Tuesday, January 12, 2016

மாறுவேடப் போட்டி இரண்டாவது போட்டியாளர் : கிஷோர் முஸ்லீம் வேடம்

முஸ்லிம் வேடம் போடுவது சினிமாக்காரர்களுக்கு மிக எளிதான ஒன்று . ஒரு குல்லாவை தலையில் மாட்டிக் கொண்டு வாப்பா என்று சொன்னால் அது தான் முஸ்லிம் வேடம். கிஷோர் அந்த முஸ்லிம் வேடத்தை சற்றே வித்தியாசமாக போடுவதில் வல்லவர்.கிஷோரின் பூர்வீகம் குறித்து ஏராளமான தகவல்கள் முகப்புத்தகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பற்றி எந்த ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியும் இந்தப் பதிவில் மேற்கொள்ளப் போவதில்லை.

இன்று இந்தியா முழுமைக்குமே பாதிக்கு மேற்பட்ட மக்கள் தொகையினர் இளைஞர்களே , முஸ்லிம் சமூகத்திலும் அதே நிலைதான் .அப்படிப்பட்ட முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்தே பல பதிவுகளை மேற்கொண்டு தான் முஸ்லிம்களின் நண்பன் என்று நிறுவ பாடுபடும் ஒரு ஜீவன் தான் நம் கிஷோர்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை போல வெளித்தோற்றத்திற்கு தெரிந்தாலும் இது தன்னுடைய இருப்பை இங்கு நிலை நாட்டிக் கொள்ள  போட்டுக் கொண்ட வேடம் தான் முஸ்லிம்.

முகபுத்த்கத்தில் 28000க்கும் அதிகமான தொடர்பாளர்களை (followers )  கொண்டிருக்கும் இவர்  ஒரு பக்கம் முஸ்லிம் வேடம் , மறு பக்கம் தலித் அல்லாத சாதியினருக்கு ஜிங்குச்சா அடிப்பது என்ற தந்திரங்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதனால் தான் இந்தளவு முன்னேற முடிந்திருக்கின்றது. இவர் தொடர்ந்து வெளிச்ச நிழலில் இருப்பதற்கு முக்கியக் காரணம் மூன்று: 
 1.கருணாநிதி குறித்து மோசமாக இவர் இடும் பதிவுகளைக் கண்டு ஆயிரமாயிரம் அதிமுககாரர்கள் இவர் நட்பில் இணைகின்றனர்.
 2. பள்ளிப்படிப்பிற்குப் பின் புத்தகம் படிப்பதை நிறுத்தி விட்ட நம் சகோதர்கள் இந்த கிஷோர் திருவல்லிக்கேணி பிளட்பாரக்கடைகளில் இருந்து பொறுக்கி வந்த புத்தகங்களை கொண்டு தான் ஒரு மெத்தப் படித்த படிப்பாளி போல காண்பிப்பதனை நம்பி ஏமாறுகின்றனர். 
3. ஆங்கில அறிவு; முன்பெல்லாம் அரசு ஆரம்பப் பள்ளிகளில் நான்காம் வகுப்பிலிருந்து தான் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படும். மூன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பிற்கு செல்லவே மாணவர்கள் தயங்குவார்கள் ஆங்கிலத்தின் மீது அவ்வளவு பயம். ஆனால் அதே ஊர்களில் பிராமண வகுப்பை சார்ந்தவர்கள் கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளை கான்வென்டில் படிக்க வைப்பர். எனவே கிராமத்து இளைஞர்களுக்கு ஆங்கிலம் மீது ஒரு ஒவ்வாமை (அலர்ஜி)இருக்கும். இப்படிப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு கிஷோர் தான் ஒரு ஷேக்ஸ்பியர் என்ற அளவுக்கு விடும் பீலாவில் மயங்கி விடுகின்றனர்.

உணமியிலேயே மெத்தப் படித்த மேதாவியாகத் திகழும் தலித் வேடம் தரித்து அலையும்  பத்ரி இடும் பதிவுகளை விட இந்தப் போலி படிப்பாளி கிஷோருக்குத் தான் மவுசு அதிகம். இப்பொழுது தந்தி டிவி, நியுஸ் 7 மற்றும் ஜெயா டிவியில் இணையதள ஆர்வலர் என்ற பெயரில் தோன்றுவதன் வளர்ச்சி எனபது புதுப்பேட்டை படத்தில் ஒரு ரவுடி அமைச்சராக ஆகும் வளர்ச்சிக்கு இணையான ஆபத்தான போக்கு. கெட்ட வார்த்தைகளில் பதிவிடுவது , பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது ,குடிப்பழக்கத்தை ஊக்குவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர் தொலைகாட்சியில் பேச வாய்ப்பளிப்பதென்பது தமிழக அரசியல் எந்தளவு தரம் தாழ்கின்றது என்பதற்கு மிக சரியான உதாரணம்.

பத்ரியோ ஆர்ஸ்ஸ் பத்திரிகையில் தெலுங்கர்கள் தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும் , தமிழர்களை நீனடகாலம் தெலுங்கர்கர்கள் ஆண்டதினால்  அவர்கள் அமைதி காக்க வேண்டும் என்ற தொனியில் ஒரு கட்டுரை எழுதுகின்றார். தமிழர்களுக்கு எதிரானவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியினை பத்ரி செய்கின்றாரோ என்ற எண்ணம் ஏற்படுகின்றது.

இது போன்ற வேடதாரிகள் தமிழ் மக்கள் சரியாக இனம் கண்டு ஒதுக்குவது மட்டுமன்றி நாமும் நிறையப் படிக்க வேண்டும் . இவர்களின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்க  இளைய சமூகம் சினிமா குடி போன்ற  மாயையிலிருந்து விலகி  நம் தமிழ் மண்ணின் பெருமையினை மீட்டெடுக்கும் பணியில் இணைய வேண்டும்.

இன்றும் பெரியார் பேரைக் கேட்டாலே பேய் அடித்தது போல அலறும் சமூகம் நம்மை வீழ்த்தவும் நம் ஒற்றுமையைக் குலைக்குவும் பத்ரி , கிஷோர் போன்ற பலர் இயங்குகின்றனர் , அவர்களின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் இருக்க வேண்டும். 


விஜய் டிவி கனெக்ஷன் நிகழ்ச்சி குறித்த சர்ச்சை:


ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் கனெக்ஷன் நிகழ்ச்சி நண்டு ஜெகன் அவர்களால் தொகுத்து வழங்கப்படுகின்றது. இளம் சமூகத்தினர் மற்றும் குழந்தைகளிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்தப் பதிவினை  நண்பர் பிரபா ஒயின் ஷாப் அவர்கள் நிறைய எழுதியுள்ளார்.

நான் மிகவும் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று.மொத்தம் நான்கு சுற்றுகள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் இரண்டு சுற்றுகள் திரையில் காண்பிக்கப்படும் படங்களை இணைத்து வார்த்தைகளை பதில் அளிக்க வேண்டும். மூன்றாவது சுற்று முழுக்க முழுக்க சினிமா சம்பத்தப்பட்ட சுற்று. பாடல்கள் மற்றும் படங்களின் தலைப்பைக் கண்டு பிடிக்க வேண்டும். இறுதி சுற்று 50 மதிப்பெண்கள்  ஒரு படத்தின் பெயர் காண்பிக்கப்படும் ஐந்துப் படங்களிலிருந்து கண்டுபிடிக்க வேண்டும். நிகழ்ச்சி மிக மிக விறுவிறுப்பாக இருக்கும்.


இப்பொழுது சர்ச்சைக்கு வருவோம். ஜெகன் இந்த நிகழ்ச்சியில் அதிகம் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவது உண்மைதான் , அதுவும் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்களின் உடை , சிரிப்பு ஆகியவற்றை குறித்து அதிகம் விமர்சனம் செய்வார், அது சில  சமயங்களில் எல்லை மீறய ஒன்றாக இருக்கும். இந்த தவறை சரி செய்ய வேண்டிய பொறுப்பு அந்த நிர்வாகத்திற்கு அதிகம் உண்டு.

ஆனால் அதிமுக அடிமைகள் முகப்புத்தகத்தில் கடந்த வார கனெக்ஷன் நிகழ்ச்சியில் சர் சிவி ராமன் அவர்களை அவமதித்து விட்டதாக அவதூறு கிளப்பி வருகின்றனர்.இந்த அவதூறின் பின்னணி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வெள்ள நிவாரணத்திபோது அதிமுகாரர்கள் ஸ்டிக்கர் ஒட்டியதை கலாய்த்தது தான்.அந்த ஆத்திரத்தினைதான் சர் சிவி ராமன் மேல் இவர்களுக்கு திடீர் பாசம் பொங்கி அவரை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி பொங்கல் வைக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை நீங்களும் இந்த இணைப்பில் கண்டு எது உண்மை என்று முடிவெடுங்கள்.

நன்றி 
செங்கதிரோன்