Thursday, May 12, 2016

மாயன்கள் நமது மச்சான்கள்

நம்மை நமீதா மச்சான் என்று குறிப்பிடுகிறார் , மற்றும் நமது வட இந்திய நண்பர்கள் கூட மச்சி என்று அழைக்கின்றனர். நம் அண்டை மாநிலத்தவர்களான மலையாளி. தெலுங்கர் மற்றும் கன்னடர்கள் எல்லோருமே நம் பங்காளிகள் தான். ஆனால் நம்முடைய உண்மையான மச்சான்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

வானவியல் ஆராய்ச்சி மையம்  
அவர்களைப் பற்றி உங்கள் அனைவருக்கும் முன்பே  நன்கு தெரியும். நீங்கள் எளிதில் விளங்கிக் கொள்ளும் விதத்தில் சொல்ல வேண்டுமானால் 2012 ல் உலகம் அழிந்து விடும் என்று பரபரப்பு கிளப்பப்பட்டது அல்லவா அந்த பரபரப்புக்கு அடித்தளமாக இருந்தது மாயன் நாட்காட்டி (காலண்டர் ).  நாம் வானவியல் குறித்து இப்பொழுது பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கலாம்.பல நூறாண்டுகளுக்கு முன்பே வானவியல் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். 
மாய நாகரிகம் பரவி இருந்த இடங்கள்


நம் மச்சான்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் அமெரிக்க கண்டத்திற்கு வசித்து வந்தார்கள். நம் முன்னோர்கள் எவ்வாறு கட்டடக் கலை, இலக்கியம் , மருத்துவம்  என எண்ணற்ற துறைகளில் புதிய கண்டு பிடிப்புகைளை நிகழ்த்திக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்  தான் நம மச்சான்கள் மாயன்களும் வானவியில் அறிவியல், கணிதம் , விவசாயம் போன்றவற்றில் சிறந்து விளங்கினர் .

2006ம் ஆண்டு வெளிவந்த அப்போகாலிப்டோ படம் நம் மச்சான்களுக்குள் நடந்த சகோதர் யுத்தம் பற்றியது தான், இருப்பினும் இப்படம் மாயன்களை ஒரு காட்டு மிராண்டிகளாக மட்டுமே சித்தரித்திருந்தது. இப்படம் வெளிவந்தபொழுது சினிமா விமர்சகர் மற்றும் கார்டூனிஸ்ட் மதன் அவர்கள் மாயன்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து குறிப்பிட்டார்.எனினும் இப்படத்தினை எடுத்த புகழ்பெற்ற நடிகரான மெல் கிப்சன் ,  மாயன்களின் ஒரு பக்கம் (இனக்குழுக்குள் நடந்த சண்டைகள் )  குறித்து மட்டும் படம் எடுத்தார். இதற்கானப் பின்னணி என்னவென்றால் மெல்கிப்சன் தீவிரமான கிறித்துவ நம்பிக்கைகள் கொண்டவர். ஸ்பானியர்கள் அமெரிக்க கண்டம் கண்டுபிடித்த பொழுது நம் மச்சான்களின் நாகரிகமான வாழ்க்கையும் அவர்களின் மிக அரிதான அறிவியல் கண்டுபிடிப்புகளையும் கண்டு வியந்தனர். அச்சமயத்தில் ஐரோப்பா கண்டம் கற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தது.  தாங்கள் தான் உலகில் அறிவில் சிறந்தவர்கள் என்று நம்பிக் கொண்டிருந்த அவர்களுக்கு இது மிகுந்த வியப்பினை அளித்தது. மேலும் கொலம்பஸ் அவர்களுடன் வந்தவர்களில் பெரும்பான்மையனோர் குற்றவாளிகள் மற்றும் படிப்பறிவில்லாதவர்கள்.  அவர்களுக்கு மாயன்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் அவர்களின் புத்தகங்களின் அவசியத்தினை உணராமல் அவற்றை எரித்து விட்டனர்.
மெல் கிப்சன்-அப்போகாலிப்டோபடப்பிடிப்பின் போது


மேலும் நம் மச்சான்களுக்குள் நடந்த சண்டையினை வாய்ப்பாகப் பயன்டுத்தி அவர்களின் சகாப்ததினை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.ஸ்பானியர்களால்  மாயன்களின் மொழி, கலாச்சார சுவடுகள் ,அவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புகளை மட்டுமே அழிக்க முடிந்தது. ஆனால் அவர்கள் கட்டி வைத்த பிரமிடுகள், கற்சிற்பங்கள் , குகைகள் ஆகியவற்றை அழிக்க முடியவில்லை. வரலாற்று ஆய்வாளர்கள் மெக்சிகோ மற்றும் அதை சுற்றி இருந்தக் காடுகளில் தற்செயலாகத் தான் இந்த மாயன்  நாகரிக தடங்களை கண்டுபிடித்தனர். அந்தப் பிரமிடுகளில் எழுதி இருந்த குறிப்புகளை வைத்துத் தான் மாயன்களின் அறிவுத் திறமைகளை கண்டறிந்தனர்.இதன் பிறகுதான் உலகின் தொன்மையான நாகரிங்களில் ஒன்றாக மாயன் நாகரிகமும் கருதப்பட்டது.

ஏன் மாயன்கள் நமது மச்சான்கள்?

1.நமது ஊர்களில் இருக்கும் பெயர்கள் தான் முதல் சாட்சி : மாயவன் , மாயாண்டி , மாயா இந்தப் பெயர்களெல்லாம் அதிகம் தென்படுவது தமிழ்நாட்டில் மட்டுமே , எனினும் மற்ற மாநிலம் அல்லது நாடுகளில்  இந்தப் பெயர்கள் இருப்பினும் அவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவையே.
2.கடல்வழியில் தமிழர்கள் சிறந்து விளங்கி இருந்ததாலும் , எகிப்து.கிரேக்கம் போன்றவைகளோடு வணிகத் தொடர்பு வைத்திருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் மாய நாகரிகத்துடன் தொடர்பு இருந்ததையும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
3.மிகவும் குறிப்பாக மாயன் நாகரிக சிற்பங்கள் நம் அய்யனார் சிலைகளை ஒத்த அமைப்பினை உடையவையாக இருப்பதையும் கொண்டு இந்த இரு நாகரிகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதினை கண்டு கொள்ள முடியும் .
4. நம் கோவில் கோபுர அமைப்பிற்கும் , மாயன்களின் பிரமிடுகளுக்கும் உயரம் மட்டுமே வித்தியாசப்படும்.
மாயன் கோவில்
5.மிக முக்கியமான ஒன்று , அபோகலிப்டோ படம் பார்த்தவர்களுக்கு நினைவில் இருக்கும், அந்தப் படத்தில் இறைவனுக்கு  பலியிடப்படும் காட்சிகள் , இதனையே தான் நாம் மாற்றி ஆடு ,கோழி என்று இறைவனுக்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஜெயலலிதா ஆடு கோழி பலி தடை சட்டம் சங்கராச்சாரியாரின் உத்தரவின்  பேரில் கொண்டு வந்தபோது அதை எதிர்த்ததற்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டதே இந்த கலாச்சாரத் தொடர்பினை ஆரியம் அழிக்க நினைக்கின்றது என்பது தான்.
6.கடைசிக் காரணமாக இருப்பினும் இதுவே முதன்மையான சான்று , நம்மிடையே உள்ள உருவ ஒற்றுமைகள் , அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும் , வெளி நாட்டவர்கள் தமிழர்களை நீங்கள் மெக்சிகன் அல்லது லத்தீன் அமெரிக்கர் என்று தவறுதலாக நினைத்துக் கொள்வார்கள்.

இது குறித்து மேலும் அறிந்து கொள்ள விருப்பபடுபவர்கள் , உங்கள் குழாயில் உள்ள மாயன்கள் குறித்த காணொளிகளைப் பாருங்கள். அது மட்டுமல்லாது  ராஜ் சிவா அவர்கள் எழுதி உயிர்மை வெளியிட்ட இந்த உண்மைகள் ஏன் மறைக்கபடுகின்றன ? என்ற புத்தகமும் மாயன்கள் குறித்து  அறிய உதவும்.




அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிப்பவர்கள் இந்த கோடை விடுமுறையில் வாய்ப்பு கிடைத்தால் அவசியம் நமது மச்சான்களான மாயன்களின்  பிரமிடுகளையும் , கோட்டைகளையும் சென்று பாருங்கள். 

நமக்கும் மாயன்களுக்கும் உள்ள தொடர்பினை அறிய தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும். இந்திய அரசு கண்டிப்பாக இதற்கு எத உதவியும் அளிக்காது , எழுத்தாளர் முத்துலிங்கம் சொன்னது போன்று ஒரு மொழிக்கு ஒரு நாடு அவசியம் என்பதனை இது போன்ற ஏமாற்றங்கள் நமக்கு நன்கு உணர்த்துகின்றன.

மாயன்கள் நமது மச்சான்கள் என்று பெருமிதம் கொள்வோம்.

நன்றி 
செங்கதிரோன்