Friday, June 24, 2016

ராஜாவின் எடுப்பு சுப்ரமணியசாமியின் கொடுக்காக மாறியதன் பிண்ணனி:

வளர்த்த கடா மார்பில் பாய்வது நம்மில் பலருக்கும் நடந்திருக்கும். ஏழை பிராமணனை சோறு ஊட்டி வளர்த்து தன்னையுடைய எடுப்பாக எட்டாண்டுக்கும் மேலாக வைத்திருந்த ராஜாவுக்கு தெரியவில்லை , அந்த எடுப்பு தான் தன் அரசியல் வாழிவினை முடிக்க வந்த சூனியம் என்று , ஆமாம் அவர் தான்  ஆசிர்வாதம் ஆச்சாரி ,இவரை சமீப காலங்களில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் காண முடியும்.


பிராமணர்களின் அறிவுத் திறமையும் அப்பாவித் தனத்தையும் நம்பி அருகில் வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு ராஜா மற்றும் ஆசிர்வாதம் ஆச்சாரி ஒரு சிறந்த உதாரணம். தலித் குடும்பத்தில் பிறந்து மிகவும் கடினப்பட்டு இந்த பதவிக்கு வந்த ராஜா ஊரார் பணத்திற்கு ஆசைப்பட்டதோடு அல்லாமல் , தன்னுடைய சமூகம் சார்ந்த ஒருவரை தன் அருகில் வைத்திராமல் , காலம் காலமாக நம்பப்படும் உயர்சாதியினர் அறிவாளிகள் என்று நம்பி ஆசிர்வாதத்தினை அருகில் வைத்தனால் ராஜாவின் அரசியல் வாழ்வு அஸ்தமனமானது. இப்படிப்பட்ட ஒருவரை திமுக என்றோ கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டும். இருப்பினும் சுயமரியாதைக் கட்சியின் இந்த சுயநலப் போக்கு ஒன்றும் ஆச்சரியத்துக்கு உரியதல்ல.


ஆசிர்வாதம் ஆச்சாரி என்ற அம்பி எப்படி அந்நியனாக மாறினார் என்று பார்ப்போம்.
இந்தியன் எக்ஸ்பிரஸில் இவர் சொன்ன செய்தி, சும்மா சுற்றித் திரிந்து கொண்டிருந்த எனக்கு பல நாள் சோறு போட்டு பின்னர் வேலையும் போட்டுக் கொடுத்த ராஜா அவர்களை நான் என்னுடைய மூத்த சகோதரர் போல எண்ணுகின்றேன்.
இந்தியன் எக்ஸ்பிரஸில் சொன்ன வாசகம் அப்படியே அடைப்புக்குறிக்குள் 
(Achary became emotional,saying,“Deep in my heart he (Raja) is still like my elder brother. I used to take food in his house many times. He was very fond of giving me food. Especially when I was a bachelor,he was very protective of me. I will never forget this.)”


ராஜா சுற்று சூழல் அமைச்சராக இருந்து தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த காலம் வரை அவரின் உதவியாளராக இவரை தான் வைத்திருந்தார்.ராஜாவை வசமாக சிபிஐயில் காட்டிக் கொடுத்த பின் இதையெல்லாம் சொல்கின்றார். இருப்பினும் இந்த யோக்கிய சிகாமணியின் மேலும் ஊழல் வழக்கு இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஜெயலலிதா மேல இருக்கும் அதே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு இவர் மேலும் இருக்கின்றது. எனவே தான் ராம் ஜெத்மலானி  அவர்கள் இவரை குறுக்கு விசாரணை செய்கையில் 2009ல் இந்த வழக்கு நடந்து வருகையில் திடீரென்று இப்பொழுது அப்ரூவராக மாறியதற்கு சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்பிப்பதற்கா என்று கேட்டபோது இவரிடம் முறையான பதிலில்லை.


இப்படிப்பட்ட ஊழல் பேர்வழியை, அரசியல் வாழ்வு அஸ்தமனமாகக் கூடிய நிலையில் இருந்த சுப்ரமணிய சாமி தன் வீட்டின் பின் வாசல் வழியாக தன் மனைவியின் மூலம் இந்த ஆசிர்வாதம் ஆச்சாரி ராஜாவின் அலுவலகத்தில் இருந்து திருடிக் கொண்டுவந்து கொடுத்த ஆவணங்களை வைத்து பூச்சாண்டி சாமியாக அவதாரமெடுத்தார். ஒரு ஏழை பிராமணனுக்கு வாழக்கை கொடுத்த ராசாவுக்கு அதற்கு பரிசாக மற்றோரு பிராமணர் தலித் சமூகத்திற்கு காலத்தால் அழியாத இழிவினை ஏற்படுத்தித் தந்தார். 2ஜியால் பலனடைந்து அம்பானி ,டாட்டா போன்ற்வர்களைப் பற்றி சிறிதும் வாய் திறக்காத இந்த சுப்ரமணிய சாமி ராஜாவை மிக மிக இழிவாகப் பலமுறைப் பேசினார். குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஆசிர்வாதம் ஆச்சாரி ஒரு நாள் கூட சிறையில் அடைக்கப்படாத மர்மம் என்னவேறு தெரியவில்லை.


2ஜியால் மிகப்பெரும் பலனடைந்த பிஜேபி ஆசீவாதம் ஆச்சாரிக்கு தன் கட்சியில்  தேசிய செயலாளர் பதவியும் , ரயில்வேயில் பயணிகள் வசதிக்கான துறையின் தலைமைப் பொறுப்பையும் வழங்கி கவுரவித்திருக்கின்றது. இப்பொழுது முழு நேர சுப்ரமணிய சாமியின் கொடுக்காக மாறி பல கருத்துக்களை தமிழ் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றார்.

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் விளைவித்த ஆசிர்வாதம் ஆச்சாரியின் இந்த செயலின் மூலம் நாமும் நம் வாழ்க்கையில் யாரையும் நம்பி ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருத்தல் மிக நல்லது.

'அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்'என்று சிலப்பதிகாரத்தில் வரும் சொற்றோடரினைப் பள்ளியில் படிக்கும் போது அர்த்தம் விளங்கவில்லை . இருப்பினும் எந்நேரமும் சிறுவயதில் அதை சொல்லிக் கொண்டேயிருப்பேன். ஆனால் அதன் அர்த்தம் புரிந்த பிறகு அந்த சொற்றோடரே அரசியல் பிழைத்தோருக்கு புறம் கூற்றாகும் என்று மாறிவிட்டது. நம் அன்றாட வாழ்க்கையிலும் இது போன்று  எண்ணற்ற ஆசிர்வாதம் இருக்கின்றார்கள் ,பிழைப்புவாதம் மட்டுமே அவர்களின் நோக்கம் . அவர்களிடம் இருந்து தப்பித்து வாழ்வது தான் சாதனை. 

நன்றி 
செங்கதிரோன்