Thursday, January 22, 2015

ஐ ஷங்கரின் திறமைக்கு சான்று

சுஜாதாவின் பக்த கோடிகள் ஐ படம் சுஜாதா பங்களிப்பு இல்லாததால் சுவார்ஸ்யமாக இல்லை என்று கூவுகின்றனர். கமலுக்கு வெளிநாட்டு பட்ங்களைக் காப்பி அடிக்க கற்றுக்கொடுத்து அவரைக் குட்டிசுவராக்கிய பெருமை சுஜாதாவையே சேரும். அடுத்து ஷங்கரையும் அது போன்று கெடுத்து வைத்தானால் தான் அவரும் கீழ்த்தரமான எண்ணங்கள் கொண்ட படங்களை இயக்கினார். அதற்கு முக்கிய உதாரணம் தமிழ்நாடே காறி துப்பிய பாய்ஸ் திரைப்படம்.

சமீபத்தில் காபி வித் டிடியில் வசந்தபாலன் அவர்கள் ஷங்கரிடம் மிக அருமையான ஒரு திரைக்கதை இருப்பதாகவும் அதனை திரைப்படமாக எடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். எனவே ஷங்கரின் சொந்தத் திறமையின் மேல் நம்பிக்கை வைத்த்திருக்கும் அவரின் ரசிகர்களில் நானும் ஒருவன். சுஜாதாவின் பாதிப்பே ஷங்கர் ஐ படத்தில் திருநங்கைகள் குறித்த காட்சி என்பதனை முழுமையாக நம்புகிறேன்.