Saturday, December 31, 2016

கியூப புரட்சி வரலாறு குறித்த படம்-The Cuba libre history


கியூபாவில் ஸ்பானிய ஆக்கிரமிப்பு தொடங்கி இன்றைய நிலை வரை குறித்த ஒரு ஆவணப்படத்தினை Netflixல் பார்ததேன். மொத்தம் எட்டு பாகங்கள். அமெரிக்காவில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள கியூபாவினை ஒருவிளை நிலம் மற்றும் சுற்றுலாத்தலம் போல மட்டுமே அமெரிக்க பயன்படுத்த நினைத்தது. 


பொம்மை அதிபரை கியூபாவில் அமர்த்தி விட்டு  சர்க்கரை மற்றும் அரிசியினை அமெரிக்க இறக்குமதி செய்து கொள்ளையடித்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தான் செலவ்ந்தர் குடும்பத்தில் பிறந்த மற்றும் சட்டம் படித்த பிடல் காஸ்ட்ரோ நாட்டில் நடக்கும் இந்த அக்கிரமங்களை ஒழிக்க மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தினார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. 


இந்நிலையில் தான் மருத்துவப்படிப்பு முடித்து விட்டு மக்கள் சேவையில் ஈடுபட்டிருக்கும் சேகுவேராவை மெக்சிகோவில் பிடல் சந்திக்கின்றார். அதன் பின்னர் நடந்தவை அனைத்துமே வரலாறு. இருவரும் சேர்ந்து எடுத்த உடன்படிக்கையின் அடிப்படையில் கியூபா விடுதலைக்காக இணைந்து போராடுவது என முடிவு செய்தனர்.  கியூபாவின் ஒரு பகுதியில் பிடலும் மற்றோரு பகுதியில் சேகுவேராவும் தங்கள் படைகளுடன் கியூப அரசாங்கத்தினை எதிர்த்து கிளர்ச்சியினை உண்டாக்கி வெற்றி பெற்றனர்.

இவர்கள் இருவரும் அமைத்த அரசாங்கம் அமெரிக்க எதிரிப்பினாலேயே அவ்வளவு எளிதாக நிர்வகிக்க இயலவில்லை.  ரஷ்ய அரசாங்கம் அளித்த உதவி தான் கியூபா இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றது. கியூபாவின் தொழில் வளர்ச்சி மற்றும் ராணுவ கட்டமைப்பில் ரஷ்யாவுக்கு முக்கியப்பங்காற்றியது. சேகுவாரா சுதந்திர கியூபாவில் தொழில் துறை அமைச்சராக இருந்தார். அவர் செயல்பட்டவிதம் அளப்பரியது.களப்பணியில் நேரடியாக இறங்கி வேலை செய்து மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார். சேகுவேராவும் ,பிடலும் இணைந்து கரும்பு வெட்டுதல் பணியினை மக்களுக்கு அரசாங்கப்பதவியில் இருக்கும் போதே செய்தனர். மக்களுக்காக நான் என்ற சொல்லினை போலி அரசியல் தலைவர்கள் பயன்படுத்துகின்றார்கள் , ஆனால் அந்த சொற்றோடருக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்கள் பிடல்  மற்றும் மற்றும் சேகுவாரா.


இவ்வளவு கடுமையாக உழைத்தும் மக்கள் முழுமையாக நிம்மதியாக இல்லை.    முன்பே சொன்னது போல 90 மைல் தொலைவில் உள்ள கனவுதேசமான அமெரிக்காவில்  கூட்டம் கூட்டமாக  மக்கள் தஞ்சம் அடைந்தனர். அந்த நேரத்தில் மற்றோரு நிகழ்வும் நடந்தது. அமெரிக்கா கியூபாவினை தாக்க முற்பட ரஷியா கியூபாவில் சக்திவாய்ந்த அணுகுண்டுகளை அமைக்க அமெரிக்க அடிபணிந்தது. அமெரிக்காவும் துருக்கியில் ரஷ்யாவை தாக்க வைத்திருந்த அணுகுண்டினை அகற்ற சம்மதித்தது.

சேகுவாவரவின் மறைவு: கியூபாவில் குறிப்பிடத்தக்க பணிகள் ஆற்றிய பின்னர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று அங்கு நடந்த புரட்சி போராட்டங்களில் பங்கெடுத்தார். அவர் பங்கெடுத்த புரட்சி போர்களில் பெற்ற வெற்றி அமெரிக்காவின் வயிற்றை கலக்க அவர்கள் களத்தில் இறங்கினர். ஏனென்றால் முதலாளித்துவ நாடான அமெரிக்காவுக்கு கம்யூனிச சிந்தனை மூன்றாம் உலக நாடுகளில் பரவுவதை விரும்பவில்லை. எனவே தங்கள் படைபலத்தை  இறக்கி சேகுவாராவை  பொலிவியாவில்  சிறைபிடித்து கடைசியாக சுட்டுக்கொன்றனர்.

கியூபாவில் பிடல் கல்வி மருத்துவம்  ஆகியவற்றை  இலவசமாக்கி லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். இருப்பினும் பொருளாதாரத்தினை முன்னேற்றம் செய்ய அவர் எடுத்த எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெறவில்லை. எனவே சுற்றுலாத்துறையை  விரிவுபடுத்தி அமெரிக்க டாலரினை கியூபாவின் அதிகார பணபரிமாற்றத்திற்கு கொண்டுவந்தார், கூடுதலாக வெனிசுலா உதவிக்கரம் நீட்டியது. வெனிசுலா அதிபர் சாவெஸ் அமெரிக்க ஏதிர்ப்பில் இருந்ததால் அவரும் பிடலுக்கு தங்கள் நாட்டின் எண்ணெய் வளத்தில பங்களித்து கியூபா பொருளாதாரம்  சரிவர இயங்க உதவி வருகின்றார்.

ஒபாமா அதிபரான பிறகு அமெரிக்க-கியூப உறவில் ஒரு புதிய அத்தியாயம் பிறந்தது. ஒபாமா பிடலின் தம்பியை சந்தித்து உரையாடிய பின்னர் 1962ல் மூடப்பட்ட அமெரிக்க தூதரகம் 2015ல் மீண்டும் திறக்கப்பட்டது.ஆனாலும் இது கென்னடி அதிபராக இருந்தபோதே நடந்திருக்க வேண்டிய ஒன்று , ஆமாம் பிரெஞ்ச் பத்த்ரிக்கையாளரிடம் அமெரிக்க-கியூப உறவினை புத்துப்பிக்கும் தன் ஆசையினை வெளிப்படுத்திய கென்னடி அது குறித்து பிடலிடம் கருத்து கேட்க சொன்னார். அவர் சொன்னபடி அந்த பத்திரிக்கையாளரும் பிடலை சந்தித்து இது குறித்து பேசிக் கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். 

 கியூபாவில் பிடலுக்கு எதிராக  கலகக்குரல்களும்  ஓங்கி ஒலிக்கத்தான் செய்கின்றது. அவர்கள் கியூபாவை ஒரு ஜனநாயக நாடாகவும் சுதந்திரமான பொருளாதார கொள்கை கொண்ட ஒரு நாடாகவும் பார்க்க விரும்புகின்றனர். அவர்கள் நினைப்பது நடக்குமா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஏனென்றால் பிடலின் தம்பி 2018 வரை ஆட்சி பொறுப்பில் இருப்பேன் என்று சொல்லி இருக்கின்றார் . அவருக்கு பிறகு வரும் தலைமையைப் பொறுத்து தான் கியூபாவின் எதிர்காலம் இருக்கும்.

மேற்சொன்னவைகள் தான் அண்ட் எட்டு பாகத்தில் கியூப அரசியல் குறித்த ஒரு அறிமுகம். 

நன்றி 

செங்கதிரோன் 



Friday, December 30, 2016

2016ல் எனக்கு பிடித்த படங்கள், பாடல்கள் , அரசியல் பிரபலங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்


2016ல் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் 

1. அப்பா 
2. விசாரணை
3.மனிதன்
4.ஜோக்கர்
5.ஒரு நாள் கூத்து
6.தர்மதுரை
7.தில்லுக்கு துட்டு
8.ஆண்டவன் கட்டளை
9.இறுதி சுற்று
10.பிச்சைக்காரன்


2016ல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் 

1. ஆண்டிப்பட்டி கனவாகாத்து( தர்மதுரை)
2. மாய நதி ( கபாலி)
3.கண்ணம்மா(றெக்க)
4.தமிழ்செல்வி(ரெமோ)
5.அக்கா பெத்த ஜக்காவண்டி ( மருது)
6. அடியே அழகே ( ஒரு நாள் கூத்து)
7.தள்ளிப்போகாதே (அ.எ. மடைமையடா)
8.கண்ணடிக்கல( மாவீரன் கிட்டு)
9.ஹே மாமா( சேதுபதி )
10.ஆலுமா டோலுமா (வேதாளம்)



2016ல் சிறப்பாக செயல்பட்ட அரசியல் பிரமுகர்கள்

1. வானதி சீனிவாசன் (பாஜக)
2. மா பா பாண்டியராஜன் (அதிமுக)
3. வழக்கறிஞர் பாலு (பாமக)
4. சிந்தன் (கம்யூனிஸ்ட்)
5. கனகராஜ் (கம்யூனிஸ்ட்)
6. தமிழன் பிரசன்னா(திமுக)
7.மதிமாறன்(திக)
8.பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்)
9.அர்ஜூன் சம்பத் (இந்து மக்கள் கட்சி)
10.ஆளூர் ஷாநவாஸ் ( விசிக)


2016ல் என்னை கவர்ந்த தொலைகாட்சி காட்சி பிரபலங்கள்( செய்தி பிரிவு)

1. குணசேகரன் (news18)
2.தியாக செம்மல் ( புதிய தலைமுறை)
3. ஆழி செந்தில்நாதன் 
4. பெருமாள்மணி
5.அய்யநாதன்
6.முத்துகுமார்
7. ரவீந்திரன் துரைசாமி

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 

நன்றி 
செங்கதிரோன் 

Tuesday, November 22, 2016

வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கத்தில் நரகம் : அரக்க சமையல்


வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள சுவாரஸ்யங்களையும், தனிமை ஏற்படுத்தும் கஷ்டங்களையும் சொல்லும் நோக்கில் எழுதும் புதிய தொடர். இந்த பகுதியில் சமையல் குறித்த சில எண்ணங்கள் 

1.அது என்ன அரக்க சமையல் ? வெட்ட வெளியில் பல ஆண்கள் கூடி சமைத்தால் அது கூட்டாஞ்சோறு , அதுவே வெளிநாட்டில் வெகு சில ஆண்கள் அல்லது ஒரே ஒரு ஆண் சமைக்கும் அந்த முறைக்கு பெயர் தான் அரக்க சமையல்.

2. சமைப்பதில் அனுபவமே இல்லாத ஆண் , சமையலில் இறங்கும்போது உப்பு, காரம் அனைத்துமே அள்ளி அள்ளி போடுவார்கள் 

3. எந்த ஒரு முறைமையும் இருக்க்காது ,உதாரணத்திற்கு முதலில் வெங்காயம் பிறகு தக்காளி என இல்லாமல் மாறி மாறி போடுவது , அது மட்டுமன்றி , மசாலா தூள் போடும் அளவு தெரியாமல் ஒரு பாக்கட்டையே ஒரே ஒரு குழம்பில் கொட்டுவது என பல்வேறு சமையல் விதிகளை மீறி சமைப்பார்கள். மிக முக்கியமாக ஒரு ஆளுக்கு சமைக்க எவ்வளவு தேவை என்பன போன்ற அளவு தெரியாததால் ஒரே நேரத்தில் ஒன்பது பேர் சாப்பிடும் அளவுக்கு சமைத்து அதையும் சாப்பிட முடியாமல் வீணாக்குவார்கள்.


4. நம்மூரில் உள்ளது போல் அல்லாமல் வெளிநாடுகளில் முழுக்க முழுக்க மின்னனு அடுப்புகள் தான் , எனவே அவற்றில் பல சமயங்களில் நெருப்பினை அதிகம் வைத்து (Heat ) உணவு பாழாவதும் நடக்கும்.

5.ஆணுக்கு மிக மிக சரியாக சமைக்க தெரிந்த ஒரே உணவு சாதம் வைப்பது தான் . சொல்லி வைத்தது போல அனைத்து ஆண்களும் இதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்கள் .

மேலே சொன்ன அனைத்தும் தனியாக சமைத்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு தவறான ஒன்றாகவே தெரியாது . ஒரு பெண் அவன் வாழ்வில் வந்த பிறகு தான் , இவ்வளவு நாளும் அரக்க சமையல் தான் செய்து கொண்டிருந்தோம் என்ற உண்மை தெரிய வரும். பெண்களும் சமையலில் தவறுகள் செய்வார்கள் , எப்படி என்றால் நாம் எல்லாவற்றையும் (உப்பு, காரம் , காய்கறி) அதிகமாக போட்டால், அவர்கள் மேற்சொன்ன அனைத்தையுமே மிக மிக குறைவாகவே போடுவார்கள்.

ஆனாலும் அவர்கள் செய்யும் சிறு சிறு மாற்றத்தினால் உணவுக்கு கூடுதல் சுவை கிடைக்கும். தனியாக சமைக்கும் ஆண்கள் சாம்பார் வைத்தவுடன் வேலை முடிந்தது என்று நினைப்பார்கள் , ஆனால் உணவு சமைத்த முடித்த உடன் இறுதியாக தாளிப்பு என்ற ஒன்றினை செய்வார்கள் . இது போல பல உதாரணங்களை  கூறலாம். 


தல அஜீத் பிரியாணி சமைப்பதில் தேர்ச்சி பெற்று விளங்குவது போல் நம் நட்பு வட்டாரத்திலும் பல் உணவு ஸ்பேசிலைட் இருப்பார்கள்.

இது ஆண் சமையலை கிண்டல் செய்ய எழுதப்பட்டதல்ல , மாறாக ஆண் சமையல் முறை எவ்வாறு இருக்கும் என்பதனை படம்பிடித்துக் காட்டும் பதிவு மட்டுமே.

நன்றி 

செங்கதிரோன் 

பின் வாசல் வழியாக நுழையும் பாஜக

இடைத்ததேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறனது. ஏன் மாபெரும் வெற்றி என்று குறிப்பிடுகின்றேன் என்றால் ,அதிக அளவு பிரச்சரம் கிடையாது , ஆள் பலம் கிடையாது ,ரூபாய் நோட்டு பிரச்னை இவை அனைத்தையும் மீறி அது பெற்ற வாக்குகள் மிக கவனிக்கவேண்டிய ஒன்று . நீட காலம் இருந்துவரும் பாமக , மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இது மிகப்பெரும் பின்னடைவு . 


பாஜக தொடந்து இது போன்று மூன்றாம் இடத்தினை வரும் தேர்தலிகளிலும் பெற்றால் மேற் சொன்ன கட்சிகளை தமிழகத்தில் காணாமல் போகும் நிலை வரலாம். உயர் நடுத்தர வர்க்கத்து இளைஞர்களின் நாயகனான மோடி இப்பொழுது தொடர் பிரச்சாரங்கள் மூலம் கிராமத்து இளைஞர்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார் என்றே இந்த வாக்குகளின் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது. 



விஜயகாந்த் வட மாவடத்தில் உள்ள இளைஞர்களை தன் வசப்படுத்த சில காலம் செல்வாக்கு பெற்று விளங்கியது போல , மோடியை முன்னிலைப்படுத்தி பாஜகவும் வட மாவட்டத்தில் காலூன்றப் பார்க்கின்றது. தங்கள் சமுதாய இளைஞர்களை இப்படி வழி தவறி செல்லாமல் தடுக்கும் பணியில் உடனடியாக அந்தந்த தலைவர்கள் களத்தில் இறங்குவது நல்லது. இடைத்தேர்தலில் பாஜக பெற்ற மூன்றாம் இடத்தினை , வருங்காலத்தில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் பெற விடாமல் தடுத்தால் தான் நம் இளைய சமூகம் காக்கப்படும்.



 முன் வாசலில் நின்று கொண்டு திராவிடத்தை வீழ்த்த போராடிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் பினவாசல் வழியாக பாஜக எளிதாக நுழைந்து கொண்டிருக்கின்றது. 

நன்றி 
செங்கதிரோன்




Saturday, November 19, 2016

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரியின் தோல்வி எப்படி நிகழ்ந்தது?




வெற்றிக்கான அனைத்து வாய்ப்புகளும் தன்னை சுற்றி வைத்து இருந்த ஒருவர் தோல்வி அடையும் நிகழ்வுகள் விளையாட்டு , சினிமா , வணிகம் அனைத்திலும் நடக்கும். அதுவே தான் ஹிலாரிக்கும் நடந்தது. வெற்றிக்கு சாதகமான் அம்சங்கள் அனைத்துமே அவருக்கு தோல்வியினை ஏற்படுத்தும் காரணிகளாக மாறிவிட்டது தான் சோகம். அவற்றில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. முதல் பெண் வேட்பாளர்: அமெரிக்க மீன்கள் அனைவருமே இவரை ஒரு பெண்கள் முன்னேற்றத்த்திற்கான முன்மாதிரியாக பார்க்கவே இல்லை. ஏனென்றால் அடிமட்டத்த்தில் இருந்து ஒரு பெண் தனியாக போராடி மேலே வரும்  ஒருவரை தான் அனைவருமே கொண்டாடுவார்கள். ஆனால் ஹிலாரி நடுத்தர குடும்பப்பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் , அவரின் அரசியல் வளர்ச்சிக்கு அவரின் கணவரும் முன்னாள் அமெரிக்க அதிபருமான கிளிண்டனின் பங்கு மிக முக்கியமானது. எனேவ அவரை முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடைமொழிக்குள் வைத்து பெண்களால் கொண்டாட இயலவில்லை. நம் நாட்டில் மம்தா ,மாயாவதி போன்றோர் இவ்வாறுதான் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து முதலமைச்சரானார்கள் .

2. ஒபாமா:  ஒபாமாவின் ஆதரவு ஹிலாரிக்கு மிக பக்க பலமாக இருந்திருந்தாலும் , ஒபாமா தொடந்து இரண்டு முறை ஆட்சி செய்து அதே கட்சியில் இருந்து ஹிலாரி இன்னொரு முறை ஆட்சி செய்ய வாய்ப்பு கேட்டதே அவருக்கு ஆப்பாக அமைந்து விட்டது. ஏனென்றால் உலகை உய்விக்க வந்த கடவுள் போல கொண்டு வரப்பட்ட ஒபாமா பெரிய அளவுக்கு எந்த மாற்றமும் அமெரிக்காவில் நடக்கவில்லை என்பது தான் நிதர்சனம். மாற்றம் விரும்பிய மக்கள் ஹிலாரியை புறக்கணித்து விட்டார்கள்.

3. பில் கிளிண்டன்: அமெரிக்காவை இரண்டு முறை ஆட்சி செய்தவரின் மனைவி என்பதனால் நிறைய ஆதரவு கிடைத்த. அந்த ஆதரவு தளத்தினை நசுக்கும் விதமாக கிளிண்டன் ஆட்சி காலத்தில் நடந்த தவறான நிர்வாக முடிவுகளின் விளைவுகளையும் ஹிலாரியின் தோல்வியாக ,டிரம்ப் தொடந்து முன்னிறுத்தினார். அந்த அணுகுமுறை டிரம்புக்கு மிகப் பெரிய அளவில் உதவி செய்தது (கிளிண்டன் கொண்டு வந்த நாப்டா ஒப்பந்தத்தினால்   தான் அமெரிக்கர்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டது என்ற குற்றசாட்டினை தொடர்ந்து பிரச்சாரங்களில் பதிவு செய்தனால் ஹிலாரிக்கு பெரும் சேதம் ஏற்பட்டது)



இது போல ஏராளமான காரணங்கள் இருப்பினும் மேற்சொன்னவை தான் ஹிலாரியின் தோல்விக்கு மிக முக்கிய காரணிகளாக அமைந்தன.

 நன்றி
செங்கதிரோன்

Thursday, November 17, 2016

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த இந்தியர்களின் பார்வை குறித்து ஒரு நுட்பமான பதிவு:

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த இந்தியர்களின் பார்வை குறித்து ஒரு நுட்பமான பதிவு:


1.அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து இந்தியர்களுக்கான ஆர்வம் குறித்து ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் "எலி தான் காயுதேன்னா எலி புழுக்கை ஏன்டா காயனும்" என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகின்றது.

2.ஏன் அவ்வாறு சொல்கின்றேன் என்றால்  அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நடந்த விவாதங்களில் இந்தியா என்ற ஒரு நாட்டைப் பற்றி ஒரு வார்த்தை கூட டிரம்போ , ஹிலாரியோ பேசவே இல்லை.

3. அமெரிக்க அதிபர்  தேர்தல் விவாதங்களில்  முக்கிய இடம் பிடித்த  நாடுகள்: ரஷ்யா, சீனா , ஈரான் , மெக்சிகோ ,சவுதி அரேபியா (எனவே அந்த நாட்டு மக்கள் தான் இந்த தேர்தலில் அதிக ஆர்வமாக இருந்திருக்க வேண்டும்)

4. டிரம்ப்  நேரடியாக  இஸ்லாமிய அமைப்புகளின் மேல் குற்றம் சாட்டுவதால் தான்  இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் அவருக்கு தாங்களாக முன்வந்து ஆதரவு கொடுத்தனர். இந்து அமைப்புகள் எப்போதுமே  இஸ்லாமியர்களுடன்  நேரடியாகவே மோதுவார்கள். ஆனால் கிறித்துவர்களுடன் அவர்களின் பொருளாதர பலத்தின் காரணமாக நேரடியாக மோதாமல் மறைமுகமாகவே தாக்குவார்கள்.

5.டிரம்ப் உலகமயமாக்கலுக்கு எதிரானவர் , அதனால் தான் அந்த ஊரில் உள்ள தொழிலாளர்கள் அவரை ஆதரித்தார்கள் என்றொரு பொய்யினை ஒரு சிலர் சொன்னார்கள். ஏன் இது பொய்? வெள்ளையின மக்களில் பெரும்பகுதியினருக்கு உழைப்பை விட நிர்வாகம் செய்வது தான் பிடிக்கும். எனவே தான் ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பர்களை இறக்குமதி செய்து அவர்களை பயன்படுத்தி கட்டுமான வேலைகளை செய்தனர். ஆனால் கறுப்பர்கள் சம உரிமை கேட்டுப் போராடி அங்கயே உயர் பதவி வரை வந்து விட்டனர். அடுத்து மெக்சிகோ மக்களை இது போன்று குறைந்த ஊதியத்துக்கு விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்துகின்றனர். மாறாக  அமெரிக்காவில் அவர்களின் வேலையை அதிகம் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வந்த கல்வியறிவு பெற்றவர்கள் தான் என்பது தான் நிதர்சனம்.

6. டிரம்பின் பெண்கள்  குறித்த தவறான கருத்துகள் விவகாரம் ஏன் பெரிதாக எதிரொலிக்கவில்லை:மிகப் பெரும் பணக்காரர் மற்றும்  மூன்று மனைவி கொண்ட டிரம்ப் பெண்கள்  குறித்த பேசும் பேச்சுக்களில் நமக்கு எந்த ஆச்சரியமம் இல்லை. நம்மூரில் உள்ள இந்து அமைப்புகள் இந்த உளறல்களை நியாயப்படுத்தி பேசும் பேச்சுக்களை தான் ஆய்வுக்குரியது. முதலாவது இந்து அமைப்புகளுக்கும் பெண்கள் என்பது குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரம் மட்டுமே , எனவே தான் அவர்கள் டிரம்பை ஆதரிக்கக் கூடும்.

டிரம்பின் வெற்றியோ ,ஹிலாரியின் தோல்வியோ இந்தியாவை துளியளவும் பாதிக்காது  என்பது தான் நிதர்சனம்.

டிரம்பின்  வெற்றிக்கு பின்னர்  அவரை எதிர்த்த அனைவரும் அவர் குறித்த நல்ல செய்திகளை தேடி தேடி படிக்க ஆரம்பித்து விட்டனர். இதன் மூலம் தெரிய வருவது என்னவெனில் பிடிக்காத  ஒருவரை திருமணம் செய்த பின்னர் இவருடன் தான் காலம் முழுக்க வாழ்ந்தாக வேண்டும் என்று நிலை வந்தவுடன்  அவரின் நல்ல குணங்களை மட்டும் பார்க்க ஆரம்பித்து  வாழ பழகிக் கொள்ளும் மனப்பான்மைக்கு  அமெரிக்கர்களும் தயாராகி விட்டனர்.

அடுத்த பதிவில் முதல் பெண் அமெரிக்க பெண் வேட்பாளர்  ஹிலாரியின் தோல்வி எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த முக்கிய செய்திகளை பார்ப்போம்அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த இந்தியர்களின் பார்வை குறித்து ஒரு நுட்பமான பதிவு:

Tuesday, August 9, 2016

அறிஞர்கள் சபை நோக்கி இடைநிலை சாதிகளின் பயணம்

அறிவுசார் துறைகளான (கல்வி, இலக்கியம் ,விஞ்ஞானம்) சுதந்திரத்திற்கு  முன்னர் பார்ப்பனர்கள் நீக்கமற அணைத்து இடங்களிலும் நிறைந்திருந்தனர் , பின்னர் நீதிக்கட்சியின் தோற்றத்தினால் அவ்விடத்தை அதற்கடுத்த படிநிலையில் இருந்த செட்டியார், முதலியார், பிள்ளை போன்றோர் அக்கிரமித்துக் கொண்டனர். பின்னர் இடைநிலை சாதிகளும்(வன்னியர்,தேவர்,நாடார்)அங்கே நகர்ந்திருந்திருக்க (Transition) வேண்டும.ஆனால் அது போன்றதொரு நகர்வு (Transition)  நிகழாமல் இருக்க பல்வேறு முயற்சிகள் இந்த சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன் பின்னணி குறித்த சிறிய தொகுப்புதான் இப்பதிவு.

சமூக நீதி  அதிகம் பேசப்பட்ட தமிழகத்தில் அது பார்ப்பன ஆதிக்க  எதிர்ப்பில் வெற்றி பெற்றவுடன் மிகப் பெரிய தேக்க நிலையினை அடைந்து விட்டது. ஏனென்றால் செட்டியார், முதலியார், பிள்ளை   சாதிக்காரர்கள் பார்ப்பனர்கள் போல எல்லா இடங்களிலும் (கலை ,இலக்கியம் ,பத்திரிக்கை ,அறிவியல், வணிகம் etc ) ஆக்கிரமித்துக் கொண்டனர். இடைநிலை சாதிகளை சார்ந்தவர்கள் விவசாயத்துறையில் அதிக கவனம் செலுத்தியதால் மேற்சொன்ன துறைகளில் அவர்களின் பங்களிப்பு நிகழவே இல்லை.

முன்னேறிய வகுப்பினர் வருகைக்குப் பின்னர் அறிவுசார் தளத்தில்  பல நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டன.ஏகப்பட்ட படைப்பாளிகள் உருவானார்கள்.பல்வேறு புதிய கருத்துக்கள் சமூகத்தில் விதைக்கப்பட்டன. இருப்பினும் சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போக்க எந்த ஒரு முயற்சியினையும் இந்த முன்னேறிய வகுப்பினர் எடுக்கவில்லை. மாறாக பார்ப்பனர்களைப் போலவே இவர்களும் தங்களை இடைநிலை சாதிகளை விட ஒரு படி மேலே இருக்கின்றோம் என்ற ஓரு மேதாவித்தனத்துடன் நடந்து கொள்கின்றனர் . அதுவும் குறிப்பாக சமூகத்தில்  பார்ப்பனரல்லாத இந்த முன்னேறிய  வகுப்பினர் இடைநிலைசாதிகளையும் தலித் பிரிவினருக்கும் இடையே நடக்கும் மோதலை உள்ளூர ரசித்தனர். ஏனென்றால் இந்த இரு தரப்பினரும்  தொடர்ந்து பிரச்சனைகளில் சிக்கி இருந்தால் தங்கள் பதவிகளுக்கு எந்தப்  போட்டியும் வராது என்று இந்த தந்திரத்தைக் கையாண்டு வருகின்றனர். 

இதற்கு சமீபத்திய மிகச்சசிறந்த உதாரணம் கபாலிப் பட இயக்குனர் ரஞ்சித்துக்கு ஊடகங்கள் அளித்த அதீத முக்கியத்துவம். ஏனென்றால் அந்தப் படத்தில் வரும்  வில்லன் கிஷோரின் பெயர் வீர சேகர், இது போன்ற பெயர்கள் அதிகம் இருப்பது இடைநிலை சாதிகளில் மட்டுமே அதுவும் குறிப்பாக  வன்னியர், தேவர் ,மீனவப் பிரிவுகளில் பெரும்பான்மையானோரின் பெயர் வீர என்ற அடை மொழியுடன் தான் துவங்கும். ஒரு வாதத்திற்கு கிஷோரின் பெயர் முதலியார், பிள்ளை அல்லது கவுண்டர் என்று இருக்குமானால் ஒட்டு மொத்த அறிவு ஜீவிகளும் இந்தப் படத்தினை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று பக்கம் பக்கமாக எழுதியும் பேசியும் குவித்திருப்பார்கள். வீர என்ற பெயரைப் பார்த்தவுடன் தாக்குதல் நம்மை நோக்கி அல்ல என்று அகமகிழ்ந்து  அண்ணன் ரஞ்சத்தினை போட்டி போட்டு பேட்டி எடுக்கின்றனர்.

அறிவுசார் தளத்தில்  நுழைய முன்னேறிய வகுப்பினர் மட்டும் தான் தடையாக இருக்கின்றார்களா என்றால் இல்லை என்றே கூற முடியும். ஏனென்றால் இந்த இடைநிலைசாதிகள் சார்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தங்களின் சுயலாபத்திற்காக சாதீய உணர்வுகளை விதைத்து அவர்களின் மூளையினை சிந்திக்க விடாமல் செய்து மழுங்கடிக்க செய்கின்றனர். இதனாலேயே இடைநிலை சமூகம் சார்ந்த இளைஞர்கள் வன்முறையே தங்கள் பாதையாக தேர்ந்தெடுக்கின்றனர் .இதனால் இவர்களில் இருந்து குறிப்பிடத்தக்க அளவிலான கல்வியாளர்கள், படைப்பாளிகள் , அறிஞர் பெருமக்கள் உருவாகவே இல்லை. மேலும் இந்த இளைஞர்களை மேல்சாதியினரும் தங்களின் ஏவல் ஆட்களாகவே பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர்.

ஆந்திராவில் பெரும்பான்மையாக உள்ள  ரெட்டி மற்றும் நாயுடு என்று இரு துருவ அரசியல் மட்டுமே நடக்கின்றது. ஆனால் இங்கே பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ள தேவர், வன்னியர் மற்றும் நாடார்களின் பங்களிப்பு சிறிதும் அறிவு சார் தளத்திலோ அல்லது அதிகாரத்திலோ குறிப்பிடத்தக்க அளவு இல்லை .

இது போன்ற ஒரு நிலை மிக அபாயகரமானது ஏனெனில் இடைநிலை சாதிகளுக்கான தகுந்த இடத்தினை முன்னேறிய வகுப்பினர் தானாக முன் வந்து வழங்க வேண்டும் அல்லது அவர்களை முன்னிலைப் படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் செய்ய முடியாவிட்டாலும் இடைநிலை சாதி மற்றும் தலித்துகளுக்கு இடையே கலகம் ஏற்படுத்தி குளிர்காயும் போக்கினை மட்டுமாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். இச்சமூக மக்கள் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் கல்வியில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர், அவர்கள் விழிப்படைந்து  போராடி முன்னேறிய வகுப்பினரை குற்றம் சாட்டி வெளியேற்றும் போது பார்ப்பனர்கள் எப்படி தங்கள் இடம் பறிபோனது என்று நினைத்துப் புலம்புகின்றார்களோ அதே நிலை  தான் பார்ப்பனரல்லாத முன்னேறிய வகுப்புக்கும் விரைவில் ஏற்படும்


 அறிவுசார் தளத்தில் இடைநிலை சாதிகள் பங்கு குறைவு என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு , காட்சி ஊடகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் பார்ப்பனர்கள் மற்றும் முன்னேறிய வகுப்பினர் மட்டுமே இருப்பதில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும் . மேலும் சமூகத்தில் ஆழமான கருத்துக்களை விதைக்கும் எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் சபையிலும் இவர்களின் பங்களிப்பே இல்லை .இடைநிலை சாதி மக்களின் பங்களிப்புடன் கூடிய கருத்தே ஒட்டு மொத்த சமூகத்தின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியும்.

அறிவுசார் சமூகத்தில் இடைநிலை சாதிகளின் பங்களிப்பிற்கான தகுந்த நேரம் இது தான் , இதனை நோக்கி அவர்கள் நகர வேண்டும். அதற்கான பாதையினை இந்த சமூகம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

நன்றி
செங்கதிரோன்

Friday, August 5, 2016

இசை உலகின் தேவதைகள்: எமிலி சாண்டெ

பாடலைக் கேட்கும் பொது நம் மனம் எங்கும் அலைபாயாமல் பாடலிலேயே ஒன்றிவிடக் கூடிய அளவுக்குப் பாடும் திறமை வாய்ந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே ,அவர்களில் ஒருவர் தான் எமிலி ஸாண்டே .ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த இவர் கறுப்பின தந்தைக்கும் வெள்ளையின தாய்க்கும் மகளாக 1987ல் பிறந்தார். சிறுவயதிலேயே பாடும் திறமையில் சிறந்து விளங்கினாலும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் அதன் விளைவாக மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் நரம்பு அறிவியலில் (Neuroscience) முதுகலை பட்டம் பயின்றார். 



இவருடைய முதல் பெயர் அடெல் தான், இருப்பினும் இதே பெயரில் மற்றோரு புகழ் பெற்ற பாடகி இருந்ததால் தன பெயரை ஸாண்டே என்று மாற்றிக் கொண்டார்.2010ல் தனது இசைப்பயணத்தினைத் தொடங்கிய இவர் குறைவானப் பாடல்களே பாடி இருப்பினும் இசை ரசிகர்களை எளிதில் தன் உணர்ச்சி மிக்க குரலால் வசப்படுத்திக் கொண்டார் . கீழே உள்ள இணைப்பில் புற்று நோயால் பதிப்படடைந்த தன் தோழிக்காக பாடும் பாடலினைப் பாருங்கள்.


என்பக்கத்தில் என்ற அர்த்தத்தில் next to me என்ற பாடலும் மிக பிரபலாமான ஒன்று அதனையும் கண்டு கேட்டு மகிழுங்கள்.


இங்கிலாந்து நாட்டில் இசைக்காக வழங்கப்படும் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கின்றார். இந்த தேவதையின் இசை மழையில் நனைந்து இந்த வார விடுமுறையை இன்பமாகக் கொண்டாடுங்கள் நண்பர்களே 

நன்றி 
செங்கதிரோன்

Wednesday, August 3, 2016

நிஜ வில்லன் சிவகுமாரும் நிழல் வில்லன் சத்யராஜும்

நிஜ வில்லன் சிவகுமாரும் நிழல் வில்லன் சத்யராஜும் 

சிவகுமார் போல நல்லவரை நீங்க பத்திரிக்ககைகளில் மட்டும் தான் பார்க்க முடியும் ,நிஜத்தில் அவர்  மிகப்பபெரிய வில்லன் என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கதான் இந்தப் பதிவு. மிகப்பெரிய சுயநலமும் சாதிவெறியும் கொண்ட ஒருவரை மனிதருள் மாணிக்கமாக சித்தரிக்க அவரும் அவருடன் இருப்போரும் முயற்சிக்கினறனர்.



வைரமுத்து தேவர் சாதி வெறி கொண்டவர்  என்பதனை திரும்ப திருமப் சொல்லும் இந்த சமூகம் கொங்கு மாமணி என்று கவுண்டர்களிடம் இருந்து பட்டம் பெற்ற இவரை சாதி வெறியாளராக ஏன் அடையாளப்படுத்தவில்லை என்று புரியவில்லை. 

தன்  மகன் வேறொரு மதம் சார்ந்த பெண்ணை (ஜோதிகா)  காதலித்த போது  அதனைத் தடுக்க மேற்கொண்ட அவர் முயற்சிகள் அனைத்தும் இப்பொழுது கிராமங்களில் நடக்கும் ஆணவக் கொலைக்கு ஒப்பானவை. நன்கு படித்த பண்பாளர் காதலுக்கு இப்படி மூர்க்கததானமான எதிர்ப்பினை சாதி என்ற அடையாளத்தை தன் சந்ததி இழந்து விடக்கூடாது என்ற ஒரே ஒரு அற்ப காரணம் மட்டும் என்றால் அது மிகையில்லை. அந்த சாதி வெறியினை தன் மனைவிக்கும் புகுத்தியிருக்கின்றார் என்பதனை அவர் மனைவி கூறும் இந்த வாசகத்தில் இருந்து நன்கு புரிந்து கொள்ள முடியும்.''ஆரம்பத்துல ஜோவை சூர்யா விரும்புறதாவும், கல்யாணம் பண்ணிக்க சம்மதம் வேணும்னு கேட்டப்பவும் ரொம்பப் பயந்தேன். பல நாட்கள் அழுதுட்டே இருந்தேன்



சாதி வெறி மட்டுமா , மிகப்பெரும் சுயநலப் பேர்வழி என்பதனை நடிகர் சங்க தேர்தல் சமயத்தில் நீங்களே உணந்திருந்திருக்க முடியும் .இது வரை எந்த ஒரு நடிகர் சங்க விழா மற்றும் தேர்தல்களில் எந்த ஒரு பங்களிப்பையும் செய்யாமல் இருந்த இவர் , தன் மகன் தேர்தலில் பொருளாளர் பதவிக்கு நின்றவுடன் எல்லா மேடையிலும் தோன்றி வாய்கிழிய பேசிய பேச்சினை தமிழ்நாடே பார்த்தது .மகன் அன்புமணியை  முன்னிறுத்த ராமதாஸ் செய்ததற்கும் சிவக்குமாரின் செயல்பாட்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. 


இதற்கும்ஒருபடி மேலே போய் சரத்குமாரைப் பற்றி இழிவாக அவர் மனைவி ராதிகாவிடமே கூறி இருக்கின்றார். உன் கணவனால் தான் உன் நிறுவனம் நட்டம் அடைந்ததா என்று நா கூசாமல் கேட்டிருக்கின்றார் இந்தப் பெரிய மனிதர். அதுவும் இவர் குடும்பத்திலேயே ஞானவேல் ராஜா என்னும் கருப்பை வெள்ளையாக்கும் உத்தம ராசாவினை அருகில் வைத்துக் கொண்டே இப்படி அடுத்தவர் குடும்பத்தை வம்பிழுதந்திருக்கின்றார்.

இதற்கு மேலும் இந்த நல்லவரைப் பற்றி எழுதினால் என்னுடைய கீ போர்டே என்னை அடிக்கும் என்பதால் நிழல் வில்லன் சத்யராஜ் குறித்து பார்ப்போம். பேச்சில் இத்தனை வெளிப்படையான ஒரே ஒரு மனிதர் சத்யராஜ் மட்டுமே , பணம் தான் குறிக்கோள் என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் ஒரு உணமையான உத்தம வில்லன். தன மகன் காதல் திருமணத்திற்கு தடையாக இல்லாமல் அவர்களை சேர்த்து வைத்து அழகு பார்த்தவர். தன் மகனை முன்னிறுத்த எந்த குறுக்கு வழிக்கும் செல்லாத ஒரு சுயமரியாதை போராளி.தன் சுய சாதி அடையாளத்தை முற்றிலும் துறந்து கருப்பு சட்டை அணிந்து துணிச்சலாக களத்தில் நிற்கும் ஒரு நிஜப் போராளி சத்யராஜ்.

சத்யராஜுக்கு சிவகுமாருக்கும்  உள்ள வித்தியாசம் என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ,அந்த அளவு தன கொள்கைகளால் சத்யராஜ் மிக உயரத்தில் இருக்கின்றார்.

நன்றி 
செங்கதிரோன்