Monday, March 26, 2018

கிரிக்கெட்டில் சாதியும் சமூக நீதியும்

பலம் வாய்ந்த கிரிக்கெட் அணியான தென்னாப்பிரிக்கா அணியில் அங்குள்ள ஆப்பிரிக்க சமூகத்தினர் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றர். பெரும்பான்மை சமூகமாக ஆப்பிரிக்கர்கள் இருந்தும் அவர்களால் அணியில் இடம்பிடிக்க முடியாத நிலையினை வெள்ளையர்கள் (பிரிட்டிஷ்) ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவிலும் அதேநிலை தான் என்று இந்த கட்டுரை புள்ளிவிவர்ங்களுடன் தெரிவிக்கின்றது. குறிப்பாக மொத்த மக்கள் தொகையில் 25% பங்கு வகிக்கும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் இந்திய கிரிக்கெட் அணியில் எந்த பங்கும் வகிக்கியலவில்லை என்பது மிகப்பெரிய சமூக அநீதி.
மேலும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் வெறும் 7 பேர் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 50 ஆண்டில் பங்கு பெற்றிருக்கின்றனர் என்பது மேலும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது .

உயர்சாதி மட்டுமே அதிகம் பங்கு வகிப்பதாக பல்வேறு கட்டுரைகள் தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கின்றன. அதிகம் பணம் புழங்குவதனாலேயே மற்ற சாதி ம்க்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும் சொல்லப்படுகின்றது .
உடல்வலிமை அதிகம் தேவைப்படும் விளையாட்டுகளான கபடி, ஆக்கி , பளுதூக்கல் போன்றவற்றில் ஏன் உயர்சாதியினர் சோபிக்கவும் முடியவில்லை , இந்த விளையாட்டுகளில் பணம் முதன்மையானதாக இல்லாத்தால உயர்சாதியினர் பங்கு பெற ஆர்வம் காட்டுவதில்லை.
கபில்தேவ் ,தோனி போன்றவர்களும் உயர்சாதியை சார்ந்தவர்களாக இல்லாத்தினாலேயே அவர்களின் தலைமையில் இந்தியா உலக கோப்பை வென்றும் கவனிக்க வேண்டியதாக இருக்கின்றது. இதனையே முன்னுதாரணமாக்க கொண்டு உயர்சாதி அல்லாதவர்களை அணியில் சேர்க்கும் போது இந்திய கிரிக்கெட் அணி வலுவுள்ள ஒன்றாக இருக்கும்.
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனமான ஐஐடியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைத்தபின்தான் பல்வேறு துறைகளில் ( விண்வெளி, பெட்ரோலியம், ஐடி துறை) மாணவர்களின் அறிவுப்பூர்வமான பங்களிப்பு கிடைத்தது.
தென்னாப்பிரிக்காவினை முன்னுதாரணமாக்க் கொண்டு இந்தியாவும் தகுதி வாய்ந்த பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை கிரிக்கெட் அணியில் பங்கு பெற செய்யவேண்டும்.
நன்றி 
செங்கதிரோன்