Tuesday, June 2, 2015

கருத்து சுதந்திரத்தில் தினமலருக்கே முதலிடம்


இணையத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட செய்தித்தாள் தினமலர் மட்டுமே, ஏனெனில் அனைத்து செய்திகளுக்கும் இவர்களாகவே ஒரு கற்பனயையோ அல்லது சொந்தக் கருத்தையுமோ சேர்த்து வெளியிடுவதால் பொய்மையின் உரைகல் , தினமலம் என்ற நற்பெயர்களை சம்பாதித்தது. இவை அனைத்தியுமே பலரும் விரிவாக எழுதிவிட்டனர்.

நான் தினமலர் இணையதளத்தினை சில சமயங்களில் பார்ப்பதுண்டு, அங்கே செய்திகளை விட சுவாரஸ்யமான பகுதி வாசகர்களின் கருத்துகள்.ஒவ்வொரு செய்திக்கும் கீழே வாசகர்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்வார்கள்.இது போன்ற பகுதிகள் மற்ற செய்த்தித்தாள்களான தினமணி, தினகரன் மற்றும் புதிதாகத் தொடங்ககப்பட்ட தமிழ் இந்துவிலும் இருப்பினும் தினமலர் கருத்துப் பகுதி எப்பொழுதுமே வாசகர் கருத்துகளால் நிரம்பி வழியும். உலகம் முழுக்க இருக்கின்ற வாசகர்கள் துபாய், கத்தார், இங்கிலாந்து , அமெரிக்கா என அனைத்துப் பகுதியிலிருந்தும் கருத்துகள் பதியப்படும்.

தினமலர் கருத்துப் பகுதிக்கு மட்டும் இவ்வளவு வாசகர்கள் அதிகமாக இருப்பதற்கான  முதல் காரணம்,செய்திகள் சாதாரண மனிதர்களின் மொழியில் இயல்பாக இருப்பதனால் கருத்து எழுத தூண்டுகின்றது.இரண்டாவது காரணம் மிக முக்கியமானது,அந்தக்  கருத்துப் பகுதியில் நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை திட்ட அனுமதிக்கப்படும். எனவே வாசகர்களிடையே ஜெ மற்றும் கலைஞரை திட்டுவதில் ஒரு போட்டியே நடக்கும்.இதனையும் தாண்டி தினலலரின் செய்தியின் தரம் குறித்தும் அதன் அதிமுக, இந்து மத சார்பு குறித்தும் வாசகர்கள் எழுதும் கருத்து எடிட் செய்யப்படாமல் வெளியிடுவார்கள்.

தினமலரை திட்டி தினமலரில் எழுதப்பட்டிருக்கும் கருத்தின் படம் 


தினகரன், நக்கீரன் போன்ற இணையதளங்கள் ஒருவரும் கருத்தே எழுதாமல் காற்று வாங்கும். தினமணி ஒரு எல்லையை தாண்டி நடக்கும், சில அருவெறுப்பான கருத்துகளும் இடம் பெற்றிருக்கும். விகடன், தினமலருக்கு அடுத்ததாக மிக அதிக வாசகர் கருத்தைக் கொண்டிருக்கும் இணையதளம், இருப்பினும் அங்கு இடப்படும் பெரும்ப்பான்மையான கருத்துகள் கடுமையாக எடிட் செய்யப்பட்டே வெளிப்படும்.தமிழ் இந்துவின்  கருத்துப்  பகுதயில் ஒரு ஆரோக்கியப் போக்கு நிலவுவதைக் காண முடிகின்றது.

தினமணியில் வெளியாகிருக்கும் கருத்து.
மிக முக்கய அம்சம் சினிமா செய்திகள் -நடிகைகள் குறித்த செய்தி என்றால் வாசகர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல, பல இரட்டை அர்த்த கருத்தகளை மிக சாதரணமாக எழுதுகின்றனர்.அந்தக் கருத்துகளை ரசிப்பதற்கு ஒரு பெரிய பட்டாளமே இருக்கும்.அப்புறம் விஜய் ,அஜித் ரசிகர்கள் சண்டையும் சில சமயம் நிகழும்.

வாசகர்களால் அரசியல் வாதிகளுக்கு வைத்துள்ள பட்டப்பெயர்கள் கலைஞர்-கட்டுமரம்,மோடி -feku ,ராகுல்-பப்பு ,சீமான்-தள்ளு தள்ளு, வைகோ-கருப்பு துண்டு, ராமதாஸ்-மரம்வெட்டி,தமிழிசை-சொந்தக் கருத்து சொர்ணாக்கா, இப்படி பட்டப் பெயர்களைக் குறிப்ப்ட்டே அந்த அரசியல்வாதிகளை விமர்சிப்பர். 

டீக்கடை பெஞ்சில் இன்றும் அரசியல் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில் இணையத்தில் நடக்கும் அரசியல் சண்டைகளுக்கு தினமலர் போன்ற பத்திரிகைகள் தகுந்த இடமளித்து சண்டை போட்டுக்க் கொள்ள ஊக்குவிக்கின்றனர்.இதனால் உடல் ரீதியான தாக்குதல் நடக்காமல் உள்ள (மன)ரீதியான தாக்குதல்கள் மட்டும் நடக்கின்றது.தினமலர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எனக்கு இருப்பினும், கருத்துப் பகுதியில் சுதந்திரமாக அனைவரும் தங்கள் கருத்தைப் பதிவு செய்ய அனுமதிக்கும் போக்கைப் பாராட்டியே ஆக வேண்டும்.