Monday, March 19, 2018

பிஸ்தா -எனக்கு எப்படி வேலை போச்சுன்னு தெரியுமா சார்?

கார்த்திக் நடிப்பில் வெளிவந்த பல்வேறு முழு நீள நகைச்சுவை படங்களில் பிஸ்தாவும் ஒன்று.  கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் , எப்படிப்பட்ட மனசோர்வையும் எளிதில் போக்கும் திரைகாவியம்.  ரவுடியான கார்த்தி அய்யப்பனுக்கு மாலை போட்டிருக்கும் பொது நல்லவனாக இருக்கையில் அவரை மௌளலியும் அவர் மகள் நக்மாவும் ஏமார்ந்து போவதால் வரும் வினைகள் தான் படத்தின் கதை.படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகள் மற்றும் சிறப்புகள்  



1.நக்மா முதல் பாதியில் மார்டன் உடையிலும், பிற்பகுதியில் சேலையிலும் ஜொலிக்கிறார். 
2. கார்த்தி தலையில் மாட்டிய குண்டானை அக்கறை போராடும் காட்சி 
3.பிச்சைக்காரர்களை வீட்டுக்கு அழைத்து வந்து செய்யும் ரகளை
4. Factoryல் கார்த்திக்கு மாலை போட்டிருக்கும் போதும் , மலைக்குபோய் வந்த பிறகும் கிடைக்கும் வரவேற்பு 
5.கிளைமேக்ஸ் காட்சியில் மன்சூர் அலிகான் செய்யும் அடாவடிகள் 
மேலே  சொன்னது போல பல காட்சிகள் இந்தப் படத்தில் பல்வேறு காட்சிகள் பலருக்கும் பிடித்தமானவையாக இருக்கும்.

இந்தப் படைத்தேன் சிறப்பே மிக மிக simple ஆன கதை , அதனை நம்மை கொஞ்சம் கூட சோர்வடைய விடாமல் நகர்த்திய விதத்தினால் தான் பலருக்கும் இன்றும் என்றும் பிடித்த படமாக இருப்பதற்கு காரணம் . படம் முழுக்க கார்த்தி சொல்லும் ஒரு வசனம் எனக்கு எப்படி வேலை போச்சுன்னு தெரியுமா சார்  என்பது தான் ? இதற்கு உங்கள்யாருக்காவது விடை தெரியுமா ?

நன்றி 
செங்கதிரோன்