதம் 15 லிட்டர் எனில்) இது தெரியுமா உங்களுக்கு ?.

இதில் 4 ஆயிரம் தமிழக அரசிற்கு, 4 ஆயிரம் மத்திய அரசிற்கு! என்ன கொடுமை இது!!!

100 கோடி மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் மோட்டார் வாகனம்
பயன்படுத்தவதாக வைத்துக் கொண்டாலும் அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய்
780840000000 (எத்தன ஆயிரம் கோடின்னு நீங்களே கணக்கு பன்னிக்கோங்க)
பெட்ரோல் மூலம் வரி மட்டுமே வருகின்றது.

ஒரு பக்கம் எண்ணை நிறுவனங்கள் மூலம் வரும் லாபம், மறு பக்கம் அதை விட இரண்டு மடங்கு வரி என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து வரும் லாபம்.

இவையெல்லாம் போதாது என்று மேலும் மேலும் பச்சை பொய் கூறி பெட்ரோல் விலைலை உயர்த்துகின்றது மத்திய அரசு.

எனவே பெட்ரோல் விலையின் உயர்வுக்கு காரணம் மத்திய மாநில அரசுகள்
நிர்ணயித்துள்ள வரிகள் தானே தவிர பீப்பாய் விலையோ எண்னை நிறுவனிங்களின் நஷ்டமோ (அப்பட்டமான பொய்) கிடையாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கூடுதலாக வரி விதிக்க காரணம்

1. தனியார் நிறுவனங்கள்

சமீபகாலமாக அரசு அதிகமாக வரி விதிப்பதற்கும் விலைய உயர்த்துவதற்கும்
முக்கிய காரணம் தற்போது முலைத்துள்ள தனியார் எண்னை நிறுவனங்கள் தான்.

கனிமவளங்கள் நிறந்த நாட்டுடமைகளை அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கி தனியார் எண்னை நிறுவனங்கள் அதிலிருந்து வரும் எரிபொருளை அரசிற்கே கூடுதல் விலைக்கு விற்கின்றது மேலும் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலை வாங்கி உள்ள நாட்டில் அதிக விலைக்கு விற்கிறது .ஆம்! பெட்ரோலுக்காக நாம் கொடுக்கும் பணத்தில் ரிலைன்சுக்கும் பங்கு
செல்கின்றது. இது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அரசு, பெட்ரோல் விலையை நீங்களே (எண்னை நிறுவனங்களே) நிர்ணயித்துக் கொள்ளுங்கள் என சட்டம் கொண்டு வந்தது.

இதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்கின்றது.

Reliance Industries என்று சொல்லப்படும் ரிலைன்சின் எண்னை நிறுவனத்தின்
2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் லாபம் (நான்கு மாதத்தில்) எவ்வளவு
தெரியுமா? 4923 கோடியாகும்.

இந்த லாபம் அரசின் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகியவற்றின் லாபத்தை விட இரண்டு மடங்கு கூடுதலானதாகும்.

தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவலளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அரசிற்கே விற்கின்றன மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு .

இதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கவும் தேவையில்லை.

முகேஷ் அம்பானி போன்ற தனியார் நிறுவன தொழிலதிபர்கள் உலக பணக்கார வரிசையில் இடம் பிடிக்க நமது அரசியல் வாதிகள் பாடுபடுவதோடு பொதுமக்களையும் அதற்கு பணயமாக்குகின்றனர்.

2. வட்டி

65 சதவிகிதம் அளிவிற்கு வரி விதிப்பதற்கு மற்றுமொரு முக்கிய காணரம் உலக வங்கியில் இந்திய அரசு வாங்கியுள்ள கடன் தான்.

இத்தனை சதவிகிதம் வரி விதித்தால் தான் அரசின் கடன் மற்றும் வட்டியை கட்ட முடியும் என்ற கணக்கு உள்ளது.

அதன் அடிப்படையில் தான் வாங்கிய கடன் மற்றும் அதற்குரிய வட்டியை அடைப்பதற்கு ஏற்றாற்போன்று மத்திய மாநில அரசு வரிகளை விதிக்கின்றது.

பெட்ரோல் அன்றாடம் அனைவரும் பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதால் அதற்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க அரசு, வட்டி மற்றும் தனியார் கலாச்சாரத்தை கைவிட வேண்டுமே தவிர பொதுமக்களை சுரண்டும் வண்ணம் வரிக்கு மேல் வரி கூடாது.

அமெரிக்காக போன்ற வளர்ந்த நாட்டில் வெறும் 18 சதவிகித வரி தான் பெட்ரோலுக்கு விதிக்கப்படுகின்றது.

18% எங்கே 65% எங்கே ?

பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழக அரசும் காரணம்

மற்ற மாநிலங்களை விட அதிகமாக தமிழக அரசு 30 சதகவிதம் பெட்ரோலுக்கு வரி விதிக்கின்றது. ஒரு ரூபாய் க்கு அரிசி போடுகின்றேன் என்று கூறி தினமும் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொதுமக்களிடம் கோடி கோடியாய் பணத்தை பெட்ரோல் மூலம் சுருட்டுகின்றது இந்த தமிழக அரசு. மேலோட்டமாக சலுகைகளை அறிவித்து விட்டு பொதுமக்களுக்கு தெரியாமல் பெட்ரோல் மூலம் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றது இந்த தமிழக அரசு. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் கூடுதலாகவே பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படுகின்றது.
போலி சலுகைகளை அறிவிப்பதை விட்டு விட்டு, வரி என்ற பெயரில் பொதுமக்கள் வயிற்றில் அடிக்காமல் தமிழக அரசு செயல்பட்டாலே போதும் என்பது பொதுமக்களின் கருத்து.

விலையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்ற
நிலையிலும் வரி இல்லாமல் பெட்ரோலின் விலை வெறும் 22 ரூபாய் தான் ஆகின்றது. இந்த 22 ரூபாயில் லாபமும் அடங்கும். வரி என்பது கூடுதலாக விதிக்கப்படுவது. மத்திய மாநிலம் அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு வரி விதித்திருப்பதாலேயே பெட்ரோல் விலை தாருமாறாக உயர்ந்துள்ளது.

மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்தாலே போதும் பெட்ரோல் விலை
குறைந்துவிடும். சர்வதே சந்தையில் குரூட் ஆயிலின் விலை கூடுவதினால்
பெட்ரோல் விலை பெருமளவு கூடாது.

மத்திய அரசு வரியை குறைத்தால் தான் பெட்ரோல் விலை குறையும் என்பதில்லை தமிழக அரசு 30 சதவிகிதமாக இருக்கும் தற்போதை வரியை குறைந்த பட்சம் மற்ற மாநிலங்களை போன்று குறைத்தாலே போதும். பெட்ரோல் விலை கணிசமாக குறையும்.

பொதுமக்களாகிய நாம் தான் இதற்கு ஆவண செய்ய வேண்டும்!

அநியாயம்! அநியாயம்! எங்கும் இல்லாத அநியாயம்

20 ரூபாய் பொருளுக்கு 5 அல்லது 10 ரூபாய் வரி போட்டால் சகித்துக் கொள்ளலாம் ஆனால் கிட்டதட்ட 200 சதவிகித அளவிற்கு வரி போடும் அபாயகரமான நிலையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆம் 22 ரூபாய் பெட்ரோலுக்கு 41 ரூபாய் வரி!

ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட எந்த பொருளுக்கும் இந்த அளவிற்கு வரி விதித்திருக்க மாட்டார்கள். சமீப காலமாக ஏற்படும் விலை வாசி உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வும் முக்கிய காணரம்!

இதை கண்டு கொள்ளாமல்அரசு மெத்தனமாகவே செயல்படுகின்றது.

இதில் வேடிக்கையான விசயம் என்னவெனில் தற்போது உள்ள பிரதமர் பொருளாதார வல்லுணராம் அது தொடர்பாக நிறைய படித்துள்ளாராம். என்னத்த படிச்சாரோ தெரியல..

அரசியல் வாதிகள் ஆட்சியில் இருக்கும் பொது பெட்ரோலுக்கு தங்களது சொந்த பணத்தை செலவிட்டால் தானே அதன் கஷ்டம் புரியும், இவர்கள் பெட்ரோல் அலவன்ஸ் என்ற பெயரில் அரசின் பணத்தை தானே தங்களது வாகனத்திற்கு செலவிடுகின்றனர்.

எனவே பொதுமக்களின் கஷ்டம் இவர்களுக்கு எங்கு தெரியப்போகின்றது.

எனவே இந்த அநியாயத்தை பொதுமக்கள், தட்டி கேட்க தவறினால் 200 சதவிகிதம் என்ன, பெட்ரோலுக்கு 500 சதவிகிதம் கூட இவர்கள் வரி விதிப்பார்கள்.

Wednesday, August 3, 2011

குண்டாக இருப்பவர்களை இழிபடுத்தும் பத்திரிக்கை கார்ட்டூன்

மேலே உள்ள கார்டூனில் குண்டாக இருப்பவர்களுக்கு டபுள் அல்லது இரட்டை குண்டர் சட்டமா என குண்டாக இருக்கும் மனிதர் கேட்பது போல் சித்தரித்து இருப்பது குண்டாக இருப்பவர்களை மிகவும் கேலி செய்யும் தொனியில் உள்ளது. இதை ஒரு பொறுப்பான பத்திரிக்கை செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.

Saturday, July 30, 2011

விகடனில் வந்த அருமையான வாசகர் தலையங்கம்


ல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளிகளுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்​களுக்காகத் தொடங்கப்பட்டது, இலவசப் பேருந்துப் பயண அட்டை திட்டம். இந்தத் திட்டம், இப்போது கல்லூரி மாணவர்​களுக்கும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது!

ஆனால், காலை மற்றும் மாலைநேரங்களில் பேருந்தில் ஏறிப் பயணம் செல்லும் மாணவர்​களின் நிலை​யோ... பரிதாபம். குறிப்பாக, பள்ளி மாணவர்கள் புத்தக மூட்டை, கையில் உணவுப் பையுடன் பேருந்தில்நுழையவே பெரும்பாடு​படுகின்றனர். அப்படியே முட்டி மோதி ஏறிவிட்டாலும், மற்ற பயணிகளுடன் ஈடு கொடுக்க முடியாமல் நசுங்கிக்கொண்டும், தொங்கிக்கொண்டும் செல்லும் அவதியான அவல நிலை!

இதில் இன்னும் ஒரு கொடுமை... பெரும்பாலான அரசுப் பேருந்து ஓட்டுனர்கள், பள்ளி நிறுத்தங்களில் நிறுத்தவே மாட்​டார்​கள். மாணவர்கள் கூட்டமாக ஏறிவிடுவார்களே என்று 100 அல்லது 200 அடி தள்ளிச் சென்றே நிறுத்துகின்றனர். இதில், பள்ளிக் குழந்தைகள் அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்படுவதைப் பார்க்கும்போது... பாவமாக இருக்கும்!

இதற்கு ஓர் அவசிய, அவசரத் தீர்வு தேவை. அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் இந்தப் பிரச்னையைத் தீர்த்துவிட்டார்கள். ஆம், மாணவர்களுக்கு என பள்ளி நேரங்களில் தனிப் பேருந்துகள் இயக்கப்​​படுகின்றன. நம் முதல்வர் ஜெயலலிதா அவர்களும் அதே​போல, பள்ளிகள் இயங்கும் ஐந்து நாட்களில் காலை, மாலை மட்டும் மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால், பள்ளிக் குழந்தைகள் மனதார வாழ்த்துவார்கள்!

இந்த தலையங்கத்தை எழுதியது எம்.வி.குரு சிந்தியா என்ற +1 படிக்கும் பள்ளி மாணவி .கிராமத்துப் பின்னணியில் வளர்ந்தவர்களுக்கு இந்த தலையங்கத்தின் உண்மை சராசரம் புரியும். இதை எழுதியது மாணவியாக இருப்பதிலிருந்தே பெண்களே அதிகம் துன்பப்படுகிறார்கள் என்பது உண்மை. அரசாங்கம் இலவச பஸ் பாஸ் கொடுப்பதனால் கிராமத்தில் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளி பக்கத்தில் உள்ள சிறு நகரங்களுக்கு அனுப்பி படிக்க வைக்க விரும்புகின்றனர்.ஆனால் இந்த பேருந்துகளில் மாணவ மாணவிகள் படும் துன்பம் அளவில்லாதது. பெண் முதலமைச்சரான ஜெயலலிதா இதற்கு ஒரு சரியான தீர்வினை அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.



Wednesday, July 27, 2011

எங்கே ஏஆர் .ரகுமான் ?


இளையராஜா என்றாலே நினைவுக்கு வருவது மனதை மயக்கும் பாடல்கள்.காதல் ,சோகம்,அழுகை ,அம்மா,குழந்தைகள் என அவர் தொடாத உணர்வுகளே இல்லை. அவருடைய இசை நம்மை வேறொரு உலகத்துக்கு கொண்டு செல்லும் சக்தி வாய்ந்தது.உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டாலும் அவரின் இசை நம்முள்ளே இருக்கின்றது.அந்த இச்சையை இசைத்தட்டுகள் அடக்கி கட்டத்தில் தொடங்கி இன்று ipod மற்றும் ipad களிலும் அதை ஏற்றி கேட்டுகொண்டிருக்கின்றோம்.ஆனால் இன்னும் அதன் மீதான் ஈர்ப்பு குறையவே இல்லை.


நகரங்களில் நிலைமை கொஞ்சம் மாறி இருக்கின்றது. குறிப்பாக பெருநகரங்களான சென்னை மற்றும் கோவையில் இளைய சமுதாயம் மேற்கத்திய இசையை நோக்கி சென்றுகொடிருக்கின்றார்கள் .பிற நகரங்களில் இசையைப் பற்றி பெரிதான ஈர்ப்பு இல்லாவிட்டாலும் கூட படங்களில் வரும் ஹிட் பாடலகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனை நாம் ன் மியூசிக் மற்றும் இசைஅருவி சேனல்களில் பாடல் விருப்பம் தெரிவிப்பவரின் ஊர்ப்பெயர்களிலிருந்து அறியலாம்.கிராமத்து மக்கள் என்னதான் செய்கிறார்கள் ? அவர்களுக்கு இசையைப் பற்றிய ஞானம் என்பது தாங்கள் விருப்பப்பட்டதை கேட்டதை விட வானொலி ,பேருந்து பயணத்தின் பொது கேட்கும் இசை இவைகளால் மட்டுமே அவர்களின் இசையின் பரிச்சியம் ஏற்படுகிறது. இதுபோன்றதொரு நிலை நகரத்தில் இல்லை அவரவர்களுக்கு விருப்பமான பாடலை தேர்ந்தெடுத்து கேட்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இன்றும் சிறு நகரங்கள் மற்றும் கிரமத்து பகுதிகளில் இயங்கும் பேருந்துகளில் முழுக்க முழுக்க இளையராஜாவே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார். .ஆர் .ரகுமான் இசை என்பது வெகு குறைவாகவே ஒலிக்கப்படுகின்றது. இந்த தலைமுறை கிராமத்து இளைநர்களின் விருப்பமாக இளையராஜாவே இருக்கின்றார் .அதையும் தாண்டி அவர்கள் கொஞ்சமா முக்கியத்துவம் கொடுப்பது யுவன் சங்கர் ராஜாவுக்கே இந்த எல்லையோடு அவர்களின் இசை மீதான பரிச்சியம் நின்று விடுகின்றது. இது அவர்களின் குறையா அல்லது மற்ற இசையமைப்பாளர்களின் குறையா என்றால் முழுக்க முழுக்க மனதிற்கு நெருக்கமான ஒன்றை விரும்பி ஏற்றுக்கொள்ளும் தன்மை என்றே குறிப்பிடலாம்.

இளையராஜாவின் இசைப்பயணம் உச்சகட்டத்தில் இருந்த காலம் குறைந்தது இருபதாண்டுகளுக்கு முன்னால் அதற்குப்பிறகு .ஆர் .ரகுமான் வந்தார் அவரின் இசைப்பயணம் மிக குறுகிய காலகட்டம் மட்டுமே தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து இருந்தது. அதற்கு முழுமையான காரணம் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனரான மணிரத்னம் அவரை இந்திக்கும் கொண்டு சென்றார் .அன்றிலிருந்து அவர் தமிழ் சினிமாவை விட்டு வெகு தூரம் சென்று விட்டார். அடுத்ததாக ஹாலிவுட்டுக்கும் சென்றார் .இவை அனைத்தும் தமிழ் சினிமாவுக்கும தமிழனுக்கும் பெருமை தான்


ஆனால் அவரின் பங்களிப்பு தமிழ் சினிமாவுக்கு மிக குறைவு. அவர் இசை அமைத்த படங்கள் அனைத்தும் நகரம் சார்ந்ததாக இருந்ததாலும் அவை கிராமத்து மக்களின் மனதிற்கு நெருக்கமாக அவை அமையவில்லை.அவர் இசையமைத்த கருத்தம்மா படத்தின் இசை மிக அற்புதமானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் அவர் இன்னும் அதைப் போன்ற இன்னும் நிறைய படங்களுக்கு இசை அமைத்து இருந்திருப்பின் தமிழ் சினிமாவின் பிதாமகனாக மாறிஇருக்கக்கூடும் .முன்னர் குறிப்பட்டது போல இருபது ஆண்டுகளுக்கு முன்னால் உச்ச கட்டத்தில் இருந்த இசைமேதை இளையராஜவின் பாடல்களே இன்றும் அனைவரின் விருப்ப்பாடல்களாக இருக்கின்றன. பலர் இதற்கு காரணமாக அவரின் படத்தின் கதைக்களங்களையே குறைகூறுகின்றனர். ஆனால் இன்றும் மிகசிறந்த கதை அம்சங்களுடன் இயக்ககூடிய திறமையான பல இயக்குனர்களை இருகிறார்கள். குறிப்பாக சொல்வதானால் சிகுமார், பாண்டிராஜ்,வசந்தபாலன்,தங்கர்பச்சான்,சேரன்கரு.பழனியப்பன்,சீனுராமசாமி, லிங்குசாமி,செலவ்ராகவன்,சுசீந்திரன் என் மிகப் பெரிய பட்டியலே போடலாம். இவர்கள் அனைவருமே யதார்த்தமான கதைகளை படமாக்குபவர்கள். அண்ணல் இன்றைய .ர். ரகுமானின் சம்பளத்தில் இவர்கள் படமே எடுத்து விட முடியும்.



உங்களின் திறமை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், பல்வேறு விருதுகளி வாங்கி குவித்து இருந்தாலும் காமன்மேன் என்று சொல்லப்படும் பொதுமக்களின் உணர்வுகளை சென்றோடயதவறை அவற்றுக்கான மதிப்பு மிகவும் குறைவே. நினைத்துப்பாருங்கள் இன்னும் இருபது ஆண்டுகள் கழித்தும் நாம் இளையராஜாவின் இசையை மட்டுமே நாம் கேடடுக்கொண்டிருக்க முடியும் அல்லது அனைவரும் வேற்று மொழி பாடல்களை நோக்கிச்செல்ல்வேண்டிய நிலைவந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை . .ஆர் . ரகுமான் ஆங்கிலப் படங்களுக்கு இசைஅமைக்கும் போதும் உலகின் மிகப் பெரிய இசை மேதைகளுடன் புகைப்படத்தில் காணும்போதும் அவர்களை இசை தொகுப்பில் காணும்போதும் மெய்சிலிர்க்கிறது . அகான் (Akon) எனபவரின் you are beautiful பாடலில் .ஆர் .ரகுமானை காணும்போது மகிழ்க்கு எல்லையே இல்லை எனலாம்.ஏனெனில் அகான் அவ்வளவு பிரபலமான பாடகர் அவருடன் இணைந்து .ஆர் . தோன்றுவது மிகப் பெரிய சாதனை என்றே சொல்லலாம்.



ஏன் இன்றைய இசையமைப்பாளர்கள் பங்களிப்பு சிறப்பாக இல்லையா என்றால் அவர்களின் இசையமைப்பின் தரம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை ஒரு படத்தில் மிக சிறப்பாக இசையமைத்தால் அடுத்த படத்தில் நம்மை பழிவாங்கிவிடுகின்றார்கள். இசைக்காகவே செல்லும படங்கள் என்றால் அவை .ஆர் .ரகுமான் மற்றும் இளையராஜா என்ற இருவர் மட்டுமே. யுவன் மிகச் சிறப்பான இசை கொடுத்து இருந்தாலும் அவை உடன் பணியாற்றும் இயக்குனர்களின் படங்களை பொறுத்தே அவை நன்றாக இருக்கின்றன. செல்வராகவன் படத்தில் அவர் கொடுத்த இசை அனைத்தும் இளையராஜாவின் இசைக்கு ஒப்பானவை. மீண்டும் மீண்டும் கேட்கலாம் அந்தளவுக்கு சிறப்பானவை. மற்ற படங்களின் இசை சுமார் ரகம் என்றே குறிப்பிடலாம். ஆனாலும் பருத்தி வீரன் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தன்னால் கிராமத்து இசையும் சிறப்பாக கொடுக்க முடியும் என்பதனை நிரூபித்தார். இந்த படத்தினை அடுத்து அவன் இவன் படத்தினை மிகவும் எதிர்பார்த்தேன் ,ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.



அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் மிக அதிகம் எதிர் பார்க்கப்பட்ட இசைஅமைப்பாளர். கவுதம் மேனனுடனான இவரின் இசை அனைத்தும் நீங்கா புகழ் பெற்றவை . இருப்பினும் மற்ற படங்கள் மிகவும் ஏமாற்றியவை குறிப்பாக ஆதவன், அருள் போன்ற படங்களை சொல்லலாம் .ஜி. வி .பிரகாஷ் இவர்தான் நம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்றால் மிகையல்ல . மிகவும் இளவயதில் மிக சிறப்பான இசையை கொடுத்துக்கொண்டிருப்பவர். வெயில் ,ஆடுகளம்,மதராசப்பட்டினம் ,தெய்வதிருமகள் இவை மூன்றும் மிகச்சிறந்த படைப்புகள். அடுத்து இமான் இவர் மைனா படத்தின் மனதின் மூலம் நம் அனைவரையும் வசப்படுத்தியவர். எனவே இனிவரும் படங்களின் மூலமே இவரைப்பற்றி கணிக்க முடியும்.


ஹாரிசைப் போன்றே மிகவும் எதிர்பார்க்கபட்ட்வர் பரத்வாஜ் ஆனாலும் பல படங்களின் இசை எடுபடவே இல்லை . சில மெலடி பாடல்களை கொடுத்து இருப்பினும் அவை எல்லாப் படங்களிலும் தொடர்ராதது ஏன் என்றே புரியவில்லை. வித்யாசாகர் மொழி மற்றும் இயற்கை படங்களின் வெற்றிக்கு ஒரு காரணம். இயற்கை படம் வணிகரீதியாக வெற்றி அடைவில்லை என்றாலும் தேசிய விருது பெற்றது நினைவிருக்கலாம், என் நம்புகிறேன். தெலுங்கு மற்றும் மலையாள படங்களுக்கு அதிகம்மாக் இசைமைப்பாதலும் இவரைப் பற்றி குறிப்பிட்டு கூற முடிய வில்லை. இன்னொரு இளையராஜா தமிழ் சினிமாவுக்கு கிடைத்து விட்டாரா என்று நினக்கும் அளவுக்கு அனைவரையும் தன பக்கம் கவர்ந்தவர் ஜேம்ஸ் வசந்தன். சுப்ரமணியபுரம் படத்தில் வரும் கண்களிரண்டால் பாடல் அளவுக்கு இன்னொரு பாடல் தமிழ் சினிமாவில் இளயராஜாவை தவிர்த்து யாரும் வழங்கமுடியாது .ர். ரகுமான் உட்பட என்பதனை ஆணித்தரமாகக் கூறுவேன். ஆனால் இவர் அதிகமான படங்களுக்கு இசையமைக்காமல் விஜய் டி.வி .யில் நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டிருப்பதை பார்த்தல் வெறுப்பு தான் வருகிறது. இவர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்ல பாடல்களை கேட்கும் பாக்கியம் நமக்கு கிடைக்க வாய்ப்பு
இருக்கின்றது.

மணிஷர்மாவும்,தேவிஸ்ரீ பிரசாத்தும் தெலுங்கு படங்களுக்கே அதிகம் இசையமைத்து இருக்கின்றார்கள் அவைக்ளின் ரீமேக் மூலமாகவே அந்த பாடல்களும் இருப்பதனால் அவை அவ்வளவு சிறப்பான இடத்தைப் பிடிக்க முடியவில்லை. விஜய் ஆண்டினி ,தீனா.ஸ்ரீகாந்த் தேவா மூவருமே குத்துப் படல்களை யார் சிறப்பாக இசை யமைப்பது என போட்டிபோட்டுக் கொண்டிருகின்றார்கள் எனவே அவர்களை இந்த வரிசையில் சேர்ப்பது மிகக் கடினம்.அக்கட பூமியில் என்ன நிலைமை என்று பார்ப்போம்.உங்களுக்கு தெலுங்கு மற்றும் கன்னட நண்பர்கள் இருந்தாலோ, நீங்கள் அங்கு வசித்தவர்கலாகவோ அல்லது வசித்துகொண்டிருந்தீர்கலானால் நன்கு தெரியும் அவர்களின் இசை ரசனையைப் பற்றி ,எனக்குதெலுங்கு மற்றும் கன்னட நண்பர்கள் உண்டு அவர்கள் முகபுத்தகதத்தில் ஷேர் பண்ணும் மெலடி பாட்டுகள் அனைத்தும் இளையராஜவினுடைய பாட்டாகத் தான் இருக்கும்.அவர்களின் Ipod ல் இருக்கும் பாடல்களும் இளையராஜா மற்றும் .ஆர் .ரகுமான் பாடல்களே அதிகமாக இருக்கும்.இதே நிலை தான் கன்னட நண்பர்களுக்கும். இதை குறிப்பிட விரும்பியது ஏனேன்றால் இதே நிலைமை நமக்கும் நமது எதிர் கால சந்ததியினருக்கும் ஏற்படும் வாய்ப்பு இருகின்றது.



இன்றைய காலகட்டத்திலும் .ஆர் .ரகுமானின் இசையை கேட்பதற்காக மொழி புரியாவிட்டாலும் அவர் இசையமைத்த ஹிந்தி பாடல்களை கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.குறிப்பாக ரங்கீலா ,தால் மற்றும் டெல்லி 6 ஆகியவை மிக அற்புதமான இசையில் அமைந்த படங்கள்.அடுத்ததாக ஹாலிவூட் படங்களில் ஸ்லம் லாக் மில்லியனர் அனைவரும் அறிந்த படம் ஆனாலும் நேரடியாக தமிழ் பாடலையே ஹாலிவூட் படத்தின் (ACCIDENTAL HUSBAND ) கிளைமாக்ஸ் காட்சியில் வைத்து நம் அனைவரையும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டுசென்றவர்.

இசைப்புயலே உங்கள் பார்வை சிறிது தமிழ் சினிமாவின் மீது விழ வேண்டும். தமிழினை தமிழனை உலகம் அறியச் செய்த நீங்கள் தமிழ் சினிமாவையும் தமிழ் இசையையும் வாழ வைக்கவேண்டும் .இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு முழுக்க கிராம் நகரம் எங்கும் உங்கள் இசைவெள்ளம் பரவவேண்டும்.


.