Friday, April 17, 2020

கவுண்டர்களின் பொற்காலமா எடப்பாடி பழனிசாமி ஆட்சி ?


“காட்டை வித்துக் கள்ளு குடிச்சவன் கவுண்டன்” என்ற நிலையிலிருந்து “நாட்டை ஆளும் நிலைக்கு”கவுண்டர் வந்ததை ஒட்டியே இந்த கட்டுரையின் தேவை இருக்கின்றதுஇந்தியபவில் . காமராஜர் காலத்தில் நாடார்களுக்கு தொழில்கள் தொடங்க பல்வேறு சலுகைகள் கண்ணபிக்கப்பட்டதாக சொல்வார்கள் . ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்கள் சமூகம் சார்ந்தவர்களுக்கு ஏதாவது நன்மை செய்திருக்கின்றாரா என்று தெரியவில்லை. இருப்பினும் கவுண்டர்களுக்கு உள்ளூராவோ அல்லது வெளிப்படையாகவோ எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பதை பெருமையாக நினைக்கின்றனர்.

வரலாற்று பாட புத்தகத்தில் சோழர்கள் , சந்திரகுப்தர், மௌரியர் , முகலாயர் என்று பலரின் பொற்கலங்களைப் படித்திருப்போம். தற்போது இந்தியா முழுமைக்கும் சாதி சார்ந்தவர்களின் வெற்றி பெருமளவு கொண்டாடப்பட்டு வருகின்றது . 

கவுண்டர்களைப் பொறுத்தவரை அவர்கள் தொழில் துறையில் பல ஆண்டுகளாகவே முன்னணியில் இருக்கின்றனர் . பணம் மற்றும் வெளியுலக தொடர்புகளினால் தங்கள் சாதி குறித்த பெருமிதங்களை பொது வெளியில் கொண்டாடியதில்லை. 

தொழில் வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் கண்ட நாடார்கள் சாதி சங்களையும் அதனூடாகவே வலுவாக அமைத்தனர். ஆனால் கவுண்டர்கள் அப்படியான சங்கங்களை அமைக்கவில்லை. இது அவர்களின் பரந்து பட்ட மனப்பாண்மையா அல்லது அவ்வாறு அமைக்க நல்ல தலைமை இல்லயா என்று தெரியவில்லை.

இப்பொழுது எடப்பாடி ஆட்சி நடப்பதை ஒட்டி மட்டுமே இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கின்றது. தற்பொழுது ஈஸ்வரன், தனியரசு போன்றவர்கள் கவுண்டர் சமூக இளைஞர்களை மையப்படுத்தி சாதி சார்ந்த அரசியல் முன்னெடுப்புகளை செய்கின்றனர் . அவை கொங்கு மணடலத்தின் கிராமங்களில் வசிப்பவர்களிடம் நல்ல செல்வாக்குடன் உள்ளதாகவே தெரிகிறது.

நன்றி 
செங்கதிரோன்

No comments: