Wednesday, April 15, 2020

விண்டர் விநோதங்கள்: ஐஸ் சிற்பங்கள்


பனிக்காலத்தில் வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் மிக முக்கியமானது ஐஸ் சிற்பங்கள் கண்காட்சி. குளிர்காலத்தில் பிப்ரவரி மாதம் மிக முக்கியமானது, ஏனென்றால் பனியின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உறை மழை பெய்யும் (ஆங்கிலத்தில் Freezing rain). மரம் ,செடி,கொடி ரோடுகள் அனைத்தும் உறைந்து போயிருக்கும். 

ஐஸ் சிற்பங்களை மனிதன் உருவாக்குவதை விட இயற்கை உருவாக்குவது மிக சிறப்பாக இருக்கும் . அனைத்து​ மரம் மற்றும் செடிகளில் ஐஸ் முழுவதுமாக படிந்து பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். (கீழே படம் உள்ளது)


மனிதனும் தன் பங்கிற்கு ஸ்நொவ் மேன் (Snow man) சிற்பத்தை வீட்டிற்கு அருகாமையிலோ அல்லது பூங்காக்களிலோ உருவாக்குவார்கள். நம்மூரில் குழந்தைகளுக்கு மண்ணில் விளையாடப் பிடிக்கும் , வெளிநாட்டு குழந்தைகளுக்கு snowல் விளையாடுவது மிக மிக பிடித்தமான ஒன்று. 
Ice Hotel


தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு ஐஸ் சிற்பங்கள் மிகப்பெரும் கலையாக மாறிவிட்டது. தற்போது நடக்கும் ஐஸ் சிற்ப கண்காட்சியில் அனைத்து விதமான விலங்குகள் , கார்ட்டூன் கதாபாத்திரங்கள் என்று பல்வேறு வகையான சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் . குளிரினால் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது போன்ற சிற்ப கண்காட்சி சிறந்த பொழுது போக்கு இடமாக இருக்கும்.


ஐஸ் சிற்பத்தின் அடுத்த கட்டம் என்பது ஐஸ் ஹோட்டல் , முழுக்க முழுக்க முழுக்க பனியினால் உருவாக்கப்பட்ட இந்த ஹோட்டல் வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் மிக மிக அழகாக காட்சி அளிக்கும். ஐஸ் ஹோட்டலில் மக்கள் தங்குவதற்கான அறைகள், பார் வசதி ,வெந்நீர் ஊற்று என்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

விண்டரில் மக்களை மகிழ்விக்க இது போன்ற பொழுதுபோக்குகளை அரசாங்கமும் ,தன்னார்வ நிறுவனங்களும் ஊக்குவிக்கினறன.

செங்கதிரோன்

No comments: