Thursday, April 16, 2020

கைதி எப்படி இருக்கு?

எழுத்தாளர் சாரு நிவேதிதா ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வந்த போது பருத்திவீரன் படத்தில் வந்த அதே கதாபாத்திரத்தின் தொடர்ச்சி போல நடித்திருப்பதாக எழுதி இருந்தார். கைதி படத்திலும் அதே போனலறதொரு எண்ணம் ஏற்பட்டது. சில சமயம் இது பருத்திவீரன் Part-2 பார்ப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டது. இரு படத்திலும் தோற்றத்தில் வழவரே வித்தியாசம் நெற்றியில் அணிந்திருக்கும் விபூதி மட்டுமே. பல நவநாகரிக பாத்திரத்தில் நடித்தாலும் கிராமத்து தோற்றம் தான் கார்த்திக்கு மிக பொருத்தமாக இருக்கிறது. என்பதுகளில் சத்யராஜ் பிடித்து வைத்திருந்த அதே இடத்தினை மிக சிறப்பாக கார்த்தி தற்போது அடைந்திருக்கிறார்.


படம் சாகசப்பயணம் போல மிக மிக வேகமாக செல்கிறது. படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் , அதே சமயத்தில் வந்த பிகில் படம் அளவுக்கு காதில் பூ சுற்றவில்லை.

மிக இளம் வயது இயக்குஞரான லோகேஷிடமிருந்து இவ்வளவு ஆழமான உணர்வும், பல்வேறு சாகசமும் அடங்கிய படத்தினை எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் எல்லா படத்தின் கதையும் ஒரே இரவில் நடப்பதாக எடுப்பேன் என்ற பிடிவாத்ததின் பின்னணி என்னவென்று தெரியவில்லை.

காவல் நிலையத்தில் நடப்பதாக சொல்லபடும் சம்பவங்கள் நாடகத்தனமாகவும், எதார்தத்திற்கு மாறாகவும் உள்ளது. 
கலகலப்பு படத்தில் போலீஸாக வந்த நெப்போலியன் இதில் அந்த படத்தில் நடித்த பாத்திரத்தின் தொடர்ச்சி போல எனக்கு மட்டும் தோன்றியது.

தமிழில் எடுக்கபட்ட மிக மாறுபட்ட கதையம்சம் கொண்ட பட வரிசையில் கைதிக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு

நன்றி
செங்கதிரோன்
.

No comments: