Sunday, April 17, 2016

இளம் எழுத்தளர்களின் சண்டைகள் : அபிலாஷ் -பிரபு காளிதாஸ் -வா மணிகண்டன்



இலக்கியத்துறையில் சண்டை சாதரணமான ஒன்றாக இருந்தாலும் முதல் புத்தகம் எழுதியக் கையோடு சண்டைக்கு புறப்பட்டு விட்டார் பிரபு காளிதாஸ் , தனது  மிக குறைந்த ஒளியில் புத்தக வெளியீட்டின்  அன்றே பஞ்சாயத்தத் தொடங்கி விட்டார்.பிரபுவின் புத்தக புரமோஷன் யுத்தியைக் கிண்டலடித்து எழுதியதோடு மட்டுமன்றி அடுத்து பிரபு அவர்கள் ரோலக்ஸ் வாட்ச் என்ற நூல் குறித்து மிகவும் சிலாகித்து எழுதிய விமர்சனத்தினை கடுமையாகத் தாக்கி அபிலாஷ் எழுத அதற்கு பிறப்பு அவர்களின் கடுமையான எதிர்வினையாற்ற நமக்கு முழுக்க ஒரே என்டேர்டீன்மென்ட்.தேர்தல் குறித்த காமெடிகள் கொஞ்சம் தனிந்த நிலையில் இவர்களின் நீயா நானா என்ற அக்கப்போர் தாங்க முடியவில்லை.











அடுத்து நிசப்தம் அறக்கட்டளையின் மணிகண்டன் , இவருக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் இருக்கும் வாய்க்கத்தகராறு அனைவரும் அறிந்த ஒன்று தான். பாம்புகளுக்கு பால் வார்ப்பத்தில் மனுஷ் தமிழகத்தில் முதலாமனவர்.
 மணிகண்டனுக்கு உயிர்மையில் எழுத வாய்ப்பு வழங்கினார்.  அவ்வாறு வாய்ப்பு வழங்கி வளர்க்கப்பட்ட ஒருவர்தான் வா மணிகண்டன் , பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் தி .மு.க வில் கணக்கு கேட்டு வெளியே சென்றது போல இவரும் ராயல்டி பிரச்சனையில் வெளியே சென்று மனுஷின் தொலைகாட்சி விவாதங்கள் குறித்து தாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தவர் . அதன் அடுத்தகட்ட நகர்வாக மனுஷுக்கு தி.மு.கே.வில் சீட்டு கிடைக்கவில்லை என்று நக்கலடித்துப் பதிவு போட அதற்கு நானும் ரவுடிதான் என்று வாலண்டியராக அபிலாஷ் அவர்கள் மனிகண்டனைத் தாக்கிப் பத்தி போட இந்த வாரம் இலக்கிய உலகில் அபிலாஷ் வாரமாகி விட்டது.


அரசியல்ல தான் சண்டை உச்சமாக இருக்கிறதே என்று இலக்கியத்திற்குள் நுழைந்தால் அது அதற்கு மேல் இருக்கின்றது.

எனவே வழக்கம் போல நாம் சாப்பாட்டின் பக்கம் கவனம் செலுத்தி உடலை வளர்ப்போம் .
சோத்துக் கட்சி வாழ்க.

நன்றி
செங்கதிரோன் 

இசை உலகின் இளம் தேவதைகள் : தமிழ்ப் பெண் மியா (M.I.A)

என்னது ஒரு தமிழ்ப் பெண் ஆங்கில் இசை உலகிலா என்ற உங்களின் ஆச்சர்யம் புரிந்து கொள்ள முடிகின்றது ,ஆமாம் அது தான் உண்மை. மாதங்கி மாயா அருள்பிரகாசம் என்பதன் சுருக்கம் தான் M.I.A , விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான அருள்பிரகாசத்தின் மகளான மாயா , நம்ம சென்னையில் சில காலம் வாழ்ந்து பின்னர் லண்டனில்  தாயுடன் குடியேறினார்.

அங்கே தொடங்கிய இசைப்பயணம் உலகம் கவனிக்கும் ஒரு பாடகியாக உயர்ந்தார். இவரின் இசைத்திறமை அறிந்து slumdog படத்தில் இசைப்புயல் இவரைப் பயன்படுத்திக் கொண்டார். O saya எனற பாடல் மாயா பாடியது தான். இந்தப் பாட்டிற்கான விருது விழாவில் ரகுமான் ,மாயாவுக்கு நன்றி தெரிவித்தார்.

இவரின் பாடல்கள் மக்களின் பிரச்சனகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருக்கும். ஈழப்பிரச்சனை , சவூதி அரேபியாவில் உள்ள பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கான அனுமதி குறித்து என பல பாடல்கள் அந்தப் பிரச்சனைகள் குறித்து அமைக்கப்பட்டிருக்கும்.


இவரின்  பாடல்கள் பல  உயரிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன . நம் தமிழச்சியின் பாடல்களைஉங்கள் குழாயில் கண்டு கேட்டு (youtube )மகிழுங்கள் .

1. Bad girls 
2.Paper planes 

நன்றி 
செங்கதிரோன் 

சினேகாவின் முன்னாள் காதலனின் பொய் தத்து பித்துகள் :

மிகச் சரியாகப் பத்து வருடங்களுக்கு முன்னர் சினேகாவின் காதலன் என்றுக் கூறி ஊடகங்களில் பரபரப்பினை உண்டாக்கியவர் ரவி நாக். ஆனால் சினேகா  இதனை மறுத்து காவல் துறையில் புகார் கொடுத்தார். இதன் உள்விவகாரங்களுக்குள் செல்ல வேண்டாம். இந்த ரவி நாக் தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்று பார்ப்போம் .

ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு கடைசியாகத் தஞ்சம் அடையும் இடமாக தற்போது இருப்பது அரசியல் என்பது வேதனையான சூழல். அதனை நோக்கி முன்னேற்றம் அடைய முதலில் அமித் ஷா சொன்னது போல முகப்புத்தகத்தில் அதிகமான லைக் வாங்க வேண்டும்.அப்படி வாங்க வேண்டுமென்றால் போலியான தேசப்பற்றுக் கதைகளை உருவாக்க வேண்டும்.

இந்த போலி தேசியவாதி அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு தேசப்பற்று குறித்து நமக்குப் பாடம் எடுக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கின்றது . கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை தத்துப் பித்து என்ற பெயரில் ஒரு பதிவினை முகப் புத்தகத்தில் பதிந்திருக்கின்றார் . அதன் சாரம்சம் என்னவென்றால் அவரிடம் தற்காலிகக் குடியுரிமை மலேசியா ,சிங்கப்பூர் , அமேரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இருக்கின்றதாம் , ஆனால் அந்த நாட்டின் நிரந்தரக் குடியுரிமைப் பெற்று அந்த நாட்டின் பாஸ்போர்ட் வாங்காமல் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதற்கான காரணம் தாய் நாட்டின் மேல் உள்ள பற்று என்று பாரத மாதா கீ ஜே என்று பதிவுப் போட நம்மவர்கள் ஏகப்பட்ட லைக்குகளை வழங்கி அவரைப் பாராட்டித் தள்ளி இருக்கின்றனர் .


மக்களே உங்கள் பகுத்தறிவு எங்கே போனது , எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாரிசுகளான நாம் மிக முக்கிய செய்திகளை கவனிக்கத் தவறி விட்டோம் .

ஏன் அந்தப் பதிவு போலியானது 
1. இந்தியா இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதில்லை . அதனால்  வெளிநாட்டில் பலரும் தற்காலிகக் குடியுரிமை மட்டும் வைத்துக் கொண்டு இந்திய பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி வருகின்றார். இதே முறையினை சீனா உட்பட மற்ற நாட்டினரும் பின்பற்றுகின்றனர்.
2. தற்காலிகக் குடியுரிமையினைக் கூட எளிதாகப்  பெற்று விட முடியும் . ஆனால் பாஸ்போர்ட் பெற நிறைய நிபந்தனைகள் உள்ளன. அதில் முக்கியமானது தற்காலிகக் குடியுரிமை பெற்ற பின் ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட நாட்கள் அந்த நாட்டில் தங்கி இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் பெற முடியும் என்ற நிபந்தனை வைத்திருக்கின்றார் . உதாரணத்திற்கு கனடாவில் தற்காலிகக் குடியுரிமை பெற்ற பின் 5 ஆண்டுகள் கனடாவில் தங்கி இருந்தால் மட்டுமே கனடா நாட்டு பாஸ்போர்ட் கிடைக்கும். இந்த பாஸ்போர்ட் கிடைத்த பின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது .

ரவி நாக் குறிப்பிட்டது போல அவருக்கு மற்ற நாடுகளில் தற்காலிகக் குடியுரிமை மட்டுமே கிடைத்திருக்கின்றது .பல நாடுகளில் சுற்றி வரும் இவருக்கு  ஒரே நாட்டில் குறிப்பிட்ட காலம் தங்கி இருப்பதற்கான வாய்ப்பு இல்லாததனால் மட்டுமே அந்த நாட்டின் பாஸ்போர்ட் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை .அதனை மறைத்து தந்தை நாடு தாய் நாடு என்ற போலி தேசியம் பேசி மக்களை இனியும் ஏமாற்ற வேண்டாம் .

பி.கு. நவீன தொழில் நுட்பம் குறித்த  ரவி பதிவுகள் ஓரளவு உபயோகமானவை. அவரின் அரசியல் பதிவுகளை மிக கவனமாகப் படியுங்கள் . குறிப்பாக இந்த போலியான சுய தம்பட்டங்களை ஊக்குவிக்காதீர்கள் 


அந்தப் போலி பதிவு 


Sunday Thathupithu - இன்று சன்டே என்பதால் தத்துபித்து - இன்றையை தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது - ரெட்டை முகம் கொண்ட ரவுத்திரக்காரர்களும் - ரெண்டு இட்லி கட்டி சட்னிக்காக‌ போராளிகளும்.........
நான் இன்னைக்கு நேத்து அல்ல கல்லூரி முடிக்கும் முன்பே காம்பஸில் வெளி நாடு வேலை மற்றூம் எம்பிஏ என்னும் காம்போ ஆஃபரில் சென்று அப்படியே 2006 வரை இந்தியாவில் வசிக்க வில்லை. அதன் பின் 2 வருடம் பின்பு 2008ல் இருந்து திரும்பவும் வெளி நாட்டு வாசம். அதனால வெளி நாடு தான் கால் வாழ்க்கை ஆனாலும் இந்தியா மேல் பற்று கொண்டததால் தான் இன்னும் இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருக்கிறேன். 1999ல் பிரிட்டன் தற்கால குடியுரிமை - 2001ல் சிங்கப்பூர் தற்காலிக குடியுரிமை / 2003 மலேஷியா 2007ல் கனடா மற்றும் 2008ல் அமெரிகக என பல க்ரீன் கார்ட் அல்லது தற்கால குடியுரிமை ஆன பெர்மெனன்ட் ரெஸிடன்ஸ் வைத்திருந்தாலும் இந்தியாதான் என் மூச்சுன்னு இன்று வரை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். (இது சுய புரானம் போன்று தெரிந்தாலும் இது இல்லாமல் இந்த சப்ஜெக்ட் எழுத இயலாது).
நான் பார்த்து இந்தியாவில் இருந்து என் கம்பெனி பணிக்காக‌ கொண்டு சென்ற பல இந்தியர்கள் இன்று அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் 2011 / 2015ல் அந்த ஆஃபர் எனக்கு இருந்தும் போதும் பச்சை அட்டை என்னும் க்ரீன் கார்ட் மட்டும் போதும், என் நாடு இந்தியாதான் என்று இன்று வரை இருந்த காரணம் என் நாடு. என் நாட்டில் பல பிரச்சினைகளை சந்தித்தாலும் நாட்டை என் வீடு போல எண்ணுவதால் அது எனக்கு பெரிதாக தெரிவதில்லை. எந்த வீட்டில் தான் பிரச்சினை இல்லை!!. இந்த நேரத்தில பல அறிவியல் கண்டுபிடிப்புகள் கட்டுரை வடிவங்களாய் ஃபேஸ்புக்கில் எழுத காரணம் அதுவும் முக்கியமாய் இந்தியாவின் அல்லது இந்தியரால் எதாவது ஒரு அற்புத அல்லது கண்டுபிடிப்பு நிகழுமெனில் அதை தான் அன்றைய சாய்ஸாய் எழுதுவேன். இது என்னை அறியாமல் என்னை பெருமைக்கொள்ள செய்வது மட்டுமில்லாமல் சில நல்ல உள்ளங்களையும் மகிழ்விக்கிறது என்பதில் மாற்றூகருத்தில்லை. ஏன் என்றல் 2002 - 206 வரை மலேஷியேன் ஸ்பேஸ் ரிஸர்ச்சில் பணிபுரியும் போதாகட்டும் 2003-2004ல் நாசா மற்றூம் போயிங்கில் எம் 3 பிராஜகட் இன்டெர்ன்ஷிப் போனது ஆகட்டும் என்னை ஆனந்தபடுத்தியது இந்தியா / இந்தியர் / இந்திய வின் வெளிக்கழகம் என்னும் மூன்று விஷயங்கள் தான். இதை பல முறை இஸ்ரோவிர்க்கு பணி விஷயமாக போகும் போது தெரிவிப்பேன் அவர்களும் ஆனந்தப்படுவார்கள்.
இந்தியாவின் பெருமை இந்தியாவின் எதிரி நாடுனு ஒரு மாயையை உருவாக்கிய‌ பாகிஸ்தானுக்கு மூன்று முறை போனபோது உன்மையிலே அவர்கள் நம்மின் மேல் கொண்ட நல்ல எண்ணம் / பாசம் / காதல் அப்பட்டமாக தெரிந்தது நெகிழ்ந்தேன். 135 நாடுகளுக்கு மேல் போய் 19 பாஸ்போர்ட்களை தின்று தீர்த்த வகையில் இந்தியா எனக்கு இன்னும் புரிபடாத உலகத்தின் 8வது அதிசயம். அப்பேர்பட்ட நாட்டின் பெருமைகளை அங்கும் இங்கும் நடக்கும் சில நிகழ்வுகளை பற்றி பெருமையாக எழுதினால் வழக்கம் போல முதல் 300 - 500 லைக் கமென்ட்கள் வரை நன்கு போகும் பின்பு இரவாகி படுக்க செல்லும் போது மெதுவாய் வருவார்கள் இந்த சைக்கோக்கள். இந்தியாவை பெற்றீ அசிங்கமாக பேசுவது, சோத்துக்கே வழியில்லாம்மல் இங்கு பலர் இருக்கும் போது இந்த ராக்கெட் தேவையானு கேட்பார்கள் ஏன் என்றால் அவர்கள் ரவுத்திரகாரக்களாம், போராளிகளாம் - ஏன்டா ரவுத்து அமெரிகக ரிச் நாடுதானே அங்கிட்டு கூட எத்தனை பேர் சோறு தண்ணி இல்லாம இருக்க வீடு இல்லாம பிளாட்பாரத்தில இருக்காங்களேன்னு கேட்டா - இது காவி நாடு இங்கிட்டு பாரத் மாதா கீ ஜெய் சொல்ல சொல்றாங்கன்னு டக்குனு மத ரீதியா தாவிட்டு அங்கிட்டு போய் அற்புதம் டோலி / சாட்டையடி டோழி / உங்கள் புகைப்படம் அல்ல மோனலீஸா ஆர்ட்னு ஃபேஸ்புக் ஆன்டிகளுக்கு ஜே போடுவார்கள். சரி அதையும் சுட்டி காட்டினா இங்கு சகிப்புதன்மை இல்லை சமோஸாவுக்குள் உருளைக்கிழங்கு இல்லைனு / சிறுபான்பையினருக்கு மதிப்பு இல்லைனு அவங்களுக்கும் அந்த மதத்திர்க்கும் சம்பந்தம் இல்லாம சவுட்டிவிடுவாங்க - உடனே போராளியே உங்களுக்கு தெரியுமா உலகத்தின் அதிக மசூதி கொண்ட நாடு இந்தியாதான் / இன்று வரை ஐ நாக்கு அதிகப்படியா ட்ரூப்களை அனுப்பிய வகையில் நெ 1 நாடும் நம்மதான் உலகத்தின் மூன்றாவது பெரிய மிலிட்டரியும் நம்ம தான் உலகத்தின் 5 வது வின் வெளி வரிசையில் உள்ளது நாமதான்னு என்ன சொன்னாலும் நம்ம ரவுத்தூஸ் தலையில மங்கி குல்லா போட்டுகிட்டு ராத்திரி ஆனதும் இந்தியாவின் பெருமை போஸ்ட்ல வந்து கக்கா பேன்டுட்டு போனாதான் அவகளுக்கு நிம்மதி............ஆனா ஒன்னுடே உன்னையெல்லாம் மனுஷனா நினைச்சி உன்னை பெத்த அந்த புன்னியாவன்கள் ஆகட்டும் உன்னை நம்பி தாம்பத்யம் செய்த அந்த பத்தினி மகராசியாவது ரென்டு இட்லி கட்டி சட்னிக்காக குறைச்சு பேசிராதே போராளிகளே!!!!!!!! ஏன் என்றால்
ஓன்னுதான் சொல்லுவேன் - பெற்றோர் , பிறந்த நாடு இதை ரென்டையும் பழிச்சி பேசறவன் மனுஷனே இல்லை - டாட். 
Jai Hind.....