Tuesday, September 15, 2015

சிம்பு ஒரு நிம்மார்ந்தவனா?

முதலில் நிம்மார்ந்தவன் என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று பார்ப்போம். நிகழ் கால உலகில் வாழாமல் தன் வாழ்வில் முன்பு நடந்த்தையோ அல்லது நடக்கப்போவதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டே இருப்பவர்களைத்தான் நிம்மார்ந்தவன் என்று அழைப்பர்.இது போன்று நிம்மார்ந்தத்தனமாக இருப்பவர்களை எளிதாக அடையாளம் காண இரண்டு உதாரணங்கள் உண்டு , ஒன்று சாவியையோ அல்லது ஏதேனும் கையில் வைத்திருந்த ஒரு பொருளை எங்கே வைத்தார்கள் என்பதனை மறந்து வீடு முழுக்கத் துழாவி கொண்டிருப்பர் .இரண்டாவது உதாரணம் எப்பொழுதுமே ஆழ்ந்த சிந்தனையில் மின் விசிறியையோ அல்லது ஏதேனும் ஒன்றைப் பார்த்துக் கொண்டே சும்மா உட்கார்ந்திருப்பார் அல்லது படுத்துக் கொண்டிருப்பர். இந்த உதாரணங்கள் மூலம் நிம்மார்ந்தவன் யார் எனபது நன்கு விளங்கி இருக்கும்.இனி இந்த நிம்மார்ந்தத்தனம் நம்மை எந்தளவுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்தி நிகழ்கால உலகில் வாழ்வது என்பது குறித்து பார்ப்போம்.




ஒரு நகைச்சுவை உதாரணம் தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினி வேட்டியை மறந்து  விட்டு கல்லூரிக்கு செல்லும் காட்சியை அனைவரும் மறந்திருக்க மாட்டிர்கள் ,இது போன்றே absent mindednessஐ  முன் வைத்து பல கார்ட்டூன்கள் மற்றும் நகைச்சுவைகள் மிகப் பிரபலம். 


சிம்புவை ஏன் நிம்மார்ந்தவன் என்று குறிப்பிட வேண்டும்? ஏற்கனவே நான்  பிரபல தொகுப்பாளினி டிடிக்கு டுரெட் வியாதியா என்று ஒரு பதிவு எழுதி இருந்ததை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அடிப்படையில் ஒரு மருத்துவராகவும் ,தற்பொழுது மூளை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாலும் யாரிடமாவது வித்தியாசமான குறிகுணங்கள் ஏற்பட்டால் அது எந்த நோயாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகின்றது. பிரபலங்களை வைத்து நோயை அடையாளப்படுத்துவது என்பது மலிவான விளமபரத்துக்காக அல்ல ,அந்த நோய் குறித்து விழிப்புணர்வினை அனைவரிடமும் எளிதாக கொண்டு செல்வதற்கான யுக்தியாகத் தான் நான் பயன் படுத்துகின்றேன்.மூளை தொடர்பான மிக முக்கிய நோயான Amyotropic lateral sclerosis தற்பொழுது Lou Gehrig என்ற பேஸ் பால் வீரரின்  பெயருடனே அழைக்கப்படுகின்றது. எனவே  பிரபலங்களின் பெயரை நோயுடன் தொடர்புபடுத்துவது என்பது இது நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம்.


நிம்மர்ந்தத்தனமாக இருப்பதனால் பல விதமான தொந்தரவுகள் ஏற்படும், குறிப்பாக ஏதேனும் ஒரு முக்கிய வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொது  வேறு எதைப் பற்றியாவது மனம் சிந்தித்துக் கொண்டிருந்தால் செய்யும் வேலையினை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாமல் போகும் .இது தான் சிம்புவுக்கு வாலு படத்தில் நடந்திருக்கும் என்று உறுதியாக நம்புகின்றேன். அந்த ஒரு படத்தில் அதிக கவனம் செலுத்தாமல் பல்வேறு விதமான நிகழ்வுகளில் மனதினை அலைபாய விட்டால் இது போன்று தாமதங்கள் நிகழும்.இதனை சோனியா அகர்வால் அவருடன் கோவில் படத்தில் நடித்த பொது கொடுத்த பேட்டியில் சொல்லி இருக்கின்றார். சிம்பு எப்பொழுதும் படப்பிடிப்பில் தனது அடுத்த படம் குறித்த சிந்தனையிலே இருப்பார். அப்படி இருப்பது தவறில்லை என்றாலும் , தற்பொழுது நடிக்கும் படத்தில் நம் பங்களிப்பில் மிகப் பெரிய ஈடுபாடு இல்லாததால் அது சிறப்பாக வராது.



சில பேர் தங்கள் வீட்டுக் கதவை பூட்டினார்களா இல்லையா மற்றும் வீட்டில் எரிவாயு  அடுப்பினை நிறுத்தினோமோ ( off ) இல்லையோ என்ற சினத்னையோடு இருப்பதனை பார்த்திருப்பீர்கள் . இதற்கான காரணம் அந்த வேலையினை செய்யும் போது வேறு ஒரு சிந்தனையில் மூழ்கிவிடுவதால் அன்றைய நாளே பாழாகும் நிலை ஏற்படும்.மேலோட்டமாக பார்த்தால் இது போன்று இருப்பது பிரச்சனையான ஒரு பழக்கமாகத் தெரிந்தாலும் ஒரு முக்கிய அலுவலில் இருக்கும் போது நம் நிம்மார்ந்தத்தனம் நம் வாழ்க்கையே திசை மாற்றி விடும் , சிம்புக்கு தன் சினமா வாழ்க்கையில் நான்கு வருடம் காணாமல் போனது போன்ற விளைவுகள் உண்டாகும்.அது மட்டுமன்றி நம்மை சார்ந்தவர்க்கும்  அது பாதிப்பினை உண்டாக்கும் அதற்கு மிக சரியான உதாரணம் டி.ராஜேந்தர் , தொலைக்கட்சிகளில் வாலு படம் வெளியாகாதது குறித்து அவர் எப்படி குமுறினார் என்பதனை தமிழகமே பார்த்தது. நாம் பார்க்காதது அவரின் தாயார் மற்றும் உடன் பிறந்தோர் மற்றும் அவரின் ரசிகர்கள் பட்ட துயரங்கள் .இவ்வாறு ஒரு தனி மனிதனின் அலை பாயும் மனது நேரடியாகவும் மறைமுகமாகவும் பலரையும் துன்பத்தில் ஆழ்த்தும்.

இதற்கான தீர்வு முழுக்க முழுக்க நம்மிடம் மட்டுமே உள்ளது.நம் அலைபாயும் மனதினை கட்டுக்குள் வைத்திருக்க உறுதி ஏற்க வேண்டும்.தனிமையில் அதிகம் இல்லாமல் பிறருடன் உரையாடிக் கொண்டே இருப்பின் இது போன்ற சிந்தனைகள் வருவதற்கான சாத்தியங்களை தவிர்க்க இயலும்.கண்டிப்பாக மருத்துவரிடம் செல்லும் அளவுக்கு மோசமான ஒன்றே அல்ல.அப்படி சென்றால் நம்மை நோயாளி ஆக்கி விடுவதோடு மட்டுமன்றி நம் பணத்திற்கும் வேட்டு வைத்து விடுவார்கள்.நம் அன்றாட வாழ்க்கையில் திட்டமிட்டு செய்வதன் மூலம் அதாவது ஒரு அட்டவனை ஏற்படுத்தி காலை முதல் இரவு தூங்கும் வரையிலான இடைப்பட்ட  ஒவ்வொரு மணிக்குமான வேலையினை முன்பே திட்டமிட்டு வைத்திருந்தால் இது போன்ற நிம்மர்ந்தத்தனம் முற்றிலும் இருக்காது. இதனையும் மீறி இருப்பின் மிக எளிய யோகாசனப் பயற்சிகள் மனதினை கட்டுக்குள் வைத்திருக்கும். சிம்பு ஆன்மிகப் பயணம் சென்றது கூட இந்த காரணத்திற்காகத் தான் என்று நினைக்கின்றேன்.

நன்றி 
செங்கதிரோன் 


Monday, August 24, 2015

வன்னியர்களை பழிதீர்க்க ஒன்றினையும் ரஜினியும் ரஞ்சித்தும்

சுந்தர் சிக்கு ரஜினி படம் இயக்கம் வாய்ப்பு வந்த போது அது மிக சரியானத் தேர்வாகத் தான் தோன்றியது. ஆனால் அண்ணன் ரஞ்சித்துக்கு ரஜினி பட வாய்ப்பு கிடைத்தும்  தமிழ்  திரை உலகுமும் ரசிகர்களும் என்னடா இங்க நடக்குது என்று உச்சகட்ட அதிர்ச்சிக்கு ஆளாகி  இருப்பர் .அது மட்டுமன்றி  அவரின் குரு  வெங்கட் பிரபு தான் லைட்டா பொறாமை பட்டிருப்பார்.

தலைப்புக்கு வருவோம், ஏன்  வன்னியர்களை பழி  தீர்க்க இவர்கள் இருவரும் இணைய வேண்டும் ,வன்னியர்கள் இவர்களுக்கு அப்படி என்ன கொடுமை செய்தார்கள் என்று கேட்கின்றீர்களா , ஒன்றா இரண்டா பட்டியலிட்டால் பத்துப் பதிவுகள் எழுதலாம். ரஞ்சித்திடம் கேட்டால் ஒரு நாவலே எழுதுவார் அந்த அளவுக்கு வன்னியர்கள் கொடுமை செய்திருக்கின்றார்கள்.


முதலில் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு வன்னியர்களால் நிகழ்ந்த கொடூரங்களை பார்ப்போம்.பாபா படம் வெளியான சமயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் திரையரங்கங்களில் ரகளை செய்தததோடு மட்டுமன்றி, பட பெட்டியைத் தூக்கிக் கொண்டு முந்திரி தோப்பில் கண்ணா மூச்சி என்னும் tresure hunt விளையாடி ரஜினியின் தூக்கத்தைக் கெடுத்தனர்.தமிழகத்திலேயே மிக அதிக ரசிகர் படை கொண்ட ரஜினிக்கு இதை தடுத்து நிறுத்த முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது.


அடுத்து நம்ம ரூட்டு தல ரஞ்சித் அண்ணன் , வன்னியர் தலித் அதிகம் வாழும் பகுதிகளில் ஒவ்வொரு நாளும் இந்த வன்னியர்களால் அடையும் துன்பங்களுக்கு அளவே இல்லை. வயதான தலித் சமூகத்தினர் இந்தக் கொடுமைகளை தங்கள் விதி என்று கடந்து செல்வது போல இருக்காமல், படித்த வாலிபரான ரஞ்சித் தான்  இந்தக் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காண்பிக்க  தனது படங்களைப் பயன்படுத்துகின்றார்.

ரஞ்சித்துக்குள் கனன்று கொண்டிருக்கும்  இந்த வன்னியர் எதிர்ப்பு நெருப்பினை ரஜினி தன்  சிகரெட்டுக்கு பத்த வைக்க பயன்படுத்த வழங்கியதுதான் இந்த கபாலி பட  வாய்ப்பு. இதனை மிக தெளிவாகவே ரஞ்சித் தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார்.அதாவது ரஜினி மெட்ராஸ் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்து மிக விரிவாக அலசியதாகக்  குறிப்பிடுகின்றார்.நம்மை போன்றவர்கள் அந்தப் படம் சுவருக்கான சண்டை தான்  என்று நினைத்துக் கொண்டிருக்க அது வன்னியர் தலித் மோதலை மட்டுமே மையப்படுத்தி எடுத்தப் படம் என்பதனை இந்தத் திவீர அலசல் செய்பவர்களால் உணர முடியும். கீழ்க்காணும் காரணங்கலிளிருந்தே மெட்ராஸ் ஒரு வன்னியர் தலித் மோதல் படம் என உணர முடியும்.


1. படத்தின் தலைப்பே உங்களுக்கு உணர்த்தி விடும், அறிஞர் அண்ணா அவர்கள் சென்னை என்று பெயர் மாற்றம் செய்த பின்னரும் இவர்கள் மெட்ராஸ் என்று வைத்ததற்கான காரணம் , சென்னை என்பதன் முழுப்பெயர் -சென்னப்ப நாயக்கன் பட்டினம். சென்னையில் ஆதி முதல் வாழும் வன்னியர்கள்  இன்றும் தங்களை நாயக்கர்கள் என்றே குறிப்பிடுவர். எனவே அந்த சென்னப்ப நாயக்கனே சுருங்கி சென்னை என்று மருவி விட்டதாக ஒரு வரலாறு உண்டு.எனவே தன் படத்திற்கு வன்னியர் பெயரை வைக்க விரும்பாமல் மெட்ராஸ் என்று பெயர் வைத்து தன் வன்னியர் எதிர்ப்பினை பதிவு செய்திருக்கின்றார்.
2. படத்தின் நாயகன் மற்றும் நாயகி வீட்டில் தென்படும் தலித் ஆதரவு புத்தகம் , அயோத்தி தாசர் புகைப்படம் போன்றவை மிக தெளிவாகப் படம் பிடித்து காட்டுகின்றன , அவர்கள் தலித் சமூகம் சார்ந்தவர்கள் என்றும் அதில் தீவிரப் பற்று உடையவர்கள் என்பதும் புரியும்.மேலதிக தகவலுக்கு இந்தப் பதிவினைப் பதிவினைப் பார்க்கவும்.

3. அடுத்து வன்னியர் எதிர்ப்புக்கான அடையாளமாக அந்தப் படத்தில் கார்த்திக் சார்ந்திருக்கும் கால்பந்தாட்ட அணி நீல நிறத்திலும் , எதிரணி மஞ்சள் நிறத்திலும்  ( விசிக கட்சி-நீலம் , பாமக -மஞ்சள்) அமைத்து  மிக மிக தெளிவாகதன்  நோக்கத்தினை  அமைத்து இருக்கின்றார்.

4.கபாலி என்ற ரஜினி பட பெயரும் தலித்தின் பெயர் என ஆனந்த விகடனின் வலைபாயுதே பகுதியில் ஒருவர் எழுதி இருக்கின்றார்.எனவே ரஞ்சித் தனது வன்னியர்கள் மீதான பழிவாங்கலை ரஜினியுடன் கைகோர்த்து தொடங்கி விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இறுதியாக சில வரிகள் பாபா படத்தினை வன்னியர்கள் செய்த அராஜகத்திற்கான காரணம் ரஜினி புகைப் பிடிக்கும் பழக்கத்தினை ஊக்கப் படுத்துவது போல அந்தப் படத்தின் போஸ்டர் அமைந்திருந்ததும் , அந்த நேரத்தில் ஐநா மன்றத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியாவில் புகைப் பழக்கம் அதிகமாக இருக்க திரைப்பட நடிகர்களுக்கும் பங்குண்டு என்பது தான்.எனினும் பாமகவினர் அந்தப் பட பெட்டிகளை தூக்கிக் கொண்டு செல்லாமல் இருந்திருந்தால் ரசிகர்களே அதனை செய்வார்கள் அப்படி ஒரு தோல்விப் படம் அது என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். 

அண்ணன் ரஞ்சித் அவர்களின் மெட்ராஸ் படம் வேறு ஒரு இயக்குனரின் திரைக்கதையினை திருடி எடுக்கபப்ட்ட படம் என்று மிக தெளிவாக  சவுக்கு இணையத்தில் ஒரு மிகப் பெரிய கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நேரமிருந்தால் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.வன்னியர்  தலித் பிரச்சனை குறித்து ரஞ்சித் எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கின்றார்  என்பது கேள்விக்குறியே, ஏனெனில்  திரு விழா கலவரங்களை  உதாரணமாக எடுத்துக் கொள்வோம். தலித் சமூகத்தினர் நீண்ட நாள் கோரிக்கை சாமி ஊர்வலம் தங்கள் தெருக்கள் வழியாகவும் வரவேண்டும் எனபதே , இதனை வன்னியர்கள்  மட்டுமன்றி அங்கு இருக்கும் உயர் சாதியினரும்  எதிர்க்கின்றனர். வட  மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் வாழ்வதினால்  பழி முழுக்க வன்னியர்கள் மீது தான் விழுகின்றது.மற்ற உயர் சாதியினர் இதில் இருந்து தப்பிக் கொள்கின்றனர். ரஞ்சித்தின் எதிர்ப்பு முழுக்க ஒரே சாதியினை நோக்கி இருப்பதன் மர்மம் புரியவில்லை.இருந்தாலும் ரஞ்சித்தின் இந்த எதிர்ப்பினை வன்னியர்களுக்கு எதிரானவர்கள் தங்களுக்கு ஆதரவாக மாற்றிக் கொள்கின்றனர். அப்படி தான்  சூப்பர் ஸ்டாரான பரட்டையும் பத்த வச்சிட்டார். ஒருவர் ஒரு சமூகத்தை எதிர்த்தாலே பலமாக இருக்கும், இங்கு பாதிக்கப் பட்ட இருவரும் இணைந்து பழி வாங்கப் புறப்பட்டிருக்கின்றனர். எனக்கு வாழ்த்துவதா அல்லது அதனால் ஏற்படும் பின்விளைவுகளைக் கண்டு கவலைப்படுவதா என்று தெரியவில்லை.








Tuesday, June 2, 2015

கருத்து சுதந்திரத்தில் தினமலருக்கே முதலிடம்


இணையத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட செய்தித்தாள் தினமலர் மட்டுமே, ஏனெனில் அனைத்து செய்திகளுக்கும் இவர்களாகவே ஒரு கற்பனயையோ அல்லது சொந்தக் கருத்தையுமோ சேர்த்து வெளியிடுவதால் பொய்மையின் உரைகல் , தினமலம் என்ற நற்பெயர்களை சம்பாதித்தது. இவை அனைத்தியுமே பலரும் விரிவாக எழுதிவிட்டனர்.

நான் தினமலர் இணையதளத்தினை சில சமயங்களில் பார்ப்பதுண்டு, அங்கே செய்திகளை விட சுவாரஸ்யமான பகுதி வாசகர்களின் கருத்துகள்.ஒவ்வொரு செய்திக்கும் கீழே வாசகர்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்வார்கள்.இது போன்ற பகுதிகள் மற்ற செய்த்தித்தாள்களான தினமணி, தினகரன் மற்றும் புதிதாகத் தொடங்ககப்பட்ட தமிழ் இந்துவிலும் இருப்பினும் தினமலர் கருத்துப் பகுதி எப்பொழுதுமே வாசகர் கருத்துகளால் நிரம்பி வழியும். உலகம் முழுக்க இருக்கின்ற வாசகர்கள் துபாய், கத்தார், இங்கிலாந்து , அமெரிக்கா என அனைத்துப் பகுதியிலிருந்தும் கருத்துகள் பதியப்படும்.

தினமலர் கருத்துப் பகுதிக்கு மட்டும் இவ்வளவு வாசகர்கள் அதிகமாக இருப்பதற்கான  முதல் காரணம்,செய்திகள் சாதாரண மனிதர்களின் மொழியில் இயல்பாக இருப்பதனால் கருத்து எழுத தூண்டுகின்றது.இரண்டாவது காரணம் மிக முக்கியமானது,அந்தக்  கருத்துப் பகுதியில் நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை திட்ட அனுமதிக்கப்படும். எனவே வாசகர்களிடையே ஜெ மற்றும் கலைஞரை திட்டுவதில் ஒரு போட்டியே நடக்கும்.இதனையும் தாண்டி தினலலரின் செய்தியின் தரம் குறித்தும் அதன் அதிமுக, இந்து மத சார்பு குறித்தும் வாசகர்கள் எழுதும் கருத்து எடிட் செய்யப்படாமல் வெளியிடுவார்கள்.

தினமலரை திட்டி தினமலரில் எழுதப்பட்டிருக்கும் கருத்தின் படம் 


தினகரன், நக்கீரன் போன்ற இணையதளங்கள் ஒருவரும் கருத்தே எழுதாமல் காற்று வாங்கும். தினமணி ஒரு எல்லையை தாண்டி நடக்கும், சில அருவெறுப்பான கருத்துகளும் இடம் பெற்றிருக்கும். விகடன், தினமலருக்கு அடுத்ததாக மிக அதிக வாசகர் கருத்தைக் கொண்டிருக்கும் இணையதளம், இருப்பினும் அங்கு இடப்படும் பெரும்ப்பான்மையான கருத்துகள் கடுமையாக எடிட் செய்யப்பட்டே வெளிப்படும்.தமிழ் இந்துவின்  கருத்துப்  பகுதயில் ஒரு ஆரோக்கியப் போக்கு நிலவுவதைக் காண முடிகின்றது.

தினமணியில் வெளியாகிருக்கும் கருத்து.
மிக முக்கய அம்சம் சினிமா செய்திகள் -நடிகைகள் குறித்த செய்தி என்றால் வாசகர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல, பல இரட்டை அர்த்த கருத்தகளை மிக சாதரணமாக எழுதுகின்றனர்.அந்தக் கருத்துகளை ரசிப்பதற்கு ஒரு பெரிய பட்டாளமே இருக்கும்.அப்புறம் விஜய் ,அஜித் ரசிகர்கள் சண்டையும் சில சமயம் நிகழும்.

வாசகர்களால் அரசியல் வாதிகளுக்கு வைத்துள்ள பட்டப்பெயர்கள் கலைஞர்-கட்டுமரம்,மோடி -feku ,ராகுல்-பப்பு ,சீமான்-தள்ளு தள்ளு, வைகோ-கருப்பு துண்டு, ராமதாஸ்-மரம்வெட்டி,தமிழிசை-சொந்தக் கருத்து சொர்ணாக்கா, இப்படி பட்டப் பெயர்களைக் குறிப்ப்ட்டே அந்த அரசியல்வாதிகளை விமர்சிப்பர். 

டீக்கடை பெஞ்சில் இன்றும் அரசியல் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில் இணையத்தில் நடக்கும் அரசியல் சண்டைகளுக்கு தினமலர் போன்ற பத்திரிகைகள் தகுந்த இடமளித்து சண்டை போட்டுக்க் கொள்ள ஊக்குவிக்கின்றனர்.இதனால் உடல் ரீதியான தாக்குதல் நடக்காமல் உள்ள (மன)ரீதியான தாக்குதல்கள் மட்டும் நடக்கின்றது.தினமலர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எனக்கு இருப்பினும், கருத்துப் பகுதியில் சுதந்திரமாக அனைவரும் தங்கள் கருத்தைப் பதிவு செய்ய அனுமதிக்கும் போக்கைப் பாராட்டியே ஆக வேண்டும்.

Monday, June 1, 2015

மாஸ் -முதலுக்கு மோசமில்லை

 சூர்யா வெங்கட்பிரபு கூட்டணி என்றதும் எனக்கு  நினைவுக்கு வந்தது கலகலப்பு படத்தில் சந்தானம்-அஞ்சலி ஜோடி பொருத்தத்தை விமல் சர்க்கரைப் பொங்கலும் வடகறியும் போல என்பார். அதுதான் , ஏனென்றால் நந்தா படத்திற்குப் பின் வந்த அனைத்து  சூர்யாவின் படங்களில்  அவரின் கதாபாத்திரத்திற்கு ஒரு முதிர்ச்சி இருக்கும். வெங்கட்பிரபு படத்தில் சூர்யாவுக்கு அது போன்ற ஒரு பாத்திரம் இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.ஈழத்தமிழர்சூர்யா மட்டுமே நாம் இயல்பாக பார்க்கும் சூர்யவாகக் காட்சி அளிக்கின்றார். 

கதை ஓரளவு அபூர்வ சகோதரர்கள் படத்தின் தாக்கத்தில் உணடக்கப்பட்ட படம் போல உள்ளது. அ .சகோ. படத்தில் அண்ணன் தம்பி இங்கே அப்பா மகன், அதில் அண்ணன் எதிர்களை கொல்லும் சமயங்களில் தம்பி கமல் அந்த இடத்தில் இருப்பதால் அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார். இங்கே சற்று வித்தியாசமாக அப்பா சூர்யா மகனைப் பயன்படுத்தி எதிரிகளைக் கொல்கின்றார்.



ஸ்ரீமான் மற்றும் கருணாஸ் இருவரையும் இன்னும் அதிகமான காட்சிகளில் நடிக்க வைத்திருக்கலாம். முதன் முறையாக பிரேம்ஜிக்கு மக்கள் மனதில் ஆழமாகப் பதியும் கதாபாத்திரம், காமெடி சோகம் இரண்டிலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றார்.பார்த்திபனை போலீஸ் உடையில் பார்க்கும் போது உள்ளே வெளியே படம் தான் ஞாபகம் வந்தது. அதில் நடித்த அதே பாணியை இதிலும் அவருக்கே தெரியாமல் பின்பற்றி இருக்கின்றார் என்று நினைக்கின்றேன். உள்ளே வெளியே இரண்டாம் பாகம் கூட எடுக்கலாம்.மிக நல்ல வரவேற்பு இருக்கும்.

நான் கண்டிப்பாக நயன்தாராவுக்காக இந்தப் படம் பார்க்கவில்லை என்பதனை பதிவு செய்ய விரும்புகின்றேன். ஏனென்றால் வழக்கமாக வெங்கட்  படத்தில் கதநாயகியை விட ஒரு பாடலுக்கு ஆடும் நடிகைகள் மிக அழகாக இருப்பார்கள், அப்படி ஏதாவது இருக்கும் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. நயன்தாராவை கூட வரும் பெண் அக்கா என்று கூப்பிட்டது தான் நயன்தாராவின் முன்னாள் ரசிகன் என்ற முறையில் சற்று வருத்தமாக இருந்தது.பிரனிதா பற்றி சிலாகித்து சொல்ல ஒன்றுமில்லை. 

சமுத்திரக்கனி வில்லன் பாத்திரத்திற்கு கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கின்ரார். ஈழத்தமிழர் சூர்யா பகுதியினை மட்டும் முதல் பகுதியிலே காட்டி இருந்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.ஜெயப்பிரகாஷ் இந்தப் படத்திற்கு தேவையே இல்லை.

அனைவரும் பாராட்டியது போல படத்தில்  ஜெய் வரும் பகுதி மிக நெகிழ்வாக இருந்தது.பேயாக உளவும் மற்றவர்களை ஒரே பாட்டில் அவர்களின் கதை சொல்லி முடித்ததற்குப் பதில் கொஞ்சம் விரிவாகக் காண்பித்திருக்கலாம் .


மொத்தத்தில் அஞ்சான் அளவுக்கு மோசமில்லை. இந்த மாறுபட்ட இருவரின் கூட்டணியில் நமக்கு இவ்வளவு தான் கிடைக்கும்.சூர்யா கதைத் தேர்வில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சூர்யாவுக்கு மற்ற நடிகர்களை விட குடுமப் audience அதிகம் , இதனை அமீர் ஒரு பேட்டியில்  சொல்லி இருக்கின்றார். அது போன்ற ரசிகர்களை இழக்காத அளவுக்கு அவரின் படங்கள் இருக்க வேண்டும்.
மாஸ் நீங்கள் கொடுக்கும் டிக்கெட் விலைக்கு மோசமில்லை.


பி.கு. வெங்கட் பிரபுவும் சூர்யாவும் பால்ய காலத்திலிருந்தே தோழர்களாம் , அந்த நட்பின் அடிப்படையில் தான் இந்தப் படத்தில் இணைந்திருக்கின்றனர்.
நன்றி 

Friday, May 29, 2015

சாட்டையை தொலைத்த சவுக்கு

கடந்த ஒரு வாரமாக அதாவது ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் சவுக்கின் சாட்டை தொலைந்து விட்டது. சவுக்குக்கு எந்த அறிமுகமும் தேவையே இல்லை. இணையத்தில் அரசியல் நிகழ்வுகளை தீவிரமாகப் படித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் சவுக்கின் வீர சாகசங்கள் தெரிந்திருக்கும்.

கடந்த தி.மு.க. ஆட்சியின் இறுதிக் காலத்தில் சவுக்கு கருணாநிதி ஆட்சியின் முக்கிய அமைச்சர்கள் ,அதிகாரிகள் ஆகியோரின் ஊழலை அம்பலப்படுத்தியதன் மூலமாக  சவுக்கு இணையதளம் மிகப் பிரபலமானது. தமிழ்நாட்டில் புலனாய்வுப் புலி இதழ்கள் எல்லாம் வெளிப்படுத்தத்  தயங்கிய செய்திகளை துணிச்சலாக வெளிப்படுத்தி அனைவர் மத்தியிலும் பாராட்டினைப் பெற்றது.

தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் ஒரு வசனம் போல இந்த அநியாத்தைத்  தட்டிக் கேட்க ஒருத்தன் வருவான் சொல்வார்களே அந்த வசனத்துக்கு மிகப் பொருத்தமான நபராகத் திகழ்ந்தார்.அதுவும் காவல் துறையில் மலிந்திருந்த ஊழலை தகுந்த ஆதரங்களுடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.ஜாபர் செட்டின் தற்போதைய நிலைக்கு சவுக்கு மிக முக்கியக் காரணம், வார இதழ்களெல்லாம் இது போன்ற நபர்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கையில் எதற்கும் அஞ்சாமல் ஒவ்வொரு நாளும் புது புது ஊழல்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.



இந்த தொடர் நடவடிக்கையினால் தி.மு.க. ஆட்சியில் ஒரு முறை சிறைக்கும் சென்றார்.அபபொழுது சவுக்கின் நலன் விரும்பிகள் துடிதுடித்துப்  போனார்கள். இருப்பினும் ஒரு சில ஊடகங்கள் இந்த செய்தியினை வெளியிட்டதால், அழுத்தம் காரணமாக  விரைவில் ஜாமீனில் வெளிவந்தார்.

அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் முன்பு இருந்த அதே தீவிரத்துடன் செயல்பட முடியாவிட்டாலும், வேறு துறைகளில் மலிந்திருந்த ஊழல்களை வெளிக்   கொண்டு வருவதில் முக்கிய கவனம் செலுத்தினார். நீதிபதிகளின் மறுபக்கத்தினை சவுக்கு வெட்ட வெளிச்சமாக்கியபோழுது ஒருவராலும் நம்ப முடியாத அநியாயங்கள் வெளிவந்தன. நீதி அரசர் என்று நாம் நம்பிக் கொண்டிருந்த பலர் எப்படி நீதி வியாபாரிகளாக  இயங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதனை உணமையான ஆதாரங்களுடன் நிரூபித்தார் .

கடந்த ஒரு வருடமாக அதிமுக அரசின் ஊழல்களைக் குறிப்பாக மின்துறையில் நடக்கும் ஊழல்களை ஆதாரங்களுடன் அடுக்கினார்.குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு செய்தி, மாறன் சகோதரர்களின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் சவுக்குக்கு மிக முக்கியப் பங்குண்டு.

இப்படி இரண்டு ஆட்சிக்கும் எதிரானவராக இருப்பதால், அந்தக் கட்சிகளின் அபினமானிகளுக்கு இவர் பெயரைக் கேட்டாலே அலறும் நிலை உண்டாகி விட்டது.திமுககாரர்கள் எங்கள் ஆட்சியின் பொது சவுக்குக்கு இருந்த தைரியம் அதிமுக ஆட்சியின் போது இல்லை என்று குறைபட்டுக் கொள்வார்கள்.

மிழகத்தின் ஜூனியர் ஆசாஞ்சே என்று பாராட்டபடும் சவுக்கு citizen journalism என்ற ஒன்றுக்கு மிகப் பொருத்தமானவராகத்  திகழ்ந்து கொண்டிருக்கின்றார். எதற்கும் அஞ்சாமல் தன் சாட்டையடிப் பதிவுகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

காணமல் போன சாட்டை என்பது அவரின் சாட்டையடிப்  பதிவுகளைத் தான்.

நன்றி