Tuesday, May 26, 2015

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது: சொல்லப்பட்டதும் சொல்லப்படாததும்

பாரதிராஜா நாயகனுக்கு பிறகு தமிழில் சிறந்த படம் இது தான் என்று சொன்ன அளவிற்கு இல்லை என்றாலும் , இளைஞர்களின் மேன்ஷன் வாழ்க்கையை ஓரளவிற்கு உண்மைக்கு அருகாமையில் பதிவு செய்திருக்கின்றது இந்தப் படம். படிப்பு சார்ந்தோ வேலை நிமித்தமாகவோ வெளி ஊர்களில் தங்கி இருந்தவர்களுக்கு அவர்களின் பழைய ஞாபகங்களை படம் பார்க்கும் போது  அசை   போட வைக்கும்.

இது உள்நாட்டிற்கு மட்டும் பொருந்தாது நீங்கள் வெளி நாட்டில் தங்கி இருந்தாலும் இது போன்ற சூழ் நிலைகளை சந்திப்பீர்கள் .நான் இந்தியர்களுடனும், வெளி நாட்டினர்களுடனும் இது போன்ற ஒரே வீட்டில் தங்கிய அனுபவம் உண்டு. 

முதலில் இந்தப்  படத்தில் சொல்லபடாத முக்கியமான ஒன்று,உடன் தங்கி இருப்பவர்களின் உடையை அணிந்து கொண்டு செல்வது. எனக்கு இது நிறைய நடந்திருக்கின்றது ,நாம் iron பண்ணி வைத்திருக்கும் உடையை தூங்கிக் கொண்டிருக்கும் போது மற்றவன் உடுத்திக் கொண்டு சென்று விடுவான்.அதுவம் உடன் படிக்கும் பெண்கள் இதனை வெகு சுலபமாகக் கண்டு பிடித்த்துவிடுவர், இது அவன் சட்டை தான, அவன் பெண்ட் தான என்று கேட்டு மானத்தை வாங்குவார்கள்.


அடுத்து படத்தில் இவர்கள் அடிக்கடி வீடு மாறுவதற்கு காரணமாக சொலப்படுவது இவர்கள் குடித்து விட்டு கலாட்டா பண்ணுவது, இதையும் விட முக்கியமாக இவர்கள் செய்வது அந்த ஏரியாவில் இருக்கும் பெண்களிடம் இவர்கள் செய்யும் வம்பினால் தான் வீட்டு ஓனர் நம்மை காலி செய்ய சொல்வர், அதுவும் ஓனர் கூட பரவாயில்லை, அந்த வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவரோ, எதிர் வீட்டுக்காரரோ தான் அதிக தொல்லை கொடுப்பார்கள்.மேலும் சென்னை மாதிரி இடங்களில் main gete னை பூட்டி விடுவார்கள், எனவே உங்களிடம் அதற்கான சாவி இல்லையென்றால் உங்கள் நிலைமை ரொம்ப சிரமம் தான், அதுவும் ,செல்போன் இல்லாத அந்த கால கட்டத்தில் நண்பனையும் கால் பண்ணி கூப்பிட இயலாது, எனவே உங்களுக்கு சிவராத்திரி தான்.

மேன்ஷன்கள் போலவே தான் தமிழ் நாடு முழுக்க இருக்கும் அரசு கல்லூரி விடுதிகள், வெகு குறைவானவை தான் மிகுந்த கண்டிப்புடன் செயல்படுகின்றன, மற்ற எல்லாவற்றிலும் படிக்கும் மாணவர்கள் தவிர்த்து கல்லூரி முடித்து நான்கைந்து ஆண்டுகளாகியும் அங்கே தான் தங்கி இருப்பவர்களின் எண்ணிக்கையும், மாணவர்களின் உறவுக்கரர்களாலும் தான் இந்த விடுதிகள் நிரம்பி இருக்கும்.

மேலும் இப்படத்தில் இடைச்செருகல் போல வரும் மத்திய தர வயது குடிகாரர் பாத்திரம் படத்தின் கதையுடன் ஒட்டவில்லை. அந்தப் பாத்திரம் ஏன் எனபது பிறகு தான் புரிந்தது, அந்தக் குடிகாரர் தான் படத்தின் இயக்குனர்.எனினும் இந்தக் காட்சிகள் இடை வேளைக்குப் பின்பு  வருவதால் படத்தின் போக்கில் தொய்வினை ஏற்படுத்த வில்லை.நிஜத்தில் திடிரென நம்மை தேடி ஊரில் இருந்து வருபவர்கள் பெரும் பாலும் அங்கே ஏதாவது தப்பு தண்டா செய்து விட்டு நம்முடன் வந்து தங்குவர். தினமும் அவர்களை படத்திற்கு அழைத்து செல்வது, சென்னையை சுற்றிக் காண்பிப்பது என்று நம் பணம் கரைந்து கொண்டே இருக்கும்.
இவர் தான் படத்தின்  இயக்குனர் மருது பாண்டி 


மொத்தத்தில் படம் மேன்ஷன் வாழக்கையை சற்று அழுத்தமாகவே பதிவு செய்திருக்கின்றது , இருப்பினும் உதவி இயக்குனர்களின் வாழ்க்கையை சற்று விரிவாகக் காட்டி இருக்கலாம், மற்றும் இதே போன்று வாடகை வீட்டில் தங்கி இருக்கும் பெண்கள்  குறித்தும் காட்சிகளை இணைத்து இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

படத்தில் அனைவருமே தங்கள் பங்களிப்பினை சிறப்பாக செய்திருந்தனர்.பாபி சிம்ஹாவின் அப்பாவி முகம் சில சமயம் சிரிப்பை தான் வரவைக்கின்றது. நயன்தாரவுக்கு கோவில் கட்டியதற்காக சூது கவ்வும் படத்தில் ஒரு பெருமிதமான ஒரு ரியாக்ஷன் கொடுப்பரே அது தான் அடிக்கடி ஞாபகம் வருகின்றது.

அனுராதா ஸ்ரீராம்  பாடிய   "மழைத் துளிகள்" பாடல் படம் முடிந்தும் உங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும். மிக சிறப்பாக பாடி இருப்பார்.

மழைத்துளிகள் பாடலின் காணொளி