Friday, February 22, 2013

தெனாலியை வீழ்த்திய கத்தரிக்காய்:


 வார இறுதி எனபதால் தெனாலி ராமன் குறித்த ஒரு நகைச்சுவைக் கதையினை உங்களுடன்  பகிர்ந்து கொள்கின்றேன் . தெனாலி ராமன் புத்திசாலி என்பதும் அதனால் அரசவையில் பல தீர்க்க முடியாத பிரச்சனைகளை மிக எளிதாக தன்  புத்திகூர்மையால் தீர்த்து வைத்துப் புகழ் பெற்றவன் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

எண்ணெய் கத்தரிக்காயுக்கு ஆசைப்பட்டு மன்னரின் தண்டனைக்கு ஆளாக இருந்த தெனாலி அதிலிருந்து எவ்வாறு மீண்டான் எனபதை நகைச்சுவையுடன் பார்ப்போம்.

பார்ட்டி கலாச்சாரம் என்பது இபொழுது தொடங்கிய ஒன்று என்றே நாமில் பலர் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் மன்னர்கள் காலத்தில்   தற்பொழுது நடைபெறும் பார்ட்டிகளை விட பன்மடங்கு மிகப் பிரம்மாண்டமான பார்ட்டிகள் நடைபெற்றிருக்கின்றன என்பதே உண்மை. அவ்வாறு நடை பெற்ற மன்னர் விருந்தில் கலந்து கொண்ட தெனாலி ராமனுக்கு எண்ணெய்  கத்தரிக்காய் பரிமாறப்பட்டது.

கத்தரிக்காயை உண்ட தெனாலி ராமனுக்கு மனம் நிலை கொள்ள வில்லை. இப்படி ஒரு சுவையான் ஒன்றை தன் வாழ் நாளிலேயே முதல் முறையாக சாப்பிடுவதாக மன்னரிடம் கூறினான். மன்னர் அவனது பாராட்டினை ஏற்றுக் கொண்டு அதன் பின்னர் சொன்ன செய்தியினைக் கேட்டு அதிர்ந்து விட்டான். ஏனெனெனில் அந்த கத்தரிக்காய் மன்னர் தோட்டத்தில் மட்டுமே விளைவிக்க படுவதாகவும் வேறு யாருக்கும் அது வழங்கப்படமாட்டாது, இங்கிருந்து அதனை திருடி செல்பவர்களின் கை வெட்டப்படும் என்பதான தண்டனை இருப்பதாக தெரிவித்தார்.

பின்னர் ஒரு நாள்  தோட்டத்தில் யாரும் இல்லாத சமயத்தில் தேவையான அளவுக்கப் பறித்துக் கொண்டு சென்று விட்டான். வீட்டில் தடல் புடலாக கத்தரிக்காய் சமைக்கப்பட்டது. கத்தரிக்கை உண்ட அவனது  மனைவி ஏகத்துக்கும் தன் கணவனைப் புகழ்ந்து தள்ளி விட்டாள் . ஆனால் யாருக்கும் தெரியாமல் செய்து விட்டதாக இவர்கள் எண்ணி இருந்த தருணத்தில் தான் இரவுக் காவலர்கள் தெனாலி வீடு வழியாக செல்லும் பொது காணமல் போன கத்தரிக்காயினை  தெனாலி தான் திருடினான் என்ற உணமையினை கண்டுபிடித்து மன்னனிடம் கூறிவிட்டார்கள்.
மறுநாள் அரசவையில் தெனாலியிடம்  இது குறித்து மன்னர் விசாரணை மேற்கொண்டார், தெனாலியொ  சிறிதும் மசியவில்லை. தான் அதனை திருடவே இல்லை அவன்  மட்டுமன்றி அவன் மனைவியும் மறுத்தனர். எனவே அவர்களுடைய மகனிடம் விசாரிக்க முடிவு  செய்யப்பட்டது.

ஆனால் முந்தய நாள் இரவு தன்  மகனை உணவு உண்ண வைப்பதற்காக செய்த காரியம் அவனை மன்னரின் தண்டனையிலிருந்து தப்பிக்க உதவியது. விளையாடிய அசதியில் முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்ப அவன் முகத்தில் தண்ணீர் தெளித்தான் ,மகனோ மழை பெயவ்தாக எண்ணி விழித்துக் கொண்டான். தெனாலியும் மழை பெய்வதாக சொல்லி வீட்டுக்குள் அழைத்து  வந்து உணவு கொடுத்தான்.

மன்னர் விசாரணையின் போது  நேற்று என்ன உணவு உண்டாய் என்ற கேள்விக்கு கத்தரிக்காய் உண்டதாக சொன்னான் .உடன் சுதார்த்துக் கொண்ட தெனாலி மன்னரிடம் தன மகனிடம் நேற்று மழை பெய்ததா என்று கேட்க சொன்னான் மன்னரும் கேட்டார், பலத்த மழை பெய்த்தாகக் கூறினான். மன்னருக்கு ஒரே வியப்பு இடைமறித்த  தெனாலி குழந்தைகள்  கனவில் கனடதையெல்லாம்  உண்மை என நம்புவார்கள்  எனவே அதனை சாட்சியாகக் கருத முடியாது என்று தப்பித்துக் கொண்டான்.

Friday, February 15, 2013

பிரபல பதிவர்களின் மேதாவித்தனம்

பிரபலமாகிவிட்டதாலேயே கேபிள் மற்றும் ஜாக்கி இருவருக்கும் பொது விவகாரங்களில் தங்கள் கருத்தை பதிவு செய்வதில் அவர்களுக்கு இருக்கும்  ஆர்வம் நமக்குப் புரிந்தாலும் தான் சொல்லப் போகும் பிரச்சனை குறித்தான முழுமையானப் பார்வையாகத்தான் அது இருக்க வேண்டுமே தவிர சுயநலன் சார்ந்த ஒன்றாக ஒருபோதும் இருத்தல் கூடாது.

கடந்த வார நீயா நானாவில் குறிப்பிட்டது போல தமிழ் நாட்டின் இளைஞர்களுக்கு மட்டுமல்ல தங்களுக்கு நிறைய தெரியும் என்ற எண்ணம் கொண்ட இந்த இரு பதிவர்களுக்கும் எந்த ஒரு பிரச்சனை குறித்தும் முழுமையானதொரு பார்வை எனபதே அறவே இல்லை.

அதுவும் சினிமா துறையில் இயங்கும் கேபிளும் ,ஜாக்கியும்  சமூகப் பிரச்சனைகளில் தங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் உளறிக் கொட்டுவதை சகிக்க முடியவில்லை. ஏற்கனவே பத்திரிகை மற்றும் சினிமா உலகம் இரண்டுமே மக்களுக்கு மட்டமான செய்திகளையும் உணர்வுகளை மட்டும் தூண்டி வியாபாரம் செய்யும் இத்தருணத்தில் பதிவுலகிலும் இதைப் போன்ற நிலை இருப்பது மிக வருத்தமாக உள்ளது.



கேபிள் மற்றும் ஜாக்கி இருவருமே சினிமா விமர்சனம் எழுதவதில் வல்லவர்கள் மற்றும் அதில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை உண்டாக்கி அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சிறப்பாக இயங்கி வருகின்றார்கள் எனபது நூறு சதவீதம் உண்மை.ஆனால் இந்த தகுதியை மூலதனமாக வைத்துக் கொண்டு பொதுப் பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பது எனபதைத் தான் நான் மேதாவித்தனம் என்று குறிப்பிட விரும்புகின்றேன்.

கேபிள் விஸ்வரூபம் குறித்து தொடர்ந்து வெளியிட்டு வரும் கருத்துக்கள் அனைத்துமே சமூகம் குறித்த ஒரு அக்கறையின்மையும்   தான் சார்ந்த சினிமா துறையின்  மீதான சுயநலன் மட்டுமே வெளிப்படுகின்றது. சென்னையிலே வாழும் கேபிளுக்கு அங்கே  இஸ்லாமிய மக்கள் வீடு கிடைக்கப் படும் பாடும் , அவர்கள் அனைவரையுமே சமூகம் தற்போது குற்றவாளிகள் போல பார்க்கும் நிலைக்கு  இந்த பாழாகப் போன சினிமாவும் ,ஊடகங்களும்   தான் முக்கியக் காரணம் என்பதனை உணராமல் இருப்பது வேதனையான ஒன்று. இதைப் போன்ற நிலையில் பதிவுலகத்தில் பிரபலமாக இருக்கும் கேபிள் இஸ்லாமிய மக்களின் போராட்டத்தினை கொச்சைப் படுத்துவது போன்று எழுதுவது எதை எழுதினாலும் படிக்க நான்கு பேர் இருக்கின்றார்கள் என்ற மேதாவித்தனம் தான் முக்கியக் காரணம்.

 ஜாக்கி வால்மார்ட் வருவது குறித்து எழுதிய ஒரு பதிவே போதும்  அவருடைய சமூகம் குறித்தான மேலோட்டமான பார்வைக்கு, அமெரிக்காவில் மூடப்படும் கடைகளை இங்கு குப்பத்தொட்டியாகப் பயன்படுத்தப் போகும் ஒரு செயலுக்கு வக்காலத்து வாங்கி எழுதிய அந்தப் பதிவு முழுக்க முழுக்க சுயநலன் சார்ந்த ஒன்று.ஜாக்கி அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று மேலை நாடுகளில்  இருப்பது சமநிலைச் சமுதாயம்.  பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என்பது மிகக் குறைவு. ஆனால் நம்மைப் போன்ற வளரும் நாடுகளுக்கு இதைப் போன்ற பன்னாட்டு நிறுவனங்களாலோ  டாடா அம்பானி போன்றவர்களால் எந்த நன்மையும் இல்லை. இது நாட்டின் சீரான வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது மாறாக அந்த கம்பெனிகளின் வயிறு வளர்க்கவே பயன்படும். அந்தக் கருத்தினை நியாயபடுத்தி சமூகத்தில் திணிக்க நினைப்பது என்னைப் பொறுத்தவரை    ஏழை மக்களுக்கும் விவசாயத்திற்கும் செய்யும் பாவச் செயல்..

 இவர்களின் கருத்தின் தாக்கம் எனபது இவர்களை மட்டுமே தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு தவறான வழிகாட்டுலாக அமைந்து விடும் ஆபத்தான சூழல்  உள்ளது.இறுதியாக சொல்ல வேண்டியது என்னவெனில் கருத்து சுதந்திரம் என்பதனை தவறாகப் புரிந்து வைத்துக் கொண்டு மனதில் படத்தை எல்லாம் எழுதாமல் சொல்லப் போகும் கருத்தின் முழு விவரங்களையும் படித்தோ கேட்டோ அதன் பின்னர்  உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

Friday, January 25, 2013

5.நிக்கி மினாஜ் (Nicki Minaj):இசை உலகின் இளம் தேவதைகள்

முந்தைய பதிவில் எழுதிய அடேலின் மயக்கத்திலேயே அனைவரும் இருப்பீர்கள் என்று தெரியும். இந்தப் பதிவில் இசை உலகின் அடங்காப் பிடாரியான நிக்கி மினாஜ் பற்றி தெரிந்து கொள்வோம்.மேற்கிந்தயத் தீவில் பிறந்த நிக்கி தனது  ஐந்து  வயதில் பெற்றோருடன் அமெரிக்கா   இடம் பெயர்ந்தார். நடிகையாவதே தனது லட்சியமாகக் கொண்டு அதற்கான் பயிற்சிகளையும் முறையாகப் பெற்ற பின்னர் நல்ல வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் பல்வேறு உணவகங்களில் பணிபுரிந்தார்.2004 ம் ஆண்டில் இசைத் துறைப் பக்கம்  கவனத்தை செலுத்தியதில் 2010 ம் ஆண்டில் வெளியிட்ட pink friday இசைக் கோப்பு (Album ) உலகம் முழுவதும்  நிக்கியை அடையாளம் காட்டியது.

                                


இவருடைய குரலின் தனித்துவம்  என்று பார்த்தால் புகழ் பெற்ற  பாடலான மன்மத ராசா  பாடிய மாலதி போன்ற கட்டைக்  குரலுடன் கொஞ்சி கொஞ்சி குழந்தைக் குரலில் பாடுவதுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் காரணமாக அமைந்தது.இவருடைய பாடலுடனான காணொளியில்  (video  song ) அதிகம் கவர்ச்சியாக இருந்தாலும் அதையும் மீறி அவருடைய முக பாவனைகளில் தோன்றும் குழந்தைத்தனமான சேட்டைகளினால் நம்மையும் அறியாமல் சிரித்து விடுவோம் . மிக முக்கியமாக சொல்ல வேண்டிய ஒன்று அவருடைய  ஆடைகள்  மற்றும் அலங்காரம் இரண்டுமே மிகவும் கண்ணைப்  பறிக்கும் வகையில் பல பல வண்ணங்களில் அமைந்திருக்கும், அதுவே நம் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் படியாக பல புதுபுது அலங்காரங்களில் தோன்றி நம்மை கிறங்கடிப்பார் .
                       

இவர் பாடிய பாடல்களினால் மட்டுமன்றி மற்ற உலகின் முக்கிய பாடகர்களுடன் இணைந்து பாடிய பாடல்களினாலும் மிகக் குறுகிய காலத்தில் மிக அதிகம் விற்பனையான பாடல் கோர்ப்பு (Album ) என்ற பெருமையும் பெற்றதோடு மட்டுமன்றி பெரும் செல்வந்தராகவும் மாறினார்.ஏராளமான விருதுகளை வாங்கி குவித்ததோடு மட்டுமல்லாமல்  இவருடைய உருவம் தாங்கிய பார்பி (Barbie ) பொம்மை  வெளிவந்து இவருடய புகழ் மேலும் பரவியது. ராப் எனப்படும் இசை உலகின் தற்போது முன்னணியில் இருக்கும் ஒரே பெண்மணி நம் நிக்கி தான்.

                                
 

முன்பே சொன்னது போல கொஞ்சும் குரலினாலும் குதுகாலம் உண்டாகும் அங்க அசைவுகளாலும் இவருடைய அனைத்துப் பாடல்களுமே மிகவும் குறிப்பிட்டு சொள்ளவேண்டியவையே இருப்பினும் அவற்றில் முக்கியமான இரண்டு பாடல்களை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றேன். மற்ற பாடல்களை  உங்கள் குழாயில்(youtube ) பார்த்து மகிழுங்கள். இவருடைய பாடல்கள் அனைத்துமே ராப் வகையினை சார்ந்தது என்பதனால் முதல் தடவைப் பார்க்கும் போது பாடல் வரிகளை புரிந்து கொள்வது கடினம். எனவே வரிகள்  மட்டும் கொண்ட காணொளி பார்த்து விட்டு பிறகு காணொளியினைப் பார்த்தால்  மிக சுலபமாக இருக்கும்.

முதல் பாடல்: Proud the alarm
தான் பிறந்த  நாடான  மேற்கிந்தியத் தீவின் அழகியலை  அடிப்படையாகக் கொண்டு படமாக்கப் பட்ட பாடல் மிக அற்புதம்.

அடுத்த பாடல் : Beauty and a beat
இந்த பாடலில் இளம் இசைப் பாடகரான  ஜஸ்டின் பைபர் justin biber உடன் இணைந்து பாடியிருப்பார். சிறிது நேரம் காணொளியில் தோன்றினாலும் நான் சொன்ன அந்த பார்பி உடையில் தோன்றி கலக்கி இருப்பார்.






 இந்த இரண்டு பாடல்கள் மட்டுமல்லாது பார்க்க வேண்டிய பாடல்கள் நிறய உள்ளன. அவற்றில் சிலவற்றைக் கீழே குறிப்பிட்டுள்ளேன். நேரம் உள்ளபோது பார்த்து மகிழுங்கள். 2013 ம் ஆண்டில் உங்கள்  மனம் கவர்ந்த கருப்பழகியாக நிக்கி மாற நிற வாய்ப்பு உள்ளது.
                                  1.starships
                                  2.super  bass
                                  3.va va voom
                                  4.Beez in the trap
                                  5.Right by my side
                                  6.Turn me on

Friday, January 18, 2013

பெப்சி ,கோக் தமிழில் கிடைக்குமா ?


 என்னடா இவன் பெப்சி கோக்கை  தமிழில் கேட்கின்றான்  என்று நீங்கள்  கேட்பது புரிகின்றது.தாய் மொழியினை அதிகம் நேசிக்கும் எவருக்கும் வெளிநாடுகளுக்கு சென்ற பிறகு அந்த நேசம் இன்னும் அதிகமாகும். ஸ்பெயின்,ஜேர்மன் ,பிரான்ஸ்  ,ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் அவர் தாய் மொழியிலே கல்வி பயில்கின்றார்கள் எனபதை மட்டும் தான் அறிந்து வைத்திருந்திருப்போம். ஆனால் அந்த நாடுகளுக்கு சென்றால் தான் கழிவறை தொடங்கி கம்பயுட்டர் வரை அனைத்தும் அந்த மொழிகளைத் தாங்கித் தான் இயங்கிக் கொண்டிருக்கிறன என்ற உண்மை  தெரிய வரும்.

இது போன்று மொழியைப் பிரதானமாகக் கொண்டு இயங்கும் நாடுகளில் எந்த நாட்டுக்காரன் வணிகத்திற்கு சென்றாலும் அதை அவர்கள் மொழியில் விற்றால் மட்டுமே வியாபாரம் செய்ய முடியும். ஆங்கிலம் அல்லாத பிற நாடுகளில் வசிப்பவர்கள் அந்த நாட்டுக் கண்ணியினை பயன்படுத்துவதற்குள் தாவு தீர்ந்து விடும். விண்டோஸ்  முதற்கொண்டு போட்டோஷாப் வரை அவர்கள் மொழியிலே தான் இருக்கும். இதை எல்லாம் கூட மொழிபெயர்ப்பு இணையங்கள் மூலம் சமாளித்து விட முடியும். உணவு தான் மிக பிரதானமான ஒன்று அதைக் கூட தெள்ளத் தெளிவாக அவர்கள் மொழியில் மட்டுமே எழுதி வைத்திருப்பர்.

இவற்றை எல்லாம் பார்க்கும் பொது நாம் எந்த அளவுக்கு பிழைப்புக்காக மற்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து நம் மொழியைப் பின்னுக்குத் தள்ளி ஒரு தீண்டத்தகாத மொழி போன்று ஒரு நிலையில் வைத்திருப்பதனை நினைத்தால் மிக்க வருத்தம் அளிக்கின்றது.அதற்கான் மிகச் சரியான உதாரணம் தான் இந்த பெப்சி மற்றும் கோக். இந்த இரண்டு அமெரிக்க கம்பெனிகளும் எந்த நாட்டிற்கு நுழைந்தாலும் அந்த நாட்டு மொழியில் கூவி கூவி விற்கும் பொழுது நம் நாட்டில் மட்டும் ஏன் அந்நிய மொழியில்  விற்க வேண்டும் என்ற நியாயமான் கேள்வி மனதில் எழுகின்றது.

இந்தியா என்பது பல மொழிகளைக்  கொண்ட ஒரு நாடாக இருந்தாலும் மக்கள் தொகையில் மற்ற நாடுகளை விட மிக அதிகம். இதனால் வருவாய் என்பது மக்கள் தொகையினைக் குறைவாகக் கொண்ட நாட்டில் விற்பனையாகும் அளவினை விட இந்தியாவின் ஒரு மாநிலத்தில் விற்பனையாகும் அளவு அதிகமாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் அந்த நாட்டில் அவர்கள் மொழியிலேயே  அதன் பெயர் மற்றும் விபரங்களை அச்சிட்டு வியாபாரம் செய்து விட்டு நம் நாட்டில் மட்டும் ஆங்கிலத்தில் அச்சிட்டு  வியாபாரம் செய்வது என்பது நம்மையும் நம் மொழியையும் இழிவுபடுத்துவது போன்ற ஒன்றாகும்.

கிழே கொடுக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளின் பெப்சி  மாறும் கோக் விளம்பரப் படங்களைப் பாருங்கள் இந்த உண்மை மிக எளிதில் விளங்கும் .
சீனா

பிரெஞ்ச்                                          ஸ்பானிஷ்
 


 
 சீனா  தொடங்கி  ஸ்பானிஷ் ,பிரஞ்ச்  மற்றும் ஜப்பான் வரை அவர்கள் மொழியில் இருக்கும் இவை இந்தியா வந்தவுடன் ஆங்கில மொழியில் மாறும் மர்மம் புரியவில்லை.

இவற்றை மென்மேலும்  அனுமதிப்பது என்பது பிற சந்ததியினருக்கு நம் மொழியின் வாசம் கூட இல்லாமல் போகும் வாய்ப்பு மிக  அதிகம். இந்திய தேசியத்தால் காலத்தால் தொன்மை வாய்ந்த செம்மொழியான நம் மொழி அழிவதோடு மட்டுமின்றி அனைத்து இந்திய மொழிகளுமே ஒரு காலத்தில் ஏட்டில்  மட்டுமே இருப்பதற்கான வழிகளை நாம் நம்மை அறியாமலே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். தார் பூசி பிற மொழிப் பலககைகளை அழிப்பவர்களை நீங்கள் ஏளனமாகப் பார்க்கலாம் ,ஆனால்  மொழி எனபது தாய்க்கு நிகரான ஒன்று அதனை தாயைப் போன்று பேணி காக்க வேண்டியது நமது கடமை எனவே இது போன்ற அந்நிய மொழி படையெடுப்புகளை எதிர்த்து குரல் கொடுப்போம்.


இவை நம் மொழியில் கிடைப்பதால் என்ன பலன் ? பெப்சி கோக் இந்தியாவில் நகரம் தாண்டி அனைத்து  கிராமங்களிலும் நுழைந்து விட்டது. எனவே அதனை ஆங்கிலம் புரியாதவர்கள் அவற்றினை அருந்தும் பொது அவற்றில் கலந்துள்ள பொருட்களைப் பற்றிய விபரம் அவர்கள் அறிந்த மொழியில் இருந்தால் மட்டுமே அதனைக் குடிப்பதானால் ஏற்படும் நன்மை தீமைகளைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்னுமொரு மிகச் சரியான உதாரணம். நம் ஊரில் தற்பொழுது பிரபலமாகி வரும் KFC (Kentucky Fried Chicken ) பிரான்ஸ் நாட்டில் PFK (Poulet Frit Kentucky ) என்ற பெயரில் தான் இயங்கி வருகின்றது. பிரான்ஸ் நாட்டுக் காரர்களுக்காக மட்டும் மொழி மாற்றம் செய்து கடை விரிப்பவர்கள் இந்தியாவில் துணிச்சலாக ஆங்கில மொழியில் செய்வதற்கான தைரியத்தை அளித்தது நம்மிடையே  நிலவும் நம் தாய்  மொழி குறித்தான இளக்காரம் தான். இதற்கான தீர்வினை ஆட்சியாளர்களோ மொழி வல்லுனர்களோ தான்  முடிவு செய்ய வேண்டும். நம் கடமை இந்த செய்தினை நம் நண்பர்களிடம் கொண்டு சென்று அனைவரும் இந்நிலை மாறுவதற்கான வழிவகைகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

Thursday, January 17, 2013

4.அடேல் :இசை உலகின் இளம் தேவதைகள்

ஜோதிகா முகமும் குஷ்பு  உடம்பும் சேர்ந்த கலவை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகும் தேவதை அடேல்.இவரைப் பற்றி தெரிந்திருக்காவிட்டாலும் இவரின் குரல் உங்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று தான் ஏனெனில் சமீபத்தில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் படத்தின் முகப்புப் பாடலினை ( title  song ) பாடியது இவர்தான்.
                 
இதற்கு முன்பு நான்  குறிப்பிட்ட மூன்று இசை தேவதைகளான  ரியான்னா ,டெய்லர் ஸ்விப்ட் மற்றும்  கேட்டி பெர்ரி  ஆகியோரிலிருந்து அடேல்  மிகவும் மாறுபட்டவர்.ஏனெனில் வழக்கமாக அனைவரின் பாடல்களிலும்  வரும் காதை  கிழிக்கும் அதிகபடியான இரைச்சல்கள் ,  கெட்ட ஆட்டம் என எதுவுமின்றி இவர் குரலுக்கு முக்கியத்துவம் அளித்து  இசை பயணிக்கும். சென்னையில் நாரத கான சபாவில் நடக்கும் இசைக் கச்சேரி போன்ற உணர்வினை அளித்தாலும் இவர் உச்சஸ்தாயில் இவர் பாடும் போது  நாம் நம்மை மறந்து  விடுவோம்.

தான் வெளியிட்ட இரண்டே இரண்டு இசை கோப்புகள் (Album ) மூலம் இவர் பெற்ற பரிசுகளும் பாராட்டுகளும் ஏராளம். அதுவம் இசை உலகின் முன்னணி விருதான் கிராமி  விருதினை ஒரே ஆண்டில் அதிகம் (6 விருதுகள்) பெற்று இதற்கு முன்பு பியான்ஸ் (Beyonce ) செய்த  சாதனையினை சமன் செய்தார்.இது மட்டுமன்றி பாப் உலகின் ராணி மடோனாவினால் பாராட்டும் பெற்றார். இவற்றுக்கெல்லாம்  முக்கியக் காரணமாக் அமைந்தது இவரின் திறமை மட்டுமன்றி லண்டன் மாநகரில் உள்ள புகழ் பெற்ற  கலைக் கல்லூரியில் (BRIT  School )படித்துதும் ஒன்றாகும்.

பொதுவாக மற்றப் பாடகர்களின் பாடல்களில் வெகு சிலவே  நமக்கு விருப்பமான ஒன்றாக இருக்கும். ஆனால் அடேலின் பாடல்களில் அனைத்துமே நம்மைக் கவரக்கூடியதாகவும் விருப்பமான ஒன்றாகவும் இருக்கும் வகையில் பாடி நம்மை வெகு சில நாட்களுக்கு வேறு எந்தப் பாடல்களையும் கேட்க விடாத வண்ணம் அவர் பாடல்களுக்கு நாம் நம்மை அறியாது அடிமையாகி இருப்போம்.

இங்கே அவரின் சிறந்த பாடல்களைக் குறிப்பிட வேண்டுமெனில்  நான் அனைத்து பாடல்களின் பெயரயுமேதான்  குறிப்பிட வேண்டி வரும், எனினும் கிழே கொடுக்கப் பட்டுள்ள உங்கள் குழாய் இணைப்பில் சென்று இந்த someone like you பாடலினை பாரிஸ்  நகர் வீதீகளில் உணர்ச்சிப் பெருக்கோடு பாடுவதைப்  பாருங்கள் பின்னர் புரியும் அடேல் எத்துனை திறமை வாய்ந்தப் பாடகி என்று.
இருப்பினும் கீழ்காணும்  பாடல்களையும் நேரம் கிடைக்கும் போது கேளுங்கள் . கண்டிப்பாக ஒரு புதிய உலகம் சென்று வந்ததைப்  போன்ற உணர்வு நிச்சயம் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும்.

                                   1. Rolling  in the deep
                                   2.Set fire to the rain
                                   3.Make you feel my love
                                   4.Hometown glory
                                   5.I Can't  make you love me 

நான் முதலில் இருந்து குறிப்பிடுவது போல அனைத்துப்  பாடல்களையும் முதலில் வரிகளுடனான காணொளியை ( video song with lyrics ) பார்த்து விட்டு பின்னர் கேட்க  ஆரம்பித்தீர்களானால் பாடல்களை  புரிந்து கொள்ளவும் நீங்களே தனியாகப் பாடவும் மிகவும் வசதியாக இருக்கும்.

அடுத்து வரும் பதிவில் இசை உலகின் ஒரு அடங்காப் பிடாரியை அறிமுகம் செய்ய இருக்கின்றேன்.