Tuesday, March 20, 2018

ராம ராஜ்ஜியம் யாருக்காக ?

1. கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும் கம்பீரமாக இருக்கின்றது
2. ராஜராஜசோழன் கட்டிய பிரகதீஸ்வர்ர் ஆலயம் 1000ம் ஆண்டுகள் கழித்தும் இன்றும் பிரம்மாண்டமாக தமிழனின் கட்டிடக்கலையினை உலகுக்கு உணர்த்துகிறது 
3. பல்லவர்கள் கட்டிய குடைவரைக் கோவில்களின் கலை நுட்பத்தை உலகமே வியக்கின்றது
4.காமராஜர் கல்விக்கண் திறந்து உலகம் முழுக்க தமிழன் சென்று சாதனை படைக்க வழிவகை செய்தார் .

இவை அனைத்தையும் மறந்து விட்டு ராமரை மேற் சொன்ன அனைவரையும் விட உயர்ந்தவராக முன்னிறுத்துவதன் நோக்கம் என்ன ? 

தமிழனின் ராஜ்ஜியம் தான் தற்போதைய தேவை. ராம ராஜ்ஜியம் முன்னிறுத்துபவர்கள் முதலில் தங்கள் ஊரில் உள்ள குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறக்காமல் காக்க வழிவகை செய்யுங்கள். 
நன்றி