Monday, February 5, 2018

வேலைக்காரன் படம் முன் வைக்கும் (அ)நீதி :



வேலைக்காரன் படம் வந்து பல நாட்களானாலும் அந்தப் படத்தில் சொல்லப்பட்ட ஒரு கருத்து இன்றும் என்னை மிகவும் வருத்தப்பபடவைத்தது. இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே தொடர்ந்து வெற்றிப் படம் கொடுத்துக் கொண்டிருக்கும் கதாநாயகனும் , மாபெரும் வெற்றிப் படம் கொடுத்த இயக்குனரும் இணைவதனால் மாபெரும் வசூலை பெற முடியும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே என்பது திரைத்துறை சேர்ந்தவர்களுக்கு தெரியும்.

 உணவு கலப்படம் குறித்து படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் பாரட்டப் பட வேண்டிய ஒன்று. ஆனால் அதற்கான தீர்வுகளை முன்வைத்ததில் தான் பல்வேறு குளறுபடிகள் . நயன்தாராவுக்கும் படத்திற்குமான தொடர்பு , வேலைக்கு சேர்ந்தவுடனேயே தொழிற்சாலையின் துணை மேலாளரான பகத் பாசிலுடன் சிவகார்த்திகேயன் தொடர்பு ஏற்படுத்தக் கொள்வதன் சாத்தியக் கூறுகள் என பல்வேறு கேள்விகளுக்கான பதில்கள் இல்லை . 


இருப்பினும் இவற்றை எல்லாம் மீறி , இயக்குனர் ஒரு அநீதியான கருத்தினை மிக மிக புத்திசாலித்தனமான கருத்து போல முன் வைக்கனின்றார் . அந்த மாபெரும் கருத்து என்னவென்றால்  ''புறம் பேசுங்கள்'' அதாவது கோள்மூட்டித்தனம் செய்யுங்கள் அதன் மூலமே அதிகாரத்தை ஆட்டுவிக்க முடியும் என்று கூறுகின்றார். பரிணாம வளர்ச்சியில் பல்வேறு அறங்களை நாம் கைகழுவி கொண்டிருக்கும் வேளையில் அதன் உச்சகட்டமாக புறம் பேசுங்கள் என்று சொல்வதன் மூலம் அப்படி என்ன சாதித்து விடப் போகின்றோம் என்ற கேள்வி எழுகின்றது .

தமிழர்களின் புனித புத்தகமாக கருதப்படும் திருக்குறளில் கூட இது போன்ற ஒரு கருத்து முனைவகப்படவில்லை . பொய்மையும் வாய்மையிடத்து என்ற  சொன்ன திருவள்ளுவர் புறம் பேசுங்கள் என்று கூறவே இல்லை . 

சினிமாவில் வரும் இது போன்ற கருத்துக்கள் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் , இயக்குனருக்கு சமூகக் கடைமை என்ற ஒன்று உண்டு, அதனை சரிவரப்பயன்படுத்த வேண்டும் .

புறம் பேசி நம் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை.

நன்றி 
செங்கதிரான்