Tuesday, January 26, 2016

கத்தி படமும் கல்லூரி பெண்களின் தற்கொலையும்:

மிக மிக ஒரு துயரமான சம்பவம் நடந்திருக்கின்றது. மருத்துவராக ஆகலாம் என்று எண்ணி கல்லூரியில் சேர்ந்த பெண்களின் கனவு மட்டுமல்ல அவர்களின் உயிரையும் இந்த பிணம் திண்ணி அரசு ஊழியர்களாலும் அரசியல்வாதிகளாலும் பறித்திருக்கின்றது.அவர்கள் அரசாங்கத்தின் அனைத்துக் கதவுகளையும் பல முறை அணுகியும் ஒருவரும் அவர்களின் பிரச்சனை குறித்து செவி சாய்க்காத நிலையில் இப்படி ஒரு சோக முடிவிற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.



சாராய வியாபாரிகளும் ரவுடிகளும் கல்வித்துறையை குத்தகை எடுத்து நாசம் செய்து அதன் மூலம் பல்வேறு பலன்களை அடைந்துள்ள நிலையில் , பலரும் அவர்களைப் போன்றே குறுகிய வழியில் பணம் சம்பாதிக்க கல்வி நிலையங்கள் ஆரம்பிகின்றனர். இன்றைக்கு இந்த கல்வி தந்தைகள் என்ற பெயரில் சமூகத்தில் உலவும் கிரிமினல்கள் ஊடகத்துறையும் ஆக்கிரமித்து அங்கேயும் ஒரு தவறான முன்னுதாரந்த்தினை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

கத்தி படத்தில் விவசாயிகளின் உரிமையின உலகறியச் செய்ய மூன்று பெரியவர்கள் தற்கொலை செய்து கொல்லும் காட்சி அனைவரும் மறக்க முடியாது. இந்தப் பெண்களின் தற்கொலைக்கும் அந்தப் படக்காட்சிக்கும் ஒற்றுமை இருப்பதை நன்கு ஆராய்ந்தால் உணர முடியும்.


பி.கு: அந்தப் பெண்களின் பெற்றோர் சொல்வது போல கொலையாகவும் இருக்கலாம் நடுநிலையான விசாரணையே அதனை தெளிவுபடுத்த உதவும். 

அந்த மூன்றுப் பெண்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்

நன்றி 
செங்கதிரோன் 

No comments: