Thursday, December 1, 2011

கவிஞர் யுகபாரதி அவர்கள் தனுஷ் மேல் கோபம் கொள்வது சரியா?




இன்று என்னுடைய வங்காள நண்பன் கொலைவெறி என்றால் என்ன என்று கேட்டான் ? நான் சொன்னேன் `i will kill you,or i am going to kill you` என்று வைத்துக் கொள்ளலாம் என்று..இது போன்றதொரு அனுபவம் உங்களில் பலருக்கும் ஏற்பட்டிருக்ககூடும்.அந்த அளவுக்கு இந்தப் பாடல் அனைவராலும் விரும்பப் படும் பாடலாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது.இப்பப்டிப் பட்டதொரு சூழ்நிலையில் எனதுயிரே,இறகை போல,மதுர குலுங்க குலுங்க ,அஞ்சனா அஞ்சனா ,மைனா மைனா போன்ற நல்லப் பாடல்களை எழுதிய கவிஞர் யுகபாரதி கொலைவெறியுடன் `கொலைவெறி` பாடலுக்கு எதிராகக் கொதித்து எழுந்திருக்கின்றார். மேலோட்டமாக இவரது அறிக்கையினைப் பார்த்தால் பாராட்டியது மாதிரிதான் இருக்கும் ஆனால் கடுமையான விமர்சங்களை தனுஷ் மேல் செலுத்தியிருப்பதனை ஆழ்ந்து நோக்கும்போது உணர்ந்துகொள்ள முடியும்.

முதலாவதாக அவர் சொல்லியிருக்கும்குற்றச்சாட்டு ` ஆங்கிலத்தை அடியோடு மண்ணைவிட்டு ஒழிக்க தனுஷ் போன்றோர் முயல்வது பாராட்டுக்குரியது` என்ன ஒரு வில்லத்தனம் பாருங்க.சமீப காலங்களில் வரும் அனைத்து தமிழ் பாடல்களின் இடையிலும் ஆங்கில வரியுடன் கூடிய பாடல் சிறிது நேரம் ஒலிப்பது அனைவருக்குமே தெரியும். அதை இவர் தடுத்தி நிறுத்தியிருக்கின்றாரா? அதை பற்றிதான் எழுதியாவது இருக்கின்றாரா ? ? உங்கள் சக பாடலாசிரியர்கள் இரட்டை அர்த்தத் தொனியில் பாடலகளை எழுதியபொழுதேல்லாம் கண்டிக்காத நீங்கள் இப்பொழுது ஒரு தமிழ் பாடல் மொழி,இனம் .நாடு கடந்து செல்லும் போது பொறாமையில் எள்ளி நகையாடுவது எந்த வகையில் நியாயம் ?


இவருடய இந்த எதிர் வினையின் நோக்கம் என்னவென்றே புரியவில்லை ? கதாநாயகன் என்பவன் அவனுடைய வேலையை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார் போலும்.பழைய திரைப்படங்களில் கதாநாயகனே தான் அந்தப் பாடல்களைப் பாடுவார் என்பதை நாம் அனைவருமே அறிவோம். அதற்குப் பிறகு அந்த நிலை மாறினாலும் அதனை மீண்டும் தொடங்கி வைத்த பெருமை கமல் அவர்களையே சாரும்.இது போன்ற புதுமையான முயற்சிகளைத்தான் பார்வையாளன் மிகவும் விரும்புகின்றான். இந்த நவீன யுகத்தில் நல்ல பாடல்களை தேடி எந்த மொழியாக இருந்தாலும் அதனை விரும்பி கேட்கும் மன நிலையில் தான் இன்றைய தலைமுறையினர் இருக்கின்றனர். இதைப் போன்றதொரு போட்டி நிறைந்த உலகில் யார் வேண்டுமானாலும் தங்கள் தனித் திறமையை நிரூபிக்கலாம்.அதை தான் தனுஷ் செய்து இருக்கின்றார். தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகக் சரியாக பயன்படுத்தி வெற்றியடைந்து இருக்கின்றார்.

இந்த வார விகடன் பத்திரிகையில் பாடலாசிரியர் தபூ சங்கர்`லைலா மஜ்னு என்று படம் இயக்கிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள். இதை இயக்குனர்கள் எதிர்த்தால் சரியாக இருக்குமா ? இதற்கு முன்பே நா.முத்துகுமார் ஒரு திரைப்படத்தில் வசனம் எழுதினார் .இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். தன் திறமையினை வெளிப்படுத்தும் விதமாகப் பாடலாசிரியராக பணிசெய்கின்றார். எனவே இது போன்ற முயற்சிகள் அனைத்துமே அவரவரின் தனிப்பட்ட உரிமை. வெற்றி பெறுகின்றவர்கள் கவனிக்கப்படுவர்.

முக்கியமாக 2011 ஆம் ஆண்டு இளைஞன் ஆங்கிலத்தை எப்படி அணுகுகின்றான் என்று கவலையாக இருக்கின்றதாம் இவருக்கு.? முன்பிருந்த நிலையினை விட ஆங்கில அறிவு நம் இளைஞர்களிடையே மிக நல்ல நிலையில் இருப்பதனை அனைவரும் அறிவோம்.BBC இந்தப் பாடலை பெண் குரலில் வெளியிட்டு பெருமைபடுத்தி இருக்கின்றது..எனவே இதைப் போன்ற தவறான பரப்புரைகளினால் நீங்கள் தான் தரம் தாழ்ந்து போவீர்கள் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
ஆகவே இதைப் போன்றதொரு தனி நபர் தாக்குதல்களை தவிர்த்து மக்கள் விரும்புகின்ற வகையிலான நல்லப் பாடல்களை வழங்கி வெற்றி பெருக ..