Tuesday, November 22, 2016

பின் வாசல் வழியாக நுழையும் பாஜக

இடைத்ததேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறனது. ஏன் மாபெரும் வெற்றி என்று குறிப்பிடுகின்றேன் என்றால் ,அதிக அளவு பிரச்சரம் கிடையாது , ஆள் பலம் கிடையாது ,ரூபாய் நோட்டு பிரச்னை இவை அனைத்தையும் மீறி அது பெற்ற வாக்குகள் மிக கவனிக்கவேண்டிய ஒன்று . நீட காலம் இருந்துவரும் பாமக , மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இது மிகப்பெரும் பின்னடைவு . 


பாஜக தொடந்து இது போன்று மூன்றாம் இடத்தினை வரும் தேர்தலிகளிலும் பெற்றால் மேற் சொன்ன கட்சிகளை தமிழகத்தில் காணாமல் போகும் நிலை வரலாம். உயர் நடுத்தர வர்க்கத்து இளைஞர்களின் நாயகனான மோடி இப்பொழுது தொடர் பிரச்சாரங்கள் மூலம் கிராமத்து இளைஞர்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார் என்றே இந்த வாக்குகளின் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது. 



விஜயகாந்த் வட மாவடத்தில் உள்ள இளைஞர்களை தன் வசப்படுத்த சில காலம் செல்வாக்கு பெற்று விளங்கியது போல , மோடியை முன்னிலைப்படுத்தி பாஜகவும் வட மாவட்டத்தில் காலூன்றப் பார்க்கின்றது. தங்கள் சமுதாய இளைஞர்களை இப்படி வழி தவறி செல்லாமல் தடுக்கும் பணியில் உடனடியாக அந்தந்த தலைவர்கள் களத்தில் இறங்குவது நல்லது. இடைத்தேர்தலில் பாஜக பெற்ற மூன்றாம் இடத்தினை , வருங்காலத்தில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் பெற விடாமல் தடுத்தால் தான் நம் இளைய சமூகம் காக்கப்படும்.



 முன் வாசலில் நின்று கொண்டு திராவிடத்தை வீழ்த்த போராடிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் பினவாசல் வழியாக பாஜக எளிதாக நுழைந்து கொண்டிருக்கின்றது. 

நன்றி 
செங்கதிரோன்




No comments: