Monday, December 31, 2012

சாரு ,ஜாக்கி ,விஜயகாந்த்: மூவேந்தர்கள்


இந்த  மூவேந்தர்களுக்கும் என்ன ஒற்றுமை என்பதனை எழுத்துலகம் ,பதிவுலகம் ,அரசியல் இதனை ஓரளவுக்கேனும் கவனித்து வருபவர்களுக்கு சட்டென்று புரிந்துவிடும் .உங்கள் அனைவரின் ஊகம் மிகச் சரியானதே, அதாங்க மூன்று  பெரும் தாங்கள் மிகப்  பெரிய  தண்ணி வண்டி என்று அடிக்கடி வாக்குமூலம் கொடுக்கும் மேதைகள்.ஆனாலும்  இதனையும் தாண்டி நிறைய ஒற்றுமைகள் உள்ளன.முதலிலேயே சொல்லிவிடுகின்றேன் இந்தப் பதிவின் நோக்கம் இந்த மூவரையும் இழிவுப் படுத்தும் நோக்கம் அல்ல,அவர்களின் நிறை குறைகளை அவர்களின் முன்னாள் ரசிகன் என்ற முறையில் அலசும் பதிவு.



சாரு :முதலில் சாருவை குறிப்பிட்டதற்கான காரணமே அவரின் சிறந்த ஆளுமைத்திறன் தான் முக்கியக் காரணம்.இந்த மூன்று பேரில் இவரே முதன்மையானவர் என்பதனை மூவரையும் தொடர்ந்து கவனித்து  வருபவர்கள் தயக்கமின்றி ஒப்புக்கொள்வார்கள். தொடர்ந்து சர்ச்சைக்குரிய  செயல்களை   எழுதியும் பேசியும் செய்தும் வந்ததால் மிகக் கடுமையான் கண்டனத்துக்கு ஆளானார் .இருப்பினும் இவரின் ஒளிவு மறைவற்ற  எழுத்துக்கு இன்றும் ஆண் வாசகர்களை மட்டுமின்றி பெண் வாசகர்களை மிக ஏராளமாகக் கொண்டிருப்பவர் .அதுவும் இவரிடம் உள்ள தன்னனம்பிக்கையும் மிகப் பெரிய சாதனைகளை செய்ய வேண்டும் என்ற துடிப்பும் என்னை எப்பொழுது வியக்க வைக்கும்.இவரின் எழுத்துக்களை தொடர்ந்து படிக்கும் அனைவருக்குமே தாங்களும் தங்கள் துறைகளில்  இதனைப் போன்ற சாதனைகள் புரிய வேண்டும்  என்ற எண்ணம் நிச்சயம்  ஏற்படும். உலக இலக்கியங்கள் மட்டுமின்றி உலக  இசை குறித்த இவரின் விசாலமானப் பார்வையினை தமிழகத்தில்  இவரளவுக்கு பெற்றிருப்பவர்கள் கண்டிப்பாக வெகுச்  சிலரே இருப்பர் . நிறைகள் அளவுக்கு குறைகளையும் அதிகம் பெற்றிருப்பதுதான் மிக வருத்தமான உண்மை. மொத்தத்தில் ஒரே வரியில் சொல்வதானால்  'எடுப்பார் கைபிள்ளை' என்று சொல்லி விடலாம். தான் பழகும் அனைவரயும் மிக எளிதில் நம்பி இவர்  ஏமாந்து போன கதைகள் மிக ஏராளம்.மனுஷ்,மிஷ்கின் போன்றவர்களை பற்றி இவர் மிக உயர்வாக எழுதியதைப் போன்று இனி ஒருவர் எழுத வேண்டுமானால் அவர் பிறந்தது தான் வர வேண்டும் அந்த அளவுக்கு மிக உயர்வாக எழுதினார் .




விஜயகாந்த் : கருப்பு எம்.ஜி.ஆர்  என்று தனக்குத் தானே பட்டம் சூட்டி  தமிழ்கத்தினை வலம்  வருபவர். இவரின் திடீர் எழுச்சி அரசியலில் யாருமே எதிர்பாராதது .ஆனாலும் கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு இவரின் ரசிகர்களின் பலம் மிகத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். பொங்கல்,தீபாவளியில் இவரின்  படம் வெளிவருகையில் மிகப் பெரிய பேனர்களை பேருந்தில் எடுத்துக் கொண்டு காலையிலே திரையரங்கத்துக்கு சென்றுவிடுவர் .ரஜினி,கமல் படத்திற்கு  இணையான வரவேற்பினை தங்கள்  தலைவனுக்கும் வழங்குவதனை கடமையாக் கொண்டிருந்தனர். கார்த்திக் மற்றும் பிரபு இருவருமே விஜயகாந்தை விட அதிகமான வெற்றி  படங்களை  கொடுத்திருந்தாலும் அவர்களால் பெற முடியாத அளவுக்கான ரசிகர் பட்டாளத்தினை தன வசம் வைத்திருந்தார்.ரஜினி சொல்லும் 'இது தானாக சேர்ந்த கூட்டம்' என்ற  சொல் விஜயகாந்த் ரசிகர்களுக்கு  தான் மிகப்  பொருத்தமான வசனம்.தனது ரசிகர்கள் பலத்தினை மிக சரியான நேரத்தில் அரசியல் சக்தியாக மாற்றி அதில் வெற்றியும் அடைந்த்ருக்கின்றார். இருப்பினும் அவரின் உயரிய லட்சியமான முதலமச்சர் பதவியை அவர் அடைவது எந்தளவுக்கு சாத்தியம் எனபது அவரின் முன்கோபத்தினை மட்டுமே பொறுத்தது. அந்தளவுக்கு  பொது இடங்களில்  தன் பொறுமையிழந்து தன்னை சுற்றி இருப்பவர்களை இம்சிப்பதில் இவருக்கு நிகர் இவரே. 



ஜாக்கி.: உலகபடம் என்ற வார்த்தைக்கு தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த ஒரே அர்த்தம் ஜாக்கி தான். அந்தளவுக்கு  பல நாட்டு திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியத்தில் முதன்மையானவர்.பதிவுலகத்தில் சூப்பர் ஸ்டார் என்றால் அது மிகை அல்ல ஏனென்றால் மெத்தப் படித்தவர்கள் முதற்கொண்டு ஓரளவுக்குப் படித்தவர்கள் வரை  அனைவரையுமே  வாசகர்களாகக் கொண்டிருக்கும் ஒரே பதிவர் இவர் தான்.இவன் நம்மில் ஒருவன் என்று நினைக்கும் அளவுக்கான ஒரு அடையாளத்தினை இயலபாகவே ஏற்படுத்திக் கொண்டவர்.இவரின் தாக்கத்தினால் பதிவெழுத ஆரம்பித்தவர்களும் ,இவரின் பாணியைப்  பின்பற்றி பதிவெழுதி வருபவர்களும் ஏராளம். எந்த உலகப் படங்களால் மிகப் பெரிய உயரத்தினை  தொட்டாரோ  அவற்றினை தொடராமல் சமூக பிரச்சனைகள் குறித்து எழுத ஆரம்பித்தில் இருந்து இவருக்கான தனிப்பட்ட பிரச்சனைகள் தொடர ஆரம்பித்தன.சிறிது காலம் கால்ஷீட் போன கதாநாயகன் போல கவனிக்கப்படாமல் இருந்தாலும் மறுபடியும் மீண்டு வந்து கொண்டிருக்கின்றார்.


நன்றி 
செங்கதிரோன் 



மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் அனைத்துமே இவர்கள் மூவரையும் நன்கு அறிந்தவர்களுக்கு மிகவும் உடன்பாடாகவே இருக்கும் மிகைப்படுத்தி எதுவும் எழுதப்படவில்லை   என்பது புரியும். மற்றவர்கள் இதனை எனது தனிப்பட்ட கருத்தாகவே எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி 
செங்கதிரோன் 

Sunday, December 30, 2012

இசை உலகின் இளம் தேவதைகள்:டெய்லர் ஸ்விப்ட் (Taylor Swift )



அழகான முகமும் குரலும் ஒருங்கே அமைவது உலகில் வெகு சில பாடகிகளுக்கு மட்டுமே கிட்டும் ,அந்த வகையில் அவை இரண்டும் நூறு சதவீதம் சரியாகப்  பெற்ற ஒரே பாடகி என்ற பெருமைக்கு சொந்தமானவர் தான்  டெய்லர் ஸ்விப்ட். ஒல்லியான உடல்வாகும் கவர்ச்ச்சியான கண்களாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் இந்த அழகுப் பதுமை இசை உலகில் மிகக் குறுகிய காலத்தில் சாதித்தவைகள் மிக ஏராளம்.
http://www.whitegadget.com/attachments/pc-wallpapers/70965d1314168115-taylor-swift-taylor-swift-wallpaper.jpg

தமிழகத்தில் நம் இசை அறிவு எனபது குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது போன்றுதான் இளையராஜாவில்  தொடங்கி ஜி .வி.பிரகாஷில்  முடிந்து விடும் அளவுக்கு வெகு குறைவான இசைக் கலைஞர்களை  மட்டுமே கொண்ட சூழலில் வாழ்கின்றோம் .அனைவருமே இளையராஜா வின்  ஒரே ஒரு  பாடலையே குறைந்தது  பத்தாயிரம் முறையாவது கேட்டிருப்போம்.பலவகையான  இசைகலைஞர்கள் இருந்தால்  இது  போன்றதொரு சூழல் வர வாய்ப்பில்லை .இந்த வகையில் மேற்கத்திய இசை ரசிகர்கள் மிகவும் பாக்கியசாலிகள் .அவர்களே  ஒரு சில தருணங்களில் தங்கள் இசை தவிர்த்து விட்டு லத்தீன் அமெரிக்கப் பாடல்களை விரும்பி கேட்பார்கள் .  நாமும் இது போன்ற  மற்ற  மொழி இசைகளை கேட்பதில் எந்தத்  இல்லை.இதனால் மொழி அறிவு வளர்வது மட்டுமன்றி நமது இசை அறிவு எல்லை கடந்து விரிவடையும்  நல்ல  சூழல் உருவாகும்.

 நீங்கள் மேற்கத்திய இசையினை கேட்கத் தொடங்கி விட்டால் உங்கள் முன் பல்லாயிரக் கணக்கான பாடல்களை கேட்கும் அளவுக்கான வாய்ப்புகள் வந்து குவியும். குறிப்பாக  உங்கள் mp 3 கருவியிலோ அல்லது ipod லோ இடப் பற்றாக்குறை நிகழும் அளவுக்கான பாடல்களை நிரப்பி கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.

பாடகி சித்ரா போன்று மெலடி பாடல்களையே சற்று  கொஞ்சம் உரக்க பாடுவது (country pop ) தான் டெய்லர் ஸ்விப்ட் அவர்களின் பாணி . அடுத்து மிகக் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சிறப்பம்சம்   ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பு, அவ்வளவு தெளிவாக ஒவ்வொரு வாரத்தகளையும் மிக அழகாக உச்சரிப்பார்.சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பந்திலே விக்கெட் எடுப்பதை போன்று தன்னுடைய முதல் ஆல்பம் வெளியிட்ட போதே உலகம் முழுக்க இசை ரசிகர்களை தன பக்கம் கவர்ந்திழுத்தவர்.

 மிக முக்கியமாக சொல்ல வேண்டிய ஒன்று அனைத்து பாடல்களையும் எழுதியதும் அவரேதான் ,சிறு வயதிலேயே  பாடல் எழுதும் திறமைக்காக தேசிய அளவில் விருதுகளை வாங்கினார் .கீழே உள்ள வீடியோவினைப்  பார்த்தால் நான் சொன்ன அனைத்தும் உண்மை என்பது புரியும்.



 இது மட்டுமன்றி  fearless ,mean ,mine ,teardrops ,both of us போன்ற பாடல்களும் மிகப் பிரபலம் .ரியான்னா போன்றே டெய்லர் ஸ்விப்ட் உங்கள் மனம் கவர்ந்த இசை தேவதையாக மாறுவார் என நம்புகின்றேன்

நன்றி 
செங்கதிரோன் 

Friday, December 28, 2012

இசை உலகின் இளம் தேவதைகள் :ரியான்னா(Rihanna)


தமிழ் சினிமா பாடல்களை மட்டுமே எப்பொழுதும் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. எப்படி இட்லி ,தோசையையும்  தாண்டி பீட்சா ,பர்கர் சாப்பிடுகின்றோமோ அது போல மேற்கத்திய இசையினையும் அவ்வபொழுது  கேட்கலாம். உலகில் மிக சுலபமான மொழி ஆங்கிலம் தான் ,அதுவும் ஆங்கிலம் கற்றுக் கொள்ள ஆர்வமுடையவர்கள் ஆங்கில
சினிமாக்களை மட்டும் பார்க்காமல் இது போன்ற பாடல்களை கேட்கலாம்.

மேற்கத்தியவர்களின் இசை ஆர்வம் சொல்லி மாளாது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இதனை நன்கு உணர்ந்து இருப்பீர்கள். கோடை காலங்களில் இசைத் திருவிழாவின் போது   பலதரப்பட்ட இசைக் கலைஞர்களை தங்கள் நகரத்திற்கு அழைத்து வந்து அந்த இசை மழையில் அவர்கள் நனைவதை பார்ப் பதற்கு காண கண்கோடி வேண்டும்.


நான் புதிதாக எழுதும் இந்த தொடரில் இசை உலகில் இயங்கி வரும் அந்த இளம் தேவதைகள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்ய இருக்கின்றேன்.முதலாவதாக எனக்கு மிகவும் பிடித்தமான ரியான்னாவில்  இருந்து இசைப் பயணத்தினை ஆரம்பம் செய்கின்றேன். என்னோடு நீங்களும் கலந்து கொள்ள ஆவலோடு அழைக்கின்றேன்.
   
  ஆங்கில இசை உலகின்  பாடகிகள் தங்களின் குரல்வளத்துக்காகவும் கவர்ச்சியான உடலமைப்பாகக்கவும்  மிகவும் புகழ் பெற்றவர்கள். கடந்த காலத்தில் மடோனா அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.


ரியான்னா : தற்போதைய  இசை உலகில் முன்னனியில் இருக்கும் பாடகி ரியான்னா, தென்னமரிக்காவில் உள்ள பார்படோஸ் நாட்டில் பிறந்தவர்.2005ல்  தனது இசைப் பயணத்தைத் தொடங்கியவர் இன்று அவர் தொட்டிருக்கும் உயரம் மிகப் பெரிது .குறிப்பிட்டு சொல்லக் கூடிய மூன்று பாடல்கள் -Umbrella ,we found love , diamonds .பாட்டில் மட்டுமன்றி நடனத்தினாலும் கவர்ச்சியான உடலமைப்பாலும் உலகம் முழுக்க பல்லாயிரக் கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் அழகிய  இசை தேவதை.

 மிக சமீபத்தில் வெளியிட்டிருக்கும் diamonds பாடலினை பார்த்தால் ரியான்னாவின்  குரல் வசீகரம் நிச்சயம் உங்களுக்குப் புரியும்.பாடலின் வரிகளினை முதல் முறை புரிந்து கொள்வது சற்று கடினமாகத்தான் இருக்கும். ஆனால் diamaonds  lyrics என்று youtube ல்  தேடினால் பல விடியோக்கள் வரும்.அவற்றின் மூலம் மிக எளிதாகப் பாடலின் அர்த்தத்தினை புரிந்து கொள்ள முடியும்.



பொதுவாகவே தமிழ் சினிமாவில்  ,கருப்பாக இருப்பவர்களை  அதுவும் கிராமப்புற பாடல்களை பாடுபவர்களை வெறுமென குத்துப் பாட்டுகளைப் பாட மட்டுமே பயன்படுத்தும் வழக்கம் தொன்று தொட்டு வருகின்றது. ஆனால் ஆப்பரிக்க அமெரிக்கர்கள் (afro -americans ) rap  எனப்படும் குத்துப்பாட்டு வகையிலான பாடல்களிலும்  மெலடிப் பாடல்கள் இரண்டிலுமே மிக வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர்.

ரியான்னா குரலினை சிறப்பம்சம் என்னவென்றால் ஒவ்வொரு முறை நாம்  கேட்கும் போதும் நம் மனம்  இன்பத்தின்  எல்லைக்கு சென்று திரும்பும்,வேறொரு உலகத்திற்கு கூட்டிச் செல்லும் வசீகரம் நிறைந்திருக்கும்  அற்புதமான குரல்.

 ரியான்னா பெற்ற விருதுகளும் பாரட்டுகளும் ஏராளம். இசை உலகின் அனைத்து முன்னணி இசைக் கலைஞர்களுடனும் இணைந்து பாடியிருக்கின்றார். rapper உலகின் மன்னன் என வர்ணிக்கப்படும் Eminem  உடன் இணைந்து பாடிய `love the way you lie ` பாடல் காதலர்களின் கீதமாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

உங்கள் குழாய்  அதாங்க youtubeல்  சென்று ரியான்னா பாடல்களை  கேட்டு மகிழுங்கள்.

by
Senkathiron

Saturday, June 16, 2012

கலைஞர் - நரேந்திர மோடி ஆச்சர்யமான ஒற்றுமைகள் :


வருங்கால இந்திய பிரதமருக்கான போட்டியில் முன்னணியில் இருப்பவர் மோடி. இந்த நிலையை அடைய  , கலைஞர் அரசியலில் உயர்ந்த நிலையினை அடைய பின்பற்றிய அனைத்து வழிமுறைகளையும்    போலவே மோடியும்  செய்தே இந்த நிலையினை அடைந்தார் என்பதுதான் ஆச்சர்யம்.

கலைஞரைப்   போன்றே மோடியும்   மிகவும் பிற்படுத்தப் பட்ட சமூகத்தில் பிறந்தவர் அதாவது மட்பாண்டம் செய்யும் குடும்பத்தில்  பிறந்தவர். அதுவே அவர் அடித்தட்டு மக்களின்  பிரச்சனைகளை பற்றிய  அதிகமான புரிதலுக்கு முக்கியமான காரணம் ஆகும். அதேப் போன்று  கலைஞருக்கு  எப்படி அண்ணா  பார்ப்பன  ஆதிக்கத்தை ஒழிப்பதற்கும்  திராவிடக் கொள்கைகளையும் பரப்புவதற்கும்   மிகச் சிறந்த வழி காட்டியாக அமைந்தாரோ அதனைப் போன்று மோடிக்கு இந்து தீவிரவாதத்தினையும்  முஸ்லிம்களின் மீதான வெறுப்பினையும்  கற்றுக் கொடுத்த குரு யாரென்றால்   காந்தியை சுட்டுக்  கொன்ற கோட்சேவின்  வழக்கறிஞர் .

ஈழப் போர் உச்சத்தில் இருந்த பொழுது அமைதியாக  வேடிக்கை பார்த்த கலைஞரைப் போன்றே   தன் மாநிலத்தில்  வாழும் அப்பாவி முஸ்லீம் மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கப் பட்டபொழுது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தவர் மோடி.

 இவை அனைத்தையும் விட முக்கியமான ஒற்றுமையே கலைஞர் எப்படி அண்ணாவுக்குப்  பிறகு தன்னை தமிழகத்தின்  முதல்வராவதற்கும் தி.மு.க. தலைவராவதற்கும்  முன்னிறுத்திக் கொண்டாரோ அதனையே மோடி மிக குறுகிய காலத்தில் செய்து இன்று பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் பா.ஜ.க .வில் முன்னணியில் இருக்கின்றார்.

 கட்சியில் அன்பழகன் ,நெடுஞ்செழியன் போன்ற திறமையானவர்கள் இருந்தும் மாவட்ட செயலாளர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாதால்  கலைஞர் முதல்வரானார்.  அத்வானி காலம் முழுக்க கட்சிக்காகப் பாடுபட்டு உழைத்திருந்தாலும் தனக்கான ஒரு வலுவான கூட்டத்தினை உருவாக்கிட முடியாததனால் இன்று பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் அவரை வெகு சுலபமாக  பின்னுக்குத் தள்ளி விட்டத்துதான் மோடியின் மிகப் பெரிய சாதனை.

இவை மட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான ஒற்றுமைகளை குறிப்பிட முடியும். குறிப்பிட்டு சொல்ல  வேண்டிய மற்றொன்று கலைஞர் ஈழப் போருக்கு ஆதரவாக உண்ணா விரதம் நடத்தியதனைப் போன்றே முஸ்லீம்கள்  கொல்லப் பட்டபொழுது எந்த நடவடிக்கையும் எடுக்காத மோடி அதற்குப் பிறகு மத நல்லிணக்கம் என்ற பெயரில் ஆடம்பர உண்ணா விரத நாடகம் நடத்தி அவர் கட்சியினரையே திகைக்க வைத்தார்.

மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவிக்கும் பட்சத்தில் கருணாநிதி அவரை ஆதரிக்க எந்த தயக்கமும் காண்பிக்க மாட்டார், அதற்கு நான் சொன்னதைப் போன்றே பிறபடுத்தப் பட்ட சமூகத்தை சார்ந்தவர் அதானலே தான் ஆதரிப்பதாக நிச்சயம் கூறுவார்.

சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ஆ.ராசா கூறியதைப் போன்றே கலைஞர் இந்திய அரசியலில் மிக முக்கியமானவர். அவரை முன்னுதாரணமாகக் (நல்லது,கெட்டது இரண்டுக்குமே )  கொண்டே பலரும் இன்று அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர்.

மற்றுமொரு பதிவில் மோடி பிரதமர் பதவிக்கு தகுதியானவர் தானா என்பதனை பற்றி பார்ப்போம்.

Saturday, June 9, 2012

உண்மையைச் சொல்லி தோற்றுப்போன அவன் இவன் மற்றும் ஆரண்ய காண்டம்


 :

   பொதுவாக அனைத்துத் திரைப்படங்களுமே மனிதர்களின் வாழ்க்கையினை மிகைப்படுத்தியோ அல்லது கற்பனைக்கு எட்டாத விஷயங்களை தொழில்நுட்ப உதவியுடன் நம்ப வைக்கும் விதத்திலே தான் எடுக்கப்படுகின்றன. எனினும் மிக அரிதாகவே சில திரைப்படங்கள் மட்டுமே மக்களின் உண்மையான வாழ்க்கையினை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்படுகின்றன. அதற்கு மிக சிறந்த உதாணமாக அமைந்த இரண்டு படங்கள் அவன் இவன் மற்றும் ஆரண்ய காண்டம்.

அப்படி என்ன உணமையினை சொல்லிவிட்டார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுவிட்ட இந்த நூற்றாண்டிலும் அவன் இவன் படத்தில்  தமிழக  கிராமங்களின் நிலையினை மாறாத கூரை வீடுகள் , வேலை இல்லாமல் சுற்றித் திரியும் இளைஞர் கூட்டம் ,கிடைக்கும் சொற்ப வருமானத்தில் நிம்மதியாக வாழும் மக்கள் என்று அனைத்தயும்  தெளிவாக படம்பிடித்து காண்பித்து இருக்கின்றார். இவை அனைத்தும் உண்மை என்பதனை கிராமங்களில் வளர்ந்தவர்களுக்கும் அவர்கள்  வாழ்க்கையினைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்தவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.

தாதாயிசம் பற்றி வந்த பெரும்பானமையான படங்கள் அனைத்துமே அவர்கள் மிக ஆடம்பரமான வீட்டில் வாழ்வது போலவும் , புத்தம் புதிதான கார்களில் சுற்றிக் கொண்டிருப்பது போலவும் காண்பித்துக் கொண்டிருந்த நிலையில் அவற்றினை தகர்த்தெறியும் விதமாக ஆரண்ய காண்டம் படத்தில் ஒரு குறுக்கு சந்தில் ,பழைய காருடன் இரண்டு மூன்று அடியாட்களோடு தாதா வாழ்வது போன்று  அமைத்திருப்பார். படங்களில் வருவது போன்றே ரவுடிகள் வாழ்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருன்க்கும் மக்களுக்கு தங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலே கூட ரவுடிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற உண்மையினை என்று உணரப்போகின்றார்களோ  தெரியவில்லை.

இந்த இரண்டுப் படங்களின் தோல்வியினால் கவனிக்கப்படாமல் போனவர்கள் நான்கு பேர். அவன் இவன் படத்தில் வரும் இன்ஸ்பெக்டர் ,ஆர்யாவுடன் வரும் அந்த சிறுவன் .இருவருமே வசன   உச்ச்சரிப்பினையும் ,  முக பாவனைகளையும் மிக இயல்பாக  வெளிபடுத்தி இருக்கின்றனர். அதுவும்  அந்த  சிறுவன் குறித்து பாலாவே  விஜய் தொலைகாட்சியில் படம் பற்றி குறித்து பேசும் பொழுது படத்தில் சிறப்பாக நடித்தவர் யார் என்ற கேள்விக்கு அந்த சிறுவன் பெயரினையே  குறிப்பிட்டார்.

ஆரண்ய காண்டத்தில் வரும் பழைய பண்ணையார் மற்றும் அவரின் மகனின் நடிப்பு அற்புதம் என்றால் மிகையல்ல. இருவருக்கும் இடையிலான பாசப் பிணைப் பிணைப்பினை உணர்த்தும் காட்சிகள் மிக இயல்பானவை.  அந்தப் பண்ணையார் குடித்து விட்டு உற்சாக மன நிலையில் பேசும் காட்சிகளும்,சிறுவன் தன் தந்தையினை மீட்க போராடும் காட்சிகளும் தனி திரைப்படமாகவே எடுக்கும் அளவுக்கு சுவாரசியமான பகுதி.

இந்த இரண்டு திரைப்படங்களை இதுவரை பார்த்திராதவர்கள்  யாரும் இருப்பின் அவசியம் பாருங்கள்!