Tuesday, April 18, 2017

நீயா நானா பொய் பரப்புரைகள்;

அமெரிக்காவில் 3% சதம் மட்டுமே விவசாயம் செய்கின்றார்கள் . இது போன்ற கருத்தை பிரேம் என்ற ஒருவர்  தெரிவிக்கின்றார். இது எல்லோருக்கும் ஆச்சரியமும் வியப்பும் அளிக்கக் கூடிய கருத்தாக இருக்கும்.ஆனால் வருடத்தில் ஆறு மாதம் குளிர் நிலவக்கூடிய பிரதேசத்தில் 3%சதம் தான் விவசாயம் நடக்கும் . வருடம் முழுதும் விவசாயம் செய்வதற்கேற்ற நிலபரப்பினை வைத்துள்ளோம், அப்படியிருக்க நாம் ஏன் அமெரிக்கா போல. இருக்க வேண்டும்? 

அறிவாளி பிரேமின் கருத்தினையும், அதற்கான என் எதிர்வினையையும் கீழே உள்ள காணொளியில் பாருங்கள் .



விவசாயம் காப்போம்.

நன்றி
செங்கதிரோன் 

ஐந்து முதலைகளின் கதை: புத்தக மதிப்புரை

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு ஏற்ப  வெளிநாட்டில் தொழில் செய்ய போனவர்களை  பற்றிய கதை.  

சீனர்கள் ஆண்மை விருத்திக்காக எதையும் சாப்பிடுவார்கள். அப்படி அவர்கள் விரும்பி சாப்பிடுவது தான் வெள்ளை அட்டை சூப். நம்ம ஊரில் கிடைக்கும் கருப்பு அட்டை போன்று தைமூரில் வெள்ளை அட்டை வெகுவாக கிடைக்கும். அதனை கொண்டு சூப் தயாரித்து விற்பனை செய்யலாம் வியாபாரம் பண்ணலாம்  என்று எண்ணி அவர்கள் வருகின்றனர். அப்படி வந்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அந்த ஊரில் வெள்ளை அட்டை மிகவும் குறைவாகவே இருந்தது மற்றும் அந்த ஊர் மிகவும் செல்வச் செழிப்பான நாடாக இல்லை. மிகவும் வறுமையுள்ள நாடாகவே தென்பற்றது. இதனை அறிந்த அவர்கள் சில நாட்கள் அங்கேயே தங்கி அடுத்ததை பற்றி சிந்திக்கின்றர். அவர்கள் அங்கே தங்கியிருந்த வேளையில் அங்கே தொழில் செய்து கொண்டிருந்த இந்திய தொழிலதிபர்களை சந்திக்கின்றனர். இங்கிருந்து சென்றவர்களுக்கு அங்கே உள்ள தொழிலதிபர்களுக்கும் நடக்கும் நட்பு, பகை மற்றும் பல ஸ்வாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பே இந்த கதை.


வணிகத்தில் ஈடுபட்டிருப்போரும் வணிகத்தில்  ஈடுபடவிருப்போருக்கும் இந்த புத்தகம் மிகவும் தலைசிறந்த எடுத்துக்காட்டாக திகழும். வணிகத்தில் ஈடுபட்டிருப்போர் பல இடங்களில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை நேரடியாக படித்துப்பார்த்து போல் உணர்வார்கள். அவர்களால் பல சந்தர்ப்பங்களில் தங்களை பொருத்திப்பார்க்க முடியும். எழுத்தாளர் சரவணன் சந்திரன் எழுதிய இந்த புத்தகம்  உயிர்மை  பதிப்பகத்தில்  கிடைக்கும்.

விலை ரூ.150.

நன்றி 
செங்கதிரோன் 



Friday, April 7, 2017

உலக சித்த மருத்துவ தினம் : சித்த மருத்துவத்தால் அனைத்து நோய்களும் குணமாகுமா ?

நோய்களின் வகைகள் மற்றும் அவைகளின் குறிகுணகள் குறித்தும் மிக தெளிவாக விளக்கியவர் யூகி முனி. உடம்பில் உள்ள நோய்களின் எண்ணைக்கையின் மொத்தம் 4448 என்று அறுதியிட்டு கூறியிருக்கின்றார்.எயிட்ஸ் நோய்க்குமான சிகிச்சையினை (முழுமையாக தீர்க்கக் கூடிய அளவுக்கு அல்ல ) சித்த மருத்துவத்தில் சாத்தியப்படுத்தியதற்கும் யூகிமுனியே காரணமாக அமைந்திருக்கின்றார் . ஏனென்றால் அவர் கூறிய வெட்டமேகம் என்ற நோயின் குறிகுணங்களும் எயிட்ஸ் நோயின் குறிகுணங்களும் ஒத்துப் போவதால் சித்த மருத்துவத்தில் அதற்கான சிக்கிச்சையினை வழங்கப்பட்டது .

அனைத்து நோய்களையும் தீர்க்கக் கூடிய மருத்துவ முறை ஒன்று உலகிலேயே இல்லை. அலோபதி மருத்துவர்கள் புற்று நோய்க்கு தீர்வு இல்லை என்று ஒப்புக் கொள்கின்றனர். நவீன கண்டுபிடிப்புகள் இன்றும் ஏட்டளவில் மட்டும் உள்ளது.

சித்தர்களும் எல்லா நோய்களையும் தீர்க்க முடியுமா  என்பதற்கற்கான தெளிவான விளக்கத்தினை சொல்லி இருக்கின்றனர் . அது என்ன என்பதனை காணொளியில் காணுங்கள்.




நன்றி 
செங்கதிரோன் 

Wednesday, April 5, 2017

சித்தர்கள் மந்திரவாதிகளா :-உலக சித்த மருத்துவ தினம்

சித்தர்கள் குறித்த பல்வேறு கற்பனையான கட்டுக்கதைகள் உள்ளன. மந்திரவாதிகள் பலரும் சித்தர்கள் பெயரினை வைத்துக் கொண்டு மாந்த்ரீகம் ,பில்லி ,சூனியம் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.  சித்தர்கள் அட்டமா சித்திகள் போன்ற சக்திகள் தவ வலிமையினால் பெற்றவை .  அது குறித்த ஒரு தெளிவான ஒரு காணொளி தான் இது . பர்த்து விட்டு  உங்கள் கருத்தினைக் கூறுங்கள்.



நன்றி 
செங்கதிரோன் 

Friday, March 24, 2017

புதிய சித்த மருத்துவ வரலாறு -உலக சித்த மருத்துவ தினம்

புதிய சித்த மருத்துவ வரலாறு :
இரண்டு கூறாக பிரிக்கலாம்- தெய்வ நம்பிக்கை சார்ந்தது, இலக்கியம் சார்ந்தது . இலக்கியம் சார்ந்தது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது . ஏனெனில் தொல்காப்பியம் மற்றும் திருக்குறளில் சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புகள் உள்ளன. இதிலிருந்து தெரியவருவது என்னவெனில் உலகின் பழமையான மருத்துவங்களில் சித்த மருத்துவமும் ஒன்று.

நன்றி
செங்கதிரோன்