Tuesday, June 2, 2015

கருத்து சுதந்திரத்தில் தினமலருக்கே முதலிடம்


இணையத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட செய்தித்தாள் தினமலர் மட்டுமே, ஏனெனில் அனைத்து செய்திகளுக்கும் இவர்களாகவே ஒரு கற்பனயையோ அல்லது சொந்தக் கருத்தையுமோ சேர்த்து வெளியிடுவதால் பொய்மையின் உரைகல் , தினமலம் என்ற நற்பெயர்களை சம்பாதித்தது. இவை அனைத்தியுமே பலரும் விரிவாக எழுதிவிட்டனர்.

நான் தினமலர் இணையதளத்தினை சில சமயங்களில் பார்ப்பதுண்டு, அங்கே செய்திகளை விட சுவாரஸ்யமான பகுதி வாசகர்களின் கருத்துகள்.ஒவ்வொரு செய்திக்கும் கீழே வாசகர்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்வார்கள்.இது போன்ற பகுதிகள் மற்ற செய்த்தித்தாள்களான தினமணி, தினகரன் மற்றும் புதிதாகத் தொடங்ககப்பட்ட தமிழ் இந்துவிலும் இருப்பினும் தினமலர் கருத்துப் பகுதி எப்பொழுதுமே வாசகர் கருத்துகளால் நிரம்பி வழியும். உலகம் முழுக்க இருக்கின்ற வாசகர்கள் துபாய், கத்தார், இங்கிலாந்து , அமெரிக்கா என அனைத்துப் பகுதியிலிருந்தும் கருத்துகள் பதியப்படும்.

தினமலர் கருத்துப் பகுதிக்கு மட்டும் இவ்வளவு வாசகர்கள் அதிகமாக இருப்பதற்கான  முதல் காரணம்,செய்திகள் சாதாரண மனிதர்களின் மொழியில் இயல்பாக இருப்பதனால் கருத்து எழுத தூண்டுகின்றது.இரண்டாவது காரணம் மிக முக்கியமானது,அந்தக்  கருத்துப் பகுதியில் நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை திட்ட அனுமதிக்கப்படும். எனவே வாசகர்களிடையே ஜெ மற்றும் கலைஞரை திட்டுவதில் ஒரு போட்டியே நடக்கும்.இதனையும் தாண்டி தினலலரின் செய்தியின் தரம் குறித்தும் அதன் அதிமுக, இந்து மத சார்பு குறித்தும் வாசகர்கள் எழுதும் கருத்து எடிட் செய்யப்படாமல் வெளியிடுவார்கள்.

தினமலரை திட்டி தினமலரில் எழுதப்பட்டிருக்கும் கருத்தின் படம் 


தினகரன், நக்கீரன் போன்ற இணையதளங்கள் ஒருவரும் கருத்தே எழுதாமல் காற்று வாங்கும். தினமணி ஒரு எல்லையை தாண்டி நடக்கும், சில அருவெறுப்பான கருத்துகளும் இடம் பெற்றிருக்கும். விகடன், தினமலருக்கு அடுத்ததாக மிக அதிக வாசகர் கருத்தைக் கொண்டிருக்கும் இணையதளம், இருப்பினும் அங்கு இடப்படும் பெரும்ப்பான்மையான கருத்துகள் கடுமையாக எடிட் செய்யப்பட்டே வெளிப்படும்.தமிழ் இந்துவின்  கருத்துப்  பகுதயில் ஒரு ஆரோக்கியப் போக்கு நிலவுவதைக் காண முடிகின்றது.

தினமணியில் வெளியாகிருக்கும் கருத்து.
மிக முக்கய அம்சம் சினிமா செய்திகள் -நடிகைகள் குறித்த செய்தி என்றால் வாசகர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல, பல இரட்டை அர்த்த கருத்தகளை மிக சாதரணமாக எழுதுகின்றனர்.அந்தக் கருத்துகளை ரசிப்பதற்கு ஒரு பெரிய பட்டாளமே இருக்கும்.அப்புறம் விஜய் ,அஜித் ரசிகர்கள் சண்டையும் சில சமயம் நிகழும்.

வாசகர்களால் அரசியல் வாதிகளுக்கு வைத்துள்ள பட்டப்பெயர்கள் கலைஞர்-கட்டுமரம்,மோடி -feku ,ராகுல்-பப்பு ,சீமான்-தள்ளு தள்ளு, வைகோ-கருப்பு துண்டு, ராமதாஸ்-மரம்வெட்டி,தமிழிசை-சொந்தக் கருத்து சொர்ணாக்கா, இப்படி பட்டப் பெயர்களைக் குறிப்ப்ட்டே அந்த அரசியல்வாதிகளை விமர்சிப்பர். 

டீக்கடை பெஞ்சில் இன்றும் அரசியல் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில் இணையத்தில் நடக்கும் அரசியல் சண்டைகளுக்கு தினமலர் போன்ற பத்திரிகைகள் தகுந்த இடமளித்து சண்டை போட்டுக்க் கொள்ள ஊக்குவிக்கின்றனர்.இதனால் உடல் ரீதியான தாக்குதல் நடக்காமல் உள்ள (மன)ரீதியான தாக்குதல்கள் மட்டும் நடக்கின்றது.தினமலர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எனக்கு இருப்பினும், கருத்துப் பகுதியில் சுதந்திரமாக அனைவரும் தங்கள் கருத்தைப் பதிவு செய்ய அனுமதிக்கும் போக்கைப் பாராட்டியே ஆக வேண்டும்.

Monday, June 1, 2015

மாஸ் -முதலுக்கு மோசமில்லை

 சூர்யா வெங்கட்பிரபு கூட்டணி என்றதும் எனக்கு  நினைவுக்கு வந்தது கலகலப்பு படத்தில் சந்தானம்-அஞ்சலி ஜோடி பொருத்தத்தை விமல் சர்க்கரைப் பொங்கலும் வடகறியும் போல என்பார். அதுதான் , ஏனென்றால் நந்தா படத்திற்குப் பின் வந்த அனைத்து  சூர்யாவின் படங்களில்  அவரின் கதாபாத்திரத்திற்கு ஒரு முதிர்ச்சி இருக்கும். வெங்கட்பிரபு படத்தில் சூர்யாவுக்கு அது போன்ற ஒரு பாத்திரம் இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.ஈழத்தமிழர்சூர்யா மட்டுமே நாம் இயல்பாக பார்க்கும் சூர்யவாகக் காட்சி அளிக்கின்றார். 

கதை ஓரளவு அபூர்வ சகோதரர்கள் படத்தின் தாக்கத்தில் உணடக்கப்பட்ட படம் போல உள்ளது. அ .சகோ. படத்தில் அண்ணன் தம்பி இங்கே அப்பா மகன், அதில் அண்ணன் எதிர்களை கொல்லும் சமயங்களில் தம்பி கமல் அந்த இடத்தில் இருப்பதால் அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார். இங்கே சற்று வித்தியாசமாக அப்பா சூர்யா மகனைப் பயன்படுத்தி எதிரிகளைக் கொல்கின்றார்.



ஸ்ரீமான் மற்றும் கருணாஸ் இருவரையும் இன்னும் அதிகமான காட்சிகளில் நடிக்க வைத்திருக்கலாம். முதன் முறையாக பிரேம்ஜிக்கு மக்கள் மனதில் ஆழமாகப் பதியும் கதாபாத்திரம், காமெடி சோகம் இரண்டிலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றார்.பார்த்திபனை போலீஸ் உடையில் பார்க்கும் போது உள்ளே வெளியே படம் தான் ஞாபகம் வந்தது. அதில் நடித்த அதே பாணியை இதிலும் அவருக்கே தெரியாமல் பின்பற்றி இருக்கின்றார் என்று நினைக்கின்றேன். உள்ளே வெளியே இரண்டாம் பாகம் கூட எடுக்கலாம்.மிக நல்ல வரவேற்பு இருக்கும்.

நான் கண்டிப்பாக நயன்தாராவுக்காக இந்தப் படம் பார்க்கவில்லை என்பதனை பதிவு செய்ய விரும்புகின்றேன். ஏனென்றால் வழக்கமாக வெங்கட்  படத்தில் கதநாயகியை விட ஒரு பாடலுக்கு ஆடும் நடிகைகள் மிக அழகாக இருப்பார்கள், அப்படி ஏதாவது இருக்கும் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. நயன்தாராவை கூட வரும் பெண் அக்கா என்று கூப்பிட்டது தான் நயன்தாராவின் முன்னாள் ரசிகன் என்ற முறையில் சற்று வருத்தமாக இருந்தது.பிரனிதா பற்றி சிலாகித்து சொல்ல ஒன்றுமில்லை. 

சமுத்திரக்கனி வில்லன் பாத்திரத்திற்கு கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கின்ரார். ஈழத்தமிழர் சூர்யா பகுதியினை மட்டும் முதல் பகுதியிலே காட்டி இருந்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.ஜெயப்பிரகாஷ் இந்தப் படத்திற்கு தேவையே இல்லை.

அனைவரும் பாராட்டியது போல படத்தில்  ஜெய் வரும் பகுதி மிக நெகிழ்வாக இருந்தது.பேயாக உளவும் மற்றவர்களை ஒரே பாட்டில் அவர்களின் கதை சொல்லி முடித்ததற்குப் பதில் கொஞ்சம் விரிவாகக் காண்பித்திருக்கலாம் .


மொத்தத்தில் அஞ்சான் அளவுக்கு மோசமில்லை. இந்த மாறுபட்ட இருவரின் கூட்டணியில் நமக்கு இவ்வளவு தான் கிடைக்கும்.சூர்யா கதைத் தேர்வில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சூர்யாவுக்கு மற்ற நடிகர்களை விட குடுமப் audience அதிகம் , இதனை அமீர் ஒரு பேட்டியில்  சொல்லி இருக்கின்றார். அது போன்ற ரசிகர்களை இழக்காத அளவுக்கு அவரின் படங்கள் இருக்க வேண்டும்.
மாஸ் நீங்கள் கொடுக்கும் டிக்கெட் விலைக்கு மோசமில்லை.


பி.கு. வெங்கட் பிரபுவும் சூர்யாவும் பால்ய காலத்திலிருந்தே தோழர்களாம் , அந்த நட்பின் அடிப்படையில் தான் இந்தப் படத்தில் இணைந்திருக்கின்றனர்.
நன்றி