Sunday, April 22, 2018

மோடி சேவகர்கள் : ராமசுப்ரமணியன் முதல் மாரிதாஸ் வரை

நேரு, இந்திரகாந்தி, ரஜீவகாந்தி என்ற இந்தியாவின் ஒரு சில பிரதமர்களுக்கு கிடைத்த வரவேற்பு மோடிக்கும் இந்த நான்காண்டுகால ஆட்சியில் கிடைத்திருக்கின்றது . அதுவும் அந்த வரவேற்பில் உள்ள வித்தியாசமே ராம்சுரமணியன் என்ற முதியவர் முதல் இளைஞரான மாரிதாஸ்  போன்ற வயதில் உள்ள அனைவருமே நாங்கள் பிஜேபிக்கு ஆதரவு இல்லை மோடிக்கு ஆதரவு என்ற ஒரு புது வகையான கோஷத்தை முன்வைக்கின்றனர்.

பிஜேபியில் இருந்து நீக்கப்பட்ட அடுத்த நாளிலிருந்து ராமசுப்பிரமணியன் மோடி ஆதரவாளர் என்ற முத்திரையுடன் டிவி விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுகின்றார் . மாரிதாஸ் என்ற முகப்புத்தக பிரபலம் தான் ஒரு மோடி ஆதரவாளர் என்று தான் எழுதும் போதும் பேசும் போதும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகின்றார் . கோட்டபாட்டளவில் இது எப்படி சாத்தியம் என்றே புரியவில்லை. நாடு முழுவதும் பிஜேபிக்கு இருக்கும் எதிர்மறையான விமர்சனத்தினைக் கண்டு இது போன்ற மோடி சேவகர்கள் அஞ்சியே இது போன்றதொரு விசித்திரமான நிலைப்பாட்டினை எடுக்கின்றனர். மிக வலுவான சித்தாந்தத்தினை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பிஜேபிக்கு இது மிகப்பெரிய அவமானம் . தனிமனிதனை முன்னிறுத்துவது தவறு என்று கூறும் கட்சியான பிஜேபி வெற்றிக்காக மோடியை நம்பி இன்று அந்தக் கட்சியின் தனித்துவமே கொஞ்ச கொஞ்சமாக குறைந்து வருகின்றது. 


இதில் முக்கிய அம்சமே மிக மிகப் புனிதராக வர்ணிக்கப்படும் மோடி , அதற்கான தகுமிக்கவராக என்று ஆராய்ந்தால் அது மிகுந்து ஏமாற்றத்தையே அளிக்கும். 2002ல் சென்னையிலிருந்து  டில்லி செல்லும் போது படிப்பதற்காக்க the week பத்திரிக்கையினை வாங்கினேன் . அந்த சமயம் குஜ்ராத் கலவரம் நாடு முழுக்க பேசு பொருளாக இருந்தது . வட நாட்டில் இது  நடந்ததால் நம் ஊர் பத்திரிக்கைகளில் பெரிய அளவுக்கு அது குறித்து பேசப்படவில்லை . ஆனால் நான் week பத்த்ரிக்கையில் படித்த பொழுது இப்படி ஒரு கொடுங்கோல் முதலமைச்சரை  அந்த மாநிலம் எப்படி சகித்துக் கொள்கிறது என்று வியந்தேன் .


இதைவிட முக்கியமானது மோடியின் தனிப்பட்ட விவகாரங்கள் அனைத்தும் மர்மமாக இருப்பது தான் , அவருடைய திருமண வாழ்க்கையின் குழப்பங்கள் அனைவருக்கும் தெரியும் . ஆனால் தான் Msc வரை படித்திருப்பதாக சொன்னார் . தகவலறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேட்டால் மோடி பத்தாவது படித்து குறித்தே பதிலளிக்க குஜராத் அரசு மறுத்துவிட்டது.ஆம் ஆத்மி கட்சிக்காரர் ஒருவர் கல்வித்தகுதி குறித்த தவறான தகவலால் எம்எல்ஏ  பதவி இழந்த அடுத்த நாள் பிரதமர் அலுவலகஇணையப்பக்கத்தில் Msc காணாமல் போனது . பிரதமராக கல்வி தகுதி அவசியமில்லை என்றாலும் போலியான தகவல் தருவது அவரின் நம்பகத்தன்மை கேள்விக்குக்குள்ளாகின்றது.


உலகின் மிகப்பபெரிய ஜனநாயக நாடு இந்தியா என்ற பெருமையினை கொஞ்சம் கொஞ்சமாக சிதைப்பதில் மோடி முன்னணியில் இருக்கின்றார்.  தற்பொழுது உள்ள அமைச்சரவையில் அனைத்து துறையும் மோடியின் கட்டுப்பாட்டுலே உள்ளது . தற்போதுய வர்த்தக துறை அமைச்சர் யார் என்று கேட்ட்டால் உடனடியாக யாராலாவது பதிலளிக்க முடியுமா?தானே எல்லாம் என்று எண்ணிக் கொண்டு மற்றவர்களின் பணியினை செய்ய விடாமல் நிர்வாகம் ஸ்தம்பித்துப் போக இவரே காரணமாக இருக்கின்றார்.

அலங்கோல ஆட்சிக்கு பிஜேபி தான் காரணம் மோடி அல்ல என்று மோடி சேவகர்கள் வேண்டுமானால் பல்வேறு சமாளிப்பான விளக்கங்களை அளிக்கலாம் . நாட்டின் நிர்வாக சீடுகளுக்கு பிஜேபி என்ற ஆட்சிக்கு இருக்கும் பங்கை விட மோடிக்கு இருக்கும் பங்குதான் அதிகம். தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மோடி சிறப்பாக செயல்படுவார் என்று அதிகம் எதிரிபார்க்கப்பட்டது . ஆனால் அவருடைய கட்சியினர் பெண்களுக்கு எதிராகவும் , ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களையும் கைகட்டி வேடிக்கைப் பார்க்கின்றார்,

மோடி மேல் எனக்கு எந்த வெறுப்பும் இல்லை , அவர் வெற்றி பெற்றபோது நானும் சராசரி இந்தியன் போல மோடி எதாவது நல்லது செய்வார் என்று எதிர்பார்த்தேன் . ஆனால் செயலை விட பேச்சு தான் அதிகம். விபி சிங், மன்மோகன் சிங்போன்றவர்கள் சத்தமில்லாமல் செய்த சாதனைகள் மிக மிக அதிகம்.

இந்தப் புதிய மோடி சேவகர்கள் வேடம் மிகுந்த நகைப்புக்குரியதாக இருக்கின்றது.ஏனென்றால் மோடியே அப்பழுக்கற்ற புனிதர் அல்ல , அவரை ஒப்பிடும்போது பிஜேபியே நம்பகம்வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது.

நன்றி 
செங்கதிரோன்