Sunday, June 12, 2016

36 வயதினிலே தமிழர்களுக்கு எதிரானப் படம்:

கலாபவண் மணி இறப்பு குறித்து தீவிர விசாரணை நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். முதலில் அதிக மது குடித்ததால் இறந்தார் என்று சொல்லப்பட்டு பின்பு அது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்குப்பட்டிருக்கின்றது. ஆனால் மலையாளப் பத்திரிக்கைகள் மது அருந்துவதற்கு முன்பு கலாபவன் மணி காய்கறி சாலட் சாப்பிட்டவதாகவும் அந்த காய்கறிகளில் (பூச்ச்சிக் கொல்லி தெள்ளித்தனால்)நச்சுத் தன்மை இருந்ததனால்தான் அவர் இறந்து விட்டதாகக் கூறி தமிழக விவசாயிகள் மீது அந்தப் பழியினை சுமத்த முயற்சித்தார்கள்.


மஞ்சுவாரியார் நடித்து வெளிவந்த how old are you படத்தின் அடிப்படையே காய்கறிகளில் நச்சுத்தன்மை கலந்திருப்பதால் தங்கள் வீட்டிலேயே காய்கறிகளை வளர்க்க வேண்டும் என்ற நேரடியான கருத்தையும் இதன் மூலம் தமிழக விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் வாங்காமல் அவர்கள் வயிற்றில் அடிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை  கொண்டதாகும். இது நான் போகிற போக்கில் இந்தக் குற்றசாட்டை சொல்ல வில்லை, நீங்களே உங்களுக்கு தெரிந்த கேரள நண்பர்களிடம் கேளுங்கள் இதனை ஒப்புக்கொள்வார்கள்.கேரள ஊடகங்கள் தமிழக காய்கறிகள் குறித்து மிக மோசமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன அதன் ஒரு வெளிப்பாடே இந்த how old are you படம்.

ஆனால் சென்னையில் இருக்கும் சூர்யா இந்த அரசியலை புரிந்து கொள்ளாமல் தமிழர்களுக்கு எதிரான ஒரு படத்தினை தன் மனைவி ஜோதிகாவை வைத்து தயாரித்து வெளியிட்டார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெறாததற்கு முக்கியக் காரணமே , படத்தின் அடிநாதமான காய்கறி நச்சுத்தன்மை பிரச்சனை நம் மாநிலத்தில் இல்லை. ஓவ்வொரு தெருக்களையுமே தேடி காய்கறி வண்டிகள் வருகின்றன.ஆகையால் நமக்கு மிக தரமானக் காய்கறிகள் நல்ல விலையில் கிடைக்கின்றன.அப்டி இருக்கும் சூழ்நிலையில் நம் மண்ணுக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு படத்தினை எடுத்ததோடு மட்டுமன்றி , கேரளப் படத்திற்கு இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது கேரளா நம் விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் மீது கூறும் குற்றசாட்டினை அங்கீகரிப்பது போலானதாகி விட்டது.

எனவே தமிழ் திரையுலகை சார்ந்தவர்கள் பிற மாநிலப் படங்களை மொழிமாற்றம் செய்யும் போது  அந்தபடத்திற்குள் ஒளிந்திருக்கும்  நுண்ணரசியலில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

அனைவருக்கும் தெரியும்  கணவன் மனைவி உறவில் கேரளாவுக்கும் தமிழகத்திற்கும் மிகப் பெரும் வேறுபாடுகள் உண்டு. பெண்களை அவர்கள் நடத்தும் விதம் மிக வித்தியாசமானது அதிக ஆணாதிக்கப் போக்கும் , அவர்களுக்கு வெளிநாடு  செல்வது குறித்து அதீத ஆர்வம் ஆண் பெண் இருவருக்குமே இருக்கும்.

இவ்வளவு  குடும்ப அளவில் முரண்பட்ட மற்றும் நம் விவசாயிகளை களங்கப்படுத்தும் பிறமொழிப் படங்களை ஆதரிக்கவே கூடாது.

நன்றி 
செங்கதிரோன்   

Saturday, June 11, 2016

இசை உலகின் பயில்வான் பொறுக்கி

இசை உலகில் மிகவும் குண்டாக இருப்பவர்களைக் காண முடியும். ஆனால் பயில்வானாக இருப்பவர்கள் மிகவும் குறைவு. ராப் இசைக் குழுவை சேர்ந்தவர்களை நான் செல்லமாக பொறுக்கிகள் என்று குறிப்பிடுவதுண்டு. அதன் காரணமாகவே இசை உலகின் பொறுக்கிகள் என்ற தொடர் பதிவினை எழுதி வருகின்றேன். அந்த வரிசையில் இந்தப் பதிவில் பார்ப்பது புளோ ரிடா. இவரின் சொந்தப் பெயர் டிரமர் லாசெல் டில்லர்ட்  (Tramar Lacel Dillard), இருப்பினும் தான் பிறந்த ஊரின் (Florida)பெயராலேயே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
முதன் முதலாக 2000த்தில் இசைப் பயணத்தைத் தொடங்கிய புளோ ரிடா , மற்ற இசைக் கலைஞர்களான இசை உலகின் குண்டு பொறுக்கியான ரிக் ராஸ் ,டி -பெயின் மற்றும் ட்ரிக் டாடி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். இருப்பினும் பத்தாண்டுகள் கழித்து தான் ராப் உலகில் மிகப் பிரபலமானார்.


புளோ ரிடாவின் முக்கியப் பாடல்கள் குறித்து பார்ப்பதற்கு முன் அவருக்கு உடம்பை பலப்படுத்துவதில் இருக்கும் ஆர்வத்தினப் பார்ப்போம். இசைத் தொகுப்பை உருவாக்கவே அதிக நேரத்தை செலவிட வேண்டி இருக்கும் , இருந்தாலும் கிடைக்கும் சிறிது நேரத்திலும் தன்னுடைய பால்கனியில் நிறைய உடற் பயிற்சிகள் செய்வார். நடிகர் ஆர்யா போன்றே இவரும் பலருக்கு உடலை பலப்படுத்த வேண்டும் என்ற உதவேகத்தை கொடுப்பார்.அவர் உடற்பயிற்சிக் கூடத்தில் செய்யும் காணொளியைப் பாருங்கள், உங்களுக்கும் உடலைப் பலப்படுத்த வேண்டும் எண்ணம் நிச்சயம் ஏற்படும்.



இவரின் பாடல்கள் கேட்பதற்கு மட்டுமன்றி பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும் . எனக்குப் பிடித்த இவரின் பாடல்களை வரிசைப்படுத்துகின்றேன்.

1.Good feeling 
2.Whistle 
3.Wildones 
4.I cry 

எனக்கு மிகவும் பிடித்த பாடலான விசில் பாடலின் உங்கள் குழாய் இணைப்பினை கீழே கொடுத்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்.இந்த பயில்வான் பொறுக்கி உங்களுக்கு  இசையின் மூலம் மனதிற்கு  உற்சாகம் ஏற்படுத்துவான்.
                                             பாடல் வரிகள் காணொளி

இந்த இணைப்பில் என்றால் மேற்சொன்ன பாடலின் ஒலியும் ஒளியும் காணலாம்.
 https://www.youtube.com/watch?v=NwL98zzdEXo

நன்றி 
செங்கதிரோன் 

Wednesday, June 8, 2016

இசை உலகின் தேவதைகள் :மடோனா

ரஜினி குறித்து சொல்லப்படும் வசனமான வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை என்ற வாக்கிற்கு மிக பொருத்தமானவர் மடோனா,ஏனென்றால் அப்படி அழகு தேவதை.இந்தப் பெயரை கண்டிப்பாக நீங்கள் எங்கோ கேட்டிருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள் அல்லது அவரின் புகைப்படத்தினைக் கூட பார்த்திருப்பீர்கள் ,ஆனால் அவரின் பாடலைக் கேட்டிருகின்றீர்களா?

அவரின் பாடல்களைக் கேட்டால் , மடோனா fever என்றொரு வித்தியாசமான காய்ச்சல் கண்டிப்பாக வரும் . அவ்வளவு வசீகரமானக் குரல், அந்த காய்ச்சலில் இருந்து விடுபட பலநாள் ஆகும். இனி மடோனாவின் வாழ்க்கை, அவரின் பாடல்கள் மற்றும் அவர் செய்த சாதனைகள் குறித்து பார்ப்போம்.


அனைத்துப் பிரபலங்களைப் போலவே இவருக்கும் இளமைக் காலம் இன்னல் மிகுந்ததாக இருந்தது. இருப்பினும் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். தனது உயர்கல்வி படிப்பின் போது தான் நடனம் மற்றும் பாட்டு ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டினார். பின்னர் நியூயார்க் நகரம் சென்று கலைத்துறையில் கால் பதித்தார். அதன் பின்னர் அவருக்கு எல்லாமே ஏறுமுகமாக அமைந்தது.

என்பதுகளில் இவரின் நடனம் மற்றும் பாட்டு மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவியது. இதனால் பாப் இசை உலகின் ராணியாக முடிசூட்டப்பட்டார்.ஹாலிவுட்டிலும் தன் திறமையை நிரூபித்து சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதினைப் பெற்றார். அது மட்டுமன்றி நம் ஊரில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த நதியா வளையல், கொண்டை போன்றே மடோனா அணியும் உடைகள் மற்றும் அவரின் அழகு சாதனங்கள் அமெரிக்கப் பெண்களிடம் மிக அதிக வரவேற்பினைப் பெற்றது.


                                பாரிஸ் நகரத் தாக்குதலுக்குப் பின்னர் மடோனா பாடிய பாடல் 

மடோனாவின் சிறந்த பாடல்கள்:

இந்த நூற்றாண்டின் சிறந்தப் பாடகி மற்றும் வெகு காலம் இசைத் துறையில் இருப்பதால் ஏகப்பட்ட சிறந்த பாடல்கள் உள்ளன. எனவே எனக்குப் பிடித்த பாடல் வரிசையை மட்டும் குறிப்பிடுகின்றேன்.
1.Material girl 
2.Fever 
3.Prayer 
4.Girl gone wild 
5.Express yourself 
 இவற்றை உங்கள் குழாயில் கண்டுகளியுங்கள். நான் வசிக்கும் நகரத்திற்கு வருடா வருடம் வருவதுண்டு. 150$ (ரூ .9000) நுழைவுக் கட்டணம் , இருப்பினும் ஒரு முறை மடோனாவை நேரே பார்த்த பின் தான் அவரின் பாடல்கள் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமானது.


பின்குறிப்பு: 57 வயதாகிவிட்ட மடோனாவை இளம் தேவதைகள் தொடர் பதிவில் இணைத்ததற்கான காரணம் , இவரே தற்போதுள்ள அனைத்து இசை உலகின்  இளம் தேவதைகளுக்கும் முன் மாதிரியாக இருந்தவர்.

முந்தையப் பதிவு :இசை உலகின் இளம் தேவதைகள் :கெல்லி கிளார்க்சன்

நன்றி 
செங்கதிரோன்

கோகோ கோலா பாட்டிலால் குழப்பத்துக்கு உள்ளான ஒரு இனம்



கோக் மாறும் பெப்சி பானங்களில் நச்சுத் தன்மை உள்ளது என்று கூறிப் பல போராட்ங்கள் தற்பொழுது நடந்து வரும் காலகட்டத்தில் , அந்த பாட்டிலால் மிகப் பெரும் குழப்பத்திற்கும் கலகத்திற்கும் ஒரு இனம் ஆட்பட்டது என்பதனை நம்ப முடிகின்றதா ?

1980ல் வெளிவந்து உலகம் முழுதும் மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்ற படம் Gods must be crazy. தென்னாப்பிரிக்க நாட்டுப் படமான இது 100 மில்லியன் டாலர் வசூலைக் குவித்தது.

கதை :
பரபரப்பாக இருக்கும் நகரத்தின் 600 மைலுக்கு அப்பால் மிக மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பழங்குடி மக்களைப் பற்றிய கதை. மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மக்களிடைய ஆகாயத்தில் இருந்து ஒரு விமானி தூக்கி எறிந்த கோகோ கோலா பாட்டில் வந்து விழுகின்றது. இதற்கு முன்பு அப்படி ஒரு பொருளினைக் கண்டிராத அவர்கள் அதனை கடவுள் தங்களுக்கு தந்ததாக நம்புகின்றனர். அதனை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒரே  ஒரு பாட்டில் மட்டுமே இருப்பதால் அதனை ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாட முயற்சிக்கின்றனர்.இதனால் ஒற்றுமையாக இருந்த இவ்வினக் குழுவில் சண்டை ஏற்படுகின்றது. பிரச்சனைக்குரிய பொருளான இந்த கோகோ கோலா பாட்டிலினைக் கடவுளிடமே கொடுக்க முடிவு செய்து அந்தக் குழுவின் தலைவன் உலகின் எல்லைக்கு செல்கிறான்.


இங்கிருத்து தான் படம் தொடங்குகின்றது , அவன் பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள் பற்றி மட்டுமல்லாமல் , நகரத்தில் இருந்து கிராமம் நோக்கி வந்த ஒரு இளம் பெண் மற்றும் காட்டில் ஆராய்ச்சி செய்ய வந்த ஒருவர் இவர்கள் இருவரிடையான காதல் என சுவாரசியமாக செல்லும்.

இந்தப் படம் tamilyogi என்ற இணையதளத்தில் தமிழ் பதிப்பில் (tamil dubbed ) இருக்கின்றது . மிக நகைச்சுவையானப் படம் , உங்கள் குழந்தைகளுடன் கண்டு களியுங்கள்.

இந்தப் படத்தின் மையமான பழங்குடியினத் தலைவனாக நடித்தவரின் நிலை தான் சற்று பரிதாபகரமானது. ஆரம்பத்தில் சொன்னது போல 100 மில்லியன்இந்த திரைப்படம்  வசூலித்திருந்தாலும் இவருக்குக் கிடைத்தது மிகவும் சொற்ப தொகையான 2000$ மட்டுமே, அவருக்கும் பணத்தின் மதிப்பு தெரியாததினால்  மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்றுக் கொண்டார். பின்னர் தான் இவருக்கு பணத்தின் மதிப்பு புரிய ஆரம்பித்தது,அந்த சமயத்தில் பணம் சம்பாதிக்கும் வழி இல்லை . அவர் சாகும் தருவாயில் பட நிறுவனம் 20,000$ வழங்கியது(ரூ.10 லட்சம் ).

பெப்சி கோக் குறித்து  நான் முன்பு எழுதிய இந்தப் பதிவினையும் படியுங்கள்.

நன்றி 
செங்கதிரோன்  

Sunday, June 5, 2016

இறைவி கதாநாயகர்கள் உற்சாக பானம் அருந்திய நிலையில் ஒரு உற்சாக பேட்டி :காணத்தவறாதீர்கள்

இறைவிப் படத்தில் வருவது போலவே நிஜத்திலும் மூன்று கதாநாயகர்களும் உற்சாக பானத்தில் மிதந்து பின் அளித்த ஜாலி பேட்டி குறித்த சிறியப்  பதிவு.

                                                    உற்சாக  காணொளி 
1.கவனிக்க வேண்டிய அம்சங்கள் :பாபி சிம்ஹாவின் உடல் மொழி (body language )
2.படம் குறித்து சொல்ல சொன்ன போது மூவரும் மாறி மாறி நீங்க சொலுங்க சார் என்னும் அக்மார்க் உற்சாக பானம் அருந்தியவர் செய்யும் ரகளைகள் 

என் அன்புக்குரிய உங்களிடம் இந்த காணொளியினைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அனைவரும் ரசித்திருப்பீர்கள்.இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்
 
நன்றி 
செங்கதிரோன்