Saturday, December 31, 2016

கியூப புரட்சி வரலாறு குறித்த படம்-The Cuba libre history


கியூபாவில் ஸ்பானிய ஆக்கிரமிப்பு தொடங்கி இன்றைய நிலை வரை குறித்த ஒரு ஆவணப்படத்தினை Netflixல் பார்ததேன். மொத்தம் எட்டு பாகங்கள். அமெரிக்காவில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள கியூபாவினை ஒருவிளை நிலம் மற்றும் சுற்றுலாத்தலம் போல மட்டுமே அமெரிக்க பயன்படுத்த நினைத்தது. 


பொம்மை அதிபரை கியூபாவில் அமர்த்தி விட்டு  சர்க்கரை மற்றும் அரிசியினை அமெரிக்க இறக்குமதி செய்து கொள்ளையடித்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தான் செலவ்ந்தர் குடும்பத்தில் பிறந்த மற்றும் சட்டம் படித்த பிடல் காஸ்ட்ரோ நாட்டில் நடக்கும் இந்த அக்கிரமங்களை ஒழிக்க மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தினார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. 


இந்நிலையில் தான் மருத்துவப்படிப்பு முடித்து விட்டு மக்கள் சேவையில் ஈடுபட்டிருக்கும் சேகுவேராவை மெக்சிகோவில் பிடல் சந்திக்கின்றார். அதன் பின்னர் நடந்தவை அனைத்துமே வரலாறு. இருவரும் சேர்ந்து எடுத்த உடன்படிக்கையின் அடிப்படையில் கியூபா விடுதலைக்காக இணைந்து போராடுவது என முடிவு செய்தனர்.  கியூபாவின் ஒரு பகுதியில் பிடலும் மற்றோரு பகுதியில் சேகுவேராவும் தங்கள் படைகளுடன் கியூப அரசாங்கத்தினை எதிர்த்து கிளர்ச்சியினை உண்டாக்கி வெற்றி பெற்றனர்.

இவர்கள் இருவரும் அமைத்த அரசாங்கம் அமெரிக்க எதிரிப்பினாலேயே அவ்வளவு எளிதாக நிர்வகிக்க இயலவில்லை.  ரஷ்ய அரசாங்கம் அளித்த உதவி தான் கியூபா இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றது. கியூபாவின் தொழில் வளர்ச்சி மற்றும் ராணுவ கட்டமைப்பில் ரஷ்யாவுக்கு முக்கியப்பங்காற்றியது. சேகுவாரா சுதந்திர கியூபாவில் தொழில் துறை அமைச்சராக இருந்தார். அவர் செயல்பட்டவிதம் அளப்பரியது.களப்பணியில் நேரடியாக இறங்கி வேலை செய்து மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார். சேகுவேராவும் ,பிடலும் இணைந்து கரும்பு வெட்டுதல் பணியினை மக்களுக்கு அரசாங்கப்பதவியில் இருக்கும் போதே செய்தனர். மக்களுக்காக நான் என்ற சொல்லினை போலி அரசியல் தலைவர்கள் பயன்படுத்துகின்றார்கள் , ஆனால் அந்த சொற்றோடருக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்கள் பிடல்  மற்றும் மற்றும் சேகுவாரா.


இவ்வளவு கடுமையாக உழைத்தும் மக்கள் முழுமையாக நிம்மதியாக இல்லை.    முன்பே சொன்னது போல 90 மைல் தொலைவில் உள்ள கனவுதேசமான அமெரிக்காவில்  கூட்டம் கூட்டமாக  மக்கள் தஞ்சம் அடைந்தனர். அந்த நேரத்தில் மற்றோரு நிகழ்வும் நடந்தது. அமெரிக்கா கியூபாவினை தாக்க முற்பட ரஷியா கியூபாவில் சக்திவாய்ந்த அணுகுண்டுகளை அமைக்க அமெரிக்க அடிபணிந்தது. அமெரிக்காவும் துருக்கியில் ரஷ்யாவை தாக்க வைத்திருந்த அணுகுண்டினை அகற்ற சம்மதித்தது.

சேகுவாவரவின் மறைவு: கியூபாவில் குறிப்பிடத்தக்க பணிகள் ஆற்றிய பின்னர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று அங்கு நடந்த புரட்சி போராட்டங்களில் பங்கெடுத்தார். அவர் பங்கெடுத்த புரட்சி போர்களில் பெற்ற வெற்றி அமெரிக்காவின் வயிற்றை கலக்க அவர்கள் களத்தில் இறங்கினர். ஏனென்றால் முதலாளித்துவ நாடான அமெரிக்காவுக்கு கம்யூனிச சிந்தனை மூன்றாம் உலக நாடுகளில் பரவுவதை விரும்பவில்லை. எனவே தங்கள் படைபலத்தை  இறக்கி சேகுவாராவை  பொலிவியாவில்  சிறைபிடித்து கடைசியாக சுட்டுக்கொன்றனர்.

கியூபாவில் பிடல் கல்வி மருத்துவம்  ஆகியவற்றை  இலவசமாக்கி லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். இருப்பினும் பொருளாதாரத்தினை முன்னேற்றம் செய்ய அவர் எடுத்த எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெறவில்லை. எனவே சுற்றுலாத்துறையை  விரிவுபடுத்தி அமெரிக்க டாலரினை கியூபாவின் அதிகார பணபரிமாற்றத்திற்கு கொண்டுவந்தார், கூடுதலாக வெனிசுலா உதவிக்கரம் நீட்டியது. வெனிசுலா அதிபர் சாவெஸ் அமெரிக்க ஏதிர்ப்பில் இருந்ததால் அவரும் பிடலுக்கு தங்கள் நாட்டின் எண்ணெய் வளத்தில பங்களித்து கியூபா பொருளாதாரம்  சரிவர இயங்க உதவி வருகின்றார்.

ஒபாமா அதிபரான பிறகு அமெரிக்க-கியூப உறவில் ஒரு புதிய அத்தியாயம் பிறந்தது. ஒபாமா பிடலின் தம்பியை சந்தித்து உரையாடிய பின்னர் 1962ல் மூடப்பட்ட அமெரிக்க தூதரகம் 2015ல் மீண்டும் திறக்கப்பட்டது.ஆனாலும் இது கென்னடி அதிபராக இருந்தபோதே நடந்திருக்க வேண்டிய ஒன்று , ஆமாம் பிரெஞ்ச் பத்த்ரிக்கையாளரிடம் அமெரிக்க-கியூப உறவினை புத்துப்பிக்கும் தன் ஆசையினை வெளிப்படுத்திய கென்னடி அது குறித்து பிடலிடம் கருத்து கேட்க சொன்னார். அவர் சொன்னபடி அந்த பத்திரிக்கையாளரும் பிடலை சந்தித்து இது குறித்து பேசிக் கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். 

 கியூபாவில் பிடலுக்கு எதிராக  கலகக்குரல்களும்  ஓங்கி ஒலிக்கத்தான் செய்கின்றது. அவர்கள் கியூபாவை ஒரு ஜனநாயக நாடாகவும் சுதந்திரமான பொருளாதார கொள்கை கொண்ட ஒரு நாடாகவும் பார்க்க விரும்புகின்றனர். அவர்கள் நினைப்பது நடக்குமா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஏனென்றால் பிடலின் தம்பி 2018 வரை ஆட்சி பொறுப்பில் இருப்பேன் என்று சொல்லி இருக்கின்றார் . அவருக்கு பிறகு வரும் தலைமையைப் பொறுத்து தான் கியூபாவின் எதிர்காலம் இருக்கும்.

மேற்சொன்னவைகள் தான் அண்ட் எட்டு பாகத்தில் கியூப அரசியல் குறித்த ஒரு அறிமுகம். 

நன்றி 

செங்கதிரோன் 



Friday, December 30, 2016

2016ல் எனக்கு பிடித்த படங்கள், பாடல்கள் , அரசியல் பிரபலங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்


2016ல் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் 

1. அப்பா 
2. விசாரணை
3.மனிதன்
4.ஜோக்கர்
5.ஒரு நாள் கூத்து
6.தர்மதுரை
7.தில்லுக்கு துட்டு
8.ஆண்டவன் கட்டளை
9.இறுதி சுற்று
10.பிச்சைக்காரன்


2016ல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் 

1. ஆண்டிப்பட்டி கனவாகாத்து( தர்மதுரை)
2. மாய நதி ( கபாலி)
3.கண்ணம்மா(றெக்க)
4.தமிழ்செல்வி(ரெமோ)
5.அக்கா பெத்த ஜக்காவண்டி ( மருது)
6. அடியே அழகே ( ஒரு நாள் கூத்து)
7.தள்ளிப்போகாதே (அ.எ. மடைமையடா)
8.கண்ணடிக்கல( மாவீரன் கிட்டு)
9.ஹே மாமா( சேதுபதி )
10.ஆலுமா டோலுமா (வேதாளம்)



2016ல் சிறப்பாக செயல்பட்ட அரசியல் பிரமுகர்கள்

1. வானதி சீனிவாசன் (பாஜக)
2. மா பா பாண்டியராஜன் (அதிமுக)
3. வழக்கறிஞர் பாலு (பாமக)
4. சிந்தன் (கம்யூனிஸ்ட்)
5. கனகராஜ் (கம்யூனிஸ்ட்)
6. தமிழன் பிரசன்னா(திமுக)
7.மதிமாறன்(திக)
8.பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்)
9.அர்ஜூன் சம்பத் (இந்து மக்கள் கட்சி)
10.ஆளூர் ஷாநவாஸ் ( விசிக)


2016ல் என்னை கவர்ந்த தொலைகாட்சி காட்சி பிரபலங்கள்( செய்தி பிரிவு)

1. குணசேகரன் (news18)
2.தியாக செம்மல் ( புதிய தலைமுறை)
3. ஆழி செந்தில்நாதன் 
4. பெருமாள்மணி
5.அய்யநாதன்
6.முத்துகுமார்
7. ரவீந்திரன் துரைசாமி

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 

நன்றி 
செங்கதிரோன் 

Tuesday, November 22, 2016

வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கத்தில் நரகம் : அரக்க சமையல்


வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள சுவாரஸ்யங்களையும், தனிமை ஏற்படுத்தும் கஷ்டங்களையும் சொல்லும் நோக்கில் எழுதும் புதிய தொடர். இந்த பகுதியில் சமையல் குறித்த சில எண்ணங்கள் 

1.அது என்ன அரக்க சமையல் ? வெட்ட வெளியில் பல ஆண்கள் கூடி சமைத்தால் அது கூட்டாஞ்சோறு , அதுவே வெளிநாட்டில் வெகு சில ஆண்கள் அல்லது ஒரே ஒரு ஆண் சமைக்கும் அந்த முறைக்கு பெயர் தான் அரக்க சமையல்.

2. சமைப்பதில் அனுபவமே இல்லாத ஆண் , சமையலில் இறங்கும்போது உப்பு, காரம் அனைத்துமே அள்ளி அள்ளி போடுவார்கள் 

3. எந்த ஒரு முறைமையும் இருக்க்காது ,உதாரணத்திற்கு முதலில் வெங்காயம் பிறகு தக்காளி என இல்லாமல் மாறி மாறி போடுவது , அது மட்டுமன்றி , மசாலா தூள் போடும் அளவு தெரியாமல் ஒரு பாக்கட்டையே ஒரே ஒரு குழம்பில் கொட்டுவது என பல்வேறு சமையல் விதிகளை மீறி சமைப்பார்கள். மிக முக்கியமாக ஒரு ஆளுக்கு சமைக்க எவ்வளவு தேவை என்பன போன்ற அளவு தெரியாததால் ஒரே நேரத்தில் ஒன்பது பேர் சாப்பிடும் அளவுக்கு சமைத்து அதையும் சாப்பிட முடியாமல் வீணாக்குவார்கள்.


4. நம்மூரில் உள்ளது போல் அல்லாமல் வெளிநாடுகளில் முழுக்க முழுக்க மின்னனு அடுப்புகள் தான் , எனவே அவற்றில் பல சமயங்களில் நெருப்பினை அதிகம் வைத்து (Heat ) உணவு பாழாவதும் நடக்கும்.

5.ஆணுக்கு மிக மிக சரியாக சமைக்க தெரிந்த ஒரே உணவு சாதம் வைப்பது தான் . சொல்லி வைத்தது போல அனைத்து ஆண்களும் இதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்கள் .

மேலே சொன்ன அனைத்தும் தனியாக சமைத்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு தவறான ஒன்றாகவே தெரியாது . ஒரு பெண் அவன் வாழ்வில் வந்த பிறகு தான் , இவ்வளவு நாளும் அரக்க சமையல் தான் செய்து கொண்டிருந்தோம் என்ற உண்மை தெரிய வரும். பெண்களும் சமையலில் தவறுகள் செய்வார்கள் , எப்படி என்றால் நாம் எல்லாவற்றையும் (உப்பு, காரம் , காய்கறி) அதிகமாக போட்டால், அவர்கள் மேற்சொன்ன அனைத்தையுமே மிக மிக குறைவாகவே போடுவார்கள்.

ஆனாலும் அவர்கள் செய்யும் சிறு சிறு மாற்றத்தினால் உணவுக்கு கூடுதல் சுவை கிடைக்கும். தனியாக சமைக்கும் ஆண்கள் சாம்பார் வைத்தவுடன் வேலை முடிந்தது என்று நினைப்பார்கள் , ஆனால் உணவு சமைத்த முடித்த உடன் இறுதியாக தாளிப்பு என்ற ஒன்றினை செய்வார்கள் . இது போல பல உதாரணங்களை  கூறலாம். 


தல அஜீத் பிரியாணி சமைப்பதில் தேர்ச்சி பெற்று விளங்குவது போல் நம் நட்பு வட்டாரத்திலும் பல் உணவு ஸ்பேசிலைட் இருப்பார்கள்.

இது ஆண் சமையலை கிண்டல் செய்ய எழுதப்பட்டதல்ல , மாறாக ஆண் சமையல் முறை எவ்வாறு இருக்கும் என்பதனை படம்பிடித்துக் காட்டும் பதிவு மட்டுமே.

நன்றி 

செங்கதிரோன் 

பின் வாசல் வழியாக நுழையும் பாஜக

இடைத்ததேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறனது. ஏன் மாபெரும் வெற்றி என்று குறிப்பிடுகின்றேன் என்றால் ,அதிக அளவு பிரச்சரம் கிடையாது , ஆள் பலம் கிடையாது ,ரூபாய் நோட்டு பிரச்னை இவை அனைத்தையும் மீறி அது பெற்ற வாக்குகள் மிக கவனிக்கவேண்டிய ஒன்று . நீட காலம் இருந்துவரும் பாமக , மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இது மிகப்பெரும் பின்னடைவு . 


பாஜக தொடந்து இது போன்று மூன்றாம் இடத்தினை வரும் தேர்தலிகளிலும் பெற்றால் மேற் சொன்ன கட்சிகளை தமிழகத்தில் காணாமல் போகும் நிலை வரலாம். உயர் நடுத்தர வர்க்கத்து இளைஞர்களின் நாயகனான மோடி இப்பொழுது தொடர் பிரச்சாரங்கள் மூலம் கிராமத்து இளைஞர்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார் என்றே இந்த வாக்குகளின் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது. 



விஜயகாந்த் வட மாவடத்தில் உள்ள இளைஞர்களை தன் வசப்படுத்த சில காலம் செல்வாக்கு பெற்று விளங்கியது போல , மோடியை முன்னிலைப்படுத்தி பாஜகவும் வட மாவட்டத்தில் காலூன்றப் பார்க்கின்றது. தங்கள் சமுதாய இளைஞர்களை இப்படி வழி தவறி செல்லாமல் தடுக்கும் பணியில் உடனடியாக அந்தந்த தலைவர்கள் களத்தில் இறங்குவது நல்லது. இடைத்தேர்தலில் பாஜக பெற்ற மூன்றாம் இடத்தினை , வருங்காலத்தில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் பெற விடாமல் தடுத்தால் தான் நம் இளைய சமூகம் காக்கப்படும்.



 முன் வாசலில் நின்று கொண்டு திராவிடத்தை வீழ்த்த போராடிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் பினவாசல் வழியாக பாஜக எளிதாக நுழைந்து கொண்டிருக்கின்றது. 

நன்றி 
செங்கதிரோன்




Saturday, November 19, 2016

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரியின் தோல்வி எப்படி நிகழ்ந்தது?




வெற்றிக்கான அனைத்து வாய்ப்புகளும் தன்னை சுற்றி வைத்து இருந்த ஒருவர் தோல்வி அடையும் நிகழ்வுகள் விளையாட்டு , சினிமா , வணிகம் அனைத்திலும் நடக்கும். அதுவே தான் ஹிலாரிக்கும் நடந்தது. வெற்றிக்கு சாதகமான் அம்சங்கள் அனைத்துமே அவருக்கு தோல்வியினை ஏற்படுத்தும் காரணிகளாக மாறிவிட்டது தான் சோகம். அவற்றில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. முதல் பெண் வேட்பாளர்: அமெரிக்க மீன்கள் அனைவருமே இவரை ஒரு பெண்கள் முன்னேற்றத்த்திற்கான முன்மாதிரியாக பார்க்கவே இல்லை. ஏனென்றால் அடிமட்டத்த்தில் இருந்து ஒரு பெண் தனியாக போராடி மேலே வரும்  ஒருவரை தான் அனைவருமே கொண்டாடுவார்கள். ஆனால் ஹிலாரி நடுத்தர குடும்பப்பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் , அவரின் அரசியல் வளர்ச்சிக்கு அவரின் கணவரும் முன்னாள் அமெரிக்க அதிபருமான கிளிண்டனின் பங்கு மிக முக்கியமானது. எனேவ அவரை முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடைமொழிக்குள் வைத்து பெண்களால் கொண்டாட இயலவில்லை. நம் நாட்டில் மம்தா ,மாயாவதி போன்றோர் இவ்வாறுதான் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து முதலமைச்சரானார்கள் .

2. ஒபாமா:  ஒபாமாவின் ஆதரவு ஹிலாரிக்கு மிக பக்க பலமாக இருந்திருந்தாலும் , ஒபாமா தொடந்து இரண்டு முறை ஆட்சி செய்து அதே கட்சியில் இருந்து ஹிலாரி இன்னொரு முறை ஆட்சி செய்ய வாய்ப்பு கேட்டதே அவருக்கு ஆப்பாக அமைந்து விட்டது. ஏனென்றால் உலகை உய்விக்க வந்த கடவுள் போல கொண்டு வரப்பட்ட ஒபாமா பெரிய அளவுக்கு எந்த மாற்றமும் அமெரிக்காவில் நடக்கவில்லை என்பது தான் நிதர்சனம். மாற்றம் விரும்பிய மக்கள் ஹிலாரியை புறக்கணித்து விட்டார்கள்.

3. பில் கிளிண்டன்: அமெரிக்காவை இரண்டு முறை ஆட்சி செய்தவரின் மனைவி என்பதனால் நிறைய ஆதரவு கிடைத்த. அந்த ஆதரவு தளத்தினை நசுக்கும் விதமாக கிளிண்டன் ஆட்சி காலத்தில் நடந்த தவறான நிர்வாக முடிவுகளின் விளைவுகளையும் ஹிலாரியின் தோல்வியாக ,டிரம்ப் தொடந்து முன்னிறுத்தினார். அந்த அணுகுமுறை டிரம்புக்கு மிகப் பெரிய அளவில் உதவி செய்தது (கிளிண்டன் கொண்டு வந்த நாப்டா ஒப்பந்தத்தினால்   தான் அமெரிக்கர்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டது என்ற குற்றசாட்டினை தொடர்ந்து பிரச்சாரங்களில் பதிவு செய்தனால் ஹிலாரிக்கு பெரும் சேதம் ஏற்பட்டது)



இது போல ஏராளமான காரணங்கள் இருப்பினும் மேற்சொன்னவை தான் ஹிலாரியின் தோல்விக்கு மிக முக்கிய காரணிகளாக அமைந்தன.

 நன்றி
செங்கதிரோன்