Saturday, November 21, 2015

வேதாளத்தைத் தூங்கியும் தூங்காவனத்தை தூங்காமலும் பார்த்தேன்

ஆரூர் முனா மற்றும் ஜாக்கியின் வேதாளம் விமர்சனம் படித்தவர்களுக்கு மிகுந்த குழப்பமே ஏற்பட்டிருக்கும். ஒருவர் சூர  மொக்கை என்றும் மற்றொருவர் படம் சூப்பர் என்று சொல்லும்போது எது உண்மை என்று குழப்பமே மேலோங்கி இருக்கின்றது. அதுவும் பல்வேறு உலகப்படங்கள் குறித்து மிகவும் சிலாகித்து எழுதிய ஜாக்கியே  வேதாளம் குறித்து ஆஹோ ஓஹோ என்று சொல்லும் போது ஜாக்கியின் பரிந்துரையில் பல  உலகப் படம் பார்த்து வேறு ரசனைக்கு சென்ற ரசிகனை  மீண்டும் கீழ்மட்ட ரசனை உள்ள படங்களை ரசிக்குமாறு கூறுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.


அண்ணன் ஆரூர் முனா அவர்கள் சூர மொக்கை என்று சொன்னதற்கான வலுவான காரணம் நான் மேற்சொன்னவாறு ஜாக்கி போன்றோரின் பாதிப்பால் நல்ல சினிமா பார்த்தவர் வேதாளம் குறித்து அபப்டி ஒரு கருத்தை தான் சொல்வார்.
ஆரூர் முனா அவர்களின் விமர்சனம் 

வேதாளம் மற்றும் தூங்கவனம் இரண்டுமே copycat படங்கள்தான் , ஆனால் இந்த இரண்டு படம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அதனை நேர்மையாக ஒப்புக் கொள்வதில் தயக்கமோ அல்லது ரசிகன் நாம் எப்படி எடுத்தாலும் அதை ரசிப்பான் என்ற ஒரு தன்னம்பிக்கையும் கூட காரணமாக இருக்கலாம்.

ஏன் ஒரு வேதாளம் படத்தைத் தூங்கியும் தூங்கவனத்தைத் தூங்காமலும் பார்க்க வேண்டும் எனபதற்கு வலுவான காரணம் இருக்கின்றது.  வேதாளம்  படத்தில் மூன்று  வில்லன்களை கொல்லுவதற்கும் ஒரே காரணம் தான் அவர்களும் ஒரே அளவான வலிமை உடையவர்கள்தான் அதுவும் ஒரே மாதிரியான உத்திகள் தான் . அடுத்து அவர்களை அஜித் கண்டிப்பாக பழி வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.அவர்களும் இவரைத் தேடிக் கொண்டும் இல்லை. எனவே நீங்கள் இடையில் தூங்கி விட்டாலும் கதை மிக நன்றாகவேப் புரியும்.இடையில் தூங்கி எழுந்து பார்த்தால் கண்டிப்பாக அஜித் யாரோ ஒருவரை கொன்று கொண்டிருப்பார். அது எதற்கு என்று அவருக்கும் தெரியாதபோது நமக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை இது பாட்ஷா படத்தின் காப்பி என்பவர்களுக்கு  இரண்டுக்கும் உள்ள முக்கய வித்தியசத்தினைக் கண்டு பிடிக்காதது ஆச்சரியம் தான் , சிறுத்தை சிவா அவர்கள் செய்த அந்த வித்தியாசம் என்னவெனில் பாட்ஷாவில் பிளாஷ்பேக்கில் ரஜினி வயசான தோற்றத்திலும் ஆட்டோக்கராரக இருக்கையில் இளமையாகவும் இருப்பார் . அதை அப்படியே உல்டா அடித்து பிளாஷ்பேக்கில் அஜீத்தை இளமையாகக் காண்பித்து டாக்சி டிரைவராக இருக்கையில் வயசானவராகமாற்றம் செய்து  காண்பித்து இருக்கிறார்கள் .எனவே இனிமேலாவது இது பாட்ஷா படத்தின் காப்பி என்று சொல்வதை நிறுத்துங்கள்.


தூங்கவனம் படத்தின் கதையினை விளக்கும் போது கமல் அனைத்து நடிகர்களிடம் ஒன்று சொல்லி இருப்பார் என்று நினைக்கின்றேன். யாரும் இந்தப் படத்தின் ஒரு காட்சியில் கூட சிரிக்கவே கூடாது என்று, அந்தளவுக்கு அனைவரும் முகத்தை அந்தளவுக்கு இறுக்கமாக வைத்திருக்கின்றனர். படம் பார்க்கும் போது தூங்கி விட்டால் கண்டிப்பாக இந்தப் படம் புரியவே புரியாது. ஏன் இப்படி எல்லாரும் இந்த பப்பில் சுத்தி சுத்தி வருகின்றார்கள் என்றே நினைக்கத் தோன்றும். அதுவும் கமல் , திரிஷா , கிஷோர்  போன்றோர் காவல் துறை அதிகாரிகள் என்று காண்பிக்கப் படும் காட்சிகள் வரும்போது தூங்கி விட்டால் ரொம்ப சுத்தம். ஏன் என்றால் அவர்கள் அனைவருமே மப்டியில் தான் இருக்கின்றனர். அதுவும் தமிழ் மீது காதல் கொண்டிருக்கும் கமல் narcotics என்பதனை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு என்று கூட தன வாயால் சொல்ல வில்லை.தன்னை சுற்றி இருக்கும் மக்கள் போல தான் தமிழ்நாடு முழுக்க இருக்கின்றார்கள் என்று நினைத்து விட்டரரா அல்லது இது சென்னை மக்களுக்கு மட்டும் இந்தப் படத்தினை எடுத்தாரா என்றும் தெரியவில்லை.


என்னுடையப் பார்வையில் இரண்டுமே சுமாரானப் படங்கள்தான். மிக மோசம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ரசிகர்களுக்கு சினிமா ரசனையை மேம்படுத்தியக் கமல் உலக சினிமா கதையினை ஏன் எடுத்தார் என்று புரியவில்லை.இணையம் மிக பரவலடைந்த பிறகு ரசிகன் பார்த்து விட்ட அதே படத்தினை மீண்டும் எடுப்பது யாருக்காக என்று தெரியவில்லை.தன்னுடைய ஆத்ம திருப்திக்கு படம் எடுக்க வேண்டுமென்றால் ஒரு நாடகமாகக் கூட இதே கதையினைக் கொண்டு  அமைத்திருக்கலாம். இங்கே இந்த தமிழ் சமூகத்தில் சொல்லபடாத கதைகள் குவிந்து கிடக்கும் போது இப்படித் தழுவல் படங்களை தொடர்ந்து எடுத்தால் எஞ்சி இருக்கும் அவரின் ரசிகர்களையும் அவர் வெகு சீக்கிரம் இழக்க வேண்டி வரும் 

அஜித்துக்கெல்லாம் நாம் எந்த ஆலோசனையும் வழங்க முடியாது .சினிமாவில் நடிப்பதற்காக காசு வாங்கும் நிலை மாறி நடப்பதற்காக காசு வாங்கிக் கொண்டிருப்பவர் தான் நம்ம தல அஜீத். அவருக்கு சினிமா என்பது தொழில் மட்டுமே  அதன் மீது ஈடுபாடு எனப்தெல்லாம் இல்லை என்பதனை அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களே மிக சிறந்த உதாரணங்கள். 

நாம் உழைத்து சம்பாரித்த பணத்தினை உருப்படி இல்லாமல் செலவு செய்ய தகுந்தவை இது போன்ற படங்கள் தான். தொடர்ந்து இந்த சேவையை செய்வோம் என் உறுதி எடுப்போம்.

நன்றி 
செங்கதிரோன் 


No comments: