Thursday, May 21, 2015

தெலுங்கர்களுக்கு பிடிக்காத வார்த்தை தமிழன்

செம்மரக்கடத்தல் விவகாரத்தில் தமிழர்கள் உயிரிழந்த விவகாரம் சூடு பிடித்திருக்கும் வேளையில் தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்குமான உறவினை நாம் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.தொப்புள் கொடி உறவு என்ற ஈழத் தமிழர்களைக் குறிப்பிடும் நாம் , பக்கத்துக்கு மாநிலங்களில் வாழும் மலையாளி, கன்னடர் மற்றும் தெலுங்கர்களை அவ்வாறு கருதாதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.

மொழி தான் நம்மைப் பிரித்து வைத்திருக்கின்றதா என்று பலர் கூறினாலும் அதில் ஓரளவுக்கு உண்மை உண்டே என்று தோன்றுகின்றது. ஏனெனில் இது போன்ற ஒரு பிரச்சனைக்கு வித்திட்டவர் மொழியியல் அறிஞர் கால்டுவெல், தமிழின் எச்சங்களே மற்ற திராவிட மொழிகள் என்ற அவரின் கோட்பாடு மற்ற மாநிலத்தவருக்கு தமிழர்களின் மேல் ஒரு வித காழ்புணர்ச்சியும் தாழ்வு மனப்பான்மையும் உண்டாக்கி விட்டது.

இதன் தொடர்ச்ச்சியாக கருணாநிதி திராவிட நாடு என்ற ஒரு புது கொள்கையினை உருவாக்கி பீதியைக் கிளப்ப ,பயந்து போன அண்டை மாநிலத்தவர்கள் , இந்த கொள்கையை ஏற்றுக் கொண்டால் தாங்கள் தமிழர்களின் எச்சம் எனபது உறுதியாகிவிடும் ,வட இந்தியர்களுடன் இணக்கமான ஒரு சூழலிணை உண்டாக்கிக் கொண்டனர்.

இறுதியாக தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பின் போது மற்ற திராவிட மாநிலங்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ள மத்திய அரசின் மொழிக் கொள்கையினை ஏற்றுக் கொண்டனர்.இதன் விளைவாக தமிழன் இந்தியாவில் தனித்து விடப்பட்டான்.இப்பொழுது தலைப்புக்கு வருவோம் , தெலுங்கர்களுக்கு மட்டும் தான் தமிழர்களைப் பிடிக்காதா என்ற எண்ணம் ஏற்படலாம் , மற்றவர்களுக்கு ஏற்படின் அது அவ்வளவு முக்கயத்துவம் வாய்ந்தது அல்ல. தமிழகத்தின்  தலை நகரம் தொடங்கி இண்டு  இடுக்கு வரை வாழும் இவர்களுக்கு நம்மைப் பிடிக்க வில்லை என்றால் அது ஏன் என்று அறிந்து கொள்ள்ளவேண்டிய அவசியம் இருக்கின்றது.

வரலாறு :
முதலில் வரலாற்று  ரீதியாக பார்ப்போம். தமிழர்கள் சொல்வது தெலுங்கர்கள் இங்கிருந்து தனியாகப் பிரிந்து சென்று ஒரு புது இனக்குழுவாக மாறி , தமிழும் சமஸ்கிருதமும் கலந்த ஒரு மொழியினை உருவாக்கிக் கொண்டார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் தெலுங்கர்கள் என்ன சொல்கின்றார்கள் தெரியுமா , லெமூரியக் கண்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள் , கடல் கோள்  (Tsunmai ) ஏற்பட்ட பின்னர் தமிழர்கள் தாங்கள்(தெலுங்கர்கள்)  வாழ்ந்த பகுதினை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்று கூறுகின்றனர்.அதாவது நாம் தற்பொழுது வாழும் தமிழகம் என்ற நிலபரப்பு தெலுங்கர்களுக்கு சொந்தமானது என்றும் அவர்கள் ஒரு புதிய வரலாற்றினை சொல்கின்றனர்.அதனை நிரூபிக்க தமிழகத்தின்  அனைத்து மாவட்டங்களில் வாழ்ந்து வரும் தெலுங்கர்களை உதாரணமாகக்  காட்டுகின்றனர்.

மேற்சொன்ன இரண்டில் எது உண்மை என்பதனை நிருபிக்க வேண்டியது வரலாற்று ஆய்வாளர்களின் கடமை. இருப்பினும் இலக்கிய அடிப்படையில் பார்த்தால் தமிழுக்கு முன்பாகவே எந்த ஒரு இலக்கியமும் அங்கு எழுதப்படவே இல்லை. இதனை தான் தமிழர்கள், தெலுங்கு  தமிழில் இருந்து பிரிந்த ஒன்று  , தமிழர்களே மூத்த  குடி என்பதற்கான மிக முக்கிய ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.

தற்பொழுதைய காலத்திற்கு வருவோம் , வாழ்க்கை முறையில் இருந்து வழிபாட்டு முறை வரை அனைத்திலும் தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டாகி விட்டது. உருவ அமைப்பிலும் உணவு பழக்க வழக்கங்களில் மட்டும் தான் நம்மிடையே ஒற்றுமை எஞ்சி இருக்கின்றனது.


சமூக நிலை :
பெரியாரால் இங்கு சமூக விடுதலையும் சாதி ஒழிப்பும் ,மூட நம்பிக்கை ஒழிப்பும் சாத்தியமாயிற்று. அங்கே இந்த நிலைமை தலை கீழாக இருக்கின்றது. ராமர் வழிபாடு மிகப்பரவலாக உள்ளது. சாதிய ரீதியாக மாணவர்கள் தனி தனியாகப் பிரிந்து கிடப்பது என்பது மிக சர்வ சாதரணமான ஒன்று. ரெட்டி மற்றும் நாயுடு தவிர்த்தவர்கள் எந்த ஒரு துறையிலும் முன்னேறுவதற்கு பல சவால்களை சந்திக்க நேரிடுகின்றது.

திராவிடர் கழகத்தால் நடைபெற்ற தாலி அகற்றும் நிக்ழச்சியைப் பார்த்து தமிழன் just like that என கடந்து விட்ட சூழலில் ஆந்திராவில் அந்த நிகழச்சி மிகப் பெரிய தலைப்பு செய்தியாகி விட்டது. திரும்ப திரும்ப ஒளி  பரப்பிக் கொண்டிருகிருந்தனர் . அந்தளவுக்கு காலத்தால் பின்னோக்கி வாழ்கின்றனர்.திராவிடர் கழகத்தால் நடைபெற்ற தாலி அகற்றும் நிக்ழச்சியைப் பார்த்து தமிழன் just like that என கடந்து விட்ட சூழலில் ஆந்திராவில் அந்த நிகழச்சி மிகப் பெரிய தலைப்பு செய்தியாகி விட்டது. திரும்ப திரும்ப ஒளி  பரப்பிக் கொண்டிருகிருந்தனர்.என்னுடைய தெலுங்கு நண்பன் ஒருவன் இந்த நிகழ்ச்சி குறித்து குறிப்பிட்டு சண்டைக்கே வந்து விட்டான். கீழே உள்ள உங்கள் குழாய் (Youtube ) இணைப்பில் ஆந்திர தொலைக்கட்சியில் விரிவாக ஒளிபரப்பட்ட அந்தக் காணொளியை பாருங்கள்.

கல்வி:
இப்படி மூட நம்பிக்கையினை பின்பற்றி வாழ்ந்தாலும் கல்வியில் தமிழகம் தொட முடியாத உயரத்திற்கு சென்று விட்டனர். IIT யில் அதிக எண்ணிக்கையில் பயில்வர்களில் முதலிடம் ஆந்திர மாணவர்கள்தான். இதனால் இவர்களின் வாழ்க்கைத் தரம் தமிழர்களை ஒப்பிடுகையில் மிக சிறப்பாக இருக்கின்றது. நான் பார்த்தவரையில் படிப்பில் மிக மிக கவனமாகவும் அதிக பொறுப்புணர்ச்சியுடனும் இருப்பார்கள் இதுவே இவர்களின் வெற்றிக்குமுக்கியக் காரணமாக இருக்கின்றது.

இருப்பினும் இதில் கூடவே ஒரு சில சிக்கல்களும் உள்ளது, படைப்பாற்றல் என்ற ஒன்றில் அவர்கள் எந்த வித கவனமும் செலுத்த முடிவதில்லை, எளிதாக வேலை கிடைக்கக் கூடிய படிப்புகளையே அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்.அதனால் தான் இன்று வரை ஒரு சிறந்த விஞ்ஞானி அங்கு உருவாகவே இல்லை. தமிழ் நாட்டில் இருந்து நோபல் பரிசு பெற்றவர்கள் இருப்பது போல் அங்கு இல்லை.

பெருமையாக சொல்லிக்கொள்ள இருக்கும் ஒரே நபர் தற்பொழுதைய microsft தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா மட்டுமே. இதனை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர். நாம் நம் இலக்கிய பெருமைகளைப்  பேசினால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.எனவே இந்து மதத்தினை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். அதனை தங்கள் வரலாறு என்று கூறிக் கொள்வதன் மூலம் தமிழர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நிறுவ முயல்கின்றனர் .


திரையுலகம்:
இங்கே சினிமா மட்டும் தான் தமிழர் தெலுங்கர்களிடையே ஒரு பெரிய இணைப்புப் பாலமாகத் திகழ்கின்றது. NTR , சிரஞ்சீவி ,தற்போது அவரின் மகன் ராம் சரண் வரை சினிமா ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர்.முகப் புத்தகத்தில் பதமிழக இளைஞர்கள் பலரும்  தெலுங்கு கதாநாயகர்கள் புகைப்படத்தினை  profile ஆக வைத்திருக்கின்றனர், இதில் பெண்களும் தெலுங்கு கதாநாயகர்களை மிகவும் ரசிக்கின்றனர்.ஆந்திராவில் தமிழ் சினிமா கதாநாயகர்களை விட இசை அமைப்பாளர் இளையராஜா , இயக்குனர்கள் , நடன இயக்குனர்களுக்கு ஒரு பெரிய வரவேற்பு இருக்கின்றது.


தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்ற குரல் சமீப காலமாக ஓங்கி ஒலிக்கின்றது. அது போல ஆந்திராவிலும் தெலுங்கர்கள் தங்கள் தமிழர்களின் நீட்சி  அல்ல தாங்கள் ஒரு சுயம்பு என்பதனை நிரூபிக்க முயன்று கொண்டிருக்கின்றனர்.இணையத்தில் ஒரு சில இடங்கிளில் தமிழர் தெலுங்கர்  விவாதம் நடந்து கொண்டு தான்இருக்கின்றது. அது வீதிக்கு வராதவரை நல்லது. 

நான் உணர்ந்தவரை தமிழர்களின் நீண்ட நெடியப் பாரம்பரியப் பெருமை தெலுங்கர்களுக்கு தாழ்வு மனப்பானமையை உண்டாக்குகின்றது.இதுவே அவர்களுக்கு நம் மேல் வெறுப்பு உண்டாக வித்திடுகின்றது . வேறு ஏதேனும் காரணம் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இந்த நீண்டபாதிவினை பொறுமையாகப் படித்ததற்கு மிக்க நன்றி .

Wednesday, May 20, 2015

இசை உலகின் குண்டு பொறுக்கி

 இந்த தலைப்பைப்  பார்த்தவுடன் தமிழ் சினிமா இசை உலகில் இயங்கும் இருவரின் முகம் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல.  ஆனால் நான் எழுதப் போகும் இசை பிரபலத்தினைப் போன்றே ஒருவர் மலேசியாவில் இருக்கின்றார், உங்களுக்கு மிகவும்  அறிமுகமானவர் தான் அவர், தனுஷின் பொல்லாதவன் படத்தில் எங்கேயும் எப்போதும் பாடல் ரீமிக்ஸில் பாடியதோடு மட்டுமின்றி ஆடியும் இருப்பார். முதலில் இசை உலகின் பொறுக்கி  என்று எழுதவதற்கான காரணம் என்ன்னவேன்று தெரிய விரும்பினால் ,இசை உலகின் பொறுக்கிகள் என்ற இந்த பதிவினைப் படிக்கவும். இந்தப் பதிவினை படித்தவர்கள் பொறுக்கிகள் என்று ஏன் குறிப்பிடுகின்றேன் என்று நன்கு புரிந்திருக்கும்.


ராப் இசை உலகில் பலரும் குண்டாக  இருந்தாலும் , தற்போதைய நிலையில் மிக பிரபலமாக இருப்பவர் ரிக் ராஸ் இவரப் பற்றிதான் இன்றையப் பதிவு.இவரின்  இசை பயணம் , சிறந்த பாடல்கள் குறித்து பார்ப்போம்.



மிக மிக சமீபத்தில தொடங்கிய ரிக்கின் இசைப் பயணம் , ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. ராப் பாடல்களில் சத்தம் அதிகமாக இருக்கும் என்பது தெரிந்த ஒன்று, ரிக் மிக மிக அதிக சத்தமாக பாடுவார். அதுவும் அதிக எடை கொண்ட இந்த உடம்புடன் அவர் ஆடும் பொது சில சமயம் நகைச்சுவையாகத் தோன்றினாலும், அவரின் குரலில் இருக்கும் வசீகரம் அதனை மறைத்து விடும். ஆனாலும் இளையராஜா ,ஏ .ஆர்.ரகுமான் பாடல்களைக் கேட்டு பழக்கப்பட்டவர்களுக்கு இந்த இசைக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள வெகு சிரமமாக இருக்கும்.

இவரின் பாடல்களில் இரண்டே இரண்டை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன். இந்தப் பாடலகள் பிடித்திருந்தாலோ அல்லது இவரின் மற்ற பாடலகளை பார்த்து மகிழ விரும்பினால் உங்கள் குழாய் (youtube ) செல்லுங்கள்.அங்கே ஏராளமான பாடல்கள் உள்ளன. குறிப்பாக சமீபத்தில் வெளியான hood billionaiere இசை   முழு தொகுப்பும் உள்ளது. diced pinepples என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அதனைக் கேளுங்கள். மேலும் hold me back என்ற மற்றுமொரு பாடல் உள்ளது, இது நமது வாடா சென்னை பகுதியில் எடுத்தது மாதிரி இருக்கும்.



எனக்கு இவருடைய சொந்த இசைத் தொகுப்பிலிருக்கும் பாடல்களை விட மற்ற  ராப் இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடிய பாடல்கள் தான் மிகவும் பிடிக்கும். டைகாவுடன் இணைந்து பாடிய Dope  ,உஷருடன் இணைந்து பாடிய let me  see ஆகிய பாடல்கள் இவரின்  பங்களிப்பு மிக சிறப்பாக இருக்கும்.


அடுத்ததாக இசை உலகின் பணப் பொறுக்கி ஒருவர் குறித்து பார்ப்பபோம்.

Tuesday, May 19, 2015

ஹாலிவுட்டின் கில்மா இயக்குனர் :ரஸ் மேயர்

ஹாலிவுட் படங்களில் வன்முறையும் ஆபாசமும் சற்று தூக்கலாகவே இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்று.ரஸ்  மேயர் முழுக்க முழுக்க கில்மா படங்களை எடுப்பதையே தன்  லட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர்.குறைந்தது 15 வருடங்கள் திரைத்துறையில் இயங்கிய அவர் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். 

தள்ளாத வயதிலும் எப்படிப்பட்ட ரசனைக்காராக இருக்கின்றார் பாருங்கள்.

பிரபல தமிழ் சினிமா பதிவர்கள்  யாரும் இவர் குறித்து  எழுதி இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. இல்லை எனில் இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகின்றேன்.

மிக பிரபலமான தொலைகாட்சி தொடரான Game of thrones  வீடியோவினை primewire இணையதளத்தில் தேடிக் கொண்டிருக்கும் பாத்து தான் Vixen என்ற ஒரு படம் அங்கே கண்ணில் பட்டது .ஆரம்பமே அதகளமாக இருந்தது, போக போக முழுக்க ஒரே கில்மா தான்,பின்னர் தான் இந்தப் படத்தின இயக்குனர் யார் என்று கண்டுபிடித்தால் ரஸ் மேயர் என்று விக்கி பீடியா சொன்னது. அவரின் மற்றொரு படமான் up உம் இதே ரகம் தான்.


பேச்சிலர்கள் சனிக்கிழமை இரவுகளில் பார்க்க தகுந்த படம். திருமணமானவர்கள் மனைவி மாமனார் வீட்டுக்கு சென்றவுடன் இந்தப் படத்தினைக் கண்டு களியுங்கள்.


Thursday, May 14, 2015

இசை உலகின் கஞ்சா பொறுக்கி : (Snoop Dogg)


சித்த மருத்துவத்தில் கோரக்கர் மூலி என்றழைக்கப்படும் கஞ்சாவினை அதிகம் பயன்படுத்தும் ஒரு இசை பிரபலம் குறித்து தான் இப்பதிவு . ராப் இசைக் கலைஞர்கள் பலரும் கஞ்சாவினை பயன்படுத்தினாலும் ,ஸ்நூப் மட்டுமே இதனை மிக வெளிப்படையாக செய்வது மட்டுமன்றி . அதனை பயன்படுத்துவதையும் வெளிப்படையாக செய்வார்.


இவர் பெயருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் dogg என்பது குடுமபப்  பெயர் அல்ல, மாறாக நம்மூரில் வெண்ணிற ஆடை நிர்மலா , நிழல்கள் ரவி போன்றோருக்கு அவர்கள் நடித்த முதல் படத்தில் வந்து போலதான், இவருக்கும் தனது முதல் இசை தொகுபான doggystyle என்ற மிகப்பெரிய வரவேற்பினை பெற்றதில் இருந்து இந்த dogg என்ற பெயர் ஒட்டிக் கொண்டது. அந்த இசைத் தொகுப்பில் வரும் whats my name பாடலில் தனது பெண் தோழியுடன் படுக்கையில் இருக்கையில் அவளின் அப்பா வரநாயாக உருவெடுத்து தப்பிக்கும் பாடலை பாருங்கள்.



னைத்து வெளிநாட்டவருக்கும் இந்தி திரையுலகம் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும், அது ஸ்நூப் அவர்களுக்கும் இருந்தது அதன் விளைவாக அக்ஷய்குமார் நடிப்பில் வெளிவந்த singh is king படத்தில் ஒரு பாடலினை பாடி நடனம் ஆடி இருப்பார். அதன் வீடியோ கீழே  உள்ளது.



சர்ச்சைகளில் சிக்குவதேன்பது இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி ,பள்ளி முடித்தவுடன் கோகின் வைத்திருந்தற்காக சிறைக்கு செல்ல ஆரம்பித்தவர், தொடர்ந்து பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டார். அது போக எந்த  நாடுகளுக்கெல்லாம செல்கின்றாரோ அங்கும் ஏதாவது ஒரு பிரச்சனைகளில் சிக்குவார்.குறிப்பாக ஆஸ்திரிலியா மற்றும் நார்வே ஆகிய நாடுகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய இவருக்கு தடை விதித்தன.இருப்பினும் இந்த சர்ச்சைகள் அவருக்கு தொழில் ரீதியாக எந்த பாதிப்பினையும் உண்டாக்கவில்லை. 

1993 ல் தொடங்கிய இசைப் பயணம் இன்றும் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. அதும் இன்றைய இளம் தலைமுறை பாடகர்களுடன் எந்த ஒரு ஈகோவும் இன்றி அவர்களின் பாடல் தொக்குப்பில் தோன்றி கலக்கிக் கொண்டிருக்கின்றார்.நான் முன்பு இசை உலகின் இளம் தேவதைகள் பற்றி எழுதிய கேட்டி பெர்ரியுடனும் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளார். ராப் இசை எனபது முதலில் புரிவதற்கு சிரமமாக இருந்தாலும் போகபோக பிடித்து விடும்.

Wednesday, May 13, 2015

அல்லோபதி மருத்துவர்களும் அல்லோலூய குரூப்பும்

அல்லோபதி மருத்துவர்களும் அல்லோலூயா குரூப்பும் இணையும் மையப் புள்ளி என்பது இவர்கள் தொழில் சார்ந்தும் ,வழிபாடு சார்ந்தும் பின்பற்றுவது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றிலிருந்து தொடங்குகின்றது.
 பரவி வரும் பன்றிக் காய்ச்சலை தடுக்க சித்த மருந்தான கப சுரக் குடிநீர் நல்ல பலனளிக்கின்றது. தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்த இந்த காலத்திலும் நம் பண்பாட்டு மருத்துவம் நமக்கு நன்மை அளிக்கின்றது. ஆனால் தமிழர்களாக இருந்தாலும் ஆங்கில் மருத்துவமான அலோபதி படித்தவுடன் தான் ஆங்கிலேயனாக மாறி விட்டது போல நினைத்துக் கொண்டு சித்த மருத்துவத்த்தை இழிவாகப் பார்ப்பதும் எள்ளி நகையாடுவதுமானப் போக்கினைக் கொண்டிருக்கின்றனர். மேற்குலகமே கூட்டு மருத்துவம் நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழலில் , ஆங்கில மருத்துவம் மட்டுமே அனைத்திற்கும் தீர்வு எனற தட்டையான போக்கில் தமிழ் நாட்டில் உள்ள அலோபதி மருத்துவர்கள் இருப்பது வெட்ககேடு .

தமிழக பாஜக தலைவரின் கணவர் சுந்தர்ராஜன் அவர்கள் சிறுநீரக கோளாறு (Urologist )நிபுணர் , இவர் ஒரு முறை ஆனந்த விகடன் கட்டுரையில் சித்த மருந்துகள் சிறுநீரக கோளாறை உண்டு பண்ணுகின்றன என்று எந்த ஆதாரமும் இன்றி குற்றம் சாட்டினார். அப்போதே பல சித்த மருத்துவர்கள் அனந்த விகடனுக்கு மறுப்பு கடிதம் எழுதினர் . ஆனால் எதையும் ஆனந்த விகடன் வெளியிட மறுத்து விட்டது. ஒரு பக்கத்திற்கு போலி சித்த மருத்துவர்கள் கொடுக்கும் விளமபரங்களை  வெளியிடுபவர்கள் உண்மை கருத்தை சொல்ல விழையும்போது அதை தடுக்கின்றனர் .

சித்த மருந்துகளின் நம்பகத்தன்மை குறித்தும் , சித்த மருத்துவ கோட்பாடு குறித்தும் மேலும் அறிய நான் ஏற்கனவே எழுதிய இரண்டு கட்டுரைகளை  வாசிக்கவும் .

1.தங்க பற்பம்
2.சித்த மருத்துவ உண்மைகள்

அலோபதி மருத்துவ முறைகளில் கொடுக்கப்பட்ட்டுள்ள பெரும்பாலான நோய்கள் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் பெரும்பாலும் அம்மருத்துவம் தோன்றிய இடத்தினை மையமாகக் கொண்டவை. அதே போல வெளிநாடுகளில் மருத்துவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.அதே நேரத்தில் அந்த நாடுகளும் செல்வ செழிப்பானவை மற்றும் வளர்ந்த நாடுகளில் அமெரிக்கா  தவிர அனைத்திலும் மருத்துவ செலவினை அரசாங்கமே ஏற்றுக் கொள்கின்றது. 

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக இந்தியாவில் இருக்கும் அலோபதி மருத்துவர்கள் தாங்களும் வெளிநாட்டில் உள்ள  மருத்துவர்கள் போல வாழ்வதற்காக இந்த ஏழை நாட்டில் மருத்துவ செலவினை நாளுக்கு நாள் ஏற்றிக் கொண்டே செல்கின்றனர்.மேலும் அரசு மருத்துவமனைகளில் நோயாளி உயிரிழந்தாலோ அல்லது மருத்துவரின் அலட்சியத்தால் பாதிப்பு ஏற்பட்டாலோ மருத்துவர்களை தாக்கும் ஆபத்தான போக்கு நிலவை வருகின்றனது. இதற்கான மூலக்காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் மக்கள் மனதில் அரசு மருத்துவர்கள் அதிக  முக்கியத்துவம் கொடுப்பது  தனது சொந்த மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளுக்குத்தான் என்ற எண்ணம் ஆழப் பதிந்து விட்டது.

தமிழ் நாட்டிலேயே தோன்றிய பழமை வாய்ந்த சித்த  மருத்துவத்தினை  அலோபதி மருத்துவர்கள்  முன்னேற்றுவதற்காக எந்த ஒரு முயற்சியினையும் இந்நாள் வரை எடுக்கவை இல்லை. எனினும் மருத்துவ உலகின் சூப்பர் ஸ்டார் என்று நான் குறிப்பிட்ட மரு .தெய்வநாயகம் போன்ற  அலோபதி மருத்துவர்கள் சித்த மருத்துவத்தினை வளர்க்க பாடுபட்டாலும் அவர்களை கேலி கிண்டல் செய்வதனையே மற்ற அலோபதி மருத்துவர்கள் தொழிலாக வைத்துள்ளனர். இந்திய மருத்துவ கவுன்சிலானது சித்த மருத்துவத்தினை ஒழித்துக் கட்டுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்றது.
அடுத்து அல்லேலூயா குருப்புகளின் அட்டகாசம் .
 கிறித்துவப் பள்ளியில் படித்த நான் தேவாலயங்களுக்கு செல்வதினை ஒரு மற்ற இந்து ஆலயங்களுக்கு செல்வது போலவே கருதி பயபக்தியுடன் இன்றும் சென்று வருபவன். Life  of  pi படத்தின் ஆரம்பக் காட்சிகளில் சொல்லப்பட்டது போல இந்தியாவில் பிறந்தவர்கள் மூன்று மதக் கடவுள்களையுமே ஒன்றாகக் கருதி வழிபடும்  வழக்கம் 90 களின் இறுதி வரை இருந்து வந்தது. பாபர் மசூதி இடிப்பு போன்ற சமபவங்கள் மதங்களுக்கிடையே ஒரு காழ்ப்புனர்ச்சியினை உண்டாக்கி விட்டது.அடுத்து ஒரு தமிழ் இந்து ஏசுவை கும்பிடுவதற்கு எந்த ஒரு தயக்கமும் காட்டுவதில்லை . வட  தமிழகத்தில் வருடா வருடம் வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்க்காவிற்கு செலவதனை இன்றும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இப்படி மத நல்லினக்கத்தினை பார்த்த எனக்கு சென்னை வந்த பிறகு கிறித்துவத்தில் ஒரு பிரிவினர் முருகன் விநாயகர் போன்றோரை பூதம் என்று அழைப்பதைக்   கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.



வெளிநாட்டு மதத்தினை பின்பற்றுவதனாலும் வெளிநாட்டுப் பெயர்களை வைத்துக் கொள்வதாலும் வெளிநாட்டவர் மாதிரி உடை அணிந்து கொள்வதாலும்  இவர்கள் தங்களை வெளிநாட்டவர்கள் என்றே சில சமயங்களில் நினைத்துக் கொள்வர். பதிவர் கலையரசன் அவர்கள் இதனை மிக அழகாக சொல்லி இருப்பார். இஸ்லாமிய நாடுகளில் வாழ்பவர்கள் ஐரோப்பா மற்றும் அமேரிக்கா செல்லும் போது  தாங்களும் அவர்கள் போன்று வெள்ளையாக இருப்பதால் மிக சுலபமாக அந்து சமூகத்துடன் கலந்து விட முடியும் என்ற நப்பாசையில் சென்று பின்னர் ஏமாற்றம் அடைவதே நடக்கின்றது. ஆபிரிக்க முஸ்லீம்களுக்கும் அதே நிலைதான் , பள்ளிவாசல் வரை மட்டும் தான் அந்த உறவு அதை தாண்டி அரபு நட்டார் ஆப்பிரிக்க முஸ்லிம்களை அனுமதிப்பதில்லை.

இந்தக் கட்டுரையின் சாரம்சம் என்பது எவ்வளவு தான்  எண்ணெய் தடவி உருண்டாலும் ஒட்டுவதுதான் ஓட்டும். கிருத்துவர்களும் அலோபதி மருத்துவர்களும் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவமோ மதமோ அதை நீங்கள் கடை பிடிக்க தடை இல்லை. ஆனால் இங்கு தொன்று தொட்டு பயன் பாட்டில் இருந்து வரும் சித்த மருத்துவத்தை இழிவுபடுத்துவதும் , சிவ வழிபாடுகளைக் கிண்டல் செய்வது உங்களயே அவமதிக்கின்ற செயலாகும்.