Sunday, September 20, 2015

இறக்கை முளைத்த நாய்கள் வேண்டும்

நவீனமயமாக்கல் திட்டத்தில் மனிதர்களும் அவர்களின் தொழிலான விவசாயம் மட்டும் பாதிக்கப் படுவதோடு மட்டுமன்றி நன்றி உள்ள பிராணியான நாயும் பாதிக்கப் படுவதை கண்கூடாகக் கண்டேன்.தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொது இலங்கையில் நம் தொப்புள் கொடி உறவுகள் எப்படி குண்டடி பட்டு இறந்து கிடந்தார்களோ அதே போல சாலையெங்கும் நாய்கள் விபத்தில் அடிபட்டு இறந்து கிடந்தன.அதனைப் பார்க்க மிக பரிதாபமாக இருந்தது.





விரைவான போக்குவரத்து வசதிக்காக விவசாய நிலங்களை கைப்பற்றி அவற்றில் சாலைகள் அமைத்து நாம் சொகுசாக அதில் சென்று கொண்டிருக்கும் பொது இந்த  ஐந்தறிவு ஜீவன் சாலையை கடக்கத் தெரியாமல் வாகனத்தின் சக்கரங்களில் சிக்கி சுக்கு நூறாகி விடுகின்றன.இறந்து போன அந்த நாயின் சடலங்கள் கூட அகற்றப்படாமல் அடுத்தடுத்த வாகனங்களில் மாட்டி இறந்த உடலும் இன்னலுக்கு ஆளாகின்றது.


என் சிறு வயதில் நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டால்  நாய்கள் இறந்தால் அவைகளை அப்புறப்படுத்த ஏன் ஒருவரும் ஆர்வம் காட்டுவதில்லை என்பது புரியும். பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது பக்கத்து ஊரில் மக்கள்  சாலையில் கூட்டமாக  நின்று கொண்டு வழிமறித்தனர்,என் என்று கேட்டபோது அந்த கூட்டத்தினை விலக்கிக் காண்பித்தனர் , அங்கே  வண்டியில்  அடிபட்டு ஆடு இறந்து கிடந்தது, எனவே அவர்கள் எந்த வண்டியில் அடிபட்டு இறந்தது என்பதனை அறிய போகும் வரும் வாகனங்களை எல்லாம் நிறுத்தி அதன் சக்கரங்களில் ரத்தக் கறை இருக்கிறதா என்று சோதனை செய்து கொண்டிருந்தார்கள் . அப்படி ஏதேனும் கறையுடன் கூடிய  வண்டி  சிக்கினால் அவர்களிடம் ஆட்டிற்கான நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொள்வார்கள்.இங்கேயும் ஆட்டின் மீது எந்த பரிதாபமும் அல்ல  அதன்  பண மதிப்புக்க்ககதான் இவ்வளவு பேரும் கூடி நிற்கின்றார்கள் .


நமக்கு உற்றத் துணையான ஒரு நண்பனாக இருந்தாலும் அது இறந்த பின்னர் அதற்கு எந்த மதிப்பும் இல்லாததால் அவற்றின் சடலதத்தின அகற்ற யாரும் முன் வருவதில்லை.இதற்காகத்தான் நாய்களுக்கு இறக்கை தேவை என்று எண்ணுகிறேன்.கிராமங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம் , சாலையில் மேய்ந்துகொண்டிருக்கும் கோழிகள் ஏதேனும் வாகனகள் வந்து விட்டால் பறந்து தப்பித்து விடும். அவற்றால் மிக உயரப்பறக்க முடியாவிட்டாலும் கூட ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு பறக்கும் அளவிற்கு அதன் இறக்கைக்கு வலிமை உண்டு .அந்த அளவிற்கு வலிமை உடைய இறக்கை கூட போதும், நாய்கள் இது போன்று சாலை விபத்தில் இறப்பது வெகுவாகக் குறையும்.

என் தோழியின்   திவான் எனற பெயருடைய நாய்  இறந்து விட்டது.அந்த திவானுக்கு இந்தப் பதிவினை  காணிக்கையாக்குகின்றேன்.

நன்றி 
செங்கதிரோன் 



No comments: