Wednesday, April 18, 2018

அடுத்த வாரிசு;




ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தினம் ஒரு வாரிசுகள் உருவாகி வருகின்றனர். சசிகலா , ஜெ.தீபா, மாதவன் மற்றும் தினகரன் என்று வாரிசுகள் தமிழகத்தின் அடுத்த வாரிசாக பரிணமித்து வருகின்றனர், இதை பார்க்கும் மக்கள் மிகுந்த எரிச்சலடைகின்றனர். 

இந்த தருணத்தில் தான் மிக எதேச்சையாக உங்கள் குழாயில் (youtube) புது  வாரிசு என்றொரு படம் இருப்பதை அறிந்தேன் . இது பாண்டியராஜன் நடித்து 1990ல் வெளிவந்த படம் . கதை மிக எளிமையானது , மௌலி கிராமத்தில் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டு கர்ப்பமாக்கி விடுகின்றார் . பின்னர் அவர் சொந்த ஊர் சென்று விடுகின்றார் . அந்த தாயும் அவரின் மகனான பாண்டியராஜனும் பலகாலம் மௌலி வருவார் என்று காத்திருக்கின்றனர். ஆனால் மௌலியோ வேறு ஒரு பணக்கார பெண்ணை மணந்து  செட்டிலாகிவிடுகின்றார் . தாய் இறந்த பின்னர் , தந்தையை தேடி வந்து  அவரின் நிலையை உணர்ந்து அவருக்கு உதவுகின்றார்.

ரோகிணி கதநாயகி , எஸ் எஸ் சந்திரன் நகைச்சுவை என நல்ல கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் படம் மிக மிக மெதுவாகவும், தெளிவில்லாமலும் இருக்கின்றனது .யாருக்காவது மிக மிக அதிகமான நேரம் கிடைப்பின் மட்டுமே இந்தப் படத்தினைப் பாருங்கள். 

இந்தப்படத்தைப் போலவே ஜெ. வாரிசு என்று சொல்லிக்கொள்ளும் அனைவர் மேலும் எந்த ஈர்ப்பும் வரவில்லை. 

நன்றி 
செங்கதிரோன்