Tuesday, February 3, 2015

நவாப் நாற்காலி -கருப்பு பணம் பற்றிய பழைய படம்

அந்தக் காலத்தில் விமானம் மட்டுமல்ல கருப்புப் பணமும் இருந்தது என்பதனை உணர்த்தும் படம் தான் நவாப் நாற்காலி. தமிழின் ஆகச்ச்சிறந்த நடிகர்கள் அனைவரும் நடித்திருந்த படம். புகழ் பெற்ற திரைக்கதை ஆசிரியரான கோமல் சுவாமிநாதன் அவர்களுடய நாடகம் ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டது.

1.தன் முதலாளி கொடுத்த கருப்புப் பணம் இரண்டு லட்சத்தினை கல்கத்தாவில் பறிகொடுத்ததால் பைத்தியமாகிவிடுவார் வி.ஸ்.ராகவன்.அவரின் மகளான லட்சுமி அந்தப் பணத்தினை திருடியவனைக் கண்டுபிடிக்க முயலும் போதும் லட்சிய இளைஞான ஜெய் சங்கருடன் காதல் வயப்பட அவரும் லட்சுமியுடன் இணைந்து அந்தப் பணம் திருடியவனை கண்டுபிடிப்பார்.

2.பத்துக் குழந்தைகளுக்கு பெற்றோரான காந்திமதி சகஸ்ரநாமம் அவர்களின் மூத்த மகன் நாகேஷ். இவர்களின் குடும்ப சொத்தான நாவாப் நாற்காலியை கில்மா பிர்ஞ்ச் படம் பார்க்க நாகேஷ் எல்லாக் கடையில் விற்று விடுவார். இந்த நாற்காலியை குழந்தை பாக்கியம் அற்ற விகே ராமசாமி வாங்கி செல்ல அதனை மீட்க சகஸ்ரநாமம் போடும் திட்டம் இரண்டாம் பகுதி.

ஜெய் சங்கர் கருப்புப் பணத்தினை பதுக்கி வைப்பதாலே இது போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றது என்று கூறி அந்தக் காலத்திலேயே கருப்புப் பணத்தின் தீமை குறித்து எடுத்துக் கூறிய படம்.

வார இறுதியில் ஒரு இரண்டு மணி நேரம் சிரித்து மகிழ்ந்து செலவிட ஒரு அருமையான படம். பார்த்து மகிழுங்கள்.

Sunday, February 1, 2015

மான்ட்ரியல் முருகன் ஆலயம்



       கனடாவில் உள்ள பிரபலமான நகரில் ஒன்றான மான்ட்ரியலில் அமைந்துள்ளது திரு முருகன் ஆலயம். கியுபெக் மாநில சைவ தமிழ் சங்கத்தினரால் நிறுவப்பட்டு, தமிழர்களுக்கு முருகன் அருள் பாலித்து வருகின்றார்.

பனிகள் (snows) சூழ்ந்த ஆலய கோபுரம் 


குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதனை மெய்ப்பிக்கும் வகையில் Mount-Royal என்றழைக்கப்படும் இடத்தில் நம்முருகன் இருக்கின்றார்.

விநாயகர் அருணாச்சலேஸ்வர்ர், வெங்கடாசலபதி , ஆஞ்சநேயர் ,நடராஜர் ,பைரவர் ,துர்க்கை அம்மன் ஆகியோருக்கு சந்நிதியும் நவகிரக சந்நிதியும் கொண்ட பெரிய ஆலயமாக அமைந்துள்ளது. காலை 8.30 முதல் மதியம் 1.30 வரையிலும் , மாலை 5 முதல் 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும் .

வாய்ப்பு கிடைத்தால் தவறவிடாது இந்த அந்நிய தேசத்து முருகனைக் கண்டு வழிபடுங்கள். நமக்கு நல்வழி அருள் புரிவான் முருகப்பெருமான்.

Snow covered temple

 கோவில் முகவரி :1611 Boul Saint Régis, Dollard-des-Ormeaux, QC

நன்றி 
செங்கதிரோன் 

பானு கோம்ஸ் -என்னமா இப்படிப் பண்றீங்களேம்மா ..

அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தினைக் கொண்டு வந்த போது அதனை மாயாவதி ,முலாயம் மற்றும் லாலு ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். அவர்கள் எதிர்த்தற்கான காரணம் இது சமூகத்தில் பின் தங்கிய பெண்களுக்கான குரல் ஒலிக்காமல் ,அங்கும் உயர் சாதிப் பெண்களே ஆதிக்கம் செய்வார்கள் என்பதனால் தான், அதனை மெய்பிக்கும் வகையில் செயல்படுவர்தான் பானு கோம்ஸ்.

ஏற்கனெவே அரசியலில் மம்தா மற்றும் நமது மக்கள் முதல்வர் ஆகிய உயர் சாதிப் பெண்களின் அரசியல் திறமைகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இவர்களை முன் மாதிரியாகக் கொண்டு மற்ற பெண்களும் தங்கள் அரசியல் வாழ்வை தொடங்கினால் பெண்களின் பங்களிப்பு அரசியலில் கேலிக் கூத்தாகிவிடும்.

பானு கோம்ஸ் அன்னா  ஹசராவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் கேஜ்ரியோடு பணியாற்றி பின்னர் சமூக ஆர்வலர் என்ற அடையாளத்துடன் புதிய தலைமுறையில் நேர்பட பேசு மற்றும் புதுபுது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் அடிக்கடி தோன்றி பிஜேபியை பாராட்டியும் திராவிட இயக்கங்களை திட்டியும் வருபவர்.



மேலே உள்ள புகைப்படத்தில் கேஜ்ரிவாளுடன்  சிரித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் பனுகோம்ஸ் தற்பொழுது கேஜ்ரிவால் போபியா வந்தது போல் அவர் பெயரக் கண்டாலே அலறுகிறார்.

அது மட்டுமன்றி முகப் புத்தகத்தில் பொன் மொழிகள் குறிப்பிடுவதில் வல்லவர். உதாரணத்துக்கு அவரின் பொன் மொழி ''இட ஒதுக்கீடு மூலம் படித்த மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கின்றார்''.இட ஒதுக்கீடு மூலம் படித்து தமிழக்த்தில் தலை சிறந்த மருத்துவர்கள் ஏராளமான பேர் இருக்கின்றனர்.இந்தியாவில் முதல் முறையாக கல்லீரல் மாற்று (liver transplantation) செய்து சாதனை புரிந்த Dr.சுரேந்திரன் , மருத்துவ உலகின் ரஜினி என்று நான் குறிப்பிட்ட Dr.தெய்வ நாயகம் , இருதய நோய் நிபுணர் Dr.சிவ கடாட்சம் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இப்படி இட ஒதுக்கீடு மூலம் படித்தவர்களை கொச்சைப் படுத்துபவரை என்னமா இப்படி பண்றீங்களேம்மா என்று கேட்பது தானே சரியாக இருக்கும்.

இந்தப் பதிவின் நோக்கம் பானு கோம்ஸ் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த மட்டுமன்றி, நாம் அனைவருமே தங்கள் மனைவி,தோழி ,சகோதரி மற்றும் தாயாரிடம் அரசியல் மற்றும் சமூக சூழல் குறித்து பேச வேண்டும்.ஆரம்பத்தில் அவர்களுக்கு போராடித்தாலும் பின்னர் காத்து கொடுத்து கேட்க ஆரம்பிப்பார்கள். அவர்களை தெளிவடைய வைத்தாலே போதும் பானு கோம்ஸ் போன்ற நேற்று முளைத்த காலங்களை நமது சமூக பெண்கள் எளிதில் ஒதுக்கி தள்ளி விடுவார்கள்.






Thursday, January 29, 2015

வெள்ளை நிற தாழ்த்தப்பட்டவர்கள்

தாழ்த்தப்பட்ட  மக்கள் என்றாலே கருப்பாக இருப்பவர்கள் என்று பதிந்து போன இந்திய மனதில் வெள்ளை நிறத்தில் எப்படி தாழ்த்தப்பட்டவர்கள் இருக்க முடியும் என்ற கேள்வி இயல்பானதே. ஆனாலும் இருக்கின்றார்கள் இந்தியாவில் அல்ல வெளிநாடுகளில் ,அதாவது அங்குள்ள பூர்வீகக் குடிமக்களை நம்மூரில் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வாறு ஒதுக்கி வைக்கும் சூழ் நிலை இருக்கின்றதோ அதே நிலை தான் அவர்களுக்கும்.நிறத்தில் வெள்ளயாக இருந்தாலும் பூர்வீகக் குடிகள் என்பதாலேயே ஒதுக்கிவைக்கபப்ட்டுள்ளனர்  ,குறிப்பாக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அவர்கள் ஒரு தகுதியான இடம் பிடிக்க இயலவில்லை. காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த அவர்கள் இப்பொழுது இடம் பெயர்ந்து நகரங்களுக்கு வர தொடங்கி இருக்கின்றனர். ஆனால் ஆனால் இங்கு அவர்களை வெள்ளை நிற சமூகம் அவர்களை காட்டு மிராண்டிகளாகவும் தீயவர்களாகவும் பார்க்கின்றனர். சமூகத்தால் ஒடுக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். 

தற்பொழுது பூர்வீகக் குடிமக்களின் தொடர் போராட்டம் காரணமாக ஏராளமான சலுகைகளை அரசாங்கங்கள் வழங்கி வந்தாலும் , அவற்றை சரிவரப் பயன்படுத்தி முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லும் தலைமை இல்லை. நம் ஊரில் இருப்பது போலவே அனைத்துத் தலைவர்களும் இந்தப் பணத்தினை பங்கு போட்டுக் கொண்டு அம்மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.அம்மக்களில் சிலர் அரசாங்கம் கொடுக்கும் பணத்தினை மட்டும் பெற்றுக் கொண்டு எந்த வேலையையும் செய்யாமல் பொழுதை கழிக்கின்றனர். அது மட்டுமன்றி காடுகளில் கீழங்குகளையும் இறைச்சிகளையும் உண்டு உடல் உறுதியுடன் வாழ்ந்தவர்கள் தற்பொழுது நகரங்களில் பல விதமான நொறுக்குத் தீனிகள் ஜங்க் உணவுகளை உண்டு ஆரோக்க்கிய மற்ற மனிதர்களாக பல்வேறு மருத்துவமனைகளில் பார்க்கும் போது மிகக் கவலையாக இருக்கின்றது.

இருப்பினும் தற்பொழுது நிலைமை சிறிது மாற்றம் அடைந்து வருகின்றது. குறிப்பாக கனடாவில் இம்மக்களுக்கு என்று தனியாக தொலைக்காட்சி நிறுவனம் பல்கலைக் கழகம் என்று இவர்களாகவே ஏற்படுத்தி தங்கள் சமூக மக்கள் முன்னேறப் பாடுபடுகின்றனர். இயற்கை 
வளங்களை பாதுகாப்பதில் இவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.



பொது இடங்களிலும் ,தொழில் நிறுவன்ங்களிலும் இவர்களை வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்ப்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலகம் முழுக்கவே பூர்வீகக் குடிகளின் இடங்களை ஆக்கிரமித்த  அந்நியர்கள் அம்மக்களின் உரிமைகளைப் பறித்ததோடு மட்டுமன்றி அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக எண்ணும் போக்கு இருக்கின்றது.

இறுதியாக சொல்ல விரும்புவது இப்பூர்வீகக் குடிகளின் உரிமைகளை நிலை நாட்டுவது மட்டுமன்றி அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவர்களையும் நம்மில் ஒருவராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நன்றி 

செங்கதிரோன்

Thursday, January 22, 2015

ஐ ஷங்கரின் திறமைக்கு சான்று

சுஜாதாவின் பக்த கோடிகள் ஐ படம் சுஜாதா பங்களிப்பு இல்லாததால் சுவார்ஸ்யமாக இல்லை என்று கூவுகின்றனர். கமலுக்கு வெளிநாட்டு பட்ங்களைக் காப்பி அடிக்க கற்றுக்கொடுத்து அவரைக் குட்டிசுவராக்கிய பெருமை சுஜாதாவையே சேரும். அடுத்து ஷங்கரையும் அது போன்று கெடுத்து வைத்தானால் தான் அவரும் கீழ்த்தரமான எண்ணங்கள் கொண்ட படங்களை இயக்கினார். அதற்கு முக்கிய உதாரணம் தமிழ்நாடே காறி துப்பிய பாய்ஸ் திரைப்படம்.

சமீபத்தில் காபி வித் டிடியில் வசந்தபாலன் அவர்கள் ஷங்கரிடம் மிக அருமையான ஒரு திரைக்கதை இருப்பதாகவும் அதனை திரைப்படமாக எடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். எனவே ஷங்கரின் சொந்தத் திறமையின் மேல் நம்பிக்கை வைத்த்திருக்கும் அவரின் ரசிகர்களில் நானும் ஒருவன். சுஜாதாவின் பாதிப்பே ஷங்கர் ஐ படத்தில் திருநங்கைகள் குறித்த காட்சி என்பதனை முழுமையாக நம்புகிறேன்.