Sunday, April 29, 2018

சூப்பர் டூப்பர் சுயேச்சை MLA



சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த சுயேச்சை MLA படத்தில் உள்ளது போன்ற ஒரு சுயேச்சை MLA நிஜத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்று பலமுறை நினைத்ததுண்டு. அந்த ஆசை தற்பொழுது  நிலையில்லா ஆட்சியினை முதல்வர் எடப்பாடி தலைமையில்  நடைபெற்றுக் கொண்டிருக்கையில்,  மூன்று சுயேச்சை MLAக்களான தமிமுன் அன்சாரி , கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோரால் சாத்தியமாகி இருக்கின்றது  

சட்டப்படி சுயேச்சை MLAக்கள் அல்ல என்றாலும் ,இவர்கள் மூவருக்குமே தனித்தனி அமைப்பு இருப்பதால் சுயேச்சை MLAக்களாக செயற்படுகின்றனர்.அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை இந்த மூவரும் கூட்டாகவோ தனித்தனியாகவோ மேற்கொள்கின்றனர் .இவர்களின் தயவு அரசுக்கு தேவைப்படுவதால் ,அதிமுகவும் இவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காக்கிறது .


பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியதால் ,ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது .அப்போது தான் இந்த மூவரின் வலிமை புரிந்தது . என்றென்றால் நம்பிகையில்லா தீர்மானத்தில் இவர்கள் ஒட்டுக்கும் ஆட்சியின் ஸ்திரத்த்ன்மையில் முக்கியப்பங்கு வகித்தது.

இந்த மூன்று சுயேச்சை MLAக்களில் ,தனியரசு மட்டும் தான் மிக கம்பீரமாக தனித்து தெரிகின்றார். அந்த கம்பீரம் அவரின் உயரம், பாவனை பேச்சு அனைத்திலும் வெளிப்படுகின்றது . கருணாஸ் நகைச்சுவை நடிகராக இருந்து அரசியலுக்கு வந்ததாலேயே அவரிடம் அது போன்ற ஒரு ஈர்ப்பு  இல்லை. தமீமுன் அன்சாரி குறிப்பிட்ட மதம் சார்ந்த ஒருவராகவே பெரும்பான்மையானோரால் பார்க்கப்படுகின்றார்


பரமத்தி வேலூர் தொகுதி MLA, தனியரசு கொங்கு இளைஞர் பேரவை என்ற ஒன்றினை நடத்தி வந்தாலும் , திராவிடம் , தமிழ்த்தேசியம் , தலித் ஆதரவு என அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லும் போக்கு அவரின் பேச்சிலும் செயலிலும் வெளிப்படுகின்றது .

விவாத நிகழ்ச்சிகளில் தனியரசு பேசும் விதம் , மிக கவனிக்கதக்க ஒன்று . அனைவரையும் ஐயா என்றழைப்பதும் , யாரிடமும் வீண் விவாதமோ , கோபமோ கொள்ளாமல் சிரித்த முகத்துடன் பேசுவது என்று ஒரு தேர்ந்த அரசியல் தலைவராகவும் கண்ணியமிக்கவராகவும் நடந்து கொள்கின்றார்.

அவர் தொகுதிக்கு என்ன விதமான பணிகள் செய்த்திருக்கின்றார் என்ற செய்திகள் நம்மிடம் இல்லை .இருப்பினும் நீட், காவேரி ,மீத்தேன் போன்ற போராட்டங்களில் மிக முக்கிய பங்காற்றி வருகின்றார் 
.

ஒரு சாதி தலைவர் பெரியாரை கொணடாடுவது முரணாக சிலர் பார்த்தாலும் , உள்ளூர் அரசியலை மையப்படுத்தியே தனியரசு உட்பட மற்ற சாதி தலைவர்கள் களமாட காரணமாக அமைகின்றது .

தனியரசு அரசியலில் மென்மேலும் வளர்ந்து நல்ல பணிகளை மக்களுக்கு செய்திட வேண்டும் என்று நாமும் வாழ்த்துவோம் .


நன்றி
செங்கதிரோன்