Friday, November 20, 2015

கடுகுக் குளியல் : இளமை முதுமை உறவுக் காதல் படம்

பொருந்தாக் காதல் குறித்த படம் எடுப்பதில் வல்லவரான பாலசந்தர்  அபூர்வ ராகங்கள் தொடங்கி விடுகதை வரை பல படங்கள் எடுத்து சமூகத்தின் நிலையினை அச்சு அசலாக  அதிக விரசமின்றி படம் பிடித்துக் காட்டினார். எஸ்.ஜே.சூர்யா போன்றவர்கள் இதனை மிகைப்படுத்திக் காண்பித்து இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணத்தினை ஏற்படுத்தினர்.அதியமானுக்கும் ஓளவையாருக்கும் இருந்தது கூட காமம் சாராத ஒரு காதல் தான், அதனாலேயே காயகற்பமான நெல்லிக்க்கனியினை தான் உண்ணாமல் ஓளவைக்கு வழங்கி மகிழ்ந்தான்.
தருமபுரியில் அமைந்த்ருக்கும் ஓளவை -அதியமான் சிலை


எழுத்தாளர் சாரு சொன்னது போல பாலியல் வறட்சி காரணமாக இளைஞர்களின் ரசனையை ஆண்டி மேனியாக்கு கொண்டு சென்றுவிட்டது. இதே போல ஏகப்பட்ட மலையாளப் படங்களும் வந்து மேலும் ரசனையை பாழ்பண்ணிவிட்டன.

கடுகுக் குளியல் (mustard bath ) 1993ல் வெளிவந்த இந்தக் கனடிய நாட்டு திரைப்படம். கயானா நாட்டுக்கு  கனடாவில் இருந்து வந்த மருத்துவ மாணவனுக்கும் , ஹங்கிரியில் இருந்து வந்த  ஒரு முதிர்ந்த வயதுப் பெண்ணுக்கும் இடையிலான உறவு குறித்த படம் தான் கடுகுக் குளியல்.


கனடாவிலிருந்து கயனாவுககு மாத்திவ் வந்ததற்கான காரணம் என்னவெனில் பிரிட்டனின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் போது தன குடும்பத்துடன் வாழ்ந்த அந்த வீட்டினையும் ஊரினையும் பார்த்து விட்டு வருவதற்காகத்தான், ஆனால் சுதந்திரம் அடைந்த கயானா வெள்ளையின மக்கள் மீது இருக்கும் வெறுப்பினை நேரடியாக உணரும்போது பரிதவிக்கின்றான் . அப்பொழுதுதான் அவன் தங்கிருக்கும் விடுதியில் இருக்கும் முதிர் பெண்மணியை சந்திக்க இருவருக்கும் பரஸ்பர அன்புதான் படத்தின் அடிநாதம்.

இது தவிர அங்கேயே அவனுக்கு கிடைக்கும் ஒரு காதலி , இவன் தத்தெடுத்து வளர்க்கும் பையன் , இவன் வேலை செய்யும் மருத்துவமனை அங்கிருக்கும் நோயர்கள் என்று கதை பயணிக்கின்றது. இது உலக சினிமா விழாவில் தங்க விருது பெற்ற படம்.

நேரம் இருக்கும் பொது நல்ல சினிமா பார்க்க ஆசை இருப்பின் இந்தப் படத்தினை கண்டுகளியுங்கள் 

நன்றி 
செங்கதிரோன் 

No comments: