Tuesday, July 25, 2017

ஒரு கூர்வாளின் நிழலில் -புத்தக விமர்சனம்



இலங்கையில் நடந்த விடுதலைப்புலிகள் போராட்டம் குறித்த நாம் அறியாத செய்திகள் பல உள்ளன. 2009ம் ஆண்டு இந்த இயக்கம்  யாருமே எதிர்பாராத நிகழாவாக இந்த இயக்கம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டது. மிக வலிமை வாய்ந்த இயக்கம் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கையில் பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்ட புகைப்படமே அந்த இயக்கத்தின் வீழ்ச்சியினை தெள்ளத் தெளிவாக உணர்த்தியது. 

இந்த வீழ்ச்சி எவ்வாறு நிகழ்ந்தது என்று அறிய விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் பல்வேறு விடைகளை நமக்கு அளிக்கின்றது. இருப்பினும் அதனையும் தாண்டி  தமிழினி எப்படி இந்த இயக்கத்திற்குள் இணைந்தார் , பள்ளி பருவத்திலிருந்தே இயக்கம் குறித்த வரின் பார்வை என பல்வேறு செய்திகள் இதில் நிரம்பியிருக்கின்றன.

தமிழ்நாட்டு சூழலில் விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து அதிகம் நமக்கு தெரிந்த நபர்கள் பிரபாகரன் , ஆண்டன் பாலசிங்கம் , தமிழ்ச்செலவன் போன்ற வெகு சிலர் மட்டுமே , ஆனால் புத்தகத்தில்  களப்  (போர் புரிபவர்கள் )போராளிகள் மட்டுமன்றி  , மக்களுடன் இணைந்து செயல்பட்டவர்கள்  (விவசாயம் , நீதித்துறை , காவல் துறை , அரசியல் பயிற்சி கூடம் , சிறார் பாதுகாப்பு மையம் ) என பல பிரிவுகளில் பணியாற்றியவரகள் குறித்த செய்திகள் உள்ளன . குறிப்பாக சுனாமி ஏற்பட்ட காலத்தில் இந்த இயக்கம் மக்களுக்கு செய்த பணிகள் பாராட்டுக்குரியவையாக இருந்தது.

தமிழினி இயக்கத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றியிருப்பதனால் அவரின் கருத்துகள் மூலம் இயக்கம் எவ்வாறு செயல்பட்டது என்பதனை மிக தெளிவாக உணர முடிகின்றது . அது மட்டுமன்றி பிரபாகன் முதற்கொண்டு இயக்கத்தின் அனைத்து முன்னோடிகளுடனும் , இலங்கை அரசுடனும் , வெளிநாட்டு அமைப்புகளுடனும் தொடர்பில் இருந்தவர் என்பதனால்  அவர் இந்த விடுதலைப் போராட்டம் குறித்து அவரின் விமர்சனம் சரியானது என்றே தெரிகின்றது.

பெண் போரளிகள் பலரைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார் . கர்னல் விதுஷா என்பவரின் வீரசாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து படிக்கையில்  மிக பிரம்மிப்பாக இருக்கின்றது . ஒரு வேளை போரில் வெற்றி அடைந்திருந்தால் இவர்களின் வீரத்தினை உலகமே போற்றியிருக்கும் என்றே தோன்றுகின்றது. தமிழினி அவர்களின் தங்கையும் இந்த போராட்டத்தில் பங்கெடுத்து மாண்டிருக்கின்றார் . 

தமிழினி குறித்த விமர்சனம் :
 இந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு விடுதலைப்புலி இயக்க ஆதரவாளர்கள் மிக கடுமையான எதிர்வினை ஆற்றியிருந்தனர் . ஆனால் அவற்றுக்கு பதிலளிக்க அவர் உயிருடன் இல்லை . 48வயதிலியே  புற்று நோயால் மரணமடைந்து விட்டார். போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்து விட்டதால் துரோகியாக அடையளிப்படுத்தப்பட்டார் . இலங்கை சிறையில் இரண்டு வருடம் , புனர்வாழ்வு மையத்தில் ஒருவ  வருடம் பின்னர் திருமணம் செய்து கொண்டு சில காலம் நிம்மதியான வாழ்வு என்றே இவரின் வாழ்க்கை அமைந்திருக்கின்றது.

பிரபாகரனை அனவைருக்குமே பிடிக்கும் , அதற்காக அவர் மீது விமர்சனம் வைப்பர்வர்களை துரோகி என அடையாளப்படுத்தல் தவறான முன்னுதாரணம் . மேலும் காலச்சுவடு பதிப்பகம் இப்புத்தகத்தினை வெளியிட்டதனாலேயே , அந்த பதிப்பகம் சார்ந்த அரசியலோடு இப்புத்தகம் இணைத்துப் பார்க்கப்படுகின்றது.


 பிரான்சில் வாழும் ஷோபா சக்தி என்ற இயக்கத்தின் முன்னாள் போராளி பல்வேறு விமர்சனங்களை இயக்கம் குறித்து வெளிப்படுத்தியிருந்தார் . அடுத்து இது தமிழினியின் பார்வை . ஜனநாயகம் என்பது எதிர்க்குரலை கேட்பது தான் , அது போன்ற ஒரு எதிர்க்குரல் தான் இந்த புத்தகம் . 

காலச்சுவடு பதிப்பகம் 
விலை .125
பக்கங்கள் :257 

நன்றி 
செங்கதிரோன்

Monday, July 17, 2017

ஜிஎஸ்டி -கதிராமங்கலம் -நீட்

 தமிழகத்தையே  உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த மூன்று பிரச்சனைகள் குறித்த பார்வை 

ஜிஎஸ்டி: இந்தியா முழுமைக்கும் ஒரே வரி என்ற இந்த திட்டத்தினை காலத்தின் கட்டாயம் கருதி நாங்கள் கொண்டு வருகின்றோம் என்று வருத்தத்துடன் செய்ய வேண்டிய ஒரு செயலை , ஏதோ இந்த திட்டத்தினால் இந்தியாவில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும் எனப்து போல் நாடாளுமன்றத்தில் விழா எடுத்து கொண்டாடுவதைப் பார்க்கவே அசூசையாக இருந்தது. மக்களின் எண்ணவோட்டம் என்ன என்பதனைக் கூட புரிந்து கொள்ளமல் இருக்கும் பிரதமரின் செயல் மிக ஏமாற்றம் அளிப்பதாக இருக்கின்றது. அதே குஜராத்தில் பிறந்த காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியா முழுமைக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு , பலரின் கருத்துகளை கேட்டறிந்து அதற்கேற்றவகையில் போராட்டத்தினை வடிவமைத்து வெற்றி கண்டார். ஜிஎஸ்டி என்பது பயனற்ற ஒன்று என  நான் எண்ணவில்லை , அது மிகவும் அவசியம் தான் , ஆனால் அதனை கவனத்துடன்  செயலாக்கவேண்டும் . மேலை நாடுகளில் ஜிஎஸ்டி இருக்கின்றது , அதனால் அவர்கள் பள்ளி கல்விக்கோ ,மருத்துவத்திற்கோ ஒரு பைசா செலவழிப்பதில்லை . அந்த அரசாங்கம் வரிவருவாயில் தன் குடிமக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றது. ஆனால் நம் நாட்டில் மருத்துவம் மற்றும் கல்வி மிக சுமையான ஒன்றாக இருக்கின்றது. (அரசாங்க பள்ளி , மருத்துவமனைகள் இலவசம் என்றாலும் எந்த ஒரு கட்டமைப்பும் இன்றி அவை அழியும் நிலையில் உள்ளன )


கதிராமங்கலம் : நெடுவாசலைத் தொடர்ந்து கதிராமங்கலமும் போராட்ட பூமியாக மாறி இருக்கின்றது. மக்களின் உணர்வுகளை அரசுகள் செவி சாய்க்காமல் வளர்ச்சி திட்டங்களின் எதிரிகள் என்று அவர்களை முத்திரை குத்துகின்றனர். நெய்வேலி கண்முண்ணே உதாணரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது , நாற்பது ஆண்டுகள் கழித்தும் அரசாங்கங்கள் இன்றும் அப்பகுதி மக்களுக்கு நிலத்திற்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. அப்பகுதியை சார்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கப்படவில்லை. மேலும் தமிழகமே இருளில் மூழ்கிக் கிடந்த போதும் இங்கிருந்து மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதும் நடந்ததை பார்த்தோம் . இந்த படிப்பினை உணர்த்தும் பாடம்  அரசாங்கம் நம்மை வளர்ச்சி என்ற மாய பிமபங்களை காட்டி ஏமாற்றப்போகின்றார்கள் என்பததுதான் . மேலும் இந்த திட்டமானது அரசாங்கம் நேரடியாக செய்யாமல் தங்கள் கட்சி சார்ந்த ஒருவருக்கு இதனை கொடுத்திருப்பதன் மூலம் இவர்களை கண்டிப்பாக நமபவே கூடாது என்ற ஒரு உறுதியான நிலைப்பாட்டினை நம்மை எடுக்க வைக்கின்றது.


நீட்: நீட் மூலம் தேர்வான மருத்துவர்கள் தான் தரமானவர்கள் என்ற போலி பிம்பத்தினை ஏற்படுத்த கடுமையான முயற்சியில் மத்திய அரசாங்கம்  ஈடுப்பட்டிருக்கின்றது.ஆனால்  தமிழக மருத்துவர்கள் அதனை தினமும் பொய்யாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தவாரத்தில் கூட ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் சர்ஜரி துறை மிகப்பபெரும் சாதனையை செய்திருப்பதினை பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். இது ஒரு சின்ன உதாரணம் தான் , சாதாரண கிராமத்தில் உள்ள மருத்துவமைகளில் கூட சிறப்பான சிகிச்சை தமிழகத்தில் மட்டுமே இருக்கின்றது . தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பினும் அவர்களும் வெளிநாடுகளில் இருப்பது  போன்ற உயர் தர சிக்கிச்சைகளை அளிக்கின்றனர். பக்கத்தில் உள்ள கேரளாவில் மருத்துவத் துறையின் நிலை மிகமோசம். அங்கே அரசு மற்றும் தனியார் மருத்துவ வசதிகள் இன்னும் கூட கிராமங்களில் இல்லை.  அரசாங்க பாடதிட்டத்த்தில் (மாநில ) படித்த மாணவர்கள் தான் இந்த மிகப்பெரும் சாதனைகளை தமிழகத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.  ஆனால் மத்திய அரசாங்கமோ மருத்துவர்களின் தரத்தினை உயர்த்த நீட் என்று சொல்கின்றது , அது மற்ற மாநிலங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம் , தமிழகத்திற்கு தேவை இல்லை என்பதே அனைத்து மக்களின் குரல்.


மேற்சொன்ன மூன்றும் தமிழகத்தின் தலையாயப் பிரச்சனையாக இருக்கின்றது. ஆனால் தீர்வினை எட்டும் அளவுக்கான தலைவர்கள் தமிழகத்தில் இல்லை என்பதே தற்போதைய நிலை. தீர்வு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உங்களுடன் நானும் காத்திருக்கின்றேன் 

நன்றி 
செங்கதிரோன்