Saturday, January 14, 2017

வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கத்தில் நரகம் -கண்ணாடி சாலைகள்

வெற்றிக்கொடி கட்டு படத்தில் வடிவேலு வெளிநாட்டு சாலையில் முகம் பார்க்கும் அளவுக்கு சுத்தமாக இருக்கும் என்றும் அங்கு இலை போடாமலே சாதம் போட்டு சாப்பிடலாம் என்று சொல்லுவார். ஏனென்றால் அவ்வளவு சுத்தமாக இருக்கும். ஆனால் இது வெளிநாட்டு சாலைகளின் சுத்தம் பற்றிய பதிவல்ல.

பனிப்பொழிவிற்கு பிறகு சாலைகளில் தேங்கிய இந்த பனிக்கட்டிகள் மிகுதியான குளிரினால் உறைந்து விடும். இதனால் சாலைகள் கண்ணாடி போலாக மாறிவிடும் . பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாலும் இந்த சாலை கள் மிக ஆபத்தானது.ஏனென்றால் இந்த சாலைகளில் நடக்கும்போதும் , வண்டி ஓட்டும்போதும்  மிக கவனமாக இருக்க வேண்டும்.

பனிக்காலங்களில் இங்கே  அனைவரும் பூட்ஸ் மட்டுமே அனைத்து செல்வர், அது கால்களுக்கு குளிரிலிருந்து பாதுகாப்பினையும் நடக்கும்போது இந்த கண்ணாடி சாலைகளில் இருந்து வழுக்கி விழாமல் நடக்க உதவும்.இப்படி பூட்ஸ் போட்டுக் கொண்டு நடந்தாலும் வழுக்கி விழுவது அடிக்கடி நிகழும். இது போன்ற விழுவதனால் சாதாரண அடி  முதல் எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு வரை விபத்து நிகழும். அதனாலேயே அனைவரும் மிக மெதுவாக கீழே பார்த்து நடப்பார்கள்.

கண்ணாடி சாலை


வாகனங்களுக்கும் குளிர்காலத்திற்கு ஏற்ற சக்கரம் இருக்கின்றது. குளிர் காலம் வந்தவுடன் அனைத்து வாகனங்களுக்கும் குளிர்கால சக்கரம் மாற்றி தான் வண்டிகளை இயக்குவர். பலரும் அதிக பனிப்பொழிவின் போது வாகனம் ஓட்ட மிக சிரமபப்டுவர். இதிலும் ஒரு வேடிக்கையான சம்பவம் என்னெவென்றால் இந்த கண்ணாடி சாலைகளில் மிக சரிவான பாதைகளில் வண்டி ஒட்டி செல்லும் போது பிரேக்க்கும் கட்டுப்படாமல் வண்டி வழுக்கிக் கொண்டே செல்லும்.

கண்ணாடி சாலையில் வாகனங்கள் வழுக்கி செல்வதைப் பாருங்கள் 


வெளிநாட்டில் இந்த குளிர் காலங்களில் இது போன்ற பல்வேறு சுகமான அவஸ்தைகள் அதிகம் இருக்கின்றன.

நன்றி
செங்கதிரோன்