Monday, July 17, 2017

ஜிஎஸ்டி -கதிராமங்கலம் -நீட்

 தமிழகத்தையே  உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த மூன்று பிரச்சனைகள் குறித்த பார்வை 

ஜிஎஸ்டி: இந்தியா முழுமைக்கும் ஒரே வரி என்ற இந்த திட்டத்தினை காலத்தின் கட்டாயம் கருதி நாங்கள் கொண்டு வருகின்றோம் என்று வருத்தத்துடன் செய்ய வேண்டிய ஒரு செயலை , ஏதோ இந்த திட்டத்தினால் இந்தியாவில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும் எனப்து போல் நாடாளுமன்றத்தில் விழா எடுத்து கொண்டாடுவதைப் பார்க்கவே அசூசையாக இருந்தது. மக்களின் எண்ணவோட்டம் என்ன என்பதனைக் கூட புரிந்து கொள்ளமல் இருக்கும் பிரதமரின் செயல் மிக ஏமாற்றம் அளிப்பதாக இருக்கின்றது. அதே குஜராத்தில் பிறந்த காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியா முழுமைக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு , பலரின் கருத்துகளை கேட்டறிந்து அதற்கேற்றவகையில் போராட்டத்தினை வடிவமைத்து வெற்றி கண்டார். ஜிஎஸ்டி என்பது பயனற்ற ஒன்று என  நான் எண்ணவில்லை , அது மிகவும் அவசியம் தான் , ஆனால் அதனை கவனத்துடன்  செயலாக்கவேண்டும் . மேலை நாடுகளில் ஜிஎஸ்டி இருக்கின்றது , அதனால் அவர்கள் பள்ளி கல்விக்கோ ,மருத்துவத்திற்கோ ஒரு பைசா செலவழிப்பதில்லை . அந்த அரசாங்கம் வரிவருவாயில் தன் குடிமக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றது. ஆனால் நம் நாட்டில் மருத்துவம் மற்றும் கல்வி மிக சுமையான ஒன்றாக இருக்கின்றது. (அரசாங்க பள்ளி , மருத்துவமனைகள் இலவசம் என்றாலும் எந்த ஒரு கட்டமைப்பும் இன்றி அவை அழியும் நிலையில் உள்ளன )


கதிராமங்கலம் : நெடுவாசலைத் தொடர்ந்து கதிராமங்கலமும் போராட்ட பூமியாக மாறி இருக்கின்றது. மக்களின் உணர்வுகளை அரசுகள் செவி சாய்க்காமல் வளர்ச்சி திட்டங்களின் எதிரிகள் என்று அவர்களை முத்திரை குத்துகின்றனர். நெய்வேலி கண்முண்ணே உதாணரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது , நாற்பது ஆண்டுகள் கழித்தும் அரசாங்கங்கள் இன்றும் அப்பகுதி மக்களுக்கு நிலத்திற்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. அப்பகுதியை சார்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கப்படவில்லை. மேலும் தமிழகமே இருளில் மூழ்கிக் கிடந்த போதும் இங்கிருந்து மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதும் நடந்ததை பார்த்தோம் . இந்த படிப்பினை உணர்த்தும் பாடம்  அரசாங்கம் நம்மை வளர்ச்சி என்ற மாய பிமபங்களை காட்டி ஏமாற்றப்போகின்றார்கள் என்பததுதான் . மேலும் இந்த திட்டமானது அரசாங்கம் நேரடியாக செய்யாமல் தங்கள் கட்சி சார்ந்த ஒருவருக்கு இதனை கொடுத்திருப்பதன் மூலம் இவர்களை கண்டிப்பாக நமபவே கூடாது என்ற ஒரு உறுதியான நிலைப்பாட்டினை நம்மை எடுக்க வைக்கின்றது.


நீட்: நீட் மூலம் தேர்வான மருத்துவர்கள் தான் தரமானவர்கள் என்ற போலி பிம்பத்தினை ஏற்படுத்த கடுமையான முயற்சியில் மத்திய அரசாங்கம்  ஈடுப்பட்டிருக்கின்றது.ஆனால்  தமிழக மருத்துவர்கள் அதனை தினமும் பொய்யாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தவாரத்தில் கூட ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் சர்ஜரி துறை மிகப்பபெரும் சாதனையை செய்திருப்பதினை பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். இது ஒரு சின்ன உதாரணம் தான் , சாதாரண கிராமத்தில் உள்ள மருத்துவமைகளில் கூட சிறப்பான சிகிச்சை தமிழகத்தில் மட்டுமே இருக்கின்றது . தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பினும் அவர்களும் வெளிநாடுகளில் இருப்பது  போன்ற உயர் தர சிக்கிச்சைகளை அளிக்கின்றனர். பக்கத்தில் உள்ள கேரளாவில் மருத்துவத் துறையின் நிலை மிகமோசம். அங்கே அரசு மற்றும் தனியார் மருத்துவ வசதிகள் இன்னும் கூட கிராமங்களில் இல்லை.  அரசாங்க பாடதிட்டத்த்தில் (மாநில ) படித்த மாணவர்கள் தான் இந்த மிகப்பெரும் சாதனைகளை தமிழகத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.  ஆனால் மத்திய அரசாங்கமோ மருத்துவர்களின் தரத்தினை உயர்த்த நீட் என்று சொல்கின்றது , அது மற்ற மாநிலங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம் , தமிழகத்திற்கு தேவை இல்லை என்பதே அனைத்து மக்களின் குரல்.


மேற்சொன்ன மூன்றும் தமிழகத்தின் தலையாயப் பிரச்சனையாக இருக்கின்றது. ஆனால் தீர்வினை எட்டும் அளவுக்கான தலைவர்கள் தமிழகத்தில் இல்லை என்பதே தற்போதைய நிலை. தீர்வு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உங்களுடன் நானும் காத்திருக்கின்றேன் 

நன்றி 
செங்கதிரோன்

Wednesday, May 31, 2017

அடுத்து பாம்புக் கறிக்கு தடை : தயாராகிறது சட்டம்

பசு மாமிச தடை பஞ்சாயத்தே இன்னும் முழுமையாக முடியாத நிலையில் பாம்புக் கறிக்கு தடையா ஆமாம் , உண்மைதான் ,எப்படி பசுவில் முப்பது முக்கோடி தேவர்களும் வசிக்கின்றார்களோ , அப்படித்தான் பாம்பும் அதுவும் ஒரு ஆன்மீகக் குறியீடுதான், இதனை நாமே பல் கோவில்களில் பார்த்திருப்போம் .

கிராமங்களில் வெள்ளிக்கிழமை அன்று நல்ல பாம்பைப் பார்ப்பது சிறப்பு என்பர், சிலர் தூரமாக நின்று வழிபடுவர். அதே போல நல்லப் பாம்பினை யாரேனும் அடித்தால் பெரியவர்கள் கண்டிப்பார்கள். இப்படி பசு மற்றும் பாம்பினை வழிபடும் வழக்கம் எப்படி வந்தது என்று பார்ப்போம்.

 முதலில் பசு கோமாதா ஆன கதை 
பசுவின் நன்மைகள் உலகுக்கே தெரியும் அதன் பால் தான் தாய்ப்பாலுக்கு அடுத்து முதனமையான உணவாகக் குழந்தைகளுக்கு வழங்கப் படுகின்றது.ஆனால் நம் முன்னோர்கள் பசு மாமிசத்தை வேண்டி விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருந்த காரணத்தினால் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய பாலுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.எனவே பெரியவர்கள் ஒன்று கூடி இந்த பசு மாமிச விரும்பிகளுக்கு பாடம் புகட்ட பசு கோமாதா எங்கள் குலமாதா என்றக்  கதையினை உருவாக்கி பசு மாமிசப் பிரியர்களுக்கு தடை விதித்தனர் .பின்னர் வந்த ஆனமீகவாதிகள் இந்தப் புரட்டுக் கதைக்கு மேலும் மெருகேற்றி முப்பது முக்கோடி தேவர்கள் வாழவதாக எண்ணம் கற்பித்து பசு மாமிசத் தடையினை இன்னும் வலுவாக்கினர் .


அந்தக் காலங்களில் தொழில் நுட்ப வசதிகள் குறைவாக இருந்ததனால் பசு இனப்பேருக்கங்கள் குறைவாக இருந்தது. ஆனால் தற்பொழுது 10 லிட்டருக்கும் மேல் கறக்க கூடிய பசுக்களை உருவாகிய பின்னரும் இந்த மூடப் பழக்கத்தினை தொடர்வது முட்டாள்தனமானது.

கீழே  பசு மாமிசம் மருத்துவ நனமைகளுக்காக பழங்காலத்தில் சாபிட்டதற்கான ஆதாரம் :

In therapeutic section of Charak Samhita (pages 86-87) the flesh of cow is prescribed as a medicine for various diseases. It is also prescribed for making soup. It is emphatically advised as a cure for irregular fever, consumption, and emaciation. The fat of the cow is recommended for debility and rheumatism.

அதாவது பசு மாமிசம் கொண்டு  தாயாரிக்கப்பட்ட சூப்பானது  சுரம் மற்றும் மூட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கின்றது .மேலும் அன்றாட உணவில் பசு மாமிசத்தை உண்டு வந்ததற்கான ஆதாரங்களும் ஏராளம் உள்ளன.

இங்கே தமிழகத்தின் தொன்மையான இலக்கியங்களிலும் பசு மற்றும் பன்றி இறைச்சி உண்டதற்கான ஆதாரங்களை பேலியோ உணவு குறித்து விழிப்புணர்வினை முகப்புத்தகத்தில் தொடர்ந்து எழுதி வரும் நியாண்டர் செல்வன் அவர்கள் தினமும் பதிந்து வருகின்றார்கள்.

நான் பயின்ற சித்த மருத்துவப் பட்ட படிப்பில் (B.S M .S ) "நோயில்லா நெறி" புத்தகத்தில் கோழி , உடும்பு , பன்றி என்று பலவகையான மாமிசங்களின் பயன்பாடுகள் குறித்து கூறப்பட்டிருக்கின்றன. மேலும் உணவாக மட்டுமல்லாது  இது போன்ற சீவராசிகளைப் பயன்படுத்தி மருந்துகளும் சித்த மருத்துவத்தில் உண்டு.  உ -ம்: மான் கொம்புப் பற்பம் , ஆமை ஒட்டுக் குடி நீர் ,ஓணான் சுடர் தைலம் (இது மட்டும் வெளி பிரயோகம் )

பாம்பு தெய்வமான கதை :

பாம்பின் கறியை நாம் சாப்பிட முடியாது பாம்புதான் நம் கறியை சாப்பிடும் பல காணொளிகளில் பார்த்திருப்போம் , மலைப்பாம்பு மனிதனை முழுமையாக விழுங்கி உண்ணுவதை .

முற்காலத்தில் தானியப் பயிரிடுதல் மிக அதிகம் இருந்தது.திணை,சாமி, கொள்ளு, பைத்தம் பருப்பு ,கம்பு ,கேழ்வரகு என்று எண்ணற்றவை இருந்தன. அறுவடை சமயங்களில் பறவைகள்  இவற்றை கொத்தித் தின்னும் எனவே ஒலி எழுப்பியோ அல்லது உண்டி வில் அடித்து அவற்றை விரட்டுவர். 

ஆனால் இந்த எலி இருக்கின்றதே அது இரவு நேரங்களில் வயல்களில் புகுந்து அனைத்துப் பயிர்களையும் கடித்து நாசம் செய்து விடும் , அவற்றை விரட்டுவது மிகக் கடினமாக இருந்தது,  அந்த சமயங்களில் விவசாயிக்கு உறுதுணையாக இருந்தவை இந்த நல்லப் பாம்புகள் (cobra) இவைகளுக்கு எலி மிகப் பிடித்தமான உணவு , இவைகளால் விவசாயிகளுக்கு பாம்பு தெய்வமாகத் திகழ்ந்தது . அப்படிப்பட்ட பாம்புகளை சிறுவர்களும் இளைஞர்களும் "பாம்பென்றால் படையும் நடுங்கும்" என்ற பழமொழிக்கேற்ப கண்டவுடன் கொல்ல ஆரம்பித்தனர். இதனைத் தடுக்கவிவசாயிகள் ஆரம்பித்து வைத்து தான் நாக வழி பாடு.குறிப்பாக நல்லப் பாம்பை மட்டும் தெய்வமாக்கியதன் நோக்கம் எலிகள் அட்டகாசத்தை ஒடுக்குவதில் அவற்றின் தலையாயப் பணி  தான் .

ஆனால் இன்றோ சிறுதானியங்களை யாரும் பயிரிடுவதில்லை, பாம்பு வழிபாட்டை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வழிபடுவதற்கான கதைகளை நாமே உருவாக்கி மூட நம்பிக்கையில் திளைத்துக் கொண்டிருகின்றோம் .

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாம்புதான் அடிப்படிவாதிகளின் அடுத்த இலக்கு பாம்பைக் கொல்பவர்களுக்கு பத்து ஆண்டு தண்டனை  சட்டம் கூட   வரலாம் . எனவே பாம்பிடம் இனி கவனமாக இருங்கள் 

முத்தாய்ப்பாக சொல்ல வேண்டிய ஒன்று என்னவென்றால் , காசியில்  இறந்த மனித மாமிசம் உண்ணும் ரிஷிகளைத் தடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இருக்கின்றதா ? அவர்கள் மனிதர்களைக் கொன்று உண்ணாவிட்டாலும் அது போன்ற முறைகள் இன்றும் ஆன்மீக அடிப்படியில் வழக்கத்தில் இருக்கும் பொது பசு மாமிச உண்ணுதலில் அரசாங்கம் வீணாகத் தலையிடுவது என்பது இந்த நாட்டை பிற்போக்கு நிலைக்கு தள்ள செய்கின்றது.

பின் குறிப்பு : பீகார் ,ஒரிசா மற்றும் பிற மாநிலங்களில் வாழும் பிராமணர்கள் இன்றும் இறைச்சி சாப்ப்பிடுகின்றனர் (கோழி, ஆடு ,மீன் ). இதிலருந்தே இது முற்காலத்திலிருந்தே  தொன்று தொட்டு வரும் பழக்கம் என்று உணர்ந்து கொள்ள முடியும் .

 இந்தப் பதிவு வழிபாட்டு முறைகளைக் குறை கூற எழுதப்பட்டதல்ல மாறாக  எதையும் அதன் பின்புலத்தை அறிந்து பின்பற்றும் தற்கால இளைஞனின் ஒரு ஆய்வுக் கட்டுரை . இதனை யாரும் எங்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் .

நன்றி 
செங்கதிரோன்


Thursday, May 4, 2017

குளிர் வேட்டைக்காரன் உணவு : வான்கோழி இருதயம் மற்றும் ஈரல்


நெட்பிலிக்ஸில் below zero அதாவது பூஜ்யம் மற்றும் அதற்கு கீழே  உள்ள வெப்பநிலையில் வாழும் மனிதர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றை பார்த்தேன். அங்கு பனிப்பிரதேசத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கை குறித்த பதிவு தான் இந்த ஆவணப்படம். 

அந்த படத்தில்  வரும் இளைஞன் அங்கு பனிக்காட்டிற்கு சென்று ஒரு வான்கோழி பறவையை வேட்டையாடி வந்து அதனுடைய ஈரல் மற்றும் இருதயத்தை சமைத்து உண்ணுகிறான். அவனுக்கு அது தான் உலகின் சுவையான உணவு போல் தெரிகிறது. அந்த கட்சியை பார்க்கும் போது நானும் இதே போல் வேட்டையாடி உண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. அலாஸ்கா மாகாணம் சென்று வரும் செலவை மனதில் கணக்கிட்டு பார்த்தேன். இன்னும் ஒரு வருடத்திற்க்கு அங்கு சென்று வரும் வாய்ப்பு இல்லை என்று தெரிந்தது. உடனே அருகில் உள்ள கடைக்கு சென்று வான்கோழி ஈரல் மற்றும் இருதயத்தை வாங்கி வந்து வறுத்து உண்டவுடன் ஏதோ நானே அந்த பறவையை வேட்டையாடி உண்டது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது.


நன்றி 
செங்கதிரோன் 

Friday, April 21, 2017

Kon -Tiki : வரலாற்றை நிரூபிக்க நீண்ட படகு பயணம்.


நார்வேவை சார்ந்த எழுத்தாளர் தோர் பாலினீசியா என்ற தீவில் வாழும்  மக்கள் பெரு நாட்டில்  இருந்து வந்தார்கள் என்று நம்புகின்றார். ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் அவர்கள் ஆசியாவை சார்ந்தவர்கள் என்று உறுதியாக நம்புகின்றார்.

தூரோ பாலினீசியாவில் வாழும் மக்களின் கலாச்சாரம் பெரு நாட்டோடு ஒத்துப் போவதால் அவர்கள் ஆசியாவை சார்ந்தவர்கள் இல்லை என்று அனைவருக்கும் எடுத்துரைக்கின்றார். இதனை நிரூபிக்க அரசாங்கத்திடம் உதவி கேட்கின்றார்.
படத்தில் வரும் சுறா மீனுடனான சண்டைக் காட்சி 


 அதாவது பெரு நாட்டிலிருந்து முன்னோர்கள் சென்ற பாதையில் பாலினீசியாவை அடைவது தான் அவரது திட்டம். ஆனால் அரசாங்கமோ அவரை முட்டாளாக பார்க்கின்றது. அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. எனவே அவர் தன நண்பர்களின் உதவியுடன் 6500 கிலோமீட்டர் நீளமுள்ள கடல் வழி பாதையை கண்டுபிடித்து பல இன்னல்களுக்கு பிறகு அங்கு சென்றடைகின்றார். அவரின் இந்தப்பயணம் படமாக எடுக்கப்பட்டது. இந்த படத்தின் பெயர்  தான்  Kon -Tiki .  Kon -Tiki  எனப்து இன்கா  என்ற இனக்குழுமத்தின் சூரியக் கடவுளின் பெயர். நார்வே அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் ஆஸ்கார் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான போட்டியில் தேர்வு செய்யப்பட்டது. வரலாறு மற்றும் சாகச விரும்பிகளாக இருப்பின்  இந்தப் படத்தினை பாருங்கள் 






நன்றி 
செங்கதிரோன் 

Thursday, April 20, 2017

தனுஷ் கலைஞன் TO படைப்பாளி:


பவர் பாண்டி படம் தனுஷ் நடிகரிலிந்து இயக்குனராக உருவாகியிருக்கும் படம். தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை சென்னையில் உள்ள சங்கம் தீயேட்டரில் பார்த்து விட்டு நண்பர்களுடன் ஆட்டோவில் வந்து கொண்டுயிருந்தேன். அப்போது படம் பற்றி பேசி கொண்டிருதோம். அனைவரும்  தனுஷின் தோற்றம் பற்றியும் நடிப்பு பற்றியும் விமர்சனம் செய்து கிண்டல் அடித்துக்கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் நான் மட்டும் அவர்களிடம் உறுதியாக சொன்னேன் தனுஷிற்கு சினிமாவில் நல்ல எதிர் காலம் காத்துக்கொண்டிருக்கிறது என்று. அப்போது ஒருவரை தோற்றத்தை வைத்து கணிப்பதைவிட திறமையை வைத்து கணிப்பதே சாலச்சிறந்தது என்று என்னுடைய உள்மனதிற்கு தோன்றியது. அன்று எனக்கு தோன்றியது இன்று காலப்போக்கில் நடந்தே விட்டது. கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் வரை நடித்து விட்டார். நாட்டின் உயரிய விருதான தேசிய விருதையும் நடிப்புக்காக பெற்றுவிட்டார்.


   நடிப்பில் முத்திரை பதித்து விட்ட இவர் பின்னர் பாடலாசிரியராக, பாடகராக மற்றும் இசையமைப்பாளராக வேறு பல அவதாரம் எடுத்தார். அது மட்டும் இல்லாமல் சில புதிய நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளரை தமிழ் சினிமா உலகிற்கு உருவாக்கி அறிமுகம் செய்து வைத்தார்.
முத்தாய்ப்பாக இயக்குனர் என்ற படைப்பாளி அவதாரத்தையும் இறுதியாக எடுத்துவிட்டார். நான் தனுஷ் இயக்கப்போகிறார் என்ற செய்தி வந்தவுடன் செல்வராகவன் பாணியில் தான் படம் இருக்கும் என எண்ணினேன். ஆனால் அதற்கு மாறாக முதியவர்களின் மனதில் எஞ்சியிருக்கும் காதலை வெளிப்படுத்தும் படத்தை எடுப்பார் என்று நினைக்கவில்லை.


ராஜ்கிரன்: ஒரு சண்டை பயிற்சியாளராக வரும் ராஜ்கிரணுக்கு ஒரு சண்டை பயிற்சியாளருக்கு உண்டான முரட்டுத்தனம் இல்லாமல் அவர் ஏதோ எல்லோருக்கும் ஆசீர்வாதம் அளிக்கும் பாதிரியார் போல் பார்க்கத் தோன்றுகின்றது. அதே நேரத்தில் ரேவதியுடன சந்திப்பின் போது ஒரு டீன் ஏஜ் இளைஞனின் மனதினை மிக தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கின்றார். படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கான சிறப்பான பங்கினை ஆற்றியிருந்தார்கள். 
கலைஞனிலிருந்து படைப்பாளியாக மாறியிருக்கிம் தனுஷிற்கு வாழ்த்துக்கள்..!!


ஏனோ தனுஷ் வெற்றியடையும் போது நானே அந்த வெற்றியை அடைந்தது போன்ற உணர்வு எனக்கு மட்டும் தான் ஏற்படுகின்றதா என தெரியவில்லை.

படம் குறித்த சிறிய வீடியோ  விமர்சனம் 


நன்றி 
செங்கதிரோன்