Monday, April 30, 2018

நேற்று-எம்ஜிஆர், இன்று-ரஜினி , நாளை -அஜீத்:


''ஜ'' என்ற எழுத்து தமிழத்தினை கடந்த 50 ஆண்டுகளில் சினிமா மற்றும் அரசியலில் மிகப்பெரும் ஆதிக்கத்தினை செலுத்தி இருக்கிறது. எம்ஜிஆர் ,ரஜினி ,அஜீத் மூவர் பெயரிலிருக்கும் இந்த ஜ எழுத்து மிகச்சிறந்த உதாரணம் . இவர்கள் தவிர காமராஜர் ,சிவாஜி ,ஜெயலலிதா ,இளையராஜா ,விஜயகாந்த் ,விஜய் ,விஜய் சேதுபதி என்று இந்த ஜ பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

''ஜ'' என்ற எழுத்து குறித்து ஆராய்ச்சி செய்வது இந்தப்பதிவின் நோக்கமல்ல. தமிழகம் தொடர்ந்து தமிழரல்லாதவர்களின் தலைமையை ஏன் தொடர்ந்து வலியன ஏற்றுக் கொள்கின்றது ? இது நம் தன்மானத்திற்கு இழுக்கா அல்லது நம்  வந்தாரை வாழவைத்து ஆளவைக்கும் பரந்த மனப்பான்மையா என்பதனைக் குறித்த பதிவுதான் இது.

வெளிமாநிலத்திலோ , வெளிநாட்டிலோ  வாழும் தமிழர்களை மற்ற மாநிலத்தினர் ஒரு சில சமயங்களில் , உங்கள் மாநிலத்தை ஆள தகுதி படைத்த தமிழனே இல்லையா ? ஏன் எப்பொழுதும் வேற்று மாநிலத்தவர் உங்களை ஆட்சி செய்ய அனுமதிக்கின்றீர்கள் என்று கிண்டலாகவும் , சீரியஸாகவும் கேட்பதுண்டு .அப்போதைக்கு எதாவது சமாளித்தாலும் ,பிற்பாடு அந்தக் கேள்வி நம்மை உறுத்திக் கொண்டே இருக்கும் .

எம்ஜிஆரோடு இது முடிந்து விடும் என்று எண்ணியிருக்கையில் , பிற்பாடு ஜெயலலிதாவும் நம்மை ஆட்சி செய்தார் , அது முடிந்தது ''இனி ஆளப்போறான் தமிழன்'' என்று நினைத்துக் கொண்டிருக்கையில் ரஜினி ஒரு பெருந்திட்டதோடு அரசியலில் நுழைந்து ஆட்சி செய்ய முயலுகின்றார் . அதற்கடுத்து ,அஜித்தும் முதல்வராக முயலமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இதுதான் உலக மகா ஸ்டைல் 
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் சுயாட்சி குறித்தும் , தமிழ் தேசியம் குறித்தும் அதிகம் குரல் எழுப்பப்டுகின்றது. ஆனால் அது செயல் வடிவத்திற்கு செல்ல முடியாமல் பேச்சோடு முடிந்து விடுகின்றது .

ஆனால் எம்ஜிஆர் ,ரஜினி போன்றோருக்கு மிக எளிதாக அந்த உயர்ந்த இடம் கிடைக்கிறது . அதற்கு மிக முக்கியக் காரணம் முதலாவதாக  நம் சினிமா மோகம் . சினிமாவில் நல்லவன் என்றால் நிஜத்திலும் அவன் மிக நிலவன் என்றெண்ணி அவனை தெய்வம் போல வழிபடுகின்றோம் . அதற்கடுத்து அவர்களின் தோற்றம் எம்ஜிஆர் ஜெயலலிதாவை தங்கம் போல மின்னுகின்றார்கள் என வாய்பிளந்து நின்றவர்கள் தான் நாம் . இதே காரணத்தினால் தான் அஜித்தும் கொண்டாடப்படுகின்றார் . ஆனால் ஆப்பிரிக்காவிலோ அல்லது இஸ்லாமிய நாடுகளிலோ இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டதே இல்லை . நிறத்தை வைத்து ,சினிமா கவர்ச்சியை வைத்து தலைமை பீட பதவியை தாரை வார்த்த  ஒரே இனம் தமிழினம் மட்டுமே .

இன்னொரு முக்கிய விஷயம் ரஜினி எம்ஜிஆர் அஜித் போன்றோரைக் கொண்டு நம் மீது ஒரு ரசனை திணிக்கப்படுகின்றது . எம்ஜிஆர் என்றால் எப்படி கலராக இருக்கின்றார்  என்பது , ரஜினி ஸ்டைல் குறித்து சிலாகித்து எழுதி நம்மை ஏமாற்றுவது , வெள்ளை முடி ,தாடியுடன் இருக்கும் அஜித்தினை பார் எப்படி ஸ்மார்ட் என்று நம்மை ஒரு போலியான ரசனைக்குள் நம்மை அறியாமலே தள்ளி விடும் வேலையினை செய்கின்றனர் . எத்தனை காலம் தான் தமிழினை ஏமாற்றுவார்கள் என்று தெரியவில்லை.
நம்புங்க இவர்தான் ஹீரோவுக்கெல்லாம் ஹீரோ 
சினிமாமோகத்தை மட்டுமே ஒரேயடியாக சொல்லிவிட முடியாது ,அதைவிட இனொரு முக்கிய அபிமானம் ஒன்று இருக்கின்றது, அது தான் தமிழன் தலைமை ஏற்க தடையாக இருக்கின்றது , அது நாம் அனைவருக்குமான சாதி அடையாளம் . அந்த ஒன்றினால் தான் மிக எளிதாக வெளிமாநிலத்தவர் நம்மை எளிதாக ஆள முடிகின்றது. இது எப்படி சாத்தியமாகின்றது என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி விளக்கினார்.  அது ''caste neutarality '' சாதியற்ற தன்மை எம்ஜிஆருக்கோ ,ரஜினிக்கோ இங்கே இருக்கும் எந்த சாதியோடு தொடர்பில்லாமல் அனைவருக்கும் பொதுவானவர் என்ற அடையாளம் இயல்பாக இருக்கின்றது ,அது அஜித்துக்கும் இருக்கின்றது . இதனாலேயே அவர்கள் நம்மை ஆளத்துடிக்கும் போது அனைத்து சாதியினரும் இணைந்து ஆதரிக்கும் சூழல் இருக்கிறது. இதனை முன்னிறுத்தி தான் ரவீந்திரன் துரைசாமி , ரஜினிக்கு இருக்கும் caste neutrality அரசியலில் வெற்றி பெற ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கணித்து கூறி இருக்கின்றார்.
ரவீந்திரன் துரைசாமி
தமிழ்த்தேசியம் தொடர்ந்து தோல்வி அடைய காரணமாக இருப்பதும் இந்த சாதியம் தான் , இப்பொழுது தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் சீமான் நாடார் என்று அடையாளப்படுத்தி  அவரின் தலைமைய சாதிய தலைவர் என்று குறுக்கும் போக்கு  தான் இருக்கின்றது .தமிழக முதல்வர் எடப்பாடியையே ,கவுண்டர்களின் பிரதிநிதியாகத்தான் தான் அவர் சார்ந்த சாதியினர் எண்ணுகின்றனர் 

சினிமா மோகம் ,சாதிய அபிமானம் அற்ற ஒரு தமிழ் சமுகம் உருவானால் மட்டுமே தமிழன் ஆள்வது சாத்தியபப்டும் . அதுவரை நேற்று எம்ஜிர் நம்மை ஆண்டார் ,இன்று ரஜினி ஆளத்துடிக்கின்றார் ,நாளை அஜித் ஆளும் சூழல் தான் இந்த தமிழினத்தின் தலைவிதி .

வாழ்க தமிழ் , வளர்க வெளிமாநிலத்தவர் என்ற கொள்கையுடன் வாழும் தமிழர்களின் முற்போக்கு எண்ணத்தினை நினைத்து மகிழ்ச்சி கொள்வோம்  அல்லது நொந்து கொள்வோம்.

நன்றி 
செங்கதிரோன்