Thursday, April 16, 2020

ஆவாரம்பூ அறிவாளிகள்:

நியாண்டர் செலவன் ஒரு முறை முக புத்தகத்தில் மிக சிறப்பாக செயல்படும் குழுமமாக ஆரோக்கியம் நலவாழ்வு என்று குறிப்பிட்டிருந்தார் . அப்படி செயல்பட்டுக்கொண்டிருந்த ஒரு குழுமம் தற்போது முழு மூடர்களின் கூடாரமாக மாறிவருகின்றது .

இந்த குழுமத்தின் முன்னணி சேவகர்களில் ஒருவர் தன் அறிவின்மையை வெளிப்படுத்த ஆவரம்பூவினை கையிலெடுத்தருக்கின்றார் . உடம்புதான் ஆயுதம் என்ற தத்துவஅடிப்படையில் கொழுப்பினை உண்டு அடைந்த `தற்காலிக வெற்றியினை ` மிகப் பெரும் வெற்றியாக கற்பிதம் செய்து கொண்டு மற்ற மருத்துவ முறைகளை இகழ்வது அறிவீனத்தின் உச்சம்.

இது போன்ற அவதூறுகளை மற்ற மருத்துவ முறைகளை நோக்கி அள்ளி வீசும் போதெல்லாம் அலோபதி மருத்துவர்களை துணைக்கு அழைப்பது என்பது தப்பான தொழில் புரிபவன் அந்த ஊர் பெரியவரையோ ரவுடியையோ துணைக்கு அழைப்பது போல் தான் உள்ளது.

பேலியோவில் இருப்போரும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் உலகில் உள்ள அனைத்து நோய்க்களும் பேலியோவினால் சரியாகும் என்று உளறி வருவதையும் பார்க்க முடிகின்றது.


இறுதியாக ஆவாரம் பூ குறித்த சில செய்திகள். சித்த மருத்துவத்தில் ஒரு மருந்து கூட single herbal formulation அடிப்படையில் உண்டாக்கப்பட்டதல்ல. ஆவாரம் பூ குடிநீர் என்பது பல மூலிகைகள் இணைந்த ஒரு குடிநீர் சூரணம் . அதற்கு சர்க்கரை அல்லது நீரிழிவு நோயினை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பது ஆய்வுகளின் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது . இது குறித்த கருத்து தெரிவிக்கும் உரிமைமயும் தகுதியும் மருத்துவ அறிஞர்களுக்கும் , தாவரவியல் ஆராய்ச்சியார்களுக்கு மட்டுமே உண்டு .

நன்றி 
செங்கதிரோன் 

No comments: