Thursday, September 24, 2015

திரிஷா இல்லைனா நயன்தாரா படம் சொல்லும் பாடம்

விர்ஜின்பசங்க  பாவம் சும்மா விடாது என்ற வசனம் தற்பொழுது டீன் ஏஜ் பசங்களின் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்  ஸ்டேட்டஸ் ஆகி விட்டது . ஒரு தலையாகக் காதலித்தவன், தினமும் லுக் விடுகின்றவன் என எல்லா வகையினருடன் உண்மையாகக் காதலித்தவர்களும் இந்த வசனம் தங்களுக்கானது என்ற நம்பத் தொடங்கி விட்டனர்.

பெண்கள் மீது  அனைத்து ஆண்களும் இதே போன்ற கருத்து  கொண்டிருப்பதாகவும் ஒரு நிலை உண்டாகி இருக்கின்றது.ஆண்கள் நிறைந்த உலகமாக சினிமாவும் இருப்பதால் அங்கே ஆணின் உணர்வுகள் மட்டுமே பிரதிபலிக்கப்படுகின்றது. பெண்  என்பவள் பக்கம் இருக்கும் கருத்துகள் குறித்த நியாங்கள் மௌனிக்கப்படுகின்றன.ஒரு தரப்பின் நியாயங்கள் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பெண்கள் குறித்த மோசமானப் பார்வையை உண்டாக்குகின்றன.

எடுத்துக்கட்டாக ஜி .வி .பிரகாஷ் தன்னை ஏமாற்றிய பெண்ணின் வீட்டிற்கு எதிரே நின்று சத்தம் போடுவது போல எந்தப் பெண்ணாவது தன்னை ஏமாற்றிய ஆணின் வீட்டின் முன்னால் சத்தம் போடுவார்களா ? வீட்டின் ஒரு மூலையில் யாருக்கும் கேட்காதவாறு அழத்தான் முடியும் .



அதே போல தன்னை ஏமாற்றிய பெண்ணின் மீது அமிலம் வீசுவது , கொலையே செய்வது அல்லது புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிடுவது என்ற மோசமான காரியங்களில் ஆண் ஈடுபடுவது போல் எந்தப் பெண்ணும் செய்வது இல்லை. இதற்கு காரணம் ஆணுக்கு இந்த சமூகத்தில் இருக்கும் சுதந்திரமும் வரம்பு மீறய அதிகாரமும் தான்.

பெண் ஆணிடமிருந்து விலகிச் செல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.  முதலாவது குடும்பம் ,உறவுகள் ஏற்படுத்தும் அழுத்தங்களுக்கு அவள் அடிபணிய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.அடுத்து ஆண் பெண் மீது செலுத்தும் அதிகப்படியான அதிகாரம், தாங்கள் காதலிக்கத் தொடங்கிய அடுத்த நாளிலிருந்து அவளின் உடை, நண்பர்கள் , அலுவலகம் ,மொபைல் என்ற அனைத்தும் அவனின் ஆளுக்கு கீழ் வர வேண்டும் என்று எண்ணுகிறான். அதற்கு உடன்படாத பொழுது விரிசல் ஏற்படுகின்றது. ஒரு கட்டத்தில் பெண் சலிப்படைந்து விலகுகின்றாள். அப்பொழுதும் ஆண் தன்  தவறை உணர மறுக்கின்றான். வீட்டில் தன் அப்பாவுக்கு அடிமையாக இருக்கும் அம்மாவைப் போலவே தன் காதலியும் இருக்க வேண்டும் எண்ணுகின்றான்.


அதற்காக உள்நோக்கத்துடன் பெண்கள் பழகி ஆணை ஏமாற்றும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன , இருப்பினும் இது இரண்டு பக்கமும் நிகழ்கின்றது. ஆண் தன் காதலி அல்லது தன்னை விட்டுப் பிரிவதை மிக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அணுகுகின்றான் , அதிலிருந்து வெளி வர இயலாமல் அதைப் பற்றியே சிந்தித்து சில அந்தப் பெண்ணுக்கு கேடு விளைவிக்கின்றான்.இதனை ஒரு கோழைத்தனமான முடிவு என்று தான் எண்ணுகின்றேன். ஆண் இந்த ஏமாற்றத்தினை பிரிவை மிக முதிர்ச்சியுடன் தான் அணுக வேண்டும். 

அறிவியல் பூர்வாமாக பெண் மிக சீகிரமாக மனதளவில் முதிர்ச்சி அடைகின்றாள் , எனவே ஒத்த வயதில் இருக்கும் ஆண் பெண் உறவில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன.அதற்காக இந்த வயதுப் பிரச்சனை மட்டும் தான் ஒற்றைக் காரணம் என்று சொல்லி தப்பித்து விட முடியாது 

ஆணுக்கு பெண்ணின் சிக்கல்களை புரிந்து கொள்ளும் பக்குவம் வர வேண்டும். இந்தப் புரிதலை ஏற்படுத்துவதில் சமுதாயத்திற்கு முக்கியப் பங்குண்டு. அந்த சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கமான சினிமா ஆணை ஒரு கோழையாகவும் , மனதளவில் ஒரு முதிர்ச்சி அற்றவானாகவும் தொடர்ந்து காண்பிப்பது என்பது குடிப்பதானால் ஏற்படும் பாதிப்பைப் போன்று பெண்களால் பாதிக்கப்பட்டால் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற தவறான முன்னுதாரத்தினை ஏற்படுத்துவது சமூக சீரழிவுக்கே வழி வகுக்கும் .

குறிப்பாக நிறைய பெண் இயக்குனர்கள் சினிமாவுக்கு வர வேண்டும், பெண்களின் உணர்வுகளை ஆணுக்கு உணர்த்தும் வகையிலான நல்லப் படங்களை எடுக்க வேண்டும்.


நன்றி 

செங்கதிரோன்

1 comment:

Unknown said...

அருமையான செய்திகள்