Friday, April 17, 2020

பேட்டை: நாவல்

பேட்டை நாவல் 
எழுதியவர் ;தமிழ் பிரபா 

நாம் வாழும் பகுதியில் பல்வேறு விசித்திரமான சம்பவங்கள் நடக்கும், பல்வேறு விசித்திரமான மனிதர்கள் வாசிப்பார்கள் அவர்கள் குறித்து ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும் , சிலர் தான் அதை செய்வார்கள். சுஜாதாவின் ஶ்ரீரங்கத்து தேவதைகள் புத்தகம் அது போன்றதொரு அருமையான புத்தகம். 

பேட்டை நாவலின் மையக் கதாபாத்திரம் மெட்ராஸ் பட நாயகன் கார்த்தி போன்ற ஒரு இளைஞன் . அவன் சிறு வயதில் இருந்து நடக்கும் சம்பவங்கள் தான் இந்த புத்தகம்.

மொத முப்பது பக்கம் படிக்கறதுக்குள்ள ஒரு வழியாயட்டேன். ஏன்னா முழுக்க முழுக்க மெட்ராஸ் பாஷை , ஒண்ணிமே பிரியில. இதுல புத்தகத்தின் கடைசியில் அந்த வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தை இருந்து . அதனால் தான் மிக எளிதாக தொடர்ந்து வாசிக்க முடிந்தது .


எழுதியவர் மிக இளவயதுக்காரர் தான் இருப்பினும் மிக சிறப்பாக விவரித்து எழுதி இருக்கின்றார். கடைசிப்பகுதி தான் மிக மிக சிறப்பாக அமைந்திருந்தது.

நட்பு , காதல் போன்றவை குறித்த கதைகளை படிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த புத்தகம் கண்டிப்பாக பிடிக்கும். 

இந்தப் புத்தகத்தின் கதையினை முழுதும் சொன்னால் சுவாரஸ்யம் குறைந்து விடும், அதனால் தான் விரிவாக சொல்லாமல் ஒற்றை வரியில் சொல்லி விட்டேன்.

நன்றி
செங்கதிரோன்

No comments: