Friday, April 17, 2020

எனக்கு ஒரு பர்ஸ் வேண்டும்- சிறுகதை


டேய் அண்ணா அமேசானில் ஒரு லிங்க் அனுப்பி இருக்கேன் என் பர்ஸ் ரொம்ப கிழிஞ்சு போச்சு அதனால நா அனுப்பிச்சியிருக்கற லிங்க்ல ஒரு பர்ஸ் இருக்குடா அது எனக்கு வாங்கி அனுப்பு.

ஓகேடா லிங்க் பாத்துட்டு கூப்பிடுறேன்.

என்ன இவ்வளவு விலை போட்டிருக்கு இவனுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய பர்ஸ். டேய் தம்பி!! இவ்ளோ காஸ்ட்லி பர்ஸ் உனக்கு எதுக்குடா, முடிஞ்சா காசு சம்பாதிச்சு நீயே அந்த பரிசை வாங்கிக்க 

இப்படி ஏமாத்திட்டானே, என்ன பண்ணலாம் வெறுப்பா இருக்கு, ஏதாவது ஏதாவது காமெடி பாப்போம்

எவ்வளவு நாளைக்குத்தான் இந்த வடிவேலு கவுண்டமணி வீடியோ பார்க்கிறது வித்தியாசமா ஏதாவது பார்ப்போம்.

சதுரங்க வேட்டை காமெடியா சரி பார்ப்போம்
“”ஒருத்தனை ஏமாத்தினும்னா அவன்கிட்ட கருணையே எதிர்பார்க்கக்கூடாது அவன் ஆசையை தூண்டனும்””

வாவ் கண்டுபிடிச்சுட்டன் அண்ணன்கிட்ட எப்படிப் ஏமாத்தி பர்ஸ் வாங்குவதுனு, டேய் அண்ணன் காரா உனக்கு வைக்கிறன்டா ஆப்பு 


ஹலோ அண்ணா என்ன சாப்டியா? 
டேய் நீ என்ன நடிச்சாலும் நான் உனக்கு பர்ஸ் வாங்கி கொடுக்க மாட்டேன்டா?

அது இல்லடா அண்ணா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு, நீ ரொம்ப ராசிக்காரன் டா போன முறை நீ ஒரு பர்ஸ் வாங்கி கொடுத்த அதனாலதான் கொஞ்சம் காசு தங்குச்சு , அதான் இப்பவும் உன்னையே மறுபடியும் பர்ஸ் வாங்கி தரச் சொல்றேன். என்கிட்ட காசு இல்லாம இல்ல நீ வாங்கி கொடுத்தா நான் நல்லா பணம் வச்சி இருப்பேன் , நான் பெரிய ஆளா ஆனா உனக்குதான்டா பெருமை ( 1000ரூ பர்ஸுக்கு எவ்வளவு பிட் போட வேண்டி இருக்கு) 

டேய் தம்பி அட இவ்வளவு பொறுப்பாய்டியே டா எனக்கு ஆச்சரியமா இருக்கு டா டேய்

உடனே ஆர்டர் பண்றேன் டா உனக்கு டெலிவரி confirmation வரும் மொபைலை செக் பண்ணு

Thanks da 

எப்பா சதுரங்வேட்டை டைரக்டர் செம ஐடியா கொடுத்தப்பா 
எங்க அண்ணன் காரன் எவ்ளோ பெரிய ஆளு அவனே உன் படத்தோட ஒத்த வசனத்துல அவனை ஏமாரவைச்சுட்டியே 

நன்றி 
செங்கதிரோன்

ஊழல் உளவு அரசியல் ; சவுக்கு சங்கர் புத்தக விமர்சனம்


சவுக்கு சங்கர் எழுதிய ஊழல் உளவு அரசியல் இந்த புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரின் கூர்மையான அரசியல் விமர்சனத்தை தொடர்ந்து படித்து வருவதனால் ஏற்பட்டது.

இந்த புத்தகம் அவரின் சுயசரிதை அல்லது வாழ்வியல் போராட்டம் என்று எடுத்துக்கொள்ளலாம்.




முகப்புத்தகத்தில் அவர் இடும் நக்கல் பதிவுகளை வைத்து அவரை மிக சாதாரணமானவராக எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் இந்த புத்தகம் படித்தால் அவர் குறித்த ஒரு உயரிய மதிப்பு ஏற்படும். 


ஆங்கிலம் கற்றுக்கொள்ள எடுத்த முயற்சிகள், பரந்துபட்ட புத்தகம் வாசிப்பு, , உயர் அதிகாரிகளுக்கு எதிரான போராட்டம் , சிறை வாழ்க்கை என்று அவர் இளம்வயதில் செய்த அனைத்தும் மிக அசாத்தியமானவை. ஆனால் அவருக்கு நடந்த துயரமான நிகழ்வுகள் வேறு யாருக்கும் நடக்க கூடாது.

2010 முதலே அவரின் வலைப்பக்கத்தில் பல கட்டுரைகள் படித்து இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை இந்தப் புத்தகம் படித்து தான் அறிய முடிந்தது.



நன்றி
செங்கதிரோன்

பேட்டை: நாவல்

பேட்டை நாவல் 
எழுதியவர் ;தமிழ் பிரபா 

நாம் வாழும் பகுதியில் பல்வேறு விசித்திரமான சம்பவங்கள் நடக்கும், பல்வேறு விசித்திரமான மனிதர்கள் வாசிப்பார்கள் அவர்கள் குறித்து ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும் , சிலர் தான் அதை செய்வார்கள். சுஜாதாவின் ஶ்ரீரங்கத்து தேவதைகள் புத்தகம் அது போன்றதொரு அருமையான புத்தகம். 

பேட்டை நாவலின் மையக் கதாபாத்திரம் மெட்ராஸ் பட நாயகன் கார்த்தி போன்ற ஒரு இளைஞன் . அவன் சிறு வயதில் இருந்து நடக்கும் சம்பவங்கள் தான் இந்த புத்தகம்.

மொத முப்பது பக்கம் படிக்கறதுக்குள்ள ஒரு வழியாயட்டேன். ஏன்னா முழுக்க முழுக்க மெட்ராஸ் பாஷை , ஒண்ணிமே பிரியில. இதுல புத்தகத்தின் கடைசியில் அந்த வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தை இருந்து . அதனால் தான் மிக எளிதாக தொடர்ந்து வாசிக்க முடிந்தது .


எழுதியவர் மிக இளவயதுக்காரர் தான் இருப்பினும் மிக சிறப்பாக விவரித்து எழுதி இருக்கின்றார். கடைசிப்பகுதி தான் மிக மிக சிறப்பாக அமைந்திருந்தது.

நட்பு , காதல் போன்றவை குறித்த கதைகளை படிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த புத்தகம் கண்டிப்பாக பிடிக்கும். 

இந்தப் புத்தகத்தின் கதையினை முழுதும் சொன்னால் சுவாரஸ்யம் குறைந்து விடும், அதனால் தான் விரிவாக சொல்லாமல் ஒற்றை வரியில் சொல்லி விட்டேன்.

நன்றி
செங்கதிரோன்

கவுண்டர்களின் பொற்காலமா எடப்பாடி பழனிசாமி ஆட்சி ?


“காட்டை வித்துக் கள்ளு குடிச்சவன் கவுண்டன்” என்ற நிலையிலிருந்து “நாட்டை ஆளும் நிலைக்கு”கவுண்டர் வந்ததை ஒட்டியே இந்த கட்டுரையின் தேவை இருக்கின்றதுஇந்தியபவில் . காமராஜர் காலத்தில் நாடார்களுக்கு தொழில்கள் தொடங்க பல்வேறு சலுகைகள் கண்ணபிக்கப்பட்டதாக சொல்வார்கள் . ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்கள் சமூகம் சார்ந்தவர்களுக்கு ஏதாவது நன்மை செய்திருக்கின்றாரா என்று தெரியவில்லை. இருப்பினும் கவுண்டர்களுக்கு உள்ளூராவோ அல்லது வெளிப்படையாகவோ எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பதை பெருமையாக நினைக்கின்றனர்.

வரலாற்று பாட புத்தகத்தில் சோழர்கள் , சந்திரகுப்தர், மௌரியர் , முகலாயர் என்று பலரின் பொற்கலங்களைப் படித்திருப்போம். தற்போது இந்தியா முழுமைக்கும் சாதி சார்ந்தவர்களின் வெற்றி பெருமளவு கொண்டாடப்பட்டு வருகின்றது . 

கவுண்டர்களைப் பொறுத்தவரை அவர்கள் தொழில் துறையில் பல ஆண்டுகளாகவே முன்னணியில் இருக்கின்றனர் . பணம் மற்றும் வெளியுலக தொடர்புகளினால் தங்கள் சாதி குறித்த பெருமிதங்களை பொது வெளியில் கொண்டாடியதில்லை. 

தொழில் வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் கண்ட நாடார்கள் சாதி சங்களையும் அதனூடாகவே வலுவாக அமைத்தனர். ஆனால் கவுண்டர்கள் அப்படியான சங்கங்களை அமைக்கவில்லை. இது அவர்களின் பரந்து பட்ட மனப்பாண்மையா அல்லது அவ்வாறு அமைக்க நல்ல தலைமை இல்லயா என்று தெரியவில்லை.

இப்பொழுது எடப்பாடி ஆட்சி நடப்பதை ஒட்டி மட்டுமே இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கின்றது. தற்பொழுது ஈஸ்வரன், தனியரசு போன்றவர்கள் கவுண்டர் சமூக இளைஞர்களை மையப்படுத்தி சாதி சார்ந்த அரசியல் முன்னெடுப்புகளை செய்கின்றனர் . அவை கொங்கு மணடலத்தின் கிராமங்களில் வசிப்பவர்களிடம் நல்ல செல்வாக்குடன் உள்ளதாகவே தெரிகிறது.

நன்றி 
செங்கதிரோன்

கனடாவில் ஒரு குட்டி தமிழ்நாடு


கனடாவின் அனைத்து மாகாணங்களும் ஆங்கிலம் பேசிக்கொண்டிருக்கையில் ஒரே ஒரு மாகாணம் மட்டும் பிரெஞ்சு மொழியை தீவிரமாக முன்னெடுத்து தனித்து வாழ்கின்றது .
கனடாவின் மிகப்பெரிய மாநிலமான கியுபெக் , இங்கு பிரெஞ்சு நாட்டவர் பல நூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். 

தங்கள் மொழிப்பற்றின் மூலம் கனடாவில் தனித்து தெரிகின்றனர். தமிழ்நாடு போலவே மற்ற மாநில கனடியர்கள் கியுபெக் வரும்போது பிரெஞ்சு மொழி தெரியாமல் அவதிப்படுவார்கள்.

தமிழ்நாடு போலவே இங்கும் பிரெஞ்சு பேசுபவர்களுக்கான தனி நாடு கேட்கும் குரல் இன்றும் வலுவாக ஒலித்து வருகின்றது. 

இருப்பினும் தேசிய சிந்தனை உடைய பிரெஞ்சு இனத்தவரும் அதிகம். அதற்கு உதாரணம் தான் , கனடிய பிரதமர் ஜஸ்டின் . பிரெஞ்சு இனத்தவராக இருந்தாலும் , தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டு தற்பொழுது பிரதமராக இருக்கின்றார் .

நன்றி 
செங்கதிரோன்


Thursday, April 16, 2020

snow வியாபாரம்:

தமிழில் இதுவரை மிக மிக சிலர் மட்டுமே இதைப் பற்றி எழுதி இருப்பார்கள். இந்தியாவின் காஷ்மீர் மற்றும் வெளிநாடுகளில் பல் இடங்களில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு ஏற்படும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த பனிப்பொழிவை நம்பி மிகப்பெரும் வியாபாரம் நடப்பது அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எனவே அது குறித்து ஒரு சிறிய அறிமுகம்.


1.மக்கள் பனிபொழிவு ஆரம்பிக்கும் ஒரு மாதம் முன்பே ஜெர்கின், பூட்ஸ் , கையுறை போன்றவற்றை வாங்க ஆரம்பித்து விடுவார்கள்.

2. பனிபொழிவு (snowfall) காலங்களில் அனைத்து வீடுகளுக்கும் முன் வாசலில் ஒரு வெள்ளை நிற பிளாஸ்டிக்கினால் பந்தல் போல அமைத்து விடுவார்கள் . அப்படி அமைக்கவில்லை என்றால் வீட்டிற்குள்ளேயே நுழையவோ அல்லது வெளியே வர முடியாத அளவுக்கு snow வீட்டு வாசலை முழ்கடித்து விடும்.


3. கார் போன்ற அனைத்து வாகனங்களும் குளிர் கால சக்கரம் (winter tyre ) மாற்றுவது கட்டாயம். எனவே அனைத்து மெக்கானிக் கடைகளும் நல்ல ஒரு வியாபாரம் நடக்கும். 


4. பனிபடர்ந்த (snow ) சாலையை அப்புறப்படுத்துதல்: வெப்பநிலையை முன்கூட்டியே அறியும் வசதி வந்து விட்டதால் பனிப்பொழிவு ஏற்படும் முன்னரே அனைத்து சாலைகளிலும் உப்புக்களை மற்றும் சிறு கற்களை தூவி விடுவார்கள் . இதனால் snow விரைவில் கரையும் அதோடு மணல்கற்கள் வாகனங்கள் வழுக்கி செல்லாமல் சீராக செல்ல உதவும். இவ்வளவு செய்தும் பனிப்பொழிவு சாலையை முழுக்க ஆக்கிரமித்து மிகப் பெரும் போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும். இதை தவிர்ப்பது தான் சவாலான வேலை . ஏனெனில் நாடு முழுவ்தும் உள்ள சாலைகள் இப்படி பனியினால் மூடப்பட்டிருக்கும். எனேவ மிகப்பெரிய அளவில் இதனை அகற்றும் பனி நடக்கும். வெப்பநிலை மிக குறைவாகவே இருப்பதால் பனி கரைவது கடினம். அதனால் அப்படியே இந்த பனியினை அள்ளிக் கொண்டு ,நகரின் வெளியே கொண்டு குவிப்பது வழக்கம். 

5. பனிப்பொழிவு சாலைகள் மட்டுமன்றி வீடுகள், மிகப்பெரும் கட்டிடங்களின் மேற்பகுதியில் பெருமளவு தேங்கி விடும். இதனை அகற்றுவதிக்கென்று தனி துறை இருக்கின்றது . அவர்களுடன் நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டால் கேக்கை வெட்டுவது போல நம் வீட்டு மாடியில் இருக்கும் snowவினை வெட்டி வெட்டி அகற்றி விடுவார்கள்.

மேற் சொன்ன அனைத்தும் மிக சில மட்டுமே. வெயில் காலங்களில் உடல் சார்ந்த தொழிலில் இருப்பவர்கள் அனைவரும் snow அகற்றும் பனியில் கொஞ்சம் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள் . அந்த மகிழ்ச்சிக்கு காரணம் கூடுதலான சம்பளம். 

நன்றி
செங்கதிரோன்

சினிமா திண்ணை;


சினிமாவுக்குப் பின்னுள்ள செய்திகளை (நடிகர்களின் சம்பளம், அடுத்த படம் போன்ற பல) தெரிந்து கொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் அதிகம். சினிமா குறித்து சின்ன செய்தியாவது இல்லமல் எந்த பத்திரிக்கையும் வெளிவரவே முடியாத நிலைதான் உள்ளது. youtube சேனல் பிரபலமாகிவிட்ட இந்த சூழலில் பத்திரிக்கைகளில் பணிபுரியும் சினிமா பத்திரிக்கையாளர்கள் மூன்று பேர் சேர்ந்து ஒரு youtube சேனல் தொடங்கி சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்றிருக்கின்றனர்.

பிஸ்மி , அந்தணன் , சக்திவேல் இந்த மூவரும் சேர்ந்து நடத்தும் "வலைப்பேச்சு" என்ற சேனல் சினிமா தொடர்பான சேனல்களில் முன்னணி இடத்தில் உள்ளது. இந்த வெற்றிக்குக் காரணம் தனிப்பட்ட திறமைகளும் , அவர்களின் நீண்ட நெடிய அனுபவம் மற்றும் நகைச்சுவையான பேச்சும் முக்கியக் காரணங்கள்.


இந்த சேனலில் புதிதாக எடுக்கப்படும் சினிமா குறித்த சுவாரஸ்யமான செய்திகள் , கேள்வி பதில் நிகழ்ச்சியில் பழைய நடிகர்கள் படங்கள் குறித்த செய்திகள் ,வெளிவந்த படங்களின் வசூல் நிலவரங்கள் மற்றும் சினிமாவில் உள்ள முக்கிய நபர்களின் பேட்டிகள் என்று பல்வேறு பகுதிகள் உள்ளன.

இந்த சேனலை அனைவரும் விரும்பி பார்ப்பதற்கு காரணம் மிக துல்லியமான சினிமா செய்திகள் , ஆக்கபூர்வமான விமர்சனங்கள் என்று பல்வேறு சிறப்பம்சங்கள். இதை விட மிக மிக முக்கியமானது தினமும் தவறாமல் ஒரு காணொளியினை (வீடியோ) வெளியிட்டு விடுவார்கள்.தற்போது இரண்டு லட்சம் சந்தாதாரர்கள் என்ற இலக்கினை எட்டி சாதனைப் படைத்திருக்கின்றனர்.

இந்த சேனல் குறித்து சில விமர்சங்களும் உள்ளன. அரசியல் குறித்த இவர்களின் நிலைப்பாடு (நாம் தமிழர் கட்சி ஆதரவு) சில நடிகர்கள் குறித்த தனிப்பட்ட விமர்சனம் என இந்த மூவரின் சுய சார்பினை சினமா ரசிகர்கள் விரும்புவதில்லை.

ஆனாலும் தற்போதைய நிலையில் சினிமா குறித்த அறிந்து கொள்வதற்கு உள்ள மிக சரியான ஒரு சேனல் இந்த வலைப்பேச்சு என்பது மட்டும் 100% உண்மை. பலருக்கும் இந்த சேனல் குறித்து முன்பே தெரிந்திருக்கலாம் , தெரியாதவர்கள் கண்டிப்பாக youtubeல் வலைப்பேச்சு சேனலைப் பாருங்கள்.
நன்றி 
செங்கதிரோன்

பிகில் சத்தம் எப்படி இருக்கு?


கனடாவில்  நாளில் 10 காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல். தியேட்டரில் விஜய், நயனதாரா, யோகிபாபு இவர்களோடு ரோபா சங்கரின் மகள் பாண்டியம்மாளுக்கும் பலத்த வரவேற்பு இருந்தது.

அட்லி வழக்கம்போல உணர்ச்சி மிகுந்த காட்சிகளிலும், பிரம்மாண்டத்திலும் அசத்தி இருக்கின்றார். 

இரண்டு முக்கிய அம்சங்கள் : திருமணத்திற்கு பிறகும் பெண்கள் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை உடைக்க வைத்திருந்த காட்சியும், ஆசிட் வீசியதால் பாதிப்படைந்த பெணலணிற்கு கொடுக்கப்படும் ஊக்கமும் மிக சிறப்பாக அமைந்திருந்தது.

விஜய் ஆல்தோட்ட பூபதி பாடலில் ஆடிய அதே உற்சாகத்தோடு 15 ஆண்டுகள் பின்பும் ஆடி அசத்திகின்றார். 
நன்றி 
செங்கதிரோன்.

படத்தின் முக்கிய பலவீனம் எந்த கதாபாத்திரத்திற்கும் சரியான பின்கதை இல்லை. 

கண்டிப்பாக ஒருமுறை ரசித்து பார்க்கலாம்.

கைதி எப்படி இருக்கு?

எழுத்தாளர் சாரு நிவேதிதா ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வந்த போது பருத்திவீரன் படத்தில் வந்த அதே கதாபாத்திரத்தின் தொடர்ச்சி போல நடித்திருப்பதாக எழுதி இருந்தார். கைதி படத்திலும் அதே போனலறதொரு எண்ணம் ஏற்பட்டது. சில சமயம் இது பருத்திவீரன் Part-2 பார்ப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டது. இரு படத்திலும் தோற்றத்தில் வழவரே வித்தியாசம் நெற்றியில் அணிந்திருக்கும் விபூதி மட்டுமே. பல நவநாகரிக பாத்திரத்தில் நடித்தாலும் கிராமத்து தோற்றம் தான் கார்த்திக்கு மிக பொருத்தமாக இருக்கிறது. என்பதுகளில் சத்யராஜ் பிடித்து வைத்திருந்த அதே இடத்தினை மிக சிறப்பாக கார்த்தி தற்போது அடைந்திருக்கிறார்.


படம் சாகசப்பயணம் போல மிக மிக வேகமாக செல்கிறது. படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் , அதே சமயத்தில் வந்த பிகில் படம் அளவுக்கு காதில் பூ சுற்றவில்லை.

மிக இளம் வயது இயக்குஞரான லோகேஷிடமிருந்து இவ்வளவு ஆழமான உணர்வும், பல்வேறு சாகசமும் அடங்கிய படத்தினை எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் எல்லா படத்தின் கதையும் ஒரே இரவில் நடப்பதாக எடுப்பேன் என்ற பிடிவாத்ததின் பின்னணி என்னவென்று தெரியவில்லை.

காவல் நிலையத்தில் நடப்பதாக சொல்லபடும் சம்பவங்கள் நாடகத்தனமாகவும், எதார்தத்திற்கு மாறாகவும் உள்ளது. 
கலகலப்பு படத்தில் போலீஸாக வந்த நெப்போலியன் இதில் அந்த படத்தில் நடித்த பாத்திரத்தின் தொடர்ச்சி போல எனக்கு மட்டும் தோன்றியது.

தமிழில் எடுக்கபட்ட மிக மாறுபட்ட கதையம்சம் கொண்ட பட வரிசையில் கைதிக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு

நன்றி
செங்கதிரோன்
.

புத்தருடன் 55 மணி நேரம்;


ந்த 2019ம் வருடத்தில் சொல்லிக் கொள்கின்ற மாதிரி, மனதுக்கு நிறைவான சம்பவம் , புத்தர் குறித்த ஆவணப்படத்தினை Netflixல் பார்த்துதான். 

பள்ளியில் புத்தர் குறித்த பாடம் இன்றும் நினைவில் இருக்கின்றது (தமிழ் வழிக்ல்கல்வியின் சிறப்பமசம் ). மனைவி மகனை விட்டு விட்டு தனியாக ஆன்மீகபயணம் மேற்கொண்டார் . அந்த சிறு வயதிலேயே எனக்கு புத்தரின் மனைவியும் மகனும் எப்படிப்பட்ட துன்பத்திற்கு ஆளாகியிருப்பார்கள் என்று தோன்றியது. புத்தரின் கோட்பாடுகளும் அந்த வயதில் முழுவதுமாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஒரு வருடத்திற்குப் பிறகு netflixல் நுழைந்து போது வழக்கமாக பார்க்கும் மாஃபியாக்கள் தொடரை பார்க்காமல் புதிதாக ஏதாவது பார்க்கலாம் என்று தேடியபோது கிடைத்தது தான் புத்தர் பற்றிய தொடர். இந்த தொடரில் புத்தரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து நிகழ்வுகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

புத்தர் பிறந்தவுடன் முனிவர்கள் இவர் மிக்கப்பெறும் யோகியாக வருவார் என்று கணித்த காரணத்தால் , அவ்வாறு நடக்காமல் இருப்பதற்காக அவனுடைய தந்தை நகரம் முழுதும் வயதானவர்கள் நோயாளிகள் ,ஊனமுற்றவர்களை அப்புறப்படுத்தி அவர்களை தன மகன் புத்தர் பர்ர்க்கதவாறு தனி இடத்தில் தங்க வைத்தார். புத்தர் ஆன்மீகத்தை நோக்கி செல்லாதவாறு அவர் எடுத்த அனைத்து முயற்சிகளுமே தோல்வி அடைந்தன.

மற்ற அனைவரையும் விட புத்தரின் மனைவி அடைந்த துயரம் மிக அதிகம் .அனால் அவர் அதை தன கணவரின் எண்ணம் நிறைவேறுவதற்காக பொறுத்துக்கொண்டார். புத்தரின் மனைவியாக நடித்த பெண் காஜல் ஜெயின் மிக சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். தமிழ் சினிமா ஏன் அவரைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று தெரியவில்லை.

புத்தரின் கொள்கைகளை உலக மக்கள் பின்பற்றயதோடு மட்டுமல்லாமல் அவரின் ஒட்டு மொத்தக்குடும்பமே துறவி பாதையினை தேர்ந்தெடுத்தார்கள் . அதில் மிக குறிப்பிடத்தக்கவர்கள் அவருடைய வளர்ப்பு அம்மா , மற்றும் தம்பி ஆனந்தா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
நன்றி 
செங்கதிரோன் 


ஆவாரம்பூ அறிவாளிகள்:

நியாண்டர் செலவன் ஒரு முறை முக புத்தகத்தில் மிக சிறப்பாக செயல்படும் குழுமமாக ஆரோக்கியம் நலவாழ்வு என்று குறிப்பிட்டிருந்தார் . அப்படி செயல்பட்டுக்கொண்டிருந்த ஒரு குழுமம் தற்போது முழு மூடர்களின் கூடாரமாக மாறிவருகின்றது .

இந்த குழுமத்தின் முன்னணி சேவகர்களில் ஒருவர் தன் அறிவின்மையை வெளிப்படுத்த ஆவரம்பூவினை கையிலெடுத்தருக்கின்றார் . உடம்புதான் ஆயுதம் என்ற தத்துவஅடிப்படையில் கொழுப்பினை உண்டு அடைந்த `தற்காலிக வெற்றியினை ` மிகப் பெரும் வெற்றியாக கற்பிதம் செய்து கொண்டு மற்ற மருத்துவ முறைகளை இகழ்வது அறிவீனத்தின் உச்சம்.

இது போன்ற அவதூறுகளை மற்ற மருத்துவ முறைகளை நோக்கி அள்ளி வீசும் போதெல்லாம் அலோபதி மருத்துவர்களை துணைக்கு அழைப்பது என்பது தப்பான தொழில் புரிபவன் அந்த ஊர் பெரியவரையோ ரவுடியையோ துணைக்கு அழைப்பது போல் தான் உள்ளது.

பேலியோவில் இருப்போரும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் உலகில் உள்ள அனைத்து நோய்க்களும் பேலியோவினால் சரியாகும் என்று உளறி வருவதையும் பார்க்க முடிகின்றது.


இறுதியாக ஆவாரம் பூ குறித்த சில செய்திகள். சித்த மருத்துவத்தில் ஒரு மருந்து கூட single herbal formulation அடிப்படையில் உண்டாக்கப்பட்டதல்ல. ஆவாரம் பூ குடிநீர் என்பது பல மூலிகைகள் இணைந்த ஒரு குடிநீர் சூரணம் . அதற்கு சர்க்கரை அல்லது நீரிழிவு நோயினை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பது ஆய்வுகளின் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது . இது குறித்த கருத்து தெரிவிக்கும் உரிமைமயும் தகுதியும் மருத்துவ அறிஞர்களுக்கும் , தாவரவியல் ஆராய்ச்சியார்களுக்கு மட்டுமே உண்டு .

நன்றி 
செங்கதிரோன் 

Wednesday, April 15, 2020

விண்டர் விநோதங்கள்: ஐஸ் சிற்பங்கள்


பனிக்காலத்தில் வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் மிக முக்கியமானது ஐஸ் சிற்பங்கள் கண்காட்சி. குளிர்காலத்தில் பிப்ரவரி மாதம் மிக முக்கியமானது, ஏனென்றால் பனியின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உறை மழை பெய்யும் (ஆங்கிலத்தில் Freezing rain). மரம் ,செடி,கொடி ரோடுகள் அனைத்தும் உறைந்து போயிருக்கும். 

ஐஸ் சிற்பங்களை மனிதன் உருவாக்குவதை விட இயற்கை உருவாக்குவது மிக சிறப்பாக இருக்கும் . அனைத்து​ மரம் மற்றும் செடிகளில் ஐஸ் முழுவதுமாக படிந்து பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். (கீழே படம் உள்ளது)


மனிதனும் தன் பங்கிற்கு ஸ்நொவ் மேன் (Snow man) சிற்பத்தை வீட்டிற்கு அருகாமையிலோ அல்லது பூங்காக்களிலோ உருவாக்குவார்கள். நம்மூரில் குழந்தைகளுக்கு மண்ணில் விளையாடப் பிடிக்கும் , வெளிநாட்டு குழந்தைகளுக்கு snowல் விளையாடுவது மிக மிக பிடித்தமான ஒன்று. 
Ice Hotel


தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு ஐஸ் சிற்பங்கள் மிகப்பெரும் கலையாக மாறிவிட்டது. தற்போது நடக்கும் ஐஸ் சிற்ப கண்காட்சியில் அனைத்து விதமான விலங்குகள் , கார்ட்டூன் கதாபாத்திரங்கள் என்று பல்வேறு வகையான சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் . குளிரினால் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது போன்ற சிற்ப கண்காட்சி சிறந்த பொழுது போக்கு இடமாக இருக்கும்.


ஐஸ் சிற்பத்தின் அடுத்த கட்டம் என்பது ஐஸ் ஹோட்டல் , முழுக்க முழுக்க முழுக்க பனியினால் உருவாக்கப்பட்ட இந்த ஹோட்டல் வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் மிக மிக அழகாக காட்சி அளிக்கும். ஐஸ் ஹோட்டலில் மக்கள் தங்குவதற்கான அறைகள், பார் வசதி ,வெந்நீர் ஊற்று என்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

விண்டரில் மக்களை மகிழ்விக்க இது போன்ற பொழுதுபோக்குகளை அரசாங்கமும் ,தன்னார்வ நிறுவனங்களும் ஊக்குவிக்கினறன.

செங்கதிரோன்

விண்டர் விளையாட்டுகள்:


னிக்காலம் முழுதும் கருங் கரடி மற்றும் கறுப்புக்கரடி (இங்கே குறிப்பிடுவது Polar கரடி அல்ல) ஆகியவை நீண்ட தூக்க நிலைக்கு சென்று விடும். இந்த நீணட தூக்கத்தினால் அதன் உடல்நலன் பாதிக்கமால் இருப்பதற்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளும் ஆற்றலினை இயற்கை கரடிகளுக்கு அளித்திருக்கின்றது. கரடியும் எப்பொழுது விண்டர் முடியும் சால்மன் மீன்கள், தேனடை போன்றவற்றை எப்படி வேட்டையாடி உண்பது என்பனை கனவுகண்டு கொண்டே தூங்கிக்கொண்டிருக்கும்.
கரடி வாழும் வாழ்வினை மனிதன் வாழமுடியாது . இயங்கிக்கொண்டே இருந்தால் தான் பிழைக்க முடியும். அதற்காக தான் குளிர்பிரதேசங்களில் வாழ்பவர்கள் விண்டர் விளையாட்டுக்களை வடிவமைத்தார்கள். விண்டர் விளையாட்டுகளின் எண்ணிக்கை ஏராளம் . இவைகளின் சிறப்பு கருதியே விண்டர் ஒலிம்பிக்ஸ் நடத்தப்படுகின்றது. 

விண்டர் விளையாட்டுகளை மிதமான மற்றும் தீவிரமான விளையட்டுகள்(வீர விளையாட்டுகள்) என்று இரண்டு விதமாக தரம் பிரிக்கலாம்.
மிதமான விளையட்டுகளில் ஐஸ் ஸ்கேட்டிங் பிரதானமானது , ஏனென்றால் இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக இந்த விளையாட்டில் ஈடுபடுவார்கள். நியூயார்க் போன்ற பெருநகரம் தொடங்கி சிற்றூர் வரை நகரத்தின் மத்தியில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக குளிர்காலங்களில் மட்டும் இந்த ஸ்கெட்டிங் மைதானம் அமைக்கப்பட்டிருக்கும். வார விடுமுறை நாட்களில் இந்த இடம் களைகட்டும் . ஏகப்பட்ட மக்கள் உற்சாகமாக ஸ்கெட்டிங் செய்வதைப் பார்க்க முடியும். இது ஒரு romanitc விளையாட்டு என்று கூட சொல்லலாம். ஆண் பெண் இருவரும் இணைந்து கைகோர்த்துக்கொண்டு ஸ்கெட்டிங் செய்வர்.இது பற்றி இன்னும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் blades of glory படம் பாருங்கள். 

குழந்தைகளுக்கான விண்டர் விளையட்டுகளில் முக்கியமானது Tubing (பெரியவர்களும் பங்கேற்கலாம்). பெரிய டயர் போன்ற ஒன்றின் நடுவே ஒருவர் அல்லது இருவர் உட்கார்ந்து கொண்டு செங்குத்தான மலை போன்ற ​ போன்ற பகுதியில் இருந்து சறுக்கி விளையாடுவார்கள் . முதன் முதலாக இதனை விளையாடியபோது படு த்ரில்லிங்காக இருந்தது.

அடுத்தது Dog sleeding,இந்த அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட நாய்களை கயிற்றினால் பிணைத்து அதன் துணையுடன் நீண்ட நேரம் பயணிப்பது. இது பலகாலமாக பயன்பாட்டில் இருந்துவந்த ஒன்று. snowmobile போன்ற இயந்திர வாகனங்கள் வந்த பிறகு இதன் பயன்பாடு மிகவும் குறைந்துவிட்டது . அதனாலேயே இது விண்டர் விளையட்டுகளில் ஒன்றாக மாறிவிட்டது. Dog sleeding போட்டிகளும் நடக்கும். விண்டர் விளையட்டுகளில் இதற்கு முக்கிய இடமுண்டு. Eight below என்ற ஆங்கில திரைப்படத்தில்Dog sleed குறித்து அருமையாக விவரித்திருப்பார்கள். 

வீர விளையாட்டுகள் குறித்து பார்ப்போம்:
Ski: ஸ்கி என்பது பனி சூழ்ந்த மலைபபகுதியில் கால்களில் பட்டை, கைகளில் குச்சி ஆகியவற்றின் துணையோடு சறுக்கி விளையாடுதல் .விண்டரின் மிகுந்த சவாலான விளையாட்டுகளில் இது முக்கியமான ஒன்று . ஏனென்றால் இந்த விளையாட்டில் ஏகப்பட்ட விபத்துகள் நடந்தேறியிருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க ஒன்று , உலகின் புகழ்பெற்ற கார் விளையாட்டு வீரர் மைக்கேல் ஷூமேக்கர் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் ஸ்கி விளையாடும்போது மரத்தில் அவர் தலை மோதி கோமா நிலைக்கு சென்றார். வெளிநாட்டில் அலுவலகங்களில் வரவிடுமுறை முடிந்துவரும்பபோது யாராவது ஒருவர் தத்தி தத்தி நடந்து வந்தால் ஸ்கி அல்லது ஸ்நொவ் போர்ட் விளையாட்டில் காயம் ஏற்பட்டது என்று புரிந்து கொள்ளலாம். இளங்கன்று பயமறியாது என்பதால் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு இந்த ஸ்கி மற்றும் ஸ்நொவ் போர்டு (Snow Board ).


ஐஸ் ஹாக்கி : விண்டர் விளையட்டுகளிலேயே உலகம் முழுதும் பிரபலமான விளையாட்டு ஐஸ் ஹாக்கி. நம்மூரில் ஹாக்கி என்பது மட்டையின் உதவியுடன் பந்தின் தள்ளி கோல் போடுவது. ஐஸ் ஹாக்கி என்பது பனியால் ஆன தரையில் ஸ்கெட்டிங் செய்து கொண்டே பந்தினை (இந்த பந்து தட்டையாக கேரம் போர்டு காயின் போன்று இருக்கும்) கோல் போடுவது. மைதானத்தின் அளவு மிக சிறிதாக இருக்கும். நம்மூர் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் போல கனடாவில் ஹாக்கி வீரர்களுக்கு அதிக சம்பளம் , புகழ் ,மதிப்பு எல்லாம் உண்டு. 

வை தவிர பனி மலையேற்றம் , விண்டர் ட்ரெக்கிங் ஆகியவைகளும் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்துக்கு ஆல்பஸ் மலையேற்றத்திற்காக கனடாவில் இருந்து என் நண்பர்கள் செல்வதுண்டு. அதே போல snowmobile வாகனத்தில் காட்டில் பயணம் செய்து வேட்டையாடுவதும் நடக்கும்.

விண்டரின் போது எல்லா நேரமும் வீட்டிலேயே முடங்கி கிடைக்காமல் நம் உடலையும் மனதையும் உற்சாகப்படுத்த இது போன்ற விளையாட்டுகள் அத்தியாவசிய ஒன்றாக இருக்கிறது. 

செங்கதிரோன்

விண்டர் விநோதங்கள் : குளிர் தேன்


உண்மையான கனடியன் (Canadaian) என்பவன் மாபிள் சிரப்பினை உணவில் சேர்த்துக்கொள்வதோடு மட்டுமன்றி , மாபிள் சிரப்பினை எவ்வாறு அந்த மரத்தில் இருந்து எடுப்பது என்பதனையும் தெரிந்து வைத்திருக்கவேண்டும் . இதனை சொல்வது கனடாவில் வாழும் பூர்வீக மக்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மாபிள் சிரப் குறித்த சிறு அறிமுகம்.

கனடா நாட்டுக் கொடியில் இருக்கும் இலையின் பெயர் மாபிள் (Maple ). கனடா முழுதும் அதிகம் தென்படும் இந்த மரங்களில் இருந்து எடுக்கப்படும் திரவத்திற்கு பெயர் தான் மாபிள் சிரப் . குளிர்காலத்தில் மரத்தின் தண்டுகளில் சேமித்து வைக்கபட்ட ஸ்டார்ச் , வசந்த காலத்தின் தொடக்கத்தில் தேன் போன்றதொரு திரவமாக மாறி இருக்கும் . மரத்தில் துளையிட்டு இந்த தேனினை எடுப்பார்கள். மிகுந்த குளிரின் காரணமாக உறைந்த நிலையில் இருக்கும் இந்த திரவத்தினை , கொதிக்க வைத்து திரவமாக மாற்றுவார்கள். நம்மூரில் உருவாக்கப்படும் கரும்பு மற்றும் பனை வெல்லம் தயாரிப்புக்கு முறைக்கு இணையாக கூட இதனை ஒப்பிடலாம்.

விவசாயம் செய்வது என்பது குளிர்காலங்களில் மிக மிக சாத்தியமற்ற ஒன்று . இருப்பினும் குளிர் முடியும் தருவாயில் ( வசந்தகாலத்தின் தொடக்கத்தில் -Early spring ) விவசாயம் செய்வதற்கான முன்னேற்பாடுகள் பலவும் நடக்கும் . அவற்றில் முக்கியமானது தேன் எடுத்தல்.

வடஅமெரிக்க (கனடா, அமெரிக்கா) பூர்விககுடிமக்கள் தான் முதன் முதலில் இந்த தேன் எடுக்கும் முறையினை கண்டுபிடித்தனர். பிறகு கனடாவில் குடியேறிய ஐரோப்பாவினரும் இந்த தேன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர்.


கனடாவில் உள்ள கியூபெக் மாநிலம் தான் மிக அதிக அளவிலான மாபிள் சிரப்பினை உற்பத்தி செய்கின்றது . பிரஞ்சு மொழியில் மாபிள் தேன் தயாரிக்கும் தொழிற்கூடங்களுக்கு கபானா சுக் (cabane a suc) என்று பெயர் . வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பி செல்லும் இடமாக இந்த தேன் எடுக்கும் மையங்கள் இருக்கும்.

மிக மிக இனிப்பு சுவையாக இது இருந்தாலும் அனைத்து வகையான உணவுகளிலும் மாபிள் சிரப்பினை சிறிதளவாவது சேர்த்து உண்பார்கள்.

கனடாவுக்கு வர விருப்பமுள்ளவர்கள் இப்பொழுதே மாபிள் சிரப்பினை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் .
செங்கதிரோன்

ரச" வாதம்:


கொரோனா வைரஸ் ஏற்படுவதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பலவேறு வழிமுறைகளை அரசும் , மருத்துவத்துறையினை சேர்ந்தவர்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த அறிவுறுத்தல்களுக்கிடையே ஒரு சிலர் இடைச்செருகலாக தங்கள் வன்மத்தினையும் வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிகின்றது. சைவ உணவு உண்பவர்கள் மாமிச உணவுக்கு எதிராக ஏற்படுத்தும் பீதிகள் , சீன மக்களின் உணவுப் பழக்கம் குறித்த கிண்டல்கள் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இந்தப் பட்டியலில் ரசத்தையும் இணைத்து , ரசம் சாப்பிடாதீங்க அது ஒரு மூட நம்பிக்கை என்று சொல்வதைப்பார்த்தால் சிரிப்பு தான் வருகின்றது. 

உணவில் பூண்டு , மிளகு, மஞ்சள் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனப்து அனைவரும் அறிந்த உண்மை . அதனாலேயே ரசம் சாப்பிட சொல்லி பலரும் பரிந்துரைக்கின்றனர் . தமிழ்நாடு மட்டுமன்றி பிற மாநிலத்தவரும் ரசத்தின் அருமை பெருமைகள் குறித்து கூறுவதை கேட்டிருக்கின்றேன். இவ்வளவு பெருமை வாய்ந்த. ரசத்தினை சாப்பிடுவதைக் கூட எதிர்க்கும் அளவுக்கு ஒரு சில மருத்துவர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

கடந்த ஆண்டு நிலவேம்புக் குடிநீரின் நம்பகத்தன்மை குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டமருத்துவர் அமலோற்பவநாதன்  தன் மனைவிக்கு ஏற்பட்ட டெங்கு காய்ச்சலுக்கு ரசம் மட்டுமே சாப்பிட்டு சரியானதாக குறிப்பிட்டார்.

டெங்குக்கு ரசம் போதும் என்றவர்கள் , கொரோனாவுக்கு ரசமா அதெல்லாம் நம்பாதீர்கள் என்கிறார்கள். இப்பொழுது புரிகிறதா இவர்களின்இரட்டை நிலை . நிலவேம்புக் குடிநீரினை பரிந்துரைத்தால் , அதெல்லாம் தேவையில்லை ரசம் மட்டும் போதும் என்பார்கள். ரசம் சாப்பிட சொன்னால் அதெல்லாம் தேவையில்லை வெந்நீர் மட்டும் குடியுங்கள் என்பார்கள்.
தமிழகத்தில் அக்ஷ்யபாத்திர என்ற அமைப்பு அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்குகின்றது , அந்த அமைப்பு வழங்கும் உணவில் பூண்டு வெங்காயம் சேர்க்காதது குறித்து கேள்வி எழுப்பும் அதே ஆட்கள் தான் , மண்ணின் மருத்துவ பொக்கிஷம் குறித்த ஏளனங்களையும் செய்து தங்களை தாங்களே கலாய்த்து கொள்கின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து கூட தப்பித்து விடலாம் , ஆனால் தங்களை அதிபுத்திசாலிகள் என்று நினைத்துக்கொண்டு மக்களின் அன்றாட உணவுப்பழக்கங்கள் குறித்து பீதியைக் கிளப்பும் ஆட்களிடமிருந்து தப்பிப்பது மிக மிக கடினம்.
செங்கதிரோன்

விண்டர் விநோதங்கள் : பனி வெள்ளம்


பனிப்பொழியும் (Snowfall) போது பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாலும் இந்த பனிப்பொழிவினால் பல்வேறு தொல்லைகள் உண்டாகும் . சாலையில் நடக்கவோ ,வாகனங்களை ஓட்டவோ முடியாது. இந்த விண்டரின் ஆரமபம் முதல் முடியும் வரை பலவேறு விதமான இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். பிப்ரவரி மாதத்தில் ஏற்படும் குளிர்மழையினால் சாலைகள் கண்ணாடி போல மாறிவிடுவதால் நடப்பவர்கள் வழுக்கி விழுந்து கை ,கால் முறிவு ஏற்படும் , வாகனங்கள் பிரேக்குக்கு கட்டுப்படாமல் கண்ணாடி சாலையில் வழுக்கி மற்ற வாகனங்களுடன் மோதி விபத்துகள் உண்டாகும். (கண்ணாடி சாலைகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள-லிங்க் கமெண்ட் பகுதியில் )

பனி வெள்ளம் என்பது விண்டர் முடியும் தருவாயில் ஆறுகளை ஒட்டிய இடங்களில் ஏற்படும் . ஆங்கிலத்தில் இதற்கு freshet என்று பெயர். வசந்த காலத்தின் தொடக்கத்தில் வழக்கமாக இந்த பனி வெள்ளம் உண்டாகும் . மூன்றுமாதங்களுக்கு மேலாக பெய்த பனிபொழிவினால் ஆங்காங்கே பல்வேறு தற்காலிக பனி மலைகள் அல்லது மேடுகள் உருவாகி இருக்கும். வின்டரின் முடிவில் வெப்பநிலை உயரும் போது இந்த பனிமலைகள் உருக ஆரம்பிக்கும்.

வின்டரில் வெப்பநிலை மிக மிக குறைவாக -20க்கும் கீழ் செல்வதால் ஆறு குளம் ஏரி ஆகியவையும் உறைந்து விடும் .ஏசு கிறிஸ்து கடலில் நடந்து அற்புதம் செய்ததை போல , வின்டரில் ஒரு சிலர் உறைந்த இந்த ஆறு ஏரிகளில் நடந்து அற்புதங்களை செய்வார்கள் . இந்த உறைந்து போன ஆறுகள் விண்டரின் முடிவில் அதாவது வசந்த காலத்தின் தொடக்கத்தில் வெப்பநிலை உயர்வால் உருக ஆரம்பிக்கும். மேற்சொன்ன தற்காலிக பனி மேடுகள் உருகுதல் , இந்த உறைந்து போன ஆறுகளின் உருகுதல் இரண்டும் இணைந்து தான் இந்த பனி வெள்ளம் உண்டாகும். ஏப்ரல் முதல் ஜுலை வரை இந்த பனிவெள்ளம் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஏற்படும்.

இந்த பனி வெள்ளமானது ஆறுகளின் அருகாமையில் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் நுழைந்து சேதங்களை உண்டாக்கும். ஒவ்வொரு வருடமும் கனடா மற்றும் அமெரிக்க அரசுகள் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இருப்பினும் இந்த வருடமும் நான் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் பனி வெள்ளம் ஏற்பட்டு ஒரு சில கிராமங்கள் பாதிப்படைந்தன.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கேற்ப பனி பொழிவு பார்ப்பதற்கு தான் சாதுவாக இருக்கும் ஆனால் அதனால் ஏற்படும் தொல்லைகள் அளவிட முடியாத ஒன்றாக இருக்கும்.

செங்கதிரோன்