Wednesday, May 31, 2017

அடுத்து பாம்புக் கறிக்கு தடை : தயாராகிறது சட்டம்

பசு மாமிச தடை பஞ்சாயத்தே இன்னும் முழுமையாக முடியாத நிலையில் பாம்புக் கறிக்கு தடையா ஆமாம் , உண்மைதான் ,எப்படி பசுவில் முப்பது முக்கோடி தேவர்களும் வசிக்கின்றார்களோ , அப்படித்தான் பாம்பும் அதுவும் ஒரு ஆன்மீகக் குறியீடுதான், இதனை நாமே பல் கோவில்களில் பார்த்திருப்போம் .

கிராமங்களில் வெள்ளிக்கிழமை அன்று நல்ல பாம்பைப் பார்ப்பது சிறப்பு என்பர், சிலர் தூரமாக நின்று வழிபடுவர். அதே போல நல்லப் பாம்பினை யாரேனும் அடித்தால் பெரியவர்கள் கண்டிப்பார்கள். இப்படி பசு மற்றும் பாம்பினை வழிபடும் வழக்கம் எப்படி வந்தது என்று பார்ப்போம்.

 முதலில் பசு கோமாதா ஆன கதை 
பசுவின் நன்மைகள் உலகுக்கே தெரியும் அதன் பால் தான் தாய்ப்பாலுக்கு அடுத்து முதனமையான உணவாகக் குழந்தைகளுக்கு வழங்கப் படுகின்றது.ஆனால் நம் முன்னோர்கள் பசு மாமிசத்தை வேண்டி விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருந்த காரணத்தினால் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய பாலுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.எனவே பெரியவர்கள் ஒன்று கூடி இந்த பசு மாமிச விரும்பிகளுக்கு பாடம் புகட்ட பசு கோமாதா எங்கள் குலமாதா என்றக்  கதையினை உருவாக்கி பசு மாமிசப் பிரியர்களுக்கு தடை விதித்தனர் .பின்னர் வந்த ஆனமீகவாதிகள் இந்தப் புரட்டுக் கதைக்கு மேலும் மெருகேற்றி முப்பது முக்கோடி தேவர்கள் வாழவதாக எண்ணம் கற்பித்து பசு மாமிசத் தடையினை இன்னும் வலுவாக்கினர் .


அந்தக் காலங்களில் தொழில் நுட்ப வசதிகள் குறைவாக இருந்ததனால் பசு இனப்பேருக்கங்கள் குறைவாக இருந்தது. ஆனால் தற்பொழுது 10 லிட்டருக்கும் மேல் கறக்க கூடிய பசுக்களை உருவாகிய பின்னரும் இந்த மூடப் பழக்கத்தினை தொடர்வது முட்டாள்தனமானது.

கீழே  பசு மாமிசம் மருத்துவ நனமைகளுக்காக பழங்காலத்தில் சாபிட்டதற்கான ஆதாரம் :

In therapeutic section of Charak Samhita (pages 86-87) the flesh of cow is prescribed as a medicine for various diseases. It is also prescribed for making soup. It is emphatically advised as a cure for irregular fever, consumption, and emaciation. The fat of the cow is recommended for debility and rheumatism.

அதாவது பசு மாமிசம் கொண்டு  தாயாரிக்கப்பட்ட சூப்பானது  சுரம் மற்றும் மூட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கின்றது .மேலும் அன்றாட உணவில் பசு மாமிசத்தை உண்டு வந்ததற்கான ஆதாரங்களும் ஏராளம் உள்ளன.

இங்கே தமிழகத்தின் தொன்மையான இலக்கியங்களிலும் பசு மற்றும் பன்றி இறைச்சி உண்டதற்கான ஆதாரங்களை பேலியோ உணவு குறித்து விழிப்புணர்வினை முகப்புத்தகத்தில் தொடர்ந்து எழுதி வரும் நியாண்டர் செல்வன் அவர்கள் தினமும் பதிந்து வருகின்றார்கள்.

நான் பயின்ற சித்த மருத்துவப் பட்ட படிப்பில் (B.S M .S ) "நோயில்லா நெறி" புத்தகத்தில் கோழி , உடும்பு , பன்றி என்று பலவகையான மாமிசங்களின் பயன்பாடுகள் குறித்து கூறப்பட்டிருக்கின்றன. மேலும் உணவாக மட்டுமல்லாது  இது போன்ற சீவராசிகளைப் பயன்படுத்தி மருந்துகளும் சித்த மருத்துவத்தில் உண்டு.  உ -ம்: மான் கொம்புப் பற்பம் , ஆமை ஒட்டுக் குடி நீர் ,ஓணான் சுடர் தைலம் (இது மட்டும் வெளி பிரயோகம் )

பாம்பு தெய்வமான கதை :

பாம்பின் கறியை நாம் சாப்பிட முடியாது பாம்புதான் நம் கறியை சாப்பிடும் பல காணொளிகளில் பார்த்திருப்போம் , மலைப்பாம்பு மனிதனை முழுமையாக விழுங்கி உண்ணுவதை .

முற்காலத்தில் தானியப் பயிரிடுதல் மிக அதிகம் இருந்தது.திணை,சாமி, கொள்ளு, பைத்தம் பருப்பு ,கம்பு ,கேழ்வரகு என்று எண்ணற்றவை இருந்தன. அறுவடை சமயங்களில் பறவைகள்  இவற்றை கொத்தித் தின்னும் எனவே ஒலி எழுப்பியோ அல்லது உண்டி வில் அடித்து அவற்றை விரட்டுவர். 

ஆனால் இந்த எலி இருக்கின்றதே அது இரவு நேரங்களில் வயல்களில் புகுந்து அனைத்துப் பயிர்களையும் கடித்து நாசம் செய்து விடும் , அவற்றை விரட்டுவது மிகக் கடினமாக இருந்தது,  அந்த சமயங்களில் விவசாயிக்கு உறுதுணையாக இருந்தவை இந்த நல்லப் பாம்புகள் (cobra) இவைகளுக்கு எலி மிகப் பிடித்தமான உணவு , இவைகளால் விவசாயிகளுக்கு பாம்பு தெய்வமாகத் திகழ்ந்தது . அப்படிப்பட்ட பாம்புகளை சிறுவர்களும் இளைஞர்களும் "பாம்பென்றால் படையும் நடுங்கும்" என்ற பழமொழிக்கேற்ப கண்டவுடன் கொல்ல ஆரம்பித்தனர். இதனைத் தடுக்கவிவசாயிகள் ஆரம்பித்து வைத்து தான் நாக வழி பாடு.குறிப்பாக நல்லப் பாம்பை மட்டும் தெய்வமாக்கியதன் நோக்கம் எலிகள் அட்டகாசத்தை ஒடுக்குவதில் அவற்றின் தலையாயப் பணி  தான் .

ஆனால் இன்றோ சிறுதானியங்களை யாரும் பயிரிடுவதில்லை, பாம்பு வழிபாட்டை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வழிபடுவதற்கான கதைகளை நாமே உருவாக்கி மூட நம்பிக்கையில் திளைத்துக் கொண்டிருகின்றோம் .

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாம்புதான் அடிப்படிவாதிகளின் அடுத்த இலக்கு பாம்பைக் கொல்பவர்களுக்கு பத்து ஆண்டு தண்டனை  சட்டம் கூட   வரலாம் . எனவே பாம்பிடம் இனி கவனமாக இருங்கள் 

முத்தாய்ப்பாக சொல்ல வேண்டிய ஒன்று என்னவென்றால் , காசியில்  இறந்த மனித மாமிசம் உண்ணும் ரிஷிகளைத் தடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இருக்கின்றதா ? அவர்கள் மனிதர்களைக் கொன்று உண்ணாவிட்டாலும் அது போன்ற முறைகள் இன்றும் ஆன்மீக அடிப்படியில் வழக்கத்தில் இருக்கும் பொது பசு மாமிச உண்ணுதலில் அரசாங்கம் வீணாகத் தலையிடுவது என்பது இந்த நாட்டை பிற்போக்கு நிலைக்கு தள்ள செய்கின்றது.

பின் குறிப்பு : பீகார் ,ஒரிசா மற்றும் பிற மாநிலங்களில் வாழும் பிராமணர்கள் இன்றும் இறைச்சி சாப்ப்பிடுகின்றனர் (கோழி, ஆடு ,மீன் ). இதிலருந்தே இது முற்காலத்திலிருந்தே  தொன்று தொட்டு வரும் பழக்கம் என்று உணர்ந்து கொள்ள முடியும் .

 இந்தப் பதிவு வழிபாட்டு முறைகளைக் குறை கூற எழுதப்பட்டதல்ல மாறாக  எதையும் அதன் பின்புலத்தை அறிந்து பின்பற்றும் தற்கால இளைஞனின் ஒரு ஆய்வுக் கட்டுரை . இதனை யாரும் எங்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் .

நன்றி 
செங்கதிரோன்


Thursday, May 4, 2017

குளிர் வேட்டைக்காரன் உணவு : வான்கோழி இருதயம் மற்றும் ஈரல்


நெட்பிலிக்ஸில் below zero அதாவது பூஜ்யம் மற்றும் அதற்கு கீழே  உள்ள வெப்பநிலையில் வாழும் மனிதர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றை பார்த்தேன். அங்கு பனிப்பிரதேசத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கை குறித்த பதிவு தான் இந்த ஆவணப்படம். 

அந்த படத்தில்  வரும் இளைஞன் அங்கு பனிக்காட்டிற்கு சென்று ஒரு வான்கோழி பறவையை வேட்டையாடி வந்து அதனுடைய ஈரல் மற்றும் இருதயத்தை சமைத்து உண்ணுகிறான். அவனுக்கு அது தான் உலகின் சுவையான உணவு போல் தெரிகிறது. அந்த கட்சியை பார்க்கும் போது நானும் இதே போல் வேட்டையாடி உண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. அலாஸ்கா மாகாணம் சென்று வரும் செலவை மனதில் கணக்கிட்டு பார்த்தேன். இன்னும் ஒரு வருடத்திற்க்கு அங்கு சென்று வரும் வாய்ப்பு இல்லை என்று தெரிந்தது. உடனே அருகில் உள்ள கடைக்கு சென்று வான்கோழி ஈரல் மற்றும் இருதயத்தை வாங்கி வந்து வறுத்து உண்டவுடன் ஏதோ நானே அந்த பறவையை வேட்டையாடி உண்டது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது.


நன்றி 
செங்கதிரோன்