Tuesday, August 22, 2017

உலக மக்களின் உள்ளம் கவர்ந்த கனடிய பிரதமர் : ஜஸ்டின்


அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு பிறகு வசீகரம் மிக்க தலைவராக தற்போது அதிகம் அறியப்படுபவர் கனடிய பிரதமர் ஜஸ்டின் துருது . தமிழ் மக்களுக்கு இவரைப் பற்றி நன்கு தெரியும் , ஏனென்றால் கடந்த பொங்கல் பண்டிகையின் போது கம்பு எடுத்து சுழட்டி விளையாடிய காட்சியை ஒட்டு மொத்த தமிழர்களும் வியப்புடன் பார்த்தனர்.இந்தியாவில் மோடியும் , இலங்கையில் மைத்ரிபாலாவும் தமிழர்களை கவர எடுத்த முயற்சிகளை எதுவும் பலனளிக்கவில்லை , ஆனால் ஜஸ்டினின் இது போன்று மக்களுடன் மிக எளிமையாக பழகுவதில் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டுவிட்டார் .


தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருமே இவரை ஒரு ஆபத்பாந்தவனாக பார்க்கின்றனர் . இசுலாமிய நாடுகளில் நடக்கும் போரினால் இடம் பெயரும் மக்களுக்கு அடைக்கலம் தருவதற்கு ஜஸ்டின் தலைமையிலான அரசு முன்னணியில் இருக்கின்றது. அமெரிக்காவில் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகளுக்கைகளினால் வெறுப்புற்ற மக்கள் கனடாவை வாழ்விடமாக தேர்ந்தெடுக்க ஜஸ்டினும் ஒரு காரணமாக இருக்கின்றார்.


அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிலவும் கறுப்பர்களுக்கு எதிரான போக்குகள் கனடாவில் எப்போதுமே இருந்ததில்லை . ஜஸ்டினின் ஆட்சிக்க்காலத்தில் அது இன்னும் கரிசனத்தோடு ஆப்பரிக்கர்களை அரவணைக்கின்றது . மிக சமீபத்திய உதாரணமாக , அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹெய்தி நாட்டு அகதிகளுக்கு ஆதரவளித்ததில் ஜஸ்டினுக்கு முக்கியப்பங்குண்டு . இதன் காரணமாக கனடிய மக்ளில் ஒரு பிரிவினருக்கு ஜஸ்டின் மேல்  அதிருப்தியும் ஏற்பட்டது.

ஓவியாவுக்கு எப்படி  பெண்களை விட இளைஞர்கள் மத்தயில் மிக அதிக வரவேற்பு இருந்ததோ அதே போல ஜஸ்டினுக்கு உலகம்  முழுக்கவே பெண் ரசிகர்கள் அதிகம் . அவர் புகைப்படம் அல்லது காணொளியைக் கண்டாலே கண்ணை மூடிக் கொண்டு லைக் இடுவதும் ஷேர் செய்வதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் . பிக் பாசில் எப்படி ஓவியாவை சுற்றி உள்ள அனைவருக்குமே இருந்த ஒரு எதிர்மறை எண்ணங்கள் ஓவியாவை தனித்து காட்டியதோ அதே போல தான் மோடி தொடங்கி டிரம்ப்  என அனைத்து நாட்டு தலைவர்களின் முகத்தில் அப்பியருக்கும் குரூரம் ஜஸ்டினை நோக்கி நம்மை இயல்பாக ஈர்க்கின்றது.


ஜஸ்டினின் இந்த இளகிய மனமே கனடா நாட்டு மக்களில் ஒரு பிரிவினருக்கு அவரை அதிகம் விமர்சனம் செய்ய வைக்கின்றது . குறிப்பாக இஸலாமிய மக்களுக்கு அவர் காட்டும் கரிசனத்தினை , கனடா நாட்டு மக்கள் மட்டுமன்றி அங்கே குடியேறிய மற்ற மத மற்றும் இன  மக்களும் விமர்சிக்கின்றனர். மேலும் அவருக்கு கஞ்சாவினை சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருப்பதும் அதிகம் விமர்சிக்கப்படுகின்றது .

ஜஸ்டினின் அப்பாவும் கனடா நாட்டுப் பிரதமராக சிறப்பாக ஆட்சி புரிந்தவர் . அவருடைய அப்பாவின் இறுதி சடங்கில் ஜஸ்டின் ஆற்றிய உரையின் காரணமாகத் தான் அவர் மக்களிடம் பிரபலமாகி அரசியலுக்குள் வந்தார் . கடந்த தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். 

ஜஸ்டின் போன்ற ஒரு பிரதமர் தங்கள் நாட்டுக்கும் கிடைக்கமாட்டாரா என பலரும் நினைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர் மிக சிறப்பாக ஆட்சி புரிந்து உலகில் உள்ள இளைய சமுதாயத்துக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். மேலும் ஜஸ்டினுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஆவண செய்ய வேண்டும்.

நன்றி 
செங்கதிரோன்