Tuesday, January 12, 2016

மாறுவேடப் போட்டி இரண்டாவது போட்டியாளர் : கிஷோர் முஸ்லீம் வேடம்

முஸ்லிம் வேடம் போடுவது சினிமாக்காரர்களுக்கு மிக எளிதான ஒன்று . ஒரு குல்லாவை தலையில் மாட்டிக் கொண்டு வாப்பா என்று சொன்னால் அது தான் முஸ்லிம் வேடம். கிஷோர் அந்த முஸ்லிம் வேடத்தை சற்றே வித்தியாசமாக போடுவதில் வல்லவர்.கிஷோரின் பூர்வீகம் குறித்து ஏராளமான தகவல்கள் முகப்புத்தகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பற்றி எந்த ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியும் இந்தப் பதிவில் மேற்கொள்ளப் போவதில்லை.

இன்று இந்தியா முழுமைக்குமே பாதிக்கு மேற்பட்ட மக்கள் தொகையினர் இளைஞர்களே , முஸ்லிம் சமூகத்திலும் அதே நிலைதான் .அப்படிப்பட்ட முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்தே பல பதிவுகளை மேற்கொண்டு தான் முஸ்லிம்களின் நண்பன் என்று நிறுவ பாடுபடும் ஒரு ஜீவன் தான் நம் கிஷோர்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை போல வெளித்தோற்றத்திற்கு தெரிந்தாலும் இது தன்னுடைய இருப்பை இங்கு நிலை நாட்டிக் கொள்ள  போட்டுக் கொண்ட வேடம் தான் முஸ்லிம்.

முகபுத்த்கத்தில் 28000க்கும் அதிகமான தொடர்பாளர்களை (followers )  கொண்டிருக்கும் இவர்  ஒரு பக்கம் முஸ்லிம் வேடம் , மறு பக்கம் தலித் அல்லாத சாதியினருக்கு ஜிங்குச்சா அடிப்பது என்ற தந்திரங்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதனால் தான் இந்தளவு முன்னேற முடிந்திருக்கின்றது. இவர் தொடர்ந்து வெளிச்ச நிழலில் இருப்பதற்கு முக்கியக் காரணம் மூன்று: 
 1.கருணாநிதி குறித்து மோசமாக இவர் இடும் பதிவுகளைக் கண்டு ஆயிரமாயிரம் அதிமுககாரர்கள் இவர் நட்பில் இணைகின்றனர்.
 2. பள்ளிப்படிப்பிற்குப் பின் புத்தகம் படிப்பதை நிறுத்தி விட்ட நம் சகோதர்கள் இந்த கிஷோர் திருவல்லிக்கேணி பிளட்பாரக்கடைகளில் இருந்து பொறுக்கி வந்த புத்தகங்களை கொண்டு தான் ஒரு மெத்தப் படித்த படிப்பாளி போல காண்பிப்பதனை நம்பி ஏமாறுகின்றனர். 
3. ஆங்கில அறிவு; முன்பெல்லாம் அரசு ஆரம்பப் பள்ளிகளில் நான்காம் வகுப்பிலிருந்து தான் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படும். மூன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பிற்கு செல்லவே மாணவர்கள் தயங்குவார்கள் ஆங்கிலத்தின் மீது அவ்வளவு பயம். ஆனால் அதே ஊர்களில் பிராமண வகுப்பை சார்ந்தவர்கள் கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளை கான்வென்டில் படிக்க வைப்பர். எனவே கிராமத்து இளைஞர்களுக்கு ஆங்கிலம் மீது ஒரு ஒவ்வாமை (அலர்ஜி)இருக்கும். இப்படிப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு கிஷோர் தான் ஒரு ஷேக்ஸ்பியர் என்ற அளவுக்கு விடும் பீலாவில் மயங்கி விடுகின்றனர்.

உணமியிலேயே மெத்தப் படித்த மேதாவியாகத் திகழும் தலித் வேடம் தரித்து அலையும்  பத்ரி இடும் பதிவுகளை விட இந்தப் போலி படிப்பாளி கிஷோருக்குத் தான் மவுசு அதிகம். இப்பொழுது தந்தி டிவி, நியுஸ் 7 மற்றும் ஜெயா டிவியில் இணையதள ஆர்வலர் என்ற பெயரில் தோன்றுவதன் வளர்ச்சி எனபது புதுப்பேட்டை படத்தில் ஒரு ரவுடி அமைச்சராக ஆகும் வளர்ச்சிக்கு இணையான ஆபத்தான போக்கு. கெட்ட வார்த்தைகளில் பதிவிடுவது , பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது ,குடிப்பழக்கத்தை ஊக்குவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர் தொலைகாட்சியில் பேச வாய்ப்பளிப்பதென்பது தமிழக அரசியல் எந்தளவு தரம் தாழ்கின்றது என்பதற்கு மிக சரியான உதாரணம்.

பத்ரியோ ஆர்ஸ்ஸ் பத்திரிகையில் தெலுங்கர்கள் தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும் , தமிழர்களை நீனடகாலம் தெலுங்கர்கர்கள் ஆண்டதினால்  அவர்கள் அமைதி காக்க வேண்டும் என்ற தொனியில் ஒரு கட்டுரை எழுதுகின்றார். தமிழர்களுக்கு எதிரானவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியினை பத்ரி செய்கின்றாரோ என்ற எண்ணம் ஏற்படுகின்றது.

இது போன்ற வேடதாரிகள் தமிழ் மக்கள் சரியாக இனம் கண்டு ஒதுக்குவது மட்டுமன்றி நாமும் நிறையப் படிக்க வேண்டும் . இவர்களின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்க  இளைய சமூகம் சினிமா குடி போன்ற  மாயையிலிருந்து விலகி  நம் தமிழ் மண்ணின் பெருமையினை மீட்டெடுக்கும் பணியில் இணைய வேண்டும்.

இன்றும் பெரியார் பேரைக் கேட்டாலே பேய் அடித்தது போல அலறும் சமூகம் நம்மை வீழ்த்தவும் நம் ஒற்றுமையைக் குலைக்குவும் பத்ரி , கிஷோர் போன்ற பலர் இயங்குகின்றனர் , அவர்களின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் இருக்க வேண்டும். 


விஜய் டிவி கனெக்ஷன் நிகழ்ச்சி குறித்த சர்ச்சை:


ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் கனெக்ஷன் நிகழ்ச்சி நண்டு ஜெகன் அவர்களால் தொகுத்து வழங்கப்படுகின்றது. இளம் சமூகத்தினர் மற்றும் குழந்தைகளிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்தப் பதிவினை  நண்பர் பிரபா ஒயின் ஷாப் அவர்கள் நிறைய எழுதியுள்ளார்.

நான் மிகவும் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று.மொத்தம் நான்கு சுற்றுகள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் இரண்டு சுற்றுகள் திரையில் காண்பிக்கப்படும் படங்களை இணைத்து வார்த்தைகளை பதில் அளிக்க வேண்டும். மூன்றாவது சுற்று முழுக்க முழுக்க சினிமா சம்பத்தப்பட்ட சுற்று. பாடல்கள் மற்றும் படங்களின் தலைப்பைக் கண்டு பிடிக்க வேண்டும். இறுதி சுற்று 50 மதிப்பெண்கள்  ஒரு படத்தின் பெயர் காண்பிக்கப்படும் ஐந்துப் படங்களிலிருந்து கண்டுபிடிக்க வேண்டும். நிகழ்ச்சி மிக மிக விறுவிறுப்பாக இருக்கும்.


இப்பொழுது சர்ச்சைக்கு வருவோம். ஜெகன் இந்த நிகழ்ச்சியில் அதிகம் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவது உண்மைதான் , அதுவும் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்களின் உடை , சிரிப்பு ஆகியவற்றை குறித்து அதிகம் விமர்சனம் செய்வார், அது சில  சமயங்களில் எல்லை மீறய ஒன்றாக இருக்கும். இந்த தவறை சரி செய்ய வேண்டிய பொறுப்பு அந்த நிர்வாகத்திற்கு அதிகம் உண்டு.

ஆனால் அதிமுக அடிமைகள் முகப்புத்தகத்தில் கடந்த வார கனெக்ஷன் நிகழ்ச்சியில் சர் சிவி ராமன் அவர்களை அவமதித்து விட்டதாக அவதூறு கிளப்பி வருகின்றனர்.இந்த அவதூறின் பின்னணி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வெள்ள நிவாரணத்திபோது அதிமுகாரர்கள் ஸ்டிக்கர் ஒட்டியதை கலாய்த்தது தான்.அந்த ஆத்திரத்தினைதான் சர் சிவி ராமன் மேல் இவர்களுக்கு திடீர் பாசம் பொங்கி அவரை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி பொங்கல் வைக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை நீங்களும் இந்த இணைப்பில் கண்டு எது உண்மை என்று முடிவெடுங்கள்.

நன்றி 
செங்கதிரோன் 

Thursday, January 7, 2016

அக்கா தங்கையோடு பிறந்தவனும் பிறக்காதவனும்:

ஆகச்சிறந்த வசவு சொல்லான நீயெல்லாம அக்கா தங்கச்சிக் கூட பொறக்கலையா என்பதன் பின்னணியை சற்று நிகழ் காலத்தோடு பொறுத்திப் பார்க்கும் பதிவுதான் இது . அக்கா  தங்கையோடு பிறந்தவர்களுக்கு அவர்களின் அருமையும் தெரியும் அவர்களால் ஏற்படும் இன்னல்களும் தெரியும். மாறாக அக்கா தங்கை இல்லாத ஆண்களுக்கு பெண்கள் என்பது ஒரு கற்பனையான உருவமாகவே இருக்கும். தங்கள் அம்மா போல தான் அனைத்துப் பெண்களும் இருப்பார்கள் என்ற அறியாமையிலே இருப்பார்கள்

வீட்டில் சகோதரிகளுடன் வளர்ந்த ஆண்கள் பெண்களின் குணத்தினை இயன்றவரை புரிந்து வைத்திருப்பார்கள். அவர்கள் பேசுகையில் எது நிஜம் எது உண்மை என்பதனை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். அதே போல அவர்களின் துன்பங்களில் துயரப்படும்போது உடன் பிறந்த சகோதரர்கள்  துவண்டு விடுவார்கள்.தன் சகோதரி திருமணமாகி சென்ற பின்னர் அந்த வீட்டில் இருக்கும் அப்பா அண்ணன் தம்பி ஆகியோர் முதல் முறையாக ரகசியமாகக் கண்ணிர் சிந்துவார்கள். இதற்கு முன்பு தன் சகோதரியின் நலன் குறித்து அக்கறை இல்லாதது போல் இருக்கும் சகோதரன், திருமணமாகி சென்ற தன் சகோதரியை தினமும் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரிப்பான்.தன் சகோதரியின் கணவனிடம் மேலதிகாரியிடம் எப்படி பணிவாக நடந்து கொள்வானோ அதை  விட அதிகமாக பணிவுடன் நடந்து கொள்வான்.


அக்காவுக்கும் தங்கைக்கும் என்ன வேறுபாடு அக்கா நம் அம்மாவின் மறு வடிவம் , நம் தவறுகளைப் பொறுத்துக் கொண்டு பொறுமையாக அறிவுரை வழங்குபவள். தங்கை நம்மமுடைய மனசாட்சி போல நம் தவறுகளை முகத்திற்கு நேராக சொல்லித் திருத்துப்பவள் , நம்முடைய குடும்பத்திற்குள்ளேயே இருக்கும் நம்முடைய மிக சிறந்த விமர்சகி.

தன் மனைவி மற்றும் தன் சகோதரிக்கு இடையில் நடக்கும் கருத்து மோதலில் இவன் மாட்டித் தவிக்கும் தவிப்பு இருக்கின்றதே அது தன் எதிரிக்குக் கூட வரக்கூடாது என நினைக்கும் அளவிற்கு இருக்கும். ஆனாலும் தன்  சகோதரியின் மகனையோ மகளையோ அவன் கொஞ்சும் பொது இந்த உலகையே மறந்து விடுவான் .திருமணமாகாத பெரும்பாலான ஆண்களின்  கைபேசி ,வாட்சப் , பேஸ்புக் போன்றவற்றில் சகோதரிகளின் குழந்தைகளின் படமே நிரம்பி இருக்கும்.  இதைப் போல பல்வேறு உணர்ச்சிகரமான நிகழ்வுகள் சகோதர சகோதரிகளின் பந்தத்தில் இருக்கின்றன.

சகோதரிகள் இல்லாத ஆண்களுக்குப் பெண்கள் என்றாலே மென்மையாக இருப்பார்கள் , சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து விடுவார்கள் , சமையல் ராணியாக இருப்பார்கள் இப்படி எண்ணற்ற கற்பனையுடன் இருப்பார்கள். பெண்களுடன் பழக ஆரம்பித்தப் பின்னர் இவை அனைத்தும் பொய் என்னும் போது கடுமையாக எதிர் வினை ஆற்றுவார்கள். தன் அம்மாவைப் பற்றிப் பேசி புளங்காகிதம் அடைவார்கள். அவர்கள் அதிக அதிர்ச்சி அடையம் நிகழ்வு பெண்களின் மாதவிடாய் குறித்து தான், அக்கா தங்கையோடு பிறந்தவர்களுக்கு மருந்துக் கடையில் கருப்பு பாலிதீன் பையில் நாப்கீன் வாங்கி வந்த அனுபவம் இருக்கும். ஆனால் சகோதரிகளுடன் பிறக்காதவர்களுக்கு இந்த செய்தியைக் கேள்விப் பட்டால் அப்படி அதிர்ச்சி அடைவார்கள். இன்றைய கால கட்டத்திலும்   பெரும்பாலான பெண்களுக்கு அப்பா தான் உள்ளாடைகளை  கடைக்கு சென்று வாங்கி வருவது வழக்கமாக இருக்கின்றது. இதையெல்லாம் மிக மிக ஆச்சர்யமடையும் செய்தியாக அக்கா தங்கையோடு பிறக்காதவர்களுக்கு இருக்கும்.

இந்தப் பதிவின் மூலம் அக்கா தங்கையுடன் பிறக்காதவர்களை குற்றமெல்லாம் சொல்லப் போவதில்லை. ஏனெனில் இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்கையில் தங்கத் தட்டில் வைத்து தாங்குவது போல தாங்குவதையும் நான் கண்டிருக்கின்றேன்.

பொதுவாக அக்கா தங்கை என்பது நடிகர் பார்த்திபனின் படத் தலைப்பைப் போல அது ஒரு சுகமான சுமை . சுமந்தவர்களுக்கு மட்டுமே அதன் சுகம் தெரியும்.

இந்தப் பதிவினை தன் சகோதரனை எண்ணி ஏங்கும் சகோதரிகளுக்கும் , தன் அக்கா தங்கையின் அன்பை அவர்களின் திருமணத்திற்குப் பின் இழந்து தவிக்கும் சகோதரர்களுக்கும் அர்ப்பணிக்கின்றேன்.
நன்றி 
செங்கதிரோன் 


Friday, December 11, 2015

ஜெயலலிதாவை பெண்கள் ஆதரிப்பதற்கான உளவியல் காரணங்கள்

அரசியலில் ஆர்வமே இல்லாத இல்லத்தரசிகள் முதல் நன்கு படித்த பெண்கள் அனைவருக்கும் ஜெயலலிதா மீது ஒரு ஈர்ப்பு இருப்பதினை நன்கு கவனித்தால் புரிந்து கொள்ள முடியும்.ஆண்களுக்கு ஜெயலலிதாவினை ஆதரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கும் , அவர் அதிமுக தலைவர் என்பதில் தொடங்கி , இந்துத்துவ ஆதரவாளர், கருணாநிதி எதிர்ப்பு  என்ற பல காரணங்கள் இருக்கும்.

ஆண்டாண்டு காலமாகவே பெண் அடிமைத்தனம் நீடித்துவரும் நம் நாட்டில், பெண்கள் மனதிற்குள்ளே புழுங்கித் தவிக்கின்றார்கள். தன் மனம் கவர்ந்த நாயகன் வில்லனை வீழ்த்தும்போது ரசிகன் எப்படி விசிலடித்து கொண்டாடுகின்றான்.அதே நிலைதான் பெண்களுக்கும் அரசியல் ஆண்களுக்கான களம் என்று இருந்து வந்த நிலையில் அங்கே ஜெயலலிதா நுழைந்து முதலமைச்சர் ஆனதுமே பெண்களுக்கு தங்களில் ஒருவர் அந்த இடத்தை அடைந்ததை பெருமையுடன் பார்த்தனர். 


ஆண்கள் பெண்களை அடித்து துன்புறுத்துவது மற்றும் அவர்களின் உணவு, உடை ,வேலை போன்றவற்றை ஆண்களே தீர்மானிப்பது பெண்களுக்கு கடும் எரிச்சலை உண்டுபண்ணுகின்றது. அது மட்டுமன்றி குடும்பத்தில் நடக்கும் சிறு பிரச்சனைகளில் கூட அவர்களின் கருத்துகளுக்கு எந்த விதமான மதிப்பும் அளிக்காமல் உதாசீனப்படுத்துதல் போன்றவற்றால் பெண்கள்  நொந்து போயிருந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் காலில் வயது வித்தியாசமின்றி அனைத்து  ஆண்களும்  சாஷ்டங்கமாக விழும் காட்சியையும் , கையை கட்டிக் கொண்டு குனிந்து கொண்டு பேசும் காட்சியை கண்டு உள்ளூர ரசிக்க ஆரம்பித்தனர்.


ஜெயலிதாவின் அதிகார தோரணையினால் ரசிக்க ஆரம்பித்தவர்கள் , அவருக்கு அரசியல் ரீதியான நெருக்கடிகள் ஏற்பட்டால் அது ஆணாதிக்க சமுதாயம் தான் காரணம் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் பெண்கள் அணுகுகின்றனர். உண்மையாகவே அதன் பின்புலம் என்ன  என்பதனை ஆராய்ந்து கொள்ள அவர்கள் முற்படுவதில்லை.

ஜெயலலிதாவின் பரம எதிரியான கலைஞர் குடும்ப பெண்களே ஜெயலிதாவின் தைரியத்தைப் பாராட்டி மகிழும்போது மற்றவர்கள் நிலை என்ன என்பதனை புரிந்து கொள்ள முடியும்.

மேற்சொன்ன உளவியல் காரணங்களிளிருந்து ஆண்கள் அறிந்து கொள்ள வேண்டியது பெண்களை அடக்கி ஆளும் மனோபாவத்தினால் ஒரு தவறான முன்னுதாரணம் கொண்ட பெண் ஆட்சியாளரை நீங்கள் மறைமுகமாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதனை மறந்து விடாதீர்கள். ஏற்கனவே பானுகோம்ஸ் குறித்த பதிவிலே சொல்லியிருந்தேன் , உங்கள் வீட்டுப் பெண்களுக்கு சமூகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை எடுத்து சொல்லுங்கள் , அக்கவிடமோ ,அம்மாவிடமோ , தங்கையிடமோ ,தோழிகளுடனோ , காதலியுடனோ அன்றாட அரசியல் நிகழ்வு குறித்த செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள். ஆரம்பகாலங்களில் இது மிக மிக  கடினமான ஒன்றாக இருக்கும் ,பின்னர் தான் அவர்களும் ஆர்வம் காட்டுவர் .எனவே உங்களுக்கு பொறுமை மிக அவசியம்.

சமூக கோளாறாளர் பானுகோம்ஸ் அவர்கள்   ஜெயலலிதா பிணையில் பெங்களூரில் வந்த பொது தான் நெருப்பாற்றில் நீந்தி வந்தாதாக சொன்னதற்கு ஆதரவு தெரிவித்து அது உண்மைதான் என்று முழங்குகின்றார். தமிழகமே மறக்காது  தருமபுரியில் இதே ஜெயலலிதாவுக்காக மூன்று தமிழ் சகோதரிகள் நெருப்பில் அதிமுககார்ர்களால் நீந்த விட்டதினை , இன்றும் அந்த சகோதரிகளின் குரல் நம் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

ஏன் ஜெயலிதா தவறான முன்னுதாரணம் : மக்களாட்சி என்பதில் சிறிதளவும் நம்பிக்கையற்றவர், தைரியமானவர் என்பது பொய்யானது அது முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகம் மட்டுமே அதைதான் ஊடகங்கள் தைரியம் என்று சொல்கின்றது. பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல பயந்து கொண்டு  இருப்பவர் எப்படி தைரியமானவராக இருக்க முடியும். ஆட்சியாளர் என்பவர் எளிதில் அணுகக் கூடியவராக இருக்க வேண்டும் , ஆனால் இங்கே நிலைமை தலை கீழ்.

பின் குறிப்பு:  நான் பெண்களுக்கு எதிராவனுமல்ல , திமுக காரனுமல்ல . நான் ஒரு சோத்துக்கட்சிக் காரன். 

உணவே மருந்து மருந்தே உணவு என்னும் உன்னத கொளகையுடன் வாழ்ந்து வருபவன்.

நன்றி 
செங்கதிரோன் 

அடுத்த பதிவு : அக்கா தங்கையோடு பிறந்தவனும் பிறக்காதவனும் 

Tuesday, December 8, 2015

ஜெய்சங்கரின் ஆயிரம் பொய்


ஆயிரம்காலப் பயிரான கல்யாணத்திற்கு ஆயிரம் பொய் சொல்வது பொருத்தாமான ஒன்றுதான். இருப்பினும் இந்தப் பொய் கல்யாணத்திக்கு பின்னர்தான் பல்வேறு விளைவுகளைக் கொடுக்கும். காலம் மாறிப் போச்சு படத்தில் இவ்வாறு பல பொய்களை சொல்லித் திருமணம் செய்த பாண்டியராஜன் , வடிவேலு ,சுந்தராஜன் படுபாட்டை வி.சேகர் அவர்கள் மிக அருமையாக சொல்லி இருப்பார். 



ஆயிரம் பொய் படத்தில் கல்யாணத்திற்கு முன்பே இந்த ஆயிரம் பொய்களால் ஜெய்சங்கர் படும் துன்பங்களை நகைச்சுவையுடன்  சொல்லி இருக்கின்றார்கள்.முக்தா சீனிவாசன் இயக்கம் ,சோ அவர்களின் கதை மற்றும் வசனத்தில் 1969ல் வெளிவந்தது. சோ அவர்கள் இந்தப் படத்தில் பல்வேறு திருப்பங்களை (twist ) வைத்து மிகுந்த பரப்பினை உண்டு பண்ணி இருப்பார் .அதே போல நகைச்சுவைக் காட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை. அதுவும் மனோரமாவினை நவீன மங்கையாக நான் பார்த்த முதல் திரைப்படம் இது , சிறப்பாக நடித்து இருக்கின்றார். 


கதை : பழையப்  பகையினால் பிரிந்து விட்ட இரண்டு குடும்பங்களை ஒரு திருமணம் மூலம் ஒன்றிணைக்க ஜெயசங்கர் பல பொய்களை சொல்லி அதில் மாட்டிக் கொள்ள இதற்கு நடுவே சோவுக்கும் மனோரமாவுக்கும் இடையிலானக் காதலை சேர்த்து வைக்க கூடுதாலாகப் பொய்களை அள்ளி விட இவை அனைத்திலிருந்தும் விடுபட்டு இந்த இரண்டு ஜோடியும் இணைவது தான் கதை .

அனைத்துப் பெரிய நடிகர்களும் நடித்துள்ள இப்படத்தில் (வி கே ராமசாமி ,வாணிஸ்ரீ ,தேங்காய் சீனிவாசன் ,எம்.ஆர் வாசு ) எந்த இடத்திலும் நமக்கு சலிப்பு ஏற்படாமல் அனைவரும் மிக சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பர். ஒரு சின்னக் கதையில் இவ்வளவு திருப்பங்களை வைத்து இருப்பது ஆச்சர்யமளிக்கின்றது . இந்தக் கால தலைமுறையினரிடம் இந்தப் படத்தினை பார்த்து விட்டுக் கதையினை அவர்களுக்கு  சொல்லிப் பாருங்கள் அசந்து விடுவார்கள்.

சிறந்த காட்சிகள் :

சோ மருத்துவராக நடிக்கும் போது செய்யும் கலாட்டாக்கள்

ஜெய்சங்கர் -வாணிஸ்ரீ காதல் காட்சிகள் 

உங்கள் குடும்பத்துடன் வீட்டிலேயே கண்டுகளிக்க இது மிக சிறந்த திரைப்படம் .

நன்றி 
செங்கதிரோன்